பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2023

இராமாயணத்தில் கந்தன் பிறப்பு கதை

வால்மீகி ராமாயணத்தில் கந்தன் என்று சொல்லப்படும் முருகனின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் 'சிவனின் நழுவி விழுந்த வீரியத்திலிருந்து உண்டானவன் ஸ்கந்தன்' என்றும், ஆறு தலை உடன் பிறந்ததால் ஆறுமுகன் என்றும் கார்த்திகை பெண்களின் பாலை உண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி  வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டவை வருமாறு:-
தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டார்கள். 'சிவனிடத்தில் ஸ்கந்தன் எனும் பெயரில் ஒரு புத்திரன் பிறப்பான் அவன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று பிரம்மா கூறினார்.
அவர் கூறியதற்கு இணங்க சிவனின் வீரியம் நழுவி விழுந்தது. அதை அக்னி பகவான் கையில் பிடித்து பத்திரமாக கங்கையிடம் கொடுக்க, கங்கையோ தன் கர்ப்பத்தில் வைத்து பாதுகாத்தால். அதன் அனல் தாங்க மாட்டாமல் கர்ப்பத்தை கீழே நழுவவிட்டால், அந்த கர்ப்பம் சரவணப் பொய்கை என்று சொல்லப்படுகிற மூங்கில் திட்டில் போய் சேர்ந்தது. அங்கு  அந்த கர்ப்பம் ஆறுமுகத்துடன் குழந்தையாக தோன்றியது. தேவர்களால் அனுப்பப்பட்ட கார்த்திகை நட்சத்திர பெண்களால் பாலூட்டப்பட்டு கார்த்திகேயன் என்ற பெயரால் வளர்க்கப்பட்டான்.
இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் (பாலகாண்டம், கங்காவதாரண கதை, ஸர்க்கம்:37.1-
37.31) கூறப்பட்டுள்ளது.

புதன், 1 நவம்பர், 2023

இராமன் பாலம் எங்கே?

"மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!"
- கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)

வெள்ளி, 5 மே, 2023

இராமன் எத்தகைய இராமனடி! - 2


  

31

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தகைய இராமனடி!

(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.

ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்! 

இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். 

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. "இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்" என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். 

6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்" என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).

7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே" என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).

8. "என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே" என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).

9. "எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).

10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் "இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்'” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், "இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்" 'என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் "இராமனின் மனைவிமார்கள்" என்றே வாசகங்கள் வருகின்றன.

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.

12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு "கைகேயி தீய குணமுடையவள்" என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).

13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், "அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்" என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),

14. "என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.

15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் "கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்" என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.

16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்" என்று சொன்னபோது, இராமன். "அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே" என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்

18.தந்தையை, "மடையன், புத்தி இல்லாதவன்" (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான். 

19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்" அயோத்தியா  காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.

20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

21. தன் மனைவி சீதையைப் பார்த்து. "நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்" அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.

22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. "பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?" என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

23. மற்றும் "உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?'' என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)

25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு "நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).

26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.

27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.

28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.

29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்" என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.

30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, "தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?" என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.

31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, "மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை" என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.

32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!

33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை). 

34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.

35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். "பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது" என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.

37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.

38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).

39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).

40. கரனோடு போர் புரியும் போது. "உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்" என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)

41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். "என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.

42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),

43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) "சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு" என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)

44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். "சத்யாகிரகம்" செய்தும் அழைத்தபோது. 'தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்" என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).

45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.

46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).

47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் ('எமனால்') ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).

48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: "ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம..."

பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)

குறிப்பு: சம்பூகன் என்கிற 'சூத்திரனை' தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், 'சூத்திரர்' எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?

49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு "அபிதான சிந்தாமணி"யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.

50. இராமாயணங்களிலும் 'பரசுராமன்' சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது - எப்படி இருந்தாலும் "முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை. 

நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து 

வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான். 

அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.

எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், "அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக" என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.

இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.

இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.

மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்

ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கர் ஆராய்ச்சி - ரஷ்யப்  பத்திரிகையின் வெளியீடு "The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana"

இதன் மொழிபெயர்ப்பு:

"இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்"

அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union  என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.

(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய 

"இராமாயணப் பாத்திரங்கள்")

இராமன் எத்தனை இராமனடி!

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தனை இராமனடி!

மின்சாரம்

5

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இராமன் என்பவன் ஏதோ உதாரண புருஷன் போலவும், அவன் பெயரை இலட்சம் முறை ஸ்ரீராம நாம மந்திரம் எழுதினால், ராமன் வாழ்த்துவான் என் றும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் முன்னுதாரணமாக அமையும் என்றும் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' (31.3.2023, பக். 13) ‘புரூடா' விட்டுத் தள்ளியுள்ளது. 

இதன் மூலம் என்ன தெரிகிறது? இராமன் தற் புகழுக்கு மயங்கும் சராசரி மனிதன் என்று விளங்க வில்லையா?

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இராம அவ தாரத்தின் நோக்கம் என்ன? இராமனுக்கு இருந்த சாபம் என்ன என்பதை இராமாயணத்திலிருந்தும் சிவரக சியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலிருந்தும் பார்க்கலாமா?

இதோ ஆதாரங்கள்:

6

இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும் இந்திரனோடு நான்முகன் உலகடைந்து, தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து, இராவணனைக் கொன்று வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்குத் தாமும் இசைந்து. அவர்களை நோக்கித் திருமால், "தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து. இராவணனைக் கொன்று, பதினோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர். இங்கே வருவேன்" என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம் அவை:

1. ஒருகால் திருமால், பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்றுவிட்டார். அதனால். அம் முனிவர் திருமாலை நோக்கி, மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து வருந்தும்படி சபித்துவிட்டார். இது முதற்காரணம். இது வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. இதே செய்தி மகா ஸ்கந்த புராணம், உபதேசகாண்டம் அறுபத்து நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பெற்று உள்ளது.

2. சலந்தராசுரனின் மனைவியாகிய பிருந்தையைச் சேரவேண்டும் என்னும் காதல் மிகக்கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமைகண்டு. அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார். சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்துகொண்டு, "மாயையினால் என் னோடு கூடி. அதனால் பிறர் மனையாளைப் புணர லென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையாலெடுத்துப் போகக் கடவன் என் கணவன் உடம்பினைக் குரங்கு களால் நீ கொண்டு வந்ததனாலேயே நீயும் குரங்கு களோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய்” என்று சபித்தாள், பின், உடனே அவள் தீக்குளித்து, கெட்ட தன் உடலைச் சாம்பலாக்கினாள். இச்செய்தி மகா ஸ்கந்த புராணம் தக்க காண்டம் இருபத்துமூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன்பின் அச்சாம்பவில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது. இது இரண்டாவது காரணம்.

3. ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்துகொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கள் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி. “நீ யாரடா?" என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல் திருமால் அவள் மேலிருந்த வண்ணமாகவே. "கேட்பது யாரடா?" என்றார். இவ் வெறுக்கத்தகுந்த செயலைக் கண்டு மீண்டு அத் தலைவன் இச்செய்தியை நந்திபிரானிடம் தெரிவித்தான். உடனே நந்திதேவர் அத்திருமாலைப் பூமியில் இராமனாய் பிறந்து. மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தியைச் சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.

அச்செய்யுள் வருமாறு:-

"அவளை நீ யாவனடா வென்று கேட்டே 

ளம்புயப் பெண் ணைத்தழுவ னீங்ககில்லா

னெவனமா துடன்கூடி யிலச்சை யின்றி 

யென்னை நீ யாவனடா வென்று கேட்டான் 

கவனமுறு மிவன் தூர்த்த ளென்று கண்டேன் 

கருத்தி லவன்றனைத் தள்ளவல்லே ளெம்மான 

சிவனருள்சே ருளதாணை குறித்து மீண்டேன் 

தேவரி தொரு புதுமையவள் பாற் கண்டேன்"

“மன்னவன் றன் மைந்தனா மிராமனாகி 

வந்து பிறந்திடக்கடவ னாகுமன்றே"

இது மூன்றாவது காரணம்.

இது போன்ற யாதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அமிசம் 2ஆம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது. அதாவது, வைகுண்டத்திலே திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்தில் திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றனர். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி, அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்தபடியே அவரை வராது நிற்கும்படி கைகாட்டித் தடுத்தனர். உடனே பிருகு முனிவர்.

"எந்நாளு மினியவந் திவேளை தன்னி

லேந்திழையைப் புணர்வரோ வுனக்கிப் புத்தி 

சொன்னாரா ருன்மத்த முண்டோ வென்று 

தூயமா தவன்றான்மா தவனை நோக்கிப் 

பன்னாளும் பிரதோடந் தனிலுன் னாமம் 

பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் 

துன்னாத நிரயத்திற் புகுவா ரென்று 

சூழ்கோபத் தாற்சாபஞ் சொல்லிப் போனான்."

மேலே கண்ட சாபங்கள் பலிக்குங் காலம் வர, திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார்.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்குக் கொலை, களவு, காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்ப வர்கள் கடவுளர்கள் ஆவார்களா? இச்செயல்கள் தேவலோகத்தில் நடந்ததா? பூலோகத்தில் நடந்ததா? தேவர்கள் எங்கிருப்பவர்கள்? அவர்கள் யாகம் செய்யப் பூலோகத்திற்கு ஏன் வரவேண்டும்? ஜீவப் பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று. பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும் உயர் பதவியும், மேன்மை யும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும், கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும், அதைத் தடுக்கிறவர்கள் இராட்ச தர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப் பட வேண்டியதாகும்.

இன்றைய நாள்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொதுமக்களும், அரசாங்கமும் கருதிப் பழிப்பும் ஆக்கினையும், தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத் தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் 'சிவபக்த'னான இராவணனுடைய நாட்டிலும் ஆட்சியிலும் இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும். தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்ய வேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததனாலேயே அந்த அர சனையும். அவனது குலத்தையும், குடிபடைகளையும், நாட்டையும், அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்துவர வேண்டியது கடவுள் தன்மையா? என் பனவும், இதைப்போன்ற பிறவற்றையுமே ஆராய்ந் தால், இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருந்துவருவது விளங்கும்.

இவை நம் கை சரக்கல்ல - ஹிந்து மத நூல் களிலிருந்தே எடுத்துக் காட்டியுள்ளோம். அறிவு நாணயம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.

1944ஆம் ஆண்டிலேயே "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலை தந்தை பெரியார் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மறுப்பு உண்டா?

இந்த இலட்சணத்தில் இலட்சம் முறை "ராமாவளி" எழுதினால் என்னென்னவெல்லாம் கிடைக்குமாமே!

காகிதத்திற்கும் மைக்கும் நேரத்துக்கும் உழைப்புக்கும் தான் கேடு - அம்மட்டே!

இராமரின் யோக்கியதாம்சம் குறித்து வரும் வெள்ளியன்று (14.4.2023) பதிலடியில் காண்போம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!





இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!

செ.ர.பார்த்தசாரதி

"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வரவேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டிவந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.

உவமைக் கவிஞர் சுரதாகூட தமது ‘சுரதா' இதழிலே ஒருமுறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்'  என்று எழுதியிருந்தார். 

ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.

சீதை இராவணனை இலை குடிலுக் குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.

இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:

"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்

வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.

(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)

கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமி புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக் குள் அமரவைத்து பேசியதாகத்தான் கூறுகிறது.

வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழி பெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்

துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)

சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!

ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டைப்பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படிச் செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை  எழுதி நடந்ததாக பொய் சொல்லி அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.
- உண்மை இதழ், 01.11.1986

வியாழன், 9 மார்ச், 2023

இராமாயணத்தைப் பற்றி அறிஞர்கள் கருத்து என்ன?

 பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்கள் திறக்குமா?

இராமாயணத்தைப் பற்றி  அறிஞர்கள் கருத்து என்ன?

(வேதம், இராமாயணம் முதலியவற்றைப் பற்றி கருத்தரங்கை நடத்திட ஆணை பிறப்பித்திருக் கிறது யூசிஜி - இவற்றின் யோக்கியதை என்ன? இதோ!)

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர் களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும், பேரறிஞர் களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

(ரோமேஷ் சந்திர தத்தர் C .I.E.,I.C .S., எழுதிய ‘புராதன இந்தியா’ 52 ஆவது பக்கம்)

“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.

(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் M.A., யின்  ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’ 22 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள்மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.”

(பி.சிதம்பரம்பிள்ளை எழுதிய, ‘திராவிடரும் ஆரியரும்’  24 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பா ருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களையே குறிப்ப தாகும்.”

(ரோமேஷ் சந்திர தத்தர் எழுதிய, ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ 139 - 141 ஆவது பக்கம்)

“தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

(‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்’ ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கம்)

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமி ருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவ தற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”

“தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடி மக்க ளுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.”

(1922 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்  ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில்) 

பகைமைக்குக் காரணம்

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும். தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.”

(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 62 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால், ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராட்ட மாகும்.”

(ராதாகுமுத முக்கர்ஜி எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்)

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியாளர்களால் பேசப்படும் பாஷை”

(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது)

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதா ருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன”

(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் -3 பக்கம் 10)

“தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள், ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தார்களானதால்”

(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியாவும் இந்தியக் கலையும்’  என்ற புத்தகத்தில் 3 ஆவது பக்கம்)

“இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.”

(பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’என்னும் புத்தகத்தில் 10 ஆவது பக்கம்)

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமி ருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”

(ஜோஷிட சந்தர் டட் எழுதிய ‘இந்தியா அன்றும், இன்றும்’ என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

அசுரர்கள் யார்?

“ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.”

“இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது.”

(ஏ.சி.தாஸ், M.A.B.L., எழுதிய ‘ரிக் வேதகாலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்)

“ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

(  C.S.சீனிவாசாச்சாரி, M.A.,M.S., ராமசாமி அய்யங்கார் வி.கி., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்)

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்குத் தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர் களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண் டார்கள்.”

(H.G. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்)

“ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரியர் சம்பந்தப்பட்ட வர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

(New Age Encyolopaedia ‘நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா’ Vol. II  (1925) பக்கம் 273)

இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே

“இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“மகாபாரதம், கங்கைநதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம், தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.”

(முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி தங்கள் இஷ்டம்போல், எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்தி கட்டுக் கதைகளை எழுதி வைத்துக்கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவை களாகும்.”

(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர்  1865 இல் எழுதிய ‘விரிவான இந்திய சரித்திர முதற் பாகம்’என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”

(இ.பி. ஹரவெல் 1918 இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்)

“பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென் னிந்தியாவை - திராவிட நாட்டைப்பற்றியேயாகும்.”

(G.H.  ராபின்சன்,  C.I.E.  - யால் எழுதப்பட்ட ‘இந்தியா’ என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்)

வட இந்திய திராவிடக் கலை

“வட இந்தியாவில் இருந்த திராவிடக்கலை, நாகரி கம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப் பட்டுவிட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை.”

(தமிழ்ப் பேராசிரியர் K.N.  சிவராஜபிள்ளை B.A., எழுதிய ‘பண்டைத் தமிழர்களின் வரலாறு’  என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்)

“பாரதத்தில் இடும்பி என்ற ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப்பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”

(நாகேந்திரகோஷ் B.A.B.L.,  எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்’ என்ற புத்தகத்தின்  194 ஆவது பக்கத்தில் உள்ளது)

“இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.”

(ஹென்றி ஸ்மித்வில்லியம் எல்.எல்.டி எழுதிய ‘சரித்திரக்காரர்களின்  உலக சரித்திரம்’ வால்யூம் 2 இல்,  பக்கம் 521)

“இந்தியாவில் தென்பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.”

(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்ட் எழுதிய  ‘இந்திய சரித்திரம்’ 14 ஆவது பக்கம்)

“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று, யாகம் செய்யும் வழக்கம் இருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்”

(‘இம்பீரியல் இந்தியன் கெஜட்’ 1909ஆம் வருடத்திய பதிப்பு, வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்)

ஆரியரல்லாதார் பட்டபாடு

“ஆரியரல்லாத இந்த நாட்டுப் பழங்குடிமக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும், ஆரியர்களும் ஆரியப் புரோகிதர் களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார் களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள் தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.”

(சர் வில்லியம் வில்சன்ஹண்டர் K.C.S.I.,C.I.E.,M.A.,   ஆக்ஸன்  L.L.D. எழுதிய ‘இந்திய மக்களின் சரித்திரம்’  என்னும் நூலின் 41 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன் மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.

(பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட ‘மலபார் குவாட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகம்)

“நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை; ஒன்றையும் நம்புவ தில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக”

(“ரிக் வேதம்” அதிகாரம் 10, சுலோகம் 22-8)

“ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடு வதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதா ரங்கள் இருக்கின்றன.”

(ராகோசின் எழுதிய ‘வேதகால இந்தியா’ என்னும் புத்தகம்)

“இந்திய அய்ரோப்பியர்களால் அதாவது, ஆரியர் களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திரா விடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக் கின்றது.”

(பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர் கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்ளைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலிய வைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.”

(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், G.C.M.G.K.C.E.,    1931 இல் எழுதிய ‘இந்தியாவில் அன்னியர்கள்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பவேயில்லை. “பஞ்சதந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.”

(பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள “டிஸ்கவரி  ஆஃப் இந்தியா” (Discoverey of india) பக்கம் 76 -77)

“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 82)

“ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசி யலாலும் மாறுபட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற் கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஆரியர் களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 62)

“இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.”

(திரு. நீலகண்ட சாஸ்திரி)

“இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப் படையாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப்படையெடுப்பாளர் களுக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர, வேறல்ல.”

(சர்ஃபிரோஸ்கான்நூன், (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய “இந்தியா” என்ற புத்தகத்தில் பக்கம் 8)

“இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு ஜாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, ஜாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கிவைத்து, அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.”

(மறைமலையடிகள் “அறிவுரைக்கொத்து”)

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்”

(மறைமலையடிகள் “வேளாளர் நாகரிகம்” பக்கம் 61)

“ஆரியர் வழிவந்த பார்ப்பனர்கள், “கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார்” என்று பொய் யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டனர்.”

(மறைமலையடிகள் “கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” பக்கம் 32 - 34)

“இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசுரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரைக் குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை “தேவர்கள்” என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.”

(திரு.ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளை “இராமாயண உள்ளுறைப் பொருள்” என்ற நூலின் முன்னுரையில்)

“மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ (allegory)   சரித் திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்”

(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் பக்கம் 34)

“புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதிகூலராயு மிருந்த திராவிடர் பெருஞ்சாதி வகுப் பினரை ஆரியக்கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும், இழித்துக் கூறியது அவர்களுக்குரிய ஜாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி, மற்றொன்றையும் குறிப்பதன்று.”

(வெ.ப.சுப்ரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய “இராமாயண  உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்” பக்கம் 19)

“இராமாயணம் கட்டுக்கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலைசிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாக வும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்த தைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.”

(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய  ‘இராவணப் பெரியார்’ பக்கம் 78)

“மகாபாரதத்தில் இருப்பதுபோலவே, இராமாயணத் திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண் டிலும் சரித்திரம் சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.”

(ஆர்.சி.தத், ‘பழைய இந்து நாகரிகம்’ பக்கம் 138)

“அண்ணனைக் காட்டிக்கொடுத்துவிட்டுப் பட்டத் தைப்பெறும் தம்பியைப் பக்தன் என்று சொல்ல முடியுமா? பத்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோ தரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.

“விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே, தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத்துரோகிகள் ஆகி விட்டார்கள்.”

(வ.ரா. எழுதிய “கோதைத் தீவு” பக்கம் 24, 25)

“புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல; இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாக. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே”

(திரு. முன்ஷி எழுதிய ‘இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும்’ பக்கம் 8)

இந்தப் புராண இதிகாச குப்பைகளை, கற்பனைப் படைப்புகளைப் பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்கிறது யூசிஜி - வெட்கக்கேடு அல்லவா?