பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

ராமனை வழிபடுபவர்கள் தாம்

ஏன் ராமனும், ராமனை வழிபடுபவர்களும் ஆபத்தானவர்கள்? காரணங்கள் இதோ...


வேதம் ஓதினான் என்பதற்காக சூத்திரனான சம்புகனை கொன்றவன் ராமன்.

நீதி வழுவா நிலையில் அரசாட்சி செய்துவந்த வாலியை மறைந்திருந்து கொன்றவன் ராமன்.

ராமராஜ்யத்தில் சூத்திரர்களுக்கு படிக்கவும், வேதங்களைக்  கேட்கவும் அனுமதியில்லை.

பெண்கள் வேதங்களைப் படிக்கவோ  சுதந்திரமாக செயல்படவோ ராமராஜ்யத்தில் அனுமதியில்லை.

பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் தர்மம் செய்வது பாவம் என்பது ராமராஜ்யத்தில் சட்டமாகவே  இருந்தது.

ராமனின் ஆணையால் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும் சூத்திரர்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.

இன்றும் தொடர்கிறது

இன்றும் ராமனை வழிபடுபவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அது தேவையற்ற ஒன்று என்கிறார்கள்.

சூத்திரர்கள் கோவிலில் நுழைவதை ராமனை வழிபடுபவர்கள் தடுக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆட்சி காலங்களில் கட்டப்பட்ட சமூகநீதிக்காவலர்களின் சிலைகள், அவர்களது பெயர் உள்ள சாலைகள், பூங்காக்கள், நினைவுச் சின்னங்களை ராமனை வழிபடும்  பாஜக கட்சியினர் ஆட்சியில் அமர்ந்ததும் அழித்துக் கொண்டு வருகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன் றோரின் சிலைகளை உடைப்பவர்கள், உடைக்கத்தூண் டுபவர்கள் யார்? ராமனை கும்பிடுபவர்கள்தான்.

அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளை நிறுவ நினைத்தால் உடனடியாக நீதிமன்றம் சென்று தடையாணை பெறுபவர்களும், காவல்துறை யினரை மிரட்டி சிலைவைக்க அனுமதிதராதே என்று கூறுபவர்களும் யார்? ராமனை வழிபடுபவர்கள் தானே!

பவுத்த மார்க்கத்தை சிதைத்தது, அதை சனாதன நம்பிக்கைகளுக்கு உள்ளே கொண்டுவந்து பவுத் தத்தையே அழித்தது ராமனை வழிபடுபவர்கள்தாம்.

குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதி களில் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியல்லாதவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்துவதுயார்? ராமனை வழிபடு பவர்கள் தான்.

100 ஆண்டுகளாக அமைதியாக மகாராஷ்டிராவில் உள்ள பிமா-கோரேகான் போர் நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செலுத்தி வந்தவர்களை திடீரென்று தாக்கி தாழ்த்தப்பட்ட இளைஞர்களை கொலை செய்தவர்கள் ராமனை வழிபடுபவர்களே!

-  விடுதலை நாளேடு, 11.8.18

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

பாரதப் பாத்திரங்கள் (8)

சு.அறிவுக்கரசு

சத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன்.




துரோணன்

பார்ப்பன ஆசிரியர். போர்ப் பயிற்சி அளிப்பவன். வில்வித்தையில் தேர்ந்தவன். கற்பிப்பதில் கைதேர்ந்தவன். தனுர்சாஸ்திரம் கற்பிக்கும் குரு. வாள், கதை போன்ற ஆயுதங்களைக் கொண்டு ஒண்டிக்கு ஒண்டி போரிடும் முறை இருந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாக்குதல் முறை. வாள் சண்டையின் வீரர்கள் அருகருகே இருந்துதான் மோதமுடியும். வில் சண்டையில் வெகு தூரத்தில் இருந்தே தாக்கலாம். தாக்கப்படுபவன் தாக்கியவனைப் பார்க்கும் வாய்ப்புகூட இருக்காது.

வாலியை ராமன் தாக்கிய மாதிரி மறைந்து பதுங்கி இருந்துகூட தாக்கலாம் என்பது இதில் வசதி. ஆரியரின் ஆறு சாஸ்திரங்களில் தனுர் சாஸ்திரம் ஒன்று. அதைக் கற்பிப்பவன் துரோணன்.

அவனிடம் கற்றிட காட்டுவாசி வேடன் இளைஞன் ஒருவன் வந்தான். நிறையப் பேர் அரச குடும்பத்தார்க்குக் கற்பிப்பதால் நேரமில்லை எனக் கூறிவிடுகிறான் துரோணன். ஒரு மாணவனைக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள நேரம் தடையாக இல்லை. ஜாதி தடையாக இருந்தது. நூற்றைம்பது பேர் சத்திரியர்கள். அவர்களுடன் தாழ்த்தப்பட்ட ஜாதியானும் சேர்ந்து படிப்பதா? புதிய மாணவன் ஏகலைவனின் ஜாதியைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்தான் துரோணன் மறுத்தான். அவன் ஆச்சாரியனாம். குருவாம். இன்றைய இந்திய நாட்டில் அவன் பெயரில்தான் சிறந்த விளையாட்டு வீரர் விருது தரப்படுகிறது. அசிங்கம். கொடுமை.

ஏகலைவன் தொங்கிய முகத்துடன் திரும்பிவிட்டான். துரோணன் போன்று ஓர் உருவை மண்ணால் செய்து வைத்து அவனாகவே வில்வித்தையைக் கற்றுக் கொண்டான்.

தெருநாய் ஒன்று அந்தப் பொம்மையின் மீது காலைத் தூக்கி மூத்திரம் பெய்துவிட்டது. நாய்க்கு எண்ணெய் வழியும் செக்கும் ஒன்றுதான். அதேபோல் எண்ணெய் வழியும் சிவலிங்கமும் ஒன்றுதான். இரண்டையும் நக்கும். இரண்டின் மீதும் மூத்திரம் பெய்யும்.

ஏகலைவனின் குரு துரோணன். அவன் சிலை அது. சாஸ்திரப்படிப் பிரதிஷ்டை செய்யப்படாமல், வேதகோஷம் எழுப்பாமல், குடம் நீரைக் கொட்டாமல் வானத்தில் பருந்து பறந்து சுபவேளை எனக் குறிப்பு காட்டாமல் வைக்கப்பட்டதாக இருக்கலாம். வேதியன் வைக்காமல் வேடனே வைத்ததாக இருக்கலாம். என்றாலும் நாய் மூத்திரம் பெய்து கும்பாபிஷேகம் செய்யலாமா?

கோபப்பட்டான் ஏகலைவன். வில்லை எடுத்தான். அம்பைத் தொடுத்தான். நாயின் வாயைக் கட்டிவிட்டான்.

 


நாய் தன் எஜமானிடம் போய் வாலை ஆட்டி நின்றது. அதை வளர்த்தவன் அர்ச்சுனன். அவனுக்குக் கோபம் வரவில்லை. பயம் வந்தது.

நாயின் வாயை அம்புகளால் கட்டிடும் வித்தையைக் கற்றவன் அவன் மட்டுமே என்று துரோணன் சொல்லி இருந்தான். அக்னிகோத்திர முனிவன் ஒருவனும் துரோணனும் மட்டுமே இந்த வித்தை தெரிந்தவர்கள் என்பதாகச் செய்தி. மூன்று பேரைத் தவிர மற்றொரு வித்தகன் இருக்கிறான். அவன் யார் என்பதால் தான் அர்ச்சுனன் அதிர்ந்துவிட்டான்.

விசாரித்ததில் அவன் ஏகலைவன் என்பது தெரிந்தது. துரோணன் _ துரோகன் என்றானான். குரு தட்சணை என்பதாகக் கட்டை விரலை வெட்டிக் கேட்டான். இவனும் கொடுத்தான். இப்படிப்பட்ட மூட விசுவாசம் காட்டித்தான் பார்ப்பனர்களை உயர்த்தினர்.

ஜாதியால் கீழானவன் எனக் கூறி வித்தை கற்பிக்க மறுத்துவிட்டவன் எப்படி குரு? அவனுக்கு ஏன் தட்சணை? விதைக்காது விளையும் கழனியா பார்ப்பனர்?

சுயமாகவே தேர்ச்சி பெற்று ஏகலைவன், அர்ச்சுனனுக்கு நிகராக ஆகும்போது... துரோணன் எதற்காக?

துரோகம் செய்வதற்காக! தனக்கு நிகர் யாருமில்லை என்றிருந்த அர்ச்சுனனை நிகர்த்த ஏகலைவன் இனிமேல் வில்லை நாணேற்ற முடியாத நிலையை ஏற்படுத்திட கட்டை விரலை வாங்கி விட்டானே! ஒரு வீரனை ஊனப்படுத்துகிறான், மற்றொரு வீரன் பார்த்துக்கொண்டு மவுன சாட்சியாக இருக்கிறான். என்னய்யா தர்மம்? ஜாதி தர்மமோ?

பரத்வாஜ கோத்ரம் என்ற இன்றும் சில பார்ப்பனர்கள் உண்டு. அந்தக் கோத்ரத்தின் ஆதிகர்த்தா பரத்வாஜனின் மகன்தான் துரோணன். ஆயுதப் பயிற்சி பெறும்போது சக மாணாக்கன் துருபதன். பாஞ்சால நாட்டு மன்னன். பின்னாள்களில் மகள் திரவுபதையால் பாண்டவர்களின் மாமனார் ஆனவன்.

ஏழைப் பார்ப்பான் துரோணன். துருபதனிடம் பழைய பழக்கத்தில் பசுமாடு ஒன்று தருமாறு உரிமையுடன் கேட்கிறான். மன்னன் தரவில்லை. துரோணன் துருபதனை அடக்க வஞ்சினம் கூறுகிறான். துரோணன் பார்ப்பனன். துருபதன் சத்திரியன். யார் உயர்ஜாதி? போராட்டம் வெடித்தது.

துரோணனுக்கு உதவியவன் சத்திரிய அர்ச்சுனன். தன் மாணவன் என்பதால் குருதட்சணையாகத் துருபதனைச் சிறைபிடித்துத் தருமாறு கேட்டான். அர்ச்சுனன் செய்தான்.

ஆரியம் சத்திரியனைப் பயன்படுத்தி சத்திரியனைப் பழிவாங்கியது. இரண்டு ஆடுகளை மோதவிட்டு இடையில் இருந்து இரத்தம் குடித்தது நரி.

பாரதப் போரில் கவுரவர் பக்கமிருந்து போர்புரிந்த துரோணன் துருபதனைக் கொன்று விடுகிறான். துரோணனைக் கொல்ல கிருஷ்ணன் துரோகமே செய்கிறான். அவன் மகன் அசுவத்தாமன் மீது உயிராக இருப்பவன் துரோணன். அவன் கொல்லப்பட்டான் என்ற வதந்தியைப் பரப்புகிறான். வீமன் கொன்றது அந்தப் பெயர் கொண்ட யானையை. ஆனாலும் யானை என்பதைச் சொல்லாமல் அசுவத்தாமனைக் கொன்று விட்டதாக வீமன் கூறுகிறான். கேட்ட துரோணன் தர்மனைப் பார்த்துக் கேட்டான். தர்மன் பொய் கூறுவானா?

தர்மன் பொய் சொன்னான். அவன் தேரும் எல்லோரின் தேரைப் போலவே தரையில் ஓடியது. முதல் தண்டனை. செத்த பிறகு தர்மன் நரகம் போனான். கடைசி தண்டனை.

“நம்பிய சினேகிதனைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் ராமனும் பாவத்தைச் சுமந்து வாலியை அதர்ம வழியில் கொல்லத் தீர்மானித்தான். அவ்வாறே யுதிஷ்டிரனும் தன் புகழைத் தியாகம் செய்ய உறுதி கொண்டுவிட்டான்’’ என்று சப்பைக் கட்டு கட்டினார் ராஜாஜி. (மகாபாரதம் பக்கம் 372)

நிலைகுலைந்த துரோணன் திகைத்து அமர்ந்துவிட்டான். திட்டத்துய்மன் என்பானிடம் கிருஷ்ணன் சைகை காட்ட அவன் துரோணனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

சத்திரியர்க்குக் கற்பிப்பதில்லை என சத்தியம் கொடுத்த துரோணன், வாக்கை மீறிப் பாண்டவர்க்குக் கற்பித்தான். வயிறு இருக்கிறதே என வாழ்ந்தவன். சொரணை ஏதும் இன்றி, துருபத மன்னனை எதிர்க்க இயலாது மருமகன் அர்ச்சுனனை ஏவிப் பழி தீர்த்தவன்.

ஜாதித் திமிர் பேசி வாழ்க்கை முழுவதும் நடந்துகொண்ட பரத்வாஜ கோத்ரத்தின் இரண்டாம் தலைமுறையும் அழிந்தது. ஜாதி இன்னமும் அழியவில்லை.

ஆள்கள் தீர்வது தீர்வாகாது. தத்துவம் தீர்த்துக்கட்டப்பட வேண்டும்.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.8.18

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பாரத பாத்திரங்கள் (4)

சு.அறிவுக்கரசு

 


 

பீஷ்மன்

பீஷ்ம பிதாமகன் என்பார்கள். கங்கையைக் கட்டிக் கொண்டானாம் மன்னன் சந்தனு. எட்டுப் பிள்ளைகளாம். கங்கை நதி பிள்ளைகள் பெற்றிருக்கிறது. அறிவியலுக்கு அடிப்படையான இந்து மதத்தில்! எல்லாப் பிள்ளைகளையும் தாய்தான் வளர்ப்பாளாம். எட்டாவது பிள்ளை தேவவிரதன். மன்னன் மகனுக்குத் தேவையான கல்வி, பயிற்சிகளை அளித்தாள். அறிவும், வீரமும் பெற்றவனாகத் தந்தையிடம் அனுப்பி வைத்தாள் தாய். சந்தனு அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிப் பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

அத்தோடு தன் கடமை முடிந்ததைப் போல கங்கை சந்தனுவை விட்டுப் பிரிந்துபோனாள். சந்தனு மச்சகந்தியைப் பார்த்து மயங்கினான். காதலைக் கூறினான். தன் தந்தையிடம் பேசச் சொன்னாள் மச்சகந்தி. அவன் நிபந்தனை விதித்தான். மச்சகந்தி மூலம் பிறக்கும் மக்களே அரசாள வேண்டும் என்றான். சந்தனு மனமில்லாததால் மறுகிக் கொண்டிருந்தான். விவரம் தெரிந்த தேவவிரதன் அப்பனுக்குப் பெண் கேட்டுப் போனான். “நான் கங்கையின் மகனல்லன், இனி, நின் மகள்தான் என் அன்னை. அவள் மகன் என் தம்பி, அவன்தான் அஸ்தினாபுரியை ஆள்வான். கவலையை விடு. என் தந்தைக்கு உன் மகளைக் கட்டி வை’’ என்கிறான்.

“சரி தம்பி! உன் அப்பாவின் மேல் உள்ள பற்றினால் நீ அரசுரிமையைத் துறக்கிறாய், உன் பிள்ளைகளும் விட்டு விடுவார்களா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறான். “நான் சாகும்வரையில் என் விந்து வெளியே வராது’’ என்று உறுதி கூறுகிறான் தேவவிரதன். “சரதம் முற்றிய மெய்த்தாதுவும் மூலத் தழலுடன் மீதெழும் தகைத்தே’’ வில்லிபுத்தூரானின் பாரதம் பாடும். யோகமுறையில் குண்டலினி எழுப்புதல் என்பார்கள். குய்யத்திற்கும் (குறி) குதத்திற்கும் மையப்பகுதி சக்கரம் மூலம் எனப்படும். அங்குச் சுரக்கும் சுக்கிலம் வெளியே சிந்தப்படாமல் அடக்கி வாழ்வேன் என்கிறான். நைஷ்டிக பிரம்மச்சாரி என்பார்கள் வடநூலார். கனவில்கூட விந்து விடாதவர்கள் என்பது அதற்குப் பொருள்.

இதனைக் கேட்ட வானுலகத் தேவர்கள், “பீஷ்மன், பீஷ்மன்’’ என்று முழங்கினராம். தேவவிரதன் பீஷ்மனானான். “கடும் விரதமிருப்போன்’’ எனப் பொருள். எட்டுப் பிள்ளை பெற்றவன் இரண்டாம் தாரம் தேடுகிறான். அவன் மகனோ பீஷ்மவிரதம் பூணுகிறான். இதுதான் பாரதப் பண்பாடு!

“தழுவும் போதெல்லாம் உயிர் தழைக்கும் அமுதத்தை அளிக்கிறாள் பெண்’’ என்பான் வள்ளுவன். (குறள் 1106) அத்தகைய அமுத ஊற்றையே புறக்கணிக்கிறான் தேவவிரதன். பெண் சுகத்தை அறியாதவன் எந்நாளும் அதை அடைய முடியாதவாறு தடை போடப்பட்டது. இடையறாது அதனை அடைந்து வாழ்ந்தவன் தொடர்ந்து அடையுமாறு மடை திறக்கப்பட்டது.

சந்தனுவும் மச்சகந்தி எனப்பட்ட சத்தியவதியும் மணந்து கொண்டனர். இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவன் சித்திராங்கதன். மற்றவன் விசித்திரவீரியன்.

சித்திராங்கதன் மணம் செய்யாமலே மரித்துப் போனான். விசித்திரவீரியன் இரு மனைவிகளைக் கட்டிக் கொண்டாலும் பிள்ளை இல்லாமலே இறந்து போனான்.

சத்தியவதியும் அவளின் தந்தையும் விரும்பியவாறு சத்தியவதியின் வம்சம் ஆளமுடியவில்லை. அரசுரிமை பெறப் பிள்ளைகள் இல்லை. அவர்களுக்குப் பிள்ளை கொடுக்குமாறு பீஷ்மனைக் கேட்டாள் சத்தியவதி. அவன் விந்துவை வெளியே விடேன் என்ற வைராக்கியத்திற்கு வித்தே இவள்தான். இப்போது, விந்துவை வெளியே விடச்சொல்லி அவளே கேட்கிறாள். பீஷ்மன் உறுதியாக நின்றான்.

குரு வம்சத்தில் சிறப்பானவனாம் பீஷ்மன்.

அவன் செய்ததைப் போல் எவனும் செய்ய மாட்டான். விசித்திர வீரியனுக்குத் திருமண மாகாமல் இருந்த நேரம் அவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

காசியின் அரசனின் மூன்று பெண்களுக்கும் சுயம்வரம். பெண்களும் ஆண்களும் கூடித் தங்கள் இணையரைத் தேடி முடித்துக் கொள்ளும் முறை. காசி மன்னன் முறைப்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பினான். குரு வம்சத்தினர்க்கு அழைப்பு இல்லை.

அவமானம்தான். குரு வம்சத்து பீஷ்மனுக்கோ கோபமான கோபம். மண்டைக்கு ஏறிவிட்டது கோபம். இருந்தாலும், தன் தம்பிக்குத் திருமணம் செய்விக்கப் பெண் வேண்டுமே. சுயம்வரத்திற்குப் பீஷ்மன் போனான்.

காசி அரசனின் மூன்று மகள்களையும் வலுக்கட்டாயமாகத் தன் தேரில் ஏற்றிக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான், அஸ்தினாபுரிக்கு. இது அடாது, தகாத செயல் என்று நியாயம் கேட்ட மன்னர்களை அடித்துத் துரத்திவிட்டான் பீஷ்மன். தேவர்களால் பாராட்டப் பெற்றுப் பெயர் மாற்றம் பெற்றவன் அடாத செயல் செய்கிறபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை.

மூவரில் மூத்தவள் அம்பை. சால்வ அரசனைக் காதலித்தவள். அவனை அடையச் சுயம்வரத்திற்கு வந்தவள். பீஷ்மன் அவளையும் கடத்திக்கொண்டு வந்துவிட்டான். காதல் விசயம் தெரியவந்ததும் அவனைச் சாலுவனிடம் அனுப்பிவிட்டான் பீஷ்மன்.

சால்வன் அவளை ஏற்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிய அம்பை விசித்திரவீரியனிடம் சென்றாள். தன் தங்கைகள் இருவருடன் தன்னையும் சேர்த்து மணந்து கொள்ளக் கேட்கிறாள். அவன் மறுத்து விடுகிறான்.

 


பீஷ்மனிடம் கேட்கிறாள். வயதானவனாக இருந்தாலும் சரி என்று துணிந்து கேட்கிறாள். அவனோ தன் வைராக்கியத்தை எடுத்துக் கூறி மறுக்கிறான்.

அம்பைக்கு வந்தது கோபம். “பீஷ்மா! உன்னை யாரும் அழைக்காமலிருந்தும் சுயம்வரத்திற்கு வந்தாய். சால்வனை மணக்கவிருந்த என்னையும் கடத்திக் கொண்டு வந்தாய். உன் தம்பிக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையென்று எங்களை கடத்தி வந்து நீ செய்தது முறையா? நீ எப்படி பெரிய மனிதன்?’’ நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவது மேல் என்ற நிலைக்குச் செல்லும்படி கேட்டாள். பாரதப் பிதாமகன் பீஷ்மனுக்கு ரோஷமேயில்லை. சலனமே இல்லாமல் இருந்தான்.

பிறநாட்டு மன்னர்களை அணுகித் தன் பக்கத்து ஞாயங்களைக் கூறினாள். யாரும் பீஷ்மனுக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தயாரில்லை. அச்சம்! அவனை எதிர்க்க பயம்.

பரசுராமனிடம் போய்ச் சொன்னாள் பேதைப் பெண்ணுக்காகப் பீஷ்மனிடம் பேசினான். முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா. மூர்க்கனான பீஷ்மன் பரசுராமனிடம் மோதினான். அவனை வெல்ல பரசுராமனால் முடியவில்லை.

கடவுள் முருகனிடம் முறையிடுகிறாள் அம்பை. அவன் தந்தை சிவனிடம் வேண்டினாள். அவனோ, “இப்பிறப்பில் பீஷ்மனை வெல்லுதல் இயலாது. அடுத்த பிறப்பில் நீ வெல்வாய்’’ எனக் கூறிவிட்டான்.

அடுத்த பிறவியை விரைவில் அடைய இப்பிறவியை முடிக்க வேண்டுமே. தீயில் இறங்கித் தன்னைப் பொசுக்கிக் கொண்டுவிட்டாள்.

அடுத்த பிறவியில் பெண்ணாகவே, மன்னன் துருபதனுக்கு மகளாகப் பிறக்கிறாள் முருகன் தந்த மாலையைப் போட்டுக் கொள்கிறாள் சிகண்டி என்பவளாகிறாள்.

இந்த சிகண்டியினால்தான் பீஷ்மன் கொல்லப்பட்டான். பெண்ணாகப் பிறந்து, வாழ்ந்து, ஆணாக மாறிய சிகண்டியால் கொல்லப்பட்ட மகாவீரன் பீஷ்மன். பரசுராமனாலேயே வெல்லப்பட முடியாதவன் எப்படி பால்மாறிய ஆணான சிகண்டியால் கொல்லப்பட்டான்? தர்ம நியாயங்களின்படி வாழ்ந்தவன் எனப்படுபவன் எப்படி இந்த வீழ்ச்சியை அடைந்தான்? சுயம்வரத்திற்கு அழைப்பு இல்லாதபோது ஏன் போனான்? பெண் தேட வேண்டுமென்றால் மாப்பிள்ளையான விசித்திரவீரியனைத்தானே அனுப்ப வேண்டும். அவன் அண்ணனான பீஷ்மன் ஏன் போனான்?

பெண்களைக் கடத்தி வந்து தன் தம்பிக்கு மணம் முடிப்பேன் என்ற திடத்துடன் போனது என்ன ஞாயம்? என்ன முறை?

தான் நிகரற்ற வீரன். தன்னைத் தோற்கடிக்க யாராலும் முடியாது என்கிற இறுமாப்புதானே. திருமணமாகாமல் தடுக்கப்பட்டுவிட்ட ஒரு பெண்ணின் நியாயமான கோபத்தின் எதிரொலிதானே பீஷ்மனின் சாவு? (கதைப்படியே) கடவுளர்கள் மாலைபோட்டு வாழ்த்தியதும் மறுபிறப்பில் சாகடிக்க வழி ஏற்படுத்தியதும் பீஷ்மன் அநியாயக்காரன் என்ற முடிவுக்கு வந்ததன் அடையாளங்கள்தானே.

பீஷ்மன் அநியாயக்காரன் மட்டுமல்ல, தன்னலக்காரன். தன் தம்பிக்காக மூன்று பெண்களைக் கடத்தியவன், பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்டபோது வாய்மூடி மவுனமாக, நெட்டை மரம்போல நின்றிருந்தவன் தானே?

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.6.18