பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

இராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (2)

17.11.1929 - குடிஅரசிலிருந்து...

ராமனையும் அவனைச் சேர்ந் தவர்கள் என்று சொல்லப்படுபவர்களையும் வட தேசத்தி யராகவும், ஆரியராகவும் கடவுள் களின் தனித்தனி அவதாரங்களாகவும், அவர்கள் எல்லாம் தர்மத்தைக் காட்ட வந்த தர்ம தேவதைகளாகவும் போற்றப்பட வேண்டி யவர்களாக கற்பித்து இராவணனையும் அவனது கோஷ்டி யாரையும் ராட்சதர்களா கவும் தென் தேசத்தியர்களாகவும், திராவிடர் களாகவும், அதர்மம், கொடுமையுமே உருவாய் வந்தவர்களாகவும் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாகவும், இழித்தும், பழிக்கப்பட வேண்டியவர்களாகவும் கற்பித்து, உலகில் உள்ள நன்மைகள் உயர் குணங்கள் ஆகியவை எல்லாம் ராமனுடையதாகவும் அவனது கோஷ்டியாருடையதாகவும், அவற்றிற்கு எல் லாம் அவர்கள் உருவமென்றும், தீமைகளும், தீக்குணங்களும், ராவணனுடையதும் அவனது கோஷ்டியாருடையதும் என்றும், தீமைக்கும், தீக்குணத்திற்கும் இவர்களே உருவமென்றும் கற்பித்து இருக்கின்றதை அடியோடு ஒழிப் பதற்கு, அதற்குத் தகுந்த பல காரணங்கள் காட்டியும் எழுதியும் பேசியும் வரப்படுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பனர்கள் இரா மாயணத்தை மக்களுக்கு எந்த விதத்திலாவது புகுத்தி அதன் பயனாக தங்கள் ஆதிக்கத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆதரவு தேடிக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றி இழிவுபடுத்தி வருகின்றார்கள் என்று கருதி அதை எந்த விதத்திலும் மக்கள் மதிக்காமல் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடனே இராமாயணம் இப்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது என்பதேயாகும்.

ஆகவே, இது சம்பந்தமான எல்லாவித எதிர்ப்புகளுக்கும் அநேகமாக சமாதானம் சொல்லி, பார்ப்பனர்களின் வாய்க்கும் புராணி கர்கள் வாய்க்கும் ஒருவாறு ஆப்புக்கடாவின பிறகு இப்போது சில பார்ப்பனர்கள் தோன்றி வேறு விதமான தந்திரத்துடன் இராமாயணத்தை நிலைக்க வைக்க வெளிப்பட்டிருக்கிறார்கள். அதாவது இராமாயணம் என்பது அதிக பொய்க் கதையாயிற்றே. அதை ஏன் கிளறிக் கொண்டி ருக்கிறீர்கள் அதில் உள்ள பாத்திர அழகு, வர்ணனை அழகு, கவி அழகு ஆகியவை களுக்கு மாத்திரம் மதிப்புக் கொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், மற்றபடி அதை கவனிக்காதீர்கள்; அப்படி மீறிக் கவனிப்பது மடமை, மூடநம்பிக்கை என்றும், சுயமரியாதை அற்றதன்மைகள் என்றும் சொல்லி நம்மை வேறு வழியில் ஏய்க்க வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தார்களை நாம் ராமனையும் இராமாயணத்தையும் கடவுள் என்றும் கடவுள் நடவடிக்கை என்றும் சொல்லுகின்றவர்களை விட மூடர்கள் என்றும், பித்தலாட்டக்காரர்கள் என்றுமே தான் சொல்லுகின்றோம்.

ஏனென்றால், ராமனை கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் எல்லாம் ராமனை பூஜித்துக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்லு கின்றார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலராவது உண்மையில் மூடநம்பிக்கையில் ஈடுபட்ட யோக்கியர்களாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், ராமன் கடவுள் அல்ல; இராமாயணம் நடந்ததல்ல என்று சொல்லிக் கொண்டு நம்மைக் குற்றம் சொல்கின்றவர்களில் ஒருவ ராவது யோக்கியர்களாக இருக்க முடியாது என்றே சொல்லுவோம். இதற்கு என்ன காரணம் என்றால், இவர்கள் உண்மையிலேயே இராமா யணம் நடந்த கதை அல்ல என்று மற்ற மக்க ளுக்கு எடுத்துச் சொல்லி அதை மெய்ப்பிக் கின்றவர்களாயிருந்தால் இவர்களுக்கு இப் போது நம்மிடத்தில் சிறிதும் வேலை இல்லை. மற்று யாரிடத்தில் என்றால், ராமனைக் கடவுளாக வைத்து கும்பிடுகின்றவர்களிடத் திலும், பூஜை உற்சவத்திற்கு கோடிக் கணக்கான பொருள்களை பாழாக்குபவர்களிடத்திலும், கோடிக்கணக்கான பொருள்களைப் பாழாக்கி கோயில்களை கட்டுபவர்களிடத்திலும், முதலில் போய் இவர்களது புத்திசாலித்தனத் தையும் ஆராய்ச்சித் திறத்தையும் மூட நம்பிக்கையை ஒழிக்கும் தன்மையையும், மடமையை நீக்கும் தன்மையையும் சுயமரி யாதை உணர்ச்சியை ஊட்டும் வேகத்தையும், காட்டியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இராமாயணப் புரட்டை வெளியாக்குபவரி டத்தில் வந்து முட்டிக்கொள்பவரிடத்தில் கடுகளவாவது உண்மையோ, யோக்கியமோ, இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். உதாரணமாக, நாட்டுக் கோட்டைச் செட்டி நாட்டில் உள்ள ஒரு புராணப் பிரச்சார பத்திரி கையில் காரைக்குடி விநாயகர் மண்டபத்தின் இந்துமத அபிமான சங்க சார்பாய் திரு.பி.ஸ்ரீ. ஆச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பனர் இராமாயணத்தின் இரகசியம் என்று ஒரு பிரசங்கம் செய்ததாக காணப்படுகின்றது. அதில் உள்ள விஷயங்கள் இந்துமத அபிமானத்தின் மீது செய்யப்பட்ட பிரசங்கமாகவே வைத்துக் கொள்ளப்பட்டாலும், இராமாயணத்தைக் காப்பாற்றுவதற்கு திருட்டுத் தனமான முறையில் தந்திரம் புரிகின்றார் என்று தான் சொல்ல வேண்டி இருக்கின்றது. இப்படிச் செய்வது பார்ப்பனர்களுக்கு குல தர்மம் என்று ஒருபுறம் சொல்லக்கூடுமானாலும் நாம் அதை அந்தப்படியே குலதர்மம் என்று விட்டுவிட முடியாததற்கு வருந்துகின்றோம். ஏனெனில், அது பாமர மக்களை ஏய்க்கவே நமது முயற்சி களுக்கு இடையூறாக செய்யப்படும் சூழ்ச்சி என்று நாம் கருதுவதால் அதன் புரட்டை வெளியாக்க வேண்டியது நமது கடமையா கின்றது. அதாவது, திரு.ஆச்சாரியார் அதில் இராமாயணம் ஆரியர் திராவிடர் என்கின்ற பாகுபாட்டிற்கு உடையதல்ல என்கின்றார்.  ஆனால், கம்பர் ராமனை ஆரியன் என்றும், இராவணனை தென்னாட்டவன் என்றும் பல இடத்தில் சொல்லி இருக்கிறார் என்பதற்கும், வால்மீகியும் வடக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என்றும் தென்பாகத்தில் உள்ளவர் களை அரக்கர்கள் என்றும் சொல்லி இருப்பதாக மொழி பெயர்ப்புகளில் இருக்கின்றது என் பதற்கும், இவர் என்ன பதில் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் இராமன் பார்ப்பனர்களின் காலில் விழுந்து கும்பிட்டதாகவும், அவர்களுக்கு பொருள்கள் தானங்கள் செய்ததாகவும், பார்ப்பனருக்கு திதி கொடுத்து தனது தந்தையை மோட்சத் திற்கு அனுப்பியதாகவும் சொல்லப் பட்டிருக்கின்றது. அது மாத்திரமல்லாமல், சூத்திரன் தவம் செய்ததற்காக (கடவுளை வணங்கியதற்காக) அவன் ராமனால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. அது மாத்திர மல்லாமல், மாமிசம் சாப்பிடுபவனும், குடிகாரர் களுடைய நேசம் கொண்டவனுமான ராமன் செய்த கெட்ட காரியங்களையெல்லாம் கூட நல்ல காரியங்களாகவும் வேதம் படித்து கோடிக் கணக்கான வருஷம் தவம் செய்து, கடவுள் அருள் பெற்றவனை எது செய்தாலும் கெட்ட வனாகவே பாவிக்கப்பட்டிருக்கின்றது, இவை களில் எதற்கு திரு.ஆச்சாரியார் சமாதானம் சொல்லுகின்றார் என்று கேட்கின்றோம்.
- விடுதலை நாளேடு, 14.12.18

வெள்ளி, 7 டிசம்பர், 2018

இராமாயணமும் பார்ப்பனிய தந்திரமும்-மி (1)


17.11.1929 - குடிஅரசிலிருந்து...

இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனியத் திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமை உள்ள கடவுளாகிய மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப் படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்துகொண்டதாக அப்புராணத்தில் சொல் லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்டநிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண் மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப் பட்டு  ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப்படியே, ஒரு காவியம் பாடச் செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும் சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச்செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனர் குதிருக்கே போய்ச் சேரும்படியும் செய்துகொண்டு வந்திருப்பதுடன், அந்த இராமாயணக் கதையில் சொல்லியுள்ளபடியே இராமாயணத்தில் வரும் ராமனுக்கு ஒரு ஆயிரம் கோயில்களும், லட்சுமணன், பரதன், சத்துருக்கணன் ஆகியவர்களுக்கு ஆளுக் கொரு ஆயிரமாயிரம் கோயில்களும் அனுமா ராகிய குரங்குக்கு ஒரு பதினாயிரம் கோயில்களும், மற்றவைகளுக்கு நகை என்றும், வாகனம் என்றும் மண்டபம், சப்பரம், தேர் என்றும் மேளம், தாளம், தாசி, பூஜை உற்சவம் என்றும், மற்றும் இவை போன்றவைகளுக்கு என்றும் முதலாகியவைகளுக்கு வருஷம் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதும் இவற்றில் பெரும்பகுதி பார்ப்பனத் தொந்தியில் விழும்படியாகவும் செய்து, மற்றும் வீடுகள் தோறும் ராமன் படமும், சீதை படமும், அனுமான் படமும், சுவர்களில் தொங்க விட்டு, அதற்கு புஷ்பம், கற்பூரம், தேங்காய், பழம் பூஜையும் நடந்து வரும் படியாகவும் செய்யப்பட்டு இன்றைய தினமும் வழக்கத்தில் நடந்தும் வருவதை எவரும் மறுக்க முடியாது. இது மாத்திரமல்லாமல் ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள், தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும்,  பல இடங்களையும் கற்பனை செய்து, அவற்றிற்கும் மகத்துவம் கொடுத்து மக்கள் அணுகிச் செல்வதும், அவைகளைப் பார்ப்பதும் புண்ணியம் என்றும் மோட்சம் என்றும் இஷ்ட சித்தியாகம் என்றும் சொல்லி நம்பச் செய்து, அதன் மூலமாகவும், மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயும் செலவு உண் டாக்கப்பட்டு வருகின்றதையும் யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இவை மாத்திரமல்லாமல், ராமன், லட்சுமணன், சீதை முதலியவர்களுக்கு பார்ப்பன அடையாளமும், மற்ற, அதாவது இராவணன், கும்பகர்ணன், தாடகை, சூர்ப் பனகை முதலியவர்களுக்கு பார்ப்பனரல்லா தார் அடையாளமும் பெயர்களும், அது போலவே, அருவருக்கத்தக்கதாகவும் கெட்ட கருத்துக்கள் கொண்டதாகவும் கற்பித்து அவற்றை தேவர் அசுரர் என்பது போலவும், பிராமணர் சூத்திரர் என்பது போலவும் கருத் துக்களையும் ஏற்றி அதாவது இப்போது பார்ப் பனர்கள் என்பவர்கள் எல்லாம் தேவர்களைக் கருதும்படியும், இப்போது அவ்வொழிந் தவர்கள் அசுரர்களாகக் கருதும்படியும் சூழ்ச்சி செய்து, அதையும் நமது மக்கள் மனத்திற்குள் புகுத்தி விட்டார்கள்.

எனவே இப்பேர்ப்பட்ட புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் பெரும்பான் மையான நம்மக்களுக்கு ஏற்பட்ட இழிவையும் ஒழிக்கக் கருதி, மேற்கண்ட மாதிரியான மூடநம்பிக்கையிலும், பாமரத் தன் மையிலும் ஈடுபட்டு நஷ்டமடைந்து மானமற்று மிருகங் களிலும் கேவலமாய் பிழைக்கும் மக்களின் மடமையை நீக்க வேண்டுமென்ப தாய் இராமாயண ஆராய்ச்சி என்றும், இரா மாயண புரட்டு என்றும், இரா மாயண ஆபாச மென்றும், இராமாயண இரகசியமென்றும், மற்றும் பலவிதத் தலைப்புகளின் கீழ் அப்புரட்டுகளைச் சுயமரியாதை உணர்ச்சி யுள்ள பல பெரியோர்களும் அறிஞர்களும் கொஞ்ச காலமாய் வெளிப்படுத்தி வரும் விஷயங்கள் யாவரும் அறிந்ததாகும்.

இவ்வித வெளியீடுகளுக்கு நாட்டில் ஏற்பட்டஎதிர்ப்புகளும், தடைகளும் கொஞ்சமல்லவென்பதும் பொதுமக்கள் உணர்ந்ததே யாகும்.

அவர்கள் இதுவரை இராமாயணத் தினால் ஆதிக்கம் பெற்று வயிறு வளர்த்து வரும் பார்ப்பனர்களும் அவர்களது புல்லுரு விகளும் கூலிகளும் செய்து வந்த எதிர்ப்புகள் என்ன என்றால், இராமாயணத்தைக் குற்றம் சொல் லுவது மகாபாதகம் என்றும், அது கடவுள் நிந்தனை என்றும் மதத்துரோகம் என்றும், இராமனை கடவுளாக வணங்கும் இந்துக்கள் மனம் புண்படுகின்றது என்றும், மற்றும் பலவிதமான தந்திரவார்த்தைகளையும், மருட்டு வார்த்தைகளையும் சொல்லி பாமர மக்களை ஏமாற்றிவந்தார்கள்.

,இந்நிலையில் அவைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டு மென்று கருதியே இராமா யணம் நடந்த கதை என்று நம்புபவர்களுக்காக அப்படி நடந்திருக்க முடியாது என்பதற்குள்ள பல காரணங்களையும், இராமன் கடவுள் என்று நம்புபவர்களுக்கு, அவன் கடவுளாயிருக்க முடியாது என்பதற்கு பல காரணங்களையும், இராமாயணம், தேவர்கள், அசுரர்கள் சண்டை என்று நம்புகின்றவர் களுக்கு அது தேவர்கள் அசுரர்கள் கதை அல்லவென்பதற்கு பல காரணங்களையும் சொல்லி வருவதோடு, எதற்கும் அசையாமல், குரங்குப்பிடியாய் இராமன் கடவுள் என்றும், இராவணன் அசுரன் என்றும், மற்றும் அதில் கூட ராமன் வடதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், இராவணன் தென்தேசத்துக்காரன் என்றும், வடக்கே இருந்து தெற்கே வந்து சண்டை போட்டான் என்றும், மற்றும் இதிலிருந்து வடதேசத்து ஆரியர்கள் தேவர் களாயிருக்கக் கூடும் என்றும், தென்தேசத்துத் திராவிடர்கள் அசுரர்களாயிருக்கக் கூடும் என்றும், நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தி, அவர்களது மடமையைப் போக்க வேண்டி அதற்குத் தகுந்தபடி பல காரணங்களையும் காட்டிப் பேசியும் எழுதியும் வரப்படுகின்றது.
-  விடுதலை நாளேடு, 7.12.18

புதன், 14 நவம்பர், 2018

மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்

பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்).

இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிபுகளும், நாட்டுப்புறக் கதையினை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது அவரவர் தமது விருப்பப்படி எழுதிவைத்ததுமே காரணங்களாகும். இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்காக கிரேக்கத்திற்கு சென்றுவருவோம். கிரேக்கக் காவியமான ஒடிசி (Odyssey) ஆனது Homer இனால் இயற்றப்பட்டது எனவே நம்பப்பட்டிருந்தது. பின்னர் Milman Parry என்ற அறிஞர் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களையே Homer இனால் எழுதப்பட்டதே தவிர இயற்றப்பட்டதல்ல என அறிவியல்ரீதியில் நிறுவினார். அங்கு காப்பியத்துடன் மதம் ராமாயணத்தைப் போன்று கலக்காமையால் உண்மை வெளிவந்தது. கிரேக்கம் ஏன், தமிழர்களையே எடுத்துக்கொண்டால் சங்க காலப் பாடல்களைப் பாருங்கள், அங்கு புலவர்கள் பல நேரங்களில் தொகுத்தவர்களாகவே கூறப்படுவார்கள் (தொகுத்தவன்-புலவன், தொகுப்பித்தோன்- அரசன்) . அவ்வாறாயின் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றையே சங்ககாலப் புலவர்கள் தொகுத்திருந்தனர்.

இவ்வாறே ராமாயணமும் ஏற்கனவேயிருந்த வாய்மொழிக் கதையினையே வான்மீகி சில மாறுதல்களுடன் ராமரைத் தெய்வீக மனிதராக மாற்றி எழுதினார். பவுத்த ராமாயணமும் தனது நோக்கில் எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு 24 விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார். வான்மீகி எழுதிய பின்னரே ராமாயணம் பிற இடங்களிற்குப் பரவியிருப்பின் அவற்றுக்கிடையே பெரிய மாறுதல்கள் இடம்பெற்றிருக்காது. புராணத்தின்படி பார்த்தாலே நாரதர் சொல்ல வான்மீகி எழுதியதாகவே உள்ளது. இங்கு நாரதர் என்ற புனைவினை விடுத்தால் யாரிடமோ கேட்டே வான்மீகி எழுதியுள்ளார். வான்மீகி எழுதிய பின்பும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதற்காகவே வான்மீகியும் அதே கதையில் ஒரு பாத்திரமாக்கப்பட்டார்.

Sunplus Corp.

வான்மீகி ராமயணத்தின் பவுத்தத்தின் மீதான போர்:
வான்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக்(அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை(யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்). இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடாத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள் எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “ இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே! “ என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று. இவ்வாறு புத்தரிற்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வான்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது ராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது. இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமயணத்தில் வேள்வியிக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வான்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலரிற்கு `நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்` என்ற ஐயம் ஏற்படும். ராமாயணத்தில்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.
ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வான்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான்`.

`நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).`
இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன்_தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்). இவ்வாறு வான்மீகி ராமயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீ து மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வான்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வான்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தின் சைவத்தின் மீதான பனிப்போர்:::
கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடி்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக் காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம். எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார்.

இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்). வான்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும்(சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்க்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை)உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.
கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும்,அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் வான்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான் (சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019 – “முத்தலை எஃகினாற்கும்…” ). இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது எனவும் ( க.ரா 7939 வது பாடல்- “அத்தொழில் கண்ட வானோர்..ஈசற்கும் இயலாது.”.) என்கின்றார்.

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை(சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது(க.ரா 3045 வது பாடல்- “செறுத்துஇறுதி யில் புவனி…”). அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் (8275 வது பாடல்- “பழிப்புஅறு மேனி…”) எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான். இன்னோரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவும் (7294 வது பாடல்- “இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலைமூன்று…” ) கூற வைக்கின்றார் கம்பர். மேலும் சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது (1291 – “இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்…” ) என்று வேறு கம்பர் பாடுகின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றை நோக்கலாம். கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் `சிவம் பெருக்கும் சீலர்` ராய.சொ என்பவர். அது உண்மைதான் , ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு👇

• திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987)
• அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585)
• இந்திரசித்தனின் தோற்றமானது சிவன்,முருகன்,விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974)
• சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123)
• ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006)

இவ்வாறு நீண்டு செல்லும். இதை விடப் பல இடங்களில் சிவன் `அழிப்புக் கடவுள்` என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் “நீலநிற நிருதர், யாண்டும்…” (5942) எனப் பாடுகின்றார். சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காகமுழுஉலகையும்உண்பவராக க் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர். சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”)ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார். எல்லாவற்றிலும் உச்சமாக சிவன்,பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை(பெயர்)
யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(Island) இலங்கை(Srilanka)யல்ல:::

ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் தீவு இலங்கையல்ல எனக் கூறினால் நீங்கள் வியப்படையக்கூடும். அவ்வாறாயின் ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமேசுவரம், தனுசுகோடி, இலங்கை வேந்தன் என்பனவெல்லாம் என்னவாயிற்று என எதிர்க்கேள்வி கேட்கவும் கூடும். இந்தக் கேள்விக்கான பதில், அவையெல்லாம் கம்பரின் இடைச்செருகல்களே தவிர அவை எதுவுமே வான்மீகி ராமாயணத்தில் இல்லை. வான்மீகி ராமாயணத்தில் ராவணனின் வாழ்ந்த இடமாக `லங்கா` குறிப்பிடப்படுகின்றது என்பது உண்மையே. ஆனால் லங்கா என்ற சொல் சமசுகிரதத்தில் நீரால் சூழப்பட்ட தீவினியையே குறிக்கும் (இலங்கையினையல்ல). வான்மீகி ராமாயணத்தின் படி ராவணன் ஒரு தீவில் (லங்காவில்) வாழ்ந்தாகக் கூறப்படுகின்றதே தவிர, அத் தீவு இலங்கை எனக் குறிப்பிடப்படவில்லை. ராமரின் கதையினை உண்மை என நம்பாதவர்கள் கூடக் கம்ப ராமாயணத்தை கம்பரின் கவித்திறனிற்காக எவ்வாறு பாராட்டுகின்றார்களோ அதே போல வான்மீகி ராமாயணம் அது சொல்லும் புவியியல் அமைவிடங்களின் துல்லியத்திற்காகப் பாராட்டப்படும். எனவே வான்மீகி ராமாயணத்தின் புவியியலை அடிப்படையாகக் கொண்டே ராமாயணப்போர் நடைபெற்றது இலங்கையில் அல்ல என பின்வரும் அடிப்படைகளில் அறிந்துகொள்ளலாம்.

• கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் என்கின்றது வான்மீகி ராமாயணம். கிட்கிந்தை (Kiskkindha) என்பது இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் யபல்பூர் (Jabalpur) பகுதியினைக் குறிக்கும். இங்கிருந்து ராமேசுவரத்தை நான்கு நாட்களில் நடந்து கடப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. (படம் Google map காண்க). (ராமன் நடந்து சென்ற ஏனைய இடங்களின் தூரம் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நினைவிற்கொள்க)

• அனுமன் லங்கா(Island)வுக்குச் சென்றபோதும், ராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது. ராமேசுவரத்திலோ அல்லது அதனையொட்டிய எந்தப் பகுதியிலுமோ அவ்வாறான எந்த மலையுமில்லை. ((சுற்றுலாப் பயணிகளிற்கான வழிகாட்டிகள் வெறும் மணல்திட்டினையே மகேந்திரகிரி மலை என்கின்றனர், ஆனால் முன்பு மலையிருந்து அழிந்ததற்கான சான்றுகள் கூட எதுவும் அங்கில்லை)

• வான்மீகி ராமாயணத்தின் பாலத்தின் மறுபக்கத்திலும் ஒரு மலை (Trikuta hill)உண்டு. மன்னாரிலோ அல்லது அதனை அண்மித்த பகுதிகளிலும் கூட அவ்வாறான மலை எதுவுமேயில்லை.

• வான்மீகி ராமாயணத்தின்படி பாலமானது ஐந்து நாட்களில் முறையே 14,20,21,22,23 Jojans ஆகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மொத்தமான 100 jojans நீளம் என்பது பதினொன்று அரை மைல் (11.5) தூரமெனக் கணிப்பிடுகின்றார் ( Ramajana and Lanka by T. Paramasiva Iyer). ராமேசுவரம்-மன்னார் தூரம் குறைந்தது 30 மைல்களாவதாகவிருப்பதால், ராமாயணம் குறிப்பிடும் பாலம் இதுவல்ல.

மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(தீவு) என்பது இலங்கையல்ல என்பதும் ராமர் கட்டிய பாலம் ராமேசுவர- மன்னார் பாலம் அல்ல என்பதும் தெளிவு.

அவ்வாறாயின் அந்த லங்கா எங்குள்ளது? என்ற கேள்வி ஏற்படும். கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது ஒரிசா தான் (சிறிய வேறுபாடு புறக்கணிக்கத்தக்கது) . அங்கு மகேந்திரமலையும் கடற்கரையும் இருப்பது கூடுதல் செய்தி. இந்தப் பதிவின் நோக்கம் லங்கா எது என்று கண்டுபிடிப்பதல்ல, மாறாக லங்கா என்பது இலங்கையல்ல எனக் கூறுவதே என்பதால் இத்துடன் லங்கா எங்கிருக்கின்றதுஎன்ற ஆய்வினை நிறுத்துவோம். (இதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை).

10ம் நூற்றாண்டுவரை லங்கா என்பது பற்றி யாருமே ஆந்திராவினைத் தாண்டிச் சிந்திக்கவில்லை. இதில் சிறிது குழப்பம் சம்பு ராமாயணத்தில் (Champu Ramajana in CE 1010-1050) ஏற்பட்ட போதிலும், இலங்கையுடன் தெளிவாக ராமாயணத்தை தொடர்புபடுத்தியவர் கம்பரே ஆகும். இதற்கு கம்பரின் வாழ்விடமும், அந்த நூற்றாண்டுகளில் இடம்பெற்ற சோழப் படையெடுப்புக்களும் காரணமாகவிருக்கக்கூடும். அமைவிடத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தோனிசியா ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்த தீவாக அங்குள்ள ஒரு தீவே (லங்கா) கருதப்படுகின்றது. பின்னர் இந்தியாவிலுள்ள ராமாயணங்களைப் பொதுமைப்படுத்தும் நோக்கில் `இலங்கையே லங்கா என்ற கம்ப ராமாயணக்கருத்து` வட இந்தியாவில் ஏற்பட்டது. சோழப் படையெடுப்புக்களின் தாக்கத்தாலும் மகாயன பவுத்தத்தில் பார்ப்பனிய ஊடுருவல் செல்வாக்கினாலும் இலங்கையிலும் பரவியது. இவ்வாறு இரு புறங்களிலும் சிறிதளவு அறியப்பட்ட இலங்கைதான் லங்கா என்ற செய்தி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1934 இல் ஆற்றிய உரை (லங்காதான் இலங்கை என்ற உரை) ஒன்றின் பின்னரே இலங்கையில் மிகவும் பரவலடைந்தாகக் கூறுகின்றார் பரமசிவ ஐயர். மேலும் இவ்வுரையின் பின்னரே இந்தியாவில் கூட பொதுமக்களிடம் இந்த நம்பிக்கை பெருமளவில் ஏற்பட்டதாகவும் 1940 இல் வெளியிடப்பட்ட Ramajana and Lanka நூலில் T. Paramasiva Iyer குறிப்பிடுகின்றார்.

முடிவாக வான்மீகி ராமாயணத்திற்கும் இலங்கைக்கும் எந்தத்தொடர்புமேயில்லை. அதுவெல்லாம் கம்பரின் இடைச்செருகலே. ராமர் பாலத்தை நாசா (NASA) சான்றுப்படுத்தியதாக யாராவது புரளி கூறினால், முதலில் வான்மீகி அதனைக் கூறினாரா? என எதிர்க்கேள்வி கேளுங்கள்.

குறிப்பு-இங்கு இன்னொரு விடயத்தினையும் அழுத்திக் கூறவேண்டும். ராமாயணம் வான்மீகி கூறியபடி உண்மையில் நடைபெற்றது என்ற அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக வான்மீகியின் விவரிப்பிலையே இன்றைய இலங்கைக்குத் தொடர்பில்லை என்ற நோக்கிலேயே இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

வி.இ.குகநாதன்”

வெள்ளி, 2 நவம்பர், 2018

இராமன் கட்டிய பாலம் எங்கே?

மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்

தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!
கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- நான் (செ.ர.பார்த்தசாரதி) 2.11.2012ல் முகநூலில் பதிவிட்டது.