பக்கங்கள்

சனி, 14 நவம்பர், 2015

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணம்தான் எல்லா இராமாயணத்துக்கும் மூல நூல். அதில் இராமனைப்பற்றி என்ன கூறியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
தந்தை சொன்னவுடன் ராமன் அப்படியே கட்டுப்பட்டு காடேகிடவில்லை.
எந்த மடையனாவது தன் இஷ்டப்படி யெல்லாம் நடந்து வரும் மகனை காட்டுக்கு அனுப்ப சம்மதிப்பானா? என்று இலட்சு மணனிடம் தன் தகப்பனைக் குறை சொல் லித் துக்கப்படுகிறான் ராமன் (அயோத்தியா காண்டம் 53ஆவது சருக்கம்)
இந்த ஒரு சோறு போதுமே!
சீதையின் யோக்கியதை தான் என்ன?
மாரீசன் மானாக வந்த போது, அதனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சீதை சொன்னபோது, மானைத் துரத்திக் கொண்டு ஓடிய ராமன் வெகு நேரம் வராமல் இருந்த நிலையில் லட்சுமணா என்ற குரல் மட்டும் கேட்ட நேரத்தில், தன் அருகில் இருந்த லட்சுமணனை நோக்கி ராமனுக்கு ஏதோ ஆபத்து - விரைந்து செல் என்று சொன்ன நேரத்தில், இலட்சுமணன் அகலாது இருந்த நிலையில் சீதை என்ன சொல்லுகிறார்?
அடபாவி! என்னைக் கைப்பற்றக் கருதி, இராமன் சாகட்டும் என்று போகாமல் இருக்கிறாயா? இதற்குத்தான் எங்கள்கூட யோக்கியன் போல வந்தாயா? அட சண் டாளா! நீ என் மீது ஆசை வைத்து இரா மனைக் கொல்ல நினைக்கின்றாய்; பரதன் உன்னை எங்களோடு இதற்காகவே அனுப் பினானா? நீயாவது, பரதனாவது என்னை அனுபவிக்க  நான் ஒப்ப மாட்டேன் என்றாளே சீதை.
இலட்சுமணன் தாயே இப்படியெல்லாம் பேசக் கூடாது! என்று வணக்கமாகச் சொன்னபோது சீதை ஏ வஞ்சகா! இப்படி யாவது பேசிக் கொண்டு இன்னும் சற்று நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு இருக் கலாம் என்று பார்க்கிறாயா? என்றாள் சீதை (ஆரண்ய காண்டம், 45ஆவது சருக்கம்)

இலட்சுமணனின் யோக்கியதைதான் என்ன?
சூர்ப்பனகையிடம், சீதை கெட்ட நடத்தையுள்ளவள், கொங்கை சரிந்தவள் என்கிறானே! (ஆரண்யகாண்டம் 18ஆவது சருக்கம்) தாடகை, சூர்ப்பனகை, அயோமுகி ஆகிய பெண்களை காது, மூக்கு முலை ஆகியவைகளைக் கொய்து கொடுமை செய்தவன் ஆயிற்றே!

செவ்வாய், 10 நவம்பர், 2015

இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை

(கட்டுரையாளர் - திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - அவர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்).
சிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.
இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
மதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?
இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்?
உதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.
இதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.
இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.
முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.
இந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.
லங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.
வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.
சீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.
இந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.
ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?
கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.
கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.
மாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.
பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து  திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.
கிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்
பாலம் கட்ட    -5 நாட்கள்
போர்    -8 நாட்கள்
பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம்  முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).
இதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.
இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.
மக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.
இந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:
ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.
ராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
மிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.
மரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.
புருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீரனாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
ஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.
- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.,
(நூல் அறிவுக்கு எட்டிய கடவுள்)
-விடுதலை ஞா.ம.,2.3.13

இராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,



மாநில தி.மு.க.கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பல்வேறு நிபுணர்கள் நீரி என்ற ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட எல்லாமே கப்பல் செல்லத் தேர்வு செய்யப்பட்ட ஆறு பாதைகளில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகிய வற்றை அகற்றி ஆழப்படுத்தி சேதுக் கால்வாய் அமைப்பதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்ற தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு மேலும் கூறுகிறார்
மூதாட்டி ஜெயலலிதா
இத்திட்டம் காலங்காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டு காலமாகப் பேசப்பட்டு பல்வேறு நிபுணர் குழுக்கள் அறிக்கையும் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதோடு அவரது ஆட்சி முடிந்துவிட்டது.
ரூ. 2,500 கோடி செலவிலான திட்டம் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் விரைவில் நிறைவேறிட வேண்டும் என்பதற்காகவே, பிரத மரிடம் வலியுறுத்தி திரு.டி.ஆர்.பாலு அவர்களை இத்துறைக்கான அமைச்ச ராக்கி திட்டம் தொடங்கி மளமள வெனச் செயல்பட்டு 2,500 கோடி ரூபாய் செலவிலான திட்டம் முக்கால்வாசி நிறைவேறி இன்னும் 12 கிலோமீட்டர் தொலைவுதான் பாக்கி.
இப்ப வந்து குறுக்கே படுத்துக்கிட்டான் ராமன்
ஜெயலலிதா தனது இரண்டு தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் தந்துவிட்டு இப்போது சுப்ரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப் பனரைத் துணைக்கழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே இருவரும் சேர்ந்து சேதுக்கால்வாய் திட்டமே கூடாது என்று இராமர் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய ராமசேது பாதிக்கும் இராமர் வருத்தப்படுவார், இராம குற்றம் வந்துவிடும் என்று உச்ச மன்றத்திலே வழக்குத் தொடுத்துள்ளார் என்றால் ஜெயலலிதாவின் நாணயத்தை என்னவென்று சொல்வது? சரி, இராமர் ஒரு பாலம் கட்டினாரா? இராமன், சத்திரியனா, கடவுள் அவதாரமா?
இராமன் கடவுள் என்று ஒப்புக் கொண்டால், இராமாயணமே கிடை யாதே! இராமாயணமே ஒரு கற்பனைக் காவியம்தான், இராம இராவண யுத்தமே இராமாயணம் என்று கூறப்படுகிறது மூதாட்டி ஜெயலலிதா அவர்கள் என்ன சொல்கிறார்?
இதோ பிரபல ஆராய்ச்சியாளர் திரு. கே.முத்தையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளராக இருந்தவர் கூறுகிறார். தன் வாரிசுக்காக தனக்குப் பின் ராஜ்யத்தை ஆளுவ தற்காக அக்காலத்திய அரசர்களும், நில உடைமை எஜமானர்களும் ஒருவித ஏற்பாடு செய்து கொள்வது வழக்கம் தன் மனைவிமார்களை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பது அக்காலத்திய வழக்கம் அடிமைச் சமுதாயத்தில் பெண்கள் இரட்டை அடிமைகள், அவர்களை அடிக்கலாம் கொல்லலாம் மற்றவர்களிடத்தில் விற்கலாம். எனவே தம் மனைவி மார்கள், சக்தியில்லாத தனக்காகப் பிள்ளை பெற்றுத்தரும்படி கோரப் பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அடிமை எஜமானர்களின் சமுதாயம் அது.
அசுவமேத யாகம் என்று யாகம் செய்வார்கள். குதிரையொன்றை பவனி வரச்செய்வார்கள். பிறகு அதை யாகம் செய்யுமிடத்தில் வெட்டி அதன் மாமிசத்தை அனைவரும் உண்டு அசுவமேத யாகம் செய்யும் களத்தில் உள்ள குடில்களில் பாகுபாடின்றி உறங்குவார்கள். அது போன்றதே புத்திர காமேட்டி யாகம். யார் புத்திர பாக்யம் வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிமார்களை யும் அழைத்து வருவார்கள் யாகம் செய்யும் புரோகிதர்களிடம் தங்கள் மனைவிமார்களுக்கு; புத்திர பாக்யம் உண்டாக்கும்படி கேட்டுக் கொள் வார்கள். யாகக் களத்திலே அந்த மனைவிமார்கள் தங்குவார்கள்.
இரவு பகலாகத் தங்குவார்கள் அதன்பிறகு அவர்களுக்கு புத்திரர்கள் பிறப்பார்கள் புத்திர காமேட்டி யாகத்தின் அர்த்தம் இதுதான்.
தன்னால், தன் மனைவிக்கு குழந்தை பிறக்க வைக்க முடியவில்லை என்றால் பிறரால் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதற்கு அக்காலத்தியவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சடங்கு இது.
இதை வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் பாலகாண்டத்தின் 14-ஆவது சர்க்கத்தில் தெளிவாக எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்குகிறார்.
தன்னுடைய மனைவிமார்கள் மூவரும் புத்திரர்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி தசரதன் தன் னுடைய அரசவைப் புரோகிதர்களிடம் வேண்டிக் கொள்கிறான். அவர்களது ஆலோசனைப்படியே அந்த யாகம் நடத்துகிறான்.
இதற்கென களம் தயாராகிறது. தங்குவதற்குப் பல குடில்கள் தயாரிக் கப்படுகின்றன. குதிரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு திரும்பவும் யாகத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பலியிடப்படுகிறது. அதன் மாமிசத்தைப் புத்திரபாக்யம் கோரும் பெண்கள் உள்பட அனைவரும் தீயில் பொசுக்கிச் சாப்பிடுகிறார்கள். இது போல் மொத்தம் 300 மிருகங்கள் (ஆடு மாடுகள்) உட்பட பலியிடப்படுகின்றன அத்தனையும் உண்ணுகிறார்கள்.
16 பிரதம புரோகிதர்களின் தலைமையில் இந்த யாகம் நடைபெறுகிறது. அவர்களிடம், தன் மனைவிமார்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும்படி வேண்டுகிறான் தசரதன் மனைவிமார்கள் மூவரும், நான்கு பிள்ளைகளுக்குத் தாய்மார்களா னார்கள். இதுவே பாலகாண்டத்தின் 14ஆவது சர்க்கத்திலிருந்து கூறப்படும் விபரங்கள்.
இந்தக் கருத்து மார்க்சீயக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளராக இருந்த தோழர் கே.கே .முத்தையா அவர்கள் எழுதிய இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற ஆராய்ச்சி நூலிலிருந்து தரப்படுகிறது. டி.பரமசிவ அய்யர் டி.அமிர்தலிங்க அய்யர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வழியில் திரு. கே.முத்தையா அவர்கள் இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற தலைப்பில் எழுதிய நூலிலிருந்து இராமன் பிறப்பின் ஆபாசம், அசிங்கம், இராமனின் தாய் தந்தையர் யோக்யதை அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.
இராமாயணம் ஓர் கற்பனைக் காவியம் அந்த நாட்களில் புத்தகமும் சமணமும் ஓங்கிப் புகழுடன் சிறந்து பரவியிருந்தது. பார்ப்பனீயமும் இந்து மதமும் காப்பற்றப்பட வேண்டுமே என்பதற்காகப் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி வால்மீகி முனிவரிடம் வேண்டி புத்தருக்குப் பதிலாக இராமனைக் கதாநாயகனாகப் படைத்த ஒரு காவியமெழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க வால்மீகி முனிவர் சமஸ்கிருதத்தில் இராமனைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதே வால்மீகி இராமா யணம் வால்மீகி தனது காவியத்தின் நாயகனாக இராமனைப்படைத்தார். ஒரு சத்திரியனாக சிறந்த வீரனாகப் படைத்தார். எந்த இடத்திலும் இரா மனைக் கடவுளாகவோ விஷ்ணு அவதாரம் என்று காட்டவில்லை.
வால்மீகியின் அழகுமிக்க சமஸ் கிருதத்தை போலவே தமிழிலும் படைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஒன்று கூடிச்சிறந்த கவிஞனான கம்பனை அணுகி வேண்டினர். கம்பனுக்குச் சகல சவுகரியங்களும் அய்ஸ்வரியங்களும் அந்தப்புறத்தில் உள்ள எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க இருந்தார்களே சோழப்பேரரசர்கள் அவர்கள் தந்த உற்சாகத்தில் தான் கம்பன் ஒரு துளியும் இன உணர்வோ, மொழி உணர்வோ இன்றி இராமனுக்கு கடவுள் தன்மையைப் படைத்து எழுதி விட்டான்.
இந்த இராமாயணத்தை சோழ அரசர்கள் தூக்கி வைத்து கொண்டு ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவே ராமன் கடவுளாகப் பரப்பப்பட்டான்.
இராவணனை, அரக்கன் கொடியோனென்று கம்பன் எழுதியது இராமனைக் கடவுளாக்குவதற்காகவே என்று அறிஞர் அண்ணா அவர்கள் புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் இராமனைத் தமது ஆராய்ச்சியால் அக்குவேறு ஆணி வேறாகப்பிய்த்து காட்டி இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று முழங்கினார். அறிஞர் அண்ணா அவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இராமா யணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எழுதினார்.
இராமாயணம் பெரிய புராணம் இரண்டும் புனித நூல் என்று வாதிட வந்த மாபெரும் தமிழ் அறிஞர்கள் இராமாயண, மகாபாரத ஆராய்ச்சியார்களை நேரடி வாதத்தில் அறிஞர் அண்ணா வென்றார்.
தந்தை பெரியார் அவர்களின் பெரிய புராண ஆராய்ச்சி நூல்  தமிழ் மக் களிடையே பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.
அறிஞர் அண்ணாவின் வாதப்போர் வெற்றி தீ பரவட்டும் என்ற நூலாக வெளிவந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா உயர்த்திப் பிடித்த அறிவுத் தீப்பந்தம் மூட நம்பிக்கையிலும்,  சக்தியிலும் மூழ்கிக் கிடந்த இளை ஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மத்தியிலும் பகுத்தறிவுச் சுடர் ஏற்றியது இதனையொட்டியே பட்டிமன்றங்கள், சுழலும் சொற்பொழிவு மன்றங்கள் என அறிவொளி பரப்பியது.
இந்த நிலையில் தான் ஜெயலலிதா, சு.சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனரைக் கூட்டிக் கொண்டு உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.
புத்த மதத்தை அழித்து புத்தனுக்குப் பதிலாக ராம வழிபாட்டை உருவாக் கவும், புத்த மதம் இருந்த இடத்தில் இந்து மதத்தை நிலை நாட்டவும் செய்த நீண்ட நெடும் முயற்சியின் ஒருபகுதியே இது.
இந்த இடைச்செருகல்களுக்குக் காரணமும் உண்டு புத்த மதத்தினரும், புத்த பிக்குகளும் பொது மக்களால் வெகுவாக மதிக்கப்பட்டனர் ஒடுக்கப் பட்ட ஏழை எளியவர்களிடையே புத்த பிக்குகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றி ருந்தனர் அவர்கள் பேசிய சமத்துவ போதனைகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.
(கே.முத்தையா இராமாயணம் உண்மையும் புரட்டும்)
ஆக வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமன் கடவுள் அவதாரமென்று குறிப்பிடவே இல்லை.
ராமன் பிறப்பே ஆபாசம்! தெரிந்தே பரதன் அடைய வேண்டிய ஆட்சியைத் தானே அடைய முடிசூட்டு விழாவைப் பரதனுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டான். ஆனால் கைகேயி விழிப்பாக இருந்து தடுத்துவிட்டாள்.
இராமனுக்கு அவனது தந்தையார் என்றே தெரியாது
யாகத்தில் நியமிக்கப்பட்ட பிள்ளை களைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர் களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஹோதா அதர்வயூ உக்தாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்ட மகிஷிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.
இவர்கள் பெரிதாக வளர்ந்தவுடன் அயோத்தி முடி சூட்டு விழாவிலும் இராமன், பதவிக்கு ஆசைப்பட்டு தனது சிற்றன்னை கைகேயிக்குத் துரோகம் இழைக்கிறான். தசரதனின் அயோத்தி அரண்மனை இதைப்புரிந்தும், பரதன் சூடிக்கொள்ள வேண்டிய முடியையும் அயோத்தியின் ராஜ்ய பாரத்தையும், தானே அடைய உடன்படுகிறான் இராமன் ஆனால் கைகேயி விட்டுக் கொடுக்காமல் தன் மகன் பரதனுக்கே முடிசூட்டு விழா நடத்தி விடுகிறாள். அது மட்டுமல்லாமல் தன் கிழக் கணவன் தசரதன் கொடுத்திருந்த இன்னொரு வரத்தின்படி இராமனை பதினான்கு வருடம் காடேக வைக்கிறாள்.
ஆழி சூழ் உலகமெல்லாம்
பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ்சடைகள் தாங்கி
அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணிய துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா    (கம்பராமாயணம்)
என இயம்பினார் அரசன்.
நீ, ஒன்றும் ஆட்சி செய்ய வேண் டாம் நீண்ட ஜடாமுடி தரித்து அரி தான தவக்கோலத்தோடு நீர் நிறைந்த துறைகளை நாடி, நீராடி கடும் புழுதிபடர்ந்த காடுகளில் அலைந்து தவம் மேற்கொண்டு காடு வனாந் தரங்களில் உன் மனைவியோடு திரிந்து பதினான்காண்டுகள் கழித்து நாடு திரும்பி வா! என்று கூறிவிட்டான்.
ஆக ராமன் ஒரு சராசரி மனிதன் ஆசா பாசங்களும் விருப்பு, வெறுப்பு களுக்கும் உட்பட்டவன்தான்.
பதினான்காண்டு காலம் வனவாசம் சென்றவன் காடுமேடு சுற்றி தவமே சீலமாகக் கொண்டு திரிய வேண்டி யவன் அப்படி நடக்க வில்லையே!
இராமனுக்கு தன் தந்தையார் என்றே தெரிய வாய்ப்பில்லையே. மற்றவர் சொல்லித்தான் தன் தந்தை தசரதன் என்று அறிந்து கொண்டான்.
இராமன் அப்பன் பேர் தெரியாத வன்.
பெற்றோர் சொல் கேளாதவன்
காட்டில் திரியும் போது, தமிழ் பெண்களை அவர்களுடைய உறுப்பு களை அறுத்தெறிந்தவன்
தன் மனைவி சீதையையே நம்பாமல் கர்ப்பத்தோடு காட்டுக்குத் துரத்தியவன்
அண்ணன் தம்பிகளுக்குள் சண் டையை மூட்டித் தம்பியை தனியாக்கி அண்ணனை மறைந்திருந்து கொன் றவன்.
சம்பூகன் என்ற திராவிடனை வதம் செய்தவன் இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவன் அவன் சாதாரண மனிதனாகக்கூட மதிக்கக் தக்கவன் அல்லன்.
-விடுதலை ஞா.ம.15.6.13

திங்கள், 9 நவம்பர், 2015

இராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு


எல்லோரும் எளிதாக சொல்லி விடுவோம், நல்லவன் என்றால் ராமன் என்றும், கெட்டவன் என்றால் ராவணன் என்றும்! பொதுப்புத்தியி லிருந்து வெளிப்படும் வார்த்தைகள் இவை. எங்களைப் பொறுத்தவரை ராவணன், மகாத்மா
-இப்படிச் சொல்கிறார்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினர்.
தசரா விழாவில் ராமலீலா கொண்டாடி, ராவணன்- அவன் தம்பி கும்பகர்ணண்-மகன் இந்திரஜித் போன்றவர்களின் நெட்டுருவங்கள் மீது தீ அம்பு பாய்ச்சி எரிப்பது என்பது வடமாநிலத்து வழக்கம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாளைய பிரதமர் கனவு காணும் ராகுல்காந்தி எல்லோ ருமே இந்த தசராவில் இப்படி தீ அம்பு விட்டார்கள். ஆனால், ஜலந்தரில் உள்ள வால்மீகி சமுதாயத்தினரோ, இனி இதுபோல செய்து எங்கள் மனதை நோகடிக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். ஏன்?    நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ராமாயணத்தை எழுதியவர் வால்மீகி. அவரது பெயரிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆதிதர்மி என்கிற தலித் இனத்திற்கு அடுத்த பெரிய தலித் இனம் இந்த வால்மீகி சமுதாயம்தான். (திருக்குறளை எழுதிய வள்ளுவர் பெயரில் தமிழகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் இருப்பதும் கவனிக்கத்தக்கது). வால்மீகி சமுதாயத்தினர் ராவணனை கடவுளாக வணங்குகிறார்கள்.
நீங்கள் சித்திரிப்பது போல ராவணன் அரக்கனல்ல. அவர் மகாத்மா. வால்மீகி தன்னுடைய ராமாயணத்தில் ராவணனை வலிமையான-நேர்மைமிகுந்த அரசனாகத்தான் காட்டியிருக்கிறார். அதனால்தான் நாங்கள் அவரை வழிபடுகிறோம் என்று ஆதி தர்ம சமாஜின் நிறுவனத் தலைவரான தர்ஷன் ரத்தன் ராவணா கூறுகிறார். நாட்டின் பல பகுதிகளில் ராமனை வணங்கும் வேளை யில் இவர்கள், ராவண பூஜை நடத் துகிறார்கள். தசரா வில் தீ அம்புகள் பாயும் பொழுதில், வால்மீகி கோவிலில் நடைபெறும் இவர் களின் பூஜையில் 4 நிமிட நேரத்திற்கு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டு, ராவணனைப் புகழும் பாடல்கள் பாடப்படு கின்றன. ஆண்கள் பெண்களென சுமார் 300 பேர் இந்த பூஜையில் பங்கேற்கின் றனர்.
ராவண சேனா என்ற அமைப்பின் தலைவர் சரன்ஜித் ஹன்ஸ், மகாத்மா ராவணன் இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் ரவிபாலி ஆகியோரும் ஜலந் தரில் ராவண பூஜைகளை முன்னின்று நடத்தி வருகின்றனர். நாங்கள் வழிபடும் ராவணனை விஜயதசமி நாளில் கொடும் பாவியாக கொளுத்துவதை ஏற்க முடியாது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட் சவுர் என்ற இடத்திலும் ராவணனை அந்த ஊர் மக்கள் கொண் டாடுகிறார்கள். காரணம், ராவண னின் மனைவி மண்டோதரி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், தங்கள் ஊர் மருமகனான ராவணனை, ராமன் கொன்றதை அவர்கள் ஏற்பதில்லை. ராவணனின் நினைவில் பூஜைகள் நடத்துகிறார்கள். இதுபோலவே உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரிலும் விஜயதசமி நாளில் ராவண வழிபாடு நடக்கிறது.
முதன்முதலில், ராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். ராவணனை திராவிட மன்னன் என்று பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சொன் னார்கள். இதுகுறித்து, கம்பராமா யணத்தைப் போற்றும் தமிழறிஞர் களுடன் நேருக்கு நேர் வாதம் செய்தனர். ராமாயண எரிப்பு என் றளவில் போராட்டம் நீண்டது. ராம லீலாவுக்கு எதிராக ராவணலீலாவை நடத்தி, ராமர் படத்துக்கு தீ வைத்தவர் மணியம்மையார்.
ராவணன் திராவிட மன்னன் என்ற குரல் தென்னகத்திலிருந்து ஒலித்தது. அவன் எங்களுக்கு கடவுள்- மகாத்மா என்று கொண்டாடுகிறார்கள் வடக்கே உள்ள ஆதிதிராவிடர்கள்.- தீ பரவட்டும்.
-விடுதலை,20.10.12

வெள்ளி, 6 நவம்பர், 2015

இராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்


பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (HISTORY) MA (LINGUISTICS) 


இராமாயண காலத்தில் ஆரியர்கள் செய்த யாகங்களில்  நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன.  யாகங்கள் செய்வது மிருகங்களை வேட்டை ஆடு வதற்கு சமம். ஏனென்றால் யாகங்கள் செய்தாலும் வேட்டையாடினாலும் கிடைக்கும் முதல் பலன் சாப்பிட மாமிசந்தான்.
இவ்வாறு யாகங்கள் செய்து மாமிசம் சாப்பிட்ட ஆரியர்கள் மிகவும் போற் றிப் புகழ்வது வால்மீகி சொல்ல பிள் ளையார் அதை பனை ஓலையில் எழுதிய இராமாயணம் ஆகும்.
அந்த இராமாயணத்தில் பல உயிர்களைப் பலியிட்டு தசரதன் செய்த அசுவமேத யாகத் தீயில் பிரம்மா ஒரு தேவ தூதனைத் தோன்றச் செய்தார். அவன் தந்த தேவப் பாயசத்தை உண்ட கௌசல்யா பெற்ற குழந்தை தான் விஷ்ணுவின் ராம அவதாரம்.
அந்த யாகத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் பின்வருமாறு குதிரை பாம்புகள் மற்றும் 300 உயிர்கள் (தரை, நீர், ஆகாயம்  ஆகியவற்றில் வாழும் விலங்கினங்கள்). யாகம் எந்த விதக் குறையும் இல்லாமல் முறைப்படி செய்யப்பட்டு இந்திரன் முதலான தெய்வங்களுக்கு அவிர்ப் பாகம் அளிக்கப்பட்டது. இவ்வாறு மாமிசம் ராமனுடைய வாழ்க்கையில் துவக் கம் முதல்  இறுதி வரை தொடர்கிறது.
அந்த இராமாயணத்தில் காணப் படும் மாமிசம் பற்றிய காட்சிகள் பின்வருமாறு.
1.இராமன் வனவாசம் போகும் வழியில் சீதா கங்கையை வணங்கி, அவர்கள் மூவரையும் பாதுகாப்பாக நதியைக் கடக்க உதவுமாறும் அவ்வாறு உதவினால் திரும்பி வருகையில் கங்கை நதிக்குப் பல வகையான மாமிசத்தையும் ஆயரக்கணக்கான தேன் குடங்களையும் பலியாகத் தருவதாகவும் வேண்டினாள். (பக்கம் 388)
2.இராமன் மத்சய இராச்சியத்தை சேர்ந்த காட்டுப் பகுதியை  அடைந் ததும் ராமனும் சீதையும் பலவகை மான்கள். கரடிகள் போன்ற பலவகை மிருகங்களை வேட்டையாடி சமைத்து உண்டனர். (388).
3. அயோத்தியில் இருந்து  இரா மனைச் சந்திக்க சென்ற பரதன் தன்  சேனை வீரர்களுக்கான உணவு சேமிப் புகளில் மாமிசம் உலர்ந்த மாமிசம், கிழங்கு கனிகள் மற்றும் மரவுரி ஆடைகள் இருந்தன. (பக்கம் 476)
4. இராமனைத் தேடி பரதன் தன்னுடைய மந்திரிகள் அதிகாரிகள்  மற்றும் படையுடன் பரத்வாஜ் முனி வரின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தும் ஓய்வெடுக்க இடமும் முனிவர் ஏற்பாடு செய்தார். அந்த விருந்தின் சிறப்புக்கள் பின்வருமாறு:
4.1. மது, பழச்சாறு முதலான உற் சாகப் பானங்கள் தனித்தனி ஆறுகளாக ஓடின. அந்த ஆறுகளின் இரு கரை களிலும் விருந்தினர்கள் தங்குவதற்காக மாளிகைகள் உருவாக்கப்பட்டன.
4.3. மலை போல் குவிக்கப்பட்ட சாதம் மற்றும் இதர உணவு வகைகள் மற்றும் குளம் போல் மைத்ரேயா என்ற மது. அதைச் சுற்றி மலை போல் சமைக்கப்பட்ட பல்வகை உயிர்களின் மாமிசம். அந்த உயிர்கள் மான், மயில் வாத்து மற்றும் பல்வேறு எண்ணற்ற விலங்குகள் ஆகும்.
4.4. தேவலோகத்தில் இருந்து இறங்கிய ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகி யோரின் நடனம் இந்த ஏற்பாட்டை செய்தவர்கள்- -இந்திரன் பிரம்மா, எமன், வருணன், குபேரன், விசுவகர்மன் மற்றும் அவனது மனைவி மாயா போன்ற பல தேவர்கள் ஆவர். இவை அனைத்து முனிவரின் தவ வலிமையால் செய்ய முடிந்தது. (பக்கம் 491)
5. மந்தாகினி நதிக்கரையில் ராமன் சுவையாக சமைக்கப்பட்ட மாமிசத்தை சீதையை உண்ணச் சொல்வது (பக்கம் ----505)
6. லங்கா தேசத்தில் அசோகவனத் தில் இராவணனால் சிறை வைக்கப் பட்ட சீதையை ஹனுமன் சந்தித்தான். அப்போது அவன் சீதையிடம் அவள் பிரிவால் வாடும் ராமனின் துயரத்தை  விவரித்தான். அப்போது இராமன் சரியாக உணவு உட்கொள்ளவில்லை என்றும் மாமிசம் சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டான் என்றும தெரி வித்தான் (பக்கம் 1080)
மேற்கண்ட காட்சிகள் வெளிப்படுத் தும் செய்திகள் பின்வருமாறு
1. மாமிசம் இல்லையேல் யாகம் இல்லை.
2. யாகம் இல்லையேல் வேதம் இல்லை.
3. வேதம் இல்லையேல் இராமன் இல்லை.
மாமிசம் சாப்பட்ட  ஆரியர்கள் தான் வேதங்களை உருவாக்கினார்கள். வேதம் என்றால் அறிவு என்று பொருள்.
4. மாமிசம் இல்லையேல் வேதம் இல்லை, அறிவு இல்லை, வளர்ச்சி இல்லை. எனவே மாமிசம்  சாப்பிடுவ தற்கும், அறிவுக்கும் மற்றும் மதத்திற்கும் தொடர்பு இல்லை என இராமாயண காலத்தில் இருந்த  வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகள் நன்கு அறிந்து  இருந்தார்கள்.
ஆனால் திரேதாயுகத்தில் நடந்ததாகச் சொல் லப்படும் இராமாயணத்தை பெரிதும் நம்பும் இன்றைய இந்துத்துவாக்களுக்குத் தெரியாமல் போனது வியப்பைத் தரு கின்றது. (லிப்கோ வெளியிட்ட ஆங்கி லத்தில் எழுதப்பட்ட “தி இராமாயணம் ஆப் வால்மீகி’’ என்ற நூல். ஆசிரியர் சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார். இந்த நூலில் காணப்படும் செய்திகள்படி கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
விடுதலை ஞா.ம.,24.10.15

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்

விடுதலை,19.6.15

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஒருதோப்பில்பலகனிகள்.....

ஒருதோப்பில்பலகனிகள்.....


குரங்கு பாலம் கட்டுமா?
இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் (வானரங்கள்) பாறை களையும் சால் மரக்கட்டைகளையும் கடலில் போட்டு இலங்கைக்கு பாலத்தை கட்டினவாம்.
பாறைகளின் மேல் 'ராம்! ராம்!' என எழுதிப் போட்டதனால் பாறைக ளெல்லாம் கடலில் மிதந்து பாலம் போல் ஆனதாம்!
எழுதத் தெரிந்த குரங்குகள்! பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குரங்குகளுக்கு எழுதவும் பாலங்கட்டவும் தெரிந்திருக்கிறது! சிரிப்பு தான் வருகிறது! அடக்கத் தான் முடியவில்லை!
(கி.மு. 2650ஆ-ம் ஆண்டில் தான் எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் குறுக்கே மெனிஸ் மன்னரால் உலகிலேயே முதன் முதலாக பாலம் என்ற ஒன்றே கட்டப்பட்டது.)
அப்போது மிதந்த பாலம் இப்பொ ழுது மிதக்காமல் கடலுக்கடியில் போனது ஏனோ தெரியவில்லை ?
இராமன் சக்தி அவ்வளவு தானோ?
அணில் முதுகில் கோடு போட்டது யார்?  இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் பாலம் கட்டிக் கொண்டி ருந்த போது அணிலும் பாலம் கட்ட உதவியதாம்!
அணில் கடலில் குதித்து உடலை நனைத்துக் கொண்டு வந்து மணலில் புரளுமாம்! இதனால் உடலில் ஒட்டிக் கொண்ட மணலை பாலத்தின் அருகில் சென்று உதிர்க்குமாம்! இப்படியே செய்து கொண்டிருந்த அணிலைப் பார்த்த இராமன் அன்போடு அணிலின் முதுகில் தனது முன்று விரல்களால் தடவிக்கொடுத் தானாம்! உடனே அணிலின் முதுகில் மூன்று கோடுகள் பதிந்து விட்டனவாம்! இத னால் அனைத்து அணில்களின் முது கிலும் மூன்று கோடுகள் வந்துவிட் டனவாம்!
இந்தக் கதை எந்த இராமாயணத் திலும் கிடையாது எனபது பலருக்குத் தெரியாது. இதே போல் இராமாய ணங்களில் இல்லாத பல கதைகள் இராமாயணத்தில் இருப்ப தாகச் சொல்லப்படுகின்றன.
அமெரிக்கா, மெக்சிகோ, இங்கி லாந்து போன்ற பகுதிகளில் உள்ள அணில்களின் முதுகில் கோடுகளே கிடையாது. அங்குள்ள அணில்களின் மேல் இராமன் சக்தி பலிக்கவில்லையா?
இராமன் (அ)யோக்கியனா?
தமிழ்நாடு முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, இராமாயணப்படி இராமன் குடிகாரன், மாமிசம் சாப்பிட்டவன் என்று சொன்னவுடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யான இராம்விலாஷ் வேதாந்தி என்கிற பார்ப்பன பண்டார பரதேசி ''கலைஞரின் தலையையோ, நாக்கையோ வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 'பரிசுத் தொகை' வழங்கப்படும்'' என அறிவித்தான்.
உண்மையை சொன்னால் மதவெறி தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.
யோக்கியனை அயோக்கியன் என்று சொன்னால் தான் தப்பு! அயோக்கியனை அயோக்கியன் என்று தானே சொல்ல முடியும்! யோக்கிய சிகாமணி என்றா சொல்ல முடியும்?
இராமாயணத்தில் வரும் இராமன் குடிகாரனாகவும், பல மனைவிகள் உள்ளவனாகவும், பல பெண்களுடன் கூத்தடித்தவனாகவும் (சரச சல்லாபி), கொலைகாரனாகவும், பேடியாகவும் மற்றும் வேட்டையாடி விலங்குகளை கொன்று தின்றவனாகவும் தான் இருக்கிறான். இவ்வளவு அயோக்கியத் தனங்களையும் செய்தவனை மாறாக யோக்கிய சிகாமணியாக பிரச்சாரம் செய்தால் சும்மாவா இருக்கமுடியும்?
இராமன் குடிகாரன்! 
''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும். அள வுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக் கத்தை கொண்டிருந்தான். அப்படி குடித்துவிட்டு அவன் போடும் கூத் தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சர்க்கம்- 43, சுலோகம்-1 )
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர் 
இராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்! 
''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''
(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)
இராமாயணத்தில் பல இடங்களில், இராமனின் மனைவிமார்கள் என்றே வருகிறது. நூல்: 'இராமாயணப் பாத்திரங்கள்'- தந்தை பெரியார்
இராமன் சரச சல்லாபி (பெண் பித்தன்)!  ''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
இராமன் பேடி! - கொலைகாரன்! 
மரங்களுக்கு பின்னால் மறைந் திருந்து திடீர் என அம்பெய்தி வாலியைக் கொல்கிறான்!
தவமிருந்த சம்பூகனை துடிக்கத் துடிக்க வாளால் வெட்டிக்கொன்றான்!
குடியையும், உயிர்க்கொலை புரியும் யாகத்தையும் எதிர்த்த பெண்களையும் அசுரர்களையும் (சுராபானம் குடிக் காதவர்கள்-திராவிடர்கள்) கொன்றான்.
இராமன் இன வெறியன்! '
'சம்பூகன்' என்கிற சூத்திரன் (திரா விடன்) காட்டில் உள்ள ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஆண்டவனை நோக்கி தவமிருந்தான், இதை அறிந்த இராமன் (ஆரியன்) காட்டிற்கு சென்று 'சம்பூக'னைக் கண்டு 'சூத்திரன் ஆண்டவனை நோக்கி தவ மிருக்க எனது இராஜ்ஜியத்தில் இட மில்லை' என்று கூறி வாளை உருவி 'சம்பூக'னின் தலையை வெட்டிக் கொன்றான்.'' (வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம், பிரிவு-64, பக்கம்-208 -ஆ.க.கணேசன், இக்கிம்பாதம்ஸ் வெளியீடு)
இராமன் விலங்குகளை கொன்று தின்றவன்!
  ''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -43, சுலோகம் -1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
''ராகவன் (இராமன்) தங்களை (சீதையை) காணாமல் துக்கத்தால் தவிக் கிறார். இராமன் மது மாம்ஸங்களை விட் டார்.'' (அதாவது தற்காலிகமாக மது, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட் டார்) (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், சுந்தரகாண்டம், பக்கம்- 148 ஸ்ரீ உ.வே. சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு- தி லிட்டில் பிளவர் வெளியீடு)
''இராமனும் இலட்சுமணனும் அம்பெய்தி ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய குரு ஆகிய நான்கு விலங்கு களை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்து சீதையுடன் உண்டனர்.''
(வால்மீகி ராமாயணம், அயோத் தியா காண்டம், சர்க்கம்-52 பாடல் 102 ) நூல்: ''ராமாயணமும் லங்கையும்''- டி. பரமேசுவர அய்யர்
''இவ்விடத்திலும் இன்னும் பல விடங்களிலும் ராமலஷ்மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த வேட்டை யாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் பாடியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வியத்த மாகப் பாடியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.'' ('இராமாயணம்' (சக்ரவர்த்தி திருமகன்), பக்கம் - 134 ) -இராஜாஜி எழுதியது.
இராமன் ''அயோக்கியன்'' என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறோம். 
இராமன் பிறந்த இடம் எது? 
இராமன் பிறந்த இடம் 'அயோத்தி' என்றும், அங்குள்ள 'பாபர் மசூதியில் தான் இராமன் பிறந்தான்' என்றும் கூறி, அந்த மசூதியையே பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இந்த இழிச்செயலால் இந்தியா முழு வதும் கலவரங்கள் எற்பட்டு, {தமிழ் நாட்டை தவிர} பல மனித உயிர்கள் பலியாயின, உடமைகளும் பறிபோயின.
ஆனால் அயோத்தியில், சுமார் 40 இடங்களில் உள்ள இராமன் கோயில் களில்; 'இங்கு தான் இராமன் பிறந்தான்' என்று கூறுகின்றனர். உண்மையில் அயோத்தி எது? இராமாயணத்தில் அயோத்தியில் இராமன் பிறந்ததாக சொல்லப்பட் டுள்ளது. பழைய (முதன்மை) இராமா யணக் கதையான 'புத்த இராமாயணத் தில் 'வாரணாசி'யில் (காசி) இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. (காசி கங்கை ஆற்றங்கரையில் உள்ளது)
வால்மீகி இராமாயணத்திலோ 'அயோத்தி'யில் பிறந்த்தாகவும், 'அயோத்தி' கங்கை ஆற்றங்கரையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள அயோத்தியோ 'சரயு' ஆற்றங்கரையில் உள்ளது.
'கங்கை' ஆற்றை தாண்டி, வடக்கு பக்கமாக 'சரயு' ஆறு உள்ளது; அதை யும் தாண்டி அடுத்த பகுதியில் தான் தற்போது உள்ள அயோத்தி உள்ளது.
அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து வந்த பிறகு தான் 'கங்கை' ஆறு வரும். ஆனால் வால்மீகி இராமாயணத் திலும் மற்ற இராமாயணங்களிலும், அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து இராமன் வந்ததாக சொல்லப் படவில்லை. அயோத்தியிலிருந்து நேரே கங்கை ஆற்றை கடந்து வந்ததாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 'வாரணாசி' (காசி) தான் பழைய 'அயோத்தி' என்று 'இராமனும் கிருஷ் ணனும் ஒரு புதிர்' என்ற தமது நூலில் கூறியுள்ளார்.
''மன்னர் ஜனகரின் தலைநகரம் 'விதேகம்'; அதே பெயரில் ஒரிடம் பீகாரில் உண்டு. முன்பு அயோத்தியாக சொல்லப்படுகிற இப்போதைய அவுத்திலிருந்து (அயோத்தி) வெகு தொலைவில் அமைந்துள்ளது அந்த இடம். இராமனும் அவனுடன் சென்றவர்களும் நடந்து நான்கு நாள்களில் சென்றடைந்ததாக சொல்லப் படுகின்ற அந்த இடத்திற்கு குதிரையின் மீது போனால் கூட அதைவிட இரண்டு மடங்கு நாள்கள் ஆகும்'' என்று _ 'ஜோசப் இடமருகு' அவர்கள் 'சபரிமலை அய்யப்பன் உண்மையும் கதைப்பும்' என்ற நூலில் கூறுகிறார். காசியிலிருந்து தான் 'பீகார்' அருகில் உள்ளது. அயோத்தியிருந்து பீகாரோ வெகு தொலைவில் தான் உள்ளது. ஆகையால் டாக்டர் அம்பேத் கர் அவர்கள் கூறுவது போல் 'பழைய அயோத்தி' 'வாரணாசி'(காசி) தான் என்பது தெளிவாகிறது.
இராமாயணக்கதைப்படி 'இராமன்' பிறந்தது வாரணாசியில் தஈன்! தற் போதைய அயோத்தி அல்ல!
தொகுப்பு: செ.ர. பார்த்தசாரதி,  செயலாளர்,  தென் சென்னை,  திராவிடர் கழகம்.
-விடுதலை ஞா.ம,14.9.13

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும்


பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
முன்னுரை
இராம் ஜெத்மலானி ஒரு சட்ட மேதை. மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவர் பிஜேபியில் இருந்தபோது இராமாயணத்தைப் படித்தார்.  அவர் சீதையை இராம பிரான் மிகவும் துன்புறுத்தியதாக ஒரு கருத்தரங்கத்தில் கூறினார். இராம ராஜ்யம் அமைக்கப் பாடுபடும் மதவாதிகளுக்கு  இராம் ஜெத்ம லானியின்  கருத்துக்கள் இராம பிரானை அவதூறு செய்யும் வகை யில் சொல்லப்பட்டதாகவும், இராம பக்தர்களின் மனதை புண்படுத் தியதாகவும் தோன்றியது. அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இராமன் ஒரு அவதாரப் புருஷன் அவர்  செய்தது சரியே என்று வாதிட்டார்கள். சில நாட்களுக்குப் பின்னர் இராம் ஜெத்மலானியை பிஜேபியை விட்டு நிதின் கட்காரி வெளியேற்றினார். இவ்வாறு இராமரை அவமதித்த ஜெத்  மலானியைத் தண்டித்தனர்.
தற்போது  புதுதில்லியில் ஒரு பெண் இரவில் தனியார் பேருந்தில் பயணிக்கும்போது பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டபோது பிஜேபியினர் கொதித்து எழுந்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம், சீதை இராமனால் துன்புறுத்தப்பட் டது சரி என்று வாதிட்ட மத வாதிகள், நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் துன்புறுத்தப்பட்ட போது கண்டன ஊர்வலம் நடத்தினர், குடியரசுத் தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டனர். இதற்கு முன் னாள் இராணுவ தளபதி, சாமியார், பாபா இராம்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் ஒரு சில வாரங்களுக்குள்தான் நடந்தேறின. மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பிஜேபியினரின் இரட்டை நிலையை புரிந்து கொண் டுள்ளார்கள். இந்த இந்துத்துவாக்கள் இராமர்பாலம் என்ற பெயரில் சேதுத் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதும் மதத்தின் அடிப்படையில் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான்.
வால்மீகியின் கற்பனையில் உருவான இராமாயணத்தின் கருப் பொருள் சீதையின் கற்பினை நிரூ பித்தல் ஆகும். எனவே வால்மீகியின் கற்பனைக் காவியத்திற்கு கற்புக் காவியம் என்று தான் பெயரிட்டி ருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.  இத்தகைய இராமா யணத்தைப் பற்றி கால்டுவெல் கூறியுள்ள கருத்துக்கள் கீழே தரப் பட்டுள்ளன. சீதையின் கற்பு
கற்பு என்றவுடன் இந்திய மக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கற்புக்கரசி கண்ணகி ஆகும். ஏனென்றால் தனது கணவனைக் கொன்ற பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரையைத் தீயிட்டுக் கொளுத்தியது ஒரு காரணமாகும்.
சீதைக்கும் கண்ணகிக்கும் வேறுபாடு உள்ளது. சீதை கடைசி வரைக்கும்  இராமன் கற்பினை சோதித்த போதெல்லாம் இராமன் இட்ட கட்டளைக்கு அடிபணிந்தாள். ஆனால் கண்ணகி கணவனுக்கு அடிபணிந்தாலும் கோவலனைக் கொன்றது சரியல்ல என்று அரசனு டன் வாதிட்டாள், அறம் பிழைத்த மன்னனின் மதுரையை ஆவேசத்து டன்' தீயிட்டு, கொளுத்தினாள். பின்னர், கேரளம் (சேரநாடு) சென் றாள். அங்கு இன்றும் கொடுங்களூர் பகவதி என்று அழைக்கப்படும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஆனால் சீதையைக் கவர்ந்த இராவணனின் லங்கா (இலங்கை அல்ல) நகரைக் கொளுத்தியது அனுமான் என்ற வானரம்.
இது போல் லங்கா செல்ல பாலம் கட்டியது நளன் என்ற வானரம், இராமன் அல்ல) எனவே கற்பை சோதித்தபோது இராமன், சீதை கற்புடையவள் இராவணனால் கெடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு கற்புடைய சீதையால் இராவண னுக்கோ, அவன் ஆண்ட லங்கா நகரத்திற்கோ தீங்கு ஏற்படவில்லை. கற்புடைய சீதை வீறு கொண்டு எழவில்லை;  காரணம் இராமனின் வீரத்திற்கு இடம் அளித்தாள். இது வால்மீகியின் கற்பனை எதார்த்தமான பெண்ணின் செயல் அல்ல. பொதுவாக பெண்களின் கற்பின் சிறப்பினை தமிழ் காவியங்களில், சங்க காவியங்களில் சிறப்புக் கருத் தாக  மையக் கருத்தாக அமைப்பது வழக்கம். இதற்கு உதா ரணம், திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் மன்னர் அவையில், பாண்டிய மன்னனுடன், கற்புடைய பெண்கள் கூந்தலுக்கு / உமைய வளுக்கு மணம் உண்டு என்று வாதிட்டார். திருக்குறளில் பிறன் மனை விழையாமை, வாழ்க்கைத் துணைநலம் போன்ற அதிகாரங்கள். இதைக் காணும் போது உலகத்திலே முதன் முதலாக எழுதப்பட்ட காவியம் என்று போற்றிப் புகழப் படுகின்ற இராமாயணம் என்ற இதிகாசத்திற்கு கருப்பொருளை வால்மீகிக்கு  தந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் தாம் என்று நினைக்காமல் இருக்க முடியாது. இது திருக் குறள் உள்பட சங்க இலக்கியங்களே உலக இலக்கியங்களுக்கு முன்னோடி என்று கூறலாம்.  மேலும் இராமா யணத்தைப் பற்றிய தகவல்களை சொன்ன முதல் இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள்தான் என்று ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.  (ஆதா ரம் பாரதீய வித்யாபவன் வெளியீடு) இது சிந்து நதி முதல் சிந்து மாக்கடல் (இந்தியன் ஓசியன்) வரை தமிழர் நாகரிகம் பரவியிருந்ததை குறிக்கிறது.
இராமாயணம் பற்றி கால்டு வெல்லின் கருத்துகள்:
டாக்டர் கால்டுவெல் 1893ல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற நூலில் இராமாயணம் பற்றிய பல செய்திகள் கிடைத்திருக்கின்றன. அதனை தொகுத்து கீழே தரப் பட்டுள்ளது.
1.    இராமாயண காலம்  புத்த சமயம் தோன்றிய பின்னும், இத் தேசத்து இராசாக்களிலும் ஜனங் களிலும்  மிகுதியான பேர் அந்த மதத்தை அனுசரிக்கிறதுக்கு முன்னும், வட இராச்சியத்து இந்துக்களுக்குள் சமஸ்கிருத பாஷை, நாடோடி பாஷையாக வருங்காலத்திலும், அது கட்டப்பட்டிருக்கும் என்று நிதானிக்கலாம். இப்படியானால் கிறிஸ்து பிறப்பிற்கு ஏறக்குறைய 400 வருஷத்துக்கு முன்பு இராமாயணம் கட்டப்பட்டு (Compose)  இருக்க வேண்டும் (இந்த காலம் கிமு 400 என்பது பாணினிகாலம். இந்தப் பாணினி வேதமொழிக்கு இலக்கண நூல் அஷ்டத்யாயி எழுதிய பின் வேதமொழிக்கு பாஷா'' என்று பெயரிட்டார். பின்னர் இந்த மொழி எப்போது சமஸ்கிருதம் என்று அழைக்கப்பட்டது என்பதற்கு தகவல் எதுவும் இல்லை).
 -விடுதலை ஞா.ம.19.1.13

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (2)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
2)    வேதகாலத்தில் பஞ்ச பூதங் களை ஆரியர்கள் வணங்கினார்கள். இராமாயண காலத்தில் வீரர்களை வணங்கினார்கள்.
3)    கோசலம் (அவுத்தேசம்) பகுதியில் அயோத்திபுரி ஆரிய வம்சத்திற்கு தலைநகராய் இருந்தது. இது தற்போதைய கோகரா நதியின் (சரயு நதியின்) கரையில் இருந்தது. சந்திரவம்சம்  கங்ககைக்கும் யமுனைக்கும் இடையில் தோஆப் பகுதியில் ஆண்டது.  தலைநகர் ஹஸ்தினாபுரம் ஆகும்.
4)    குசலவரை (இராமனின் மகன்கள்) இராமனின் மக்கள் என்று கருதக்கூடாது. குசலவர் என்பது ஒரே பதம் (சொல்) இரண்டு பதம் அல்ல. குசலவன் என்றால் சூதர்'' என்று அர்த்தம். சூதர் என்றால் அரண்மனை கவிராயர்கள்.
5)    இந்தியாவில் ஒவ்வொரு பாஷையிலும் இராமாயணம் உள்ளது. தமிழில், கவிராயன் கம்பன் கி.பி.1000க்குப் பின்பு எழுதப்பட்டது என்பதை கல்வெட்டுகளால் உணரலாம்.
6)    ஜனகன் அரண்மனையில், 8 சக்கரம் உள்ள தேரில் 800 புருஷர் கள் இழுத்து வரப்பட்ட சிவ தனுசை முறித்து சீதையை மணந்தான்.
7)    தசரதனுக்கு செய்ய வேண்டிய கருமாந்திர சடங்குகள் வெகு ஆடம்பரத்துடன் நடத்தப்பட்டன. தசரத மனைவிகள் யாரும் உடன் கட்டை ஏறவில்லை. விசேஷித்த யாகமும், பெரிய விருந்தும் நடந்தது. ஒரு பசுவையும் கன்றுக்குட்டியையும் பலியிட்டார்கள். நெய்யும், மாமிச  மும், கூடி வந்த விருந்தினரெல் லாருக்கும் பரிமாறப்பட்டது.
8)    இராமனின் பாதுகையைப் பெற இராமனிடம் சென்ற பரதன் பரத்வாச முனிவர் (பிரயாகை) ஆசிரமத்தில் தங்கினான். அப்போது அவனுக்கும் படைவீரருக்கும் பரத் வாசர் விருந்து பண்ணினார். விருந்  தில், மானும், மயிலும், பன்றியும், ஆடும், சாராயமும் பரிமாறப்பட்டது. தேவலோக ரம்பை, ஊர்வசி ஆகி யோர் நடன விருந்து அளித்தார்கள். இந்த மந்திர பலத்தால் பரத்வாசர் செய்தார்.
9)    இராமன் தென்கடற்கரையில் சேர்ந்து, இந்து தேசத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறுகடலில் மலைகளும், குன்று களும் போட்டு ஒரு சேது உண் டாக்கி... யாவரும் கடலைத் தாண்டி இலங்கையில் சேர்ந்தார்கள்.
10)    சீதை அக்கினி பிரவேசம் செய்து, யாதொரு சேதமில்லாமல், அக்கினியை கடந்ததினாலும், பிரம்மா முதல் தசரத மகாராசா வரை யாவரும் சீதை கற்புள்ளவள் என்று கூறியதனால், சீதையை இராமன் சேர்த்துக் கொண்டான்.
11)    அயோத்தியாபுரியில் இராமன் அரசதிகாரத்தை ஒப்புக் கொண்டான். (இத்துடன் கால்டுவெல் இராமா யணத்தை முடிக்கிறார். இதில் பட்டாபிஷேகம் என்பது தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்த சொல்).
கால்டுவெல்லின் விமரிசனம்
அ)    பல தேச சரித்திரங்களையும், பல சாஸ்திரங்களையும் வாசித்து ஆராய்ந்த வித்துவான்கள் இராமா யணம் வீண்கதைகளால் நிறைந் திருக்கிறது'' என்று கூறினார்கள். அதில் உள்ள உண்மைகளை வீண் கதைகள் கெடுக்கின்றன.
ஆ)    புத்தியீன வர்ணனையினால் இராமாயணம் கெட்டுப்போயிருக் கிறது. இது கதை கேட்கும் இந்துக்களுக்கும் பிரியமாய் இருந்தது.
இ)    அந்த கால இந்துக்களுக்கு பகுத்தறிவும் விவேகமும் குறைந்து இருந்தது.
ஈ)    யுரோப்பில், சிறு பிள்ளை களுக்கு, பூதங்களை கொல்லும் வீரர்களைப் பற்றிய கதைகள் பிடிக்கும். அவர்களே பெரியவர்கள் ஆனதும் அந்தக் கதைகளை நம்பாது / பிடிக்காது.
உ)    வீணான கதைகளை பேர் பெற்ற கவிராயர் பாட்டுக்களாக எழுதுகிறார்கள். அந்த பாட்டுக் களைப் பாடுவதும், பாடிக் கேட்பதும் புண்ணிய கிரியை எனப் பேதை  சனங்கள் (இந்தியர்கள்) எண்ணு கிறார்கள்.
ஊ)    விவேகம் உள்ளவர்கள் இராமாயணத்தை கூர்ந்து சோதித் தால் பிற்காலத்தில் கட்டப்பட்ட (சேர்க்கப்பட்ட) சங்கதிகளை அறியலாம். ஆரம்பத்தில் சொல்லிய கதைகளைப் பார்த்தால் இராமன் ஒரு வீரனேயல்லாமல் வேறில்லை.
எ)    சீதையிருக்குமிடம் (வேதம் பயின்ற) இராமனுக்கு தெரியாதிருந் தும், அந்த இடத்தை குறித்து அவன் குரங்குகளிடமும் பட்சிகளிடம் விசாரித்து, அதைத் தேடினது தெய்வத்துக்கு ஏற்றவை அல்ல.
ஏ)    சில வித்துவான்கள் எண்ணு கிறபடி சீதை என்பதை வேளாண் மையைக் குறிக்கின்றது. இராவணன் முதலானவர் இராட்சதர் என்றால் ஆரியருடைய பருவப் பலன்களை (Crops) கொள்ளை  அடிப்பவர்; இராமன் என்றால் வேளாண் மையைக் காப்பவர்.
ஐ)    இருக்கு வேதத்தில் 10ஆம் மண்டலத்தில் 57ஆம் சூக்தத்தில் உழவு துவக்கும்போது வேளாண்மை ஆயுதங்களை மற்றும் சீதையை வணங்கினார்கள் என்று கூறப்பட் டுள்ளது.
ஒ)    பலராமன் என்ற மூன்றாவது இராமன், உழவுத்தொழிலை மற்ற ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். இதனால் கலப்பை ஆயுதன் என்று அழைக்கப்பட்டான் (அலாயுதன் என்றால் கலப்பை ஆயுதன் அல்லது ஏதடூ/ கலப்பை உடையவன்)
ஓ)    மேலே உள்ளவைகளால் ருசு செய்யப்பட்டது எனக் கூற இயலாது. ஆனால் விவேகம் உள்ளவர்களின் கருத்து எனக் கூறலாம்.
- -விடுதலை ஞா.ம.26.1.13

.

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (3)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
ஔ) இருக்கு வேதகாலத்தில் ரிஷிகள் பஞ்சநாதம் (ஐந்தாறு) ஆகிய பஞ்சாப் தேச அரசர்களுக்குப் புரோகிதர்களாக இருந்தனர். அவர்கள் ரிஷிகள் அரண்மனை வாசம் செய்தனர். அரசர்களுக்கு ரிஷிகள் ஊழியம் செய்தனர். மேலும் ரிஷிகள் பாட்டுக்கள் கட்டினார்கள். மேலும் பாட்டுக்கள் பாடி யாகம் செய்தார்கள். ஆனால் இராமாயணக் காலத்தில் ரிஷிகள் நாட்டை விட்டு தெற்கே சென்று காட்டில் தவம் செய்தனர்; சிலர் தியானம் செய்தனர். இது வேத காலம் மதம் முடிவ டைந்து இதிகாசம் தோன்றியதைக் குறிக்கிறது. பின்னர் புராணக் காலத் தில் புராண மதமாக உருவெடுத்தது. (ஆனால் இந்து மதமாக மாற்றம் அடைந்தது எப்போது என்பதைக் குறித்து தகவல் இல்லை). இந்த ரிஷிகள் விசேஷ காலங்களில் அரண் மனைக்கு வருவார்கள். கால்டுவெல் இறுதியாகச் சொல்வது இராமா யணத்தில் உண்மையும் அபத்தங் களும் கலந்துள்ளன என்பது ஆகும்.
இராமர் பாலம் ஒரு கற்பனைப் பாலம்
இராமாயணத்தில் கதை காலத் துக்கேற்றவாறு மாற்றம் அடைந்தது. மொழிக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றது. தேசத்துக்கு தேசம் மாற்றம் பெற்றது. இதில் எது உண்மையான கதை என்பது தெரியாது. மக்களின் கலாரசனைக்கு ஏற்ப பாடல்களாக பாடப்பட்டது. மேலும் சமஸ்கிருதம் நாடோடி மொழியில்  இருந்தபோது ஏற்பட்ட கதையாகும். இந்த இராமாயணம் கற்பனையா? உண்மையா? மற்றும் இராமர் பாலம் கற்பனையா? அல்லது உண்மையா? என்பதைக் கண்டறிய கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பெறப்படும் விடைகள் மூலம் அறிந்து கொள்ள லாம்.
1)    இராவணன் மகன் இந்திர ஜித்திடமிருந்து இந்திரனைக் காப்பாற்ற விஷ்ணு பெருமான் மனிதனாக பிறந்தது உண்மையா?
2)    இராமன் குழந்தையாகப் பிறந்தபோது இந்திரஜித்துவின் தந்தை இராவணனுக்கு வயது 50 இருக்குமா?
3)    இராமன் வளர்ந்து, சீதை யுடன் 12 ஆண்டுகள் இல்லறம் நடத்தி 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து இராவணனைக் கொல் வதற்கு 41 ஆண்டுகள்ஆகியது தேவர்களை காப்பாற்ற ஏன் இந்த தாமதம்?
4)    இராமன் காட்டிற்கு சென் றது இராவணனைக் கொல்வதற் காகவா?
5)    இராமன் 14 ஆண்டுகள் காட்டில் வசித்தபோது சிங்கம், புலி, யானை, மலைப்பாம்பு போன்ற இந்திய மிருகங்களை ஏன் சந்திக்கவில்லை? போரிடவில்லை?
6)    சமஸ்கிருதம் பேசும் ஜடாயூ, ஆஞ்சநேயர், ஜாம்பவான், வாலி, நளன் போன்ற வளர்ப்பு மிருகங் களை மட்டும் சந்தித்து, வேதம் பயன்ற இராமன் இலங்கைக்கு வழி கேட்டது ஏன்? இராமன் சென்றது காடா அல்லது படப்பிடிப்பு அரங்க அமைப்பா?
7)    வால்மீகியின் கற்பனை பாலம், சாகரன் என்ற மன்னனால் வெட்டப்பட்ட கடல் பகுதியில் இலங்கை செல்லக் கட்டப்பட்டது. ஆனால் மேலே சொல்லப்பட்ட கடல் கங்கை நதி கடலுடன் கலக்கும் பகுதியில் உள்ளது.
8)    இலங்கை மன்னன் இரா வணனைக் கொல்ல இராமன் அயோத்தியில் பிறந்தது ஏன்?
9)    கி.பி.1600ல் இந்தியா (நாவலந் தீவுக்கு) வந்த கிழக்கு இந்தியா கம்பெனியினர் சிங்களத் தீவுக்கு வைத்த பெயர் சிலோன். சிலோனுக்கு அருகே கடலில் உள்ள மணல் திட்டுகளுக்கு வைத்த பெயர் Adam Bridge இந்த  பெயர்களை இந்திய மக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண் டது ஏன்?
10)    லங்கா என்றால் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதி கோதாவரி முகத்துவாரத்தில். தவளேசுவரத்தி லிருந்து கோபாலபுரம் வழியாக முக்காமலா வரை (தேசிய நெடுஞ் சாலை 5) பல லங்கா நகரங்கள் அமைந்துள்ளன. இவைகளில் ஒன்று இராமன் தேடிய இலங்கையாக ஏன் இருக்கக் கூடாது? (ஸ்ரீ) ரங்கம் மொழி மாற்றம் அடைந்து லங்கா என்றானது.
11)    கங்கா நதியில் பாலம் கட்ட முடியாமல் படகில் சென்ற இராமன் கடலில் 100 யோசனை தூரத்துக்கு பாலம் கட்டினார். இது உண்மையா?
12)    காசியில், அஸிகாட் அருகே, லங்கா ரோடு அருகே கங்கை நதியில் பல லங்காக்கள் (தீவு) உள்ளன என்று படகோட்டி முதல் ஐரோப்பியர் வரை கூறுகிறார்கள். இது உண்மையா?
13)    மத்திய பிரதேசத்தில் கட்னி அருகே, ஒரு மலையில் நின்று இராமனும் இலக்குமணனும் இலங்கையைப் பார்த்தார்கள். இந்த இடம் பந்தவகாட்'' (தம்பிக் கோட்டை) என்று அழைக்கப் படுகிறது. இந்த இடம் மத்திய அரசு தொல்லியல் துறை வசம் உள்ளது. இது மத்திய அரசு இலங்கை எங்கே உள்ளது என்று விளக்குமா?
14)    சிங்களத் தீவுக்கு சிறீலங்கா என்று அரசு பெயரிட்டது 1972ல் தான். எனவே இராமாயணக் காலத்தில் இலங்கை இருந்திருக்குமா? கி.மு.500க்கு முன் சமஸ்கிருதம் இருந்ததா?
15)    பூம்புகாரைக் கடல் கொண் டது. சிந்து சமவெளி தமிழர் நாகரிகம் புதையுண்டது. ஆனால் திரேதாயுகத்தில் 20 லட்சம் ஆண்டு களுக்கு முன் இருந்த அயோத்தியும், இலங்கையும் இன்றும் இருக்கிறதா?
இந்த வினாக்களுக்கு விடை கிடைத்தால் சேது சமுத்திரம் என்ற தமிழர் கனவுத் திட்டம் நிறைவேறும் என்பது திண்ணம்.
- -விடுதலை ஞா.ம.2.2.13