பக்கங்கள்

புதன், 13 நவம்பர், 2019

இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்09/10/2018 இனியொரு...

பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்).

இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிபுகளும், நாட்டுப்புறக் கதையினை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது அவரவர் தமது விருப்பப்படி எழுதிவைத்ததுமே காரணங்களாகும். இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்காக கிரேக்கத்திற்கு சென்றுவருவோம். கிரேக்கக் காவியமான ஒடிசி (Odyssey) ஆனது Homer இனால் இயற்றப்பட்டது எனவே நம்பப்பட்டிருந்தது. பின்னர் Milman Parry என்ற அறிஞர் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களையே Homer இனால் எழுதப்பட்டதே தவிர இயற்றப்பட்டதல்ல என அறிவியல்ரீதியில் நிறுவினார். அங்கு காப்பியத்துடன் மதம் ராமாயணத்தைப் போன்று கலக்காமையால் உண்மை வெளிவந்தது. கிரேக்கம் ஏன், தமிழர்களையே எடுத்துக்கொண்டால் சங்க காலப் பாடல்களைப் பாருங்கள், அங்கு புலவர்கள் பல நேரங்களில் தொகுத்தவர்களாகவே கூறப்படுவார்கள் (தொகுத்தவன்-புலவன், தொகுப்பித்தோன்- அரசன்) . அவ்வாறாயின் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றையே சங்ககாலப் புலவர்கள் தொகுத்திருந்தனர்.

இவ்வாறே ராமாயணமும் ஏற்கனவேயிருந்த வாய்மொழிக் கதையினையே வான்மீகி சில மாறுதல்களுடன் ராமரைத் தெய்வீக மனிதராக மாற்றி எழுதினார். பவுத்த ராமாயணமும் தனது நோக்கில் எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு 24 விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார். வான்மீகி எழுதிய பின்னரே ராமாயணம் பிற இடங்களிற்குப் பரவியிருப்பின் அவற்றுக்கிடையே பெரிய மாறுதல்கள் இடம்பெற்றிருக்காது. புராணத்தின்படி பார்த்தாலே நாரதர் சொல்ல வான்மீகி எழுதியதாகவே உள்ளது. இங்கு நாரதர் என்ற புனைவினை விடுத்தால் யாரிடமோ கேட்டே வான்மீகி எழுதியுள்ளார். வான்மீகி எழுதிய பின்பும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதற்காகவே வான்மீகியும் அதே கதையில் ஒரு பாத்திரமாக்கப்பட்டார்.

Sunplus Corp.

வான்மீகி ராமயணத்தின் பவுத்தத்தின் மீதான போர்:
வான்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக்(அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை(யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்). இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடாத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள் எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “ இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே! “ என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று. இவ்வாறு புத்தரிற்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வான்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.

இப்போது ராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது. இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமயணத்தில் வேள்வியிக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வான்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலரிற்கு `நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்` என்ற ஐயம் ஏற்படும். ராமாயணத்தில்

ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.
ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வான்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான்`.

`நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).`
இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன்_தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்). இவ்வாறு வான்மீகி ராமயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீ து மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வான்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வான்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தின் சைவத்தின் மீதான பனிப்போர்:::
கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடி்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக் காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம். எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார்.

இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்). வான்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும்(சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்க்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை)உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.
கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும்,அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் வான்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான் (சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019 – “முத்தலை எஃகினாற்கும்…” ). இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது எனவும் ( க.ரா 7939 வது பாடல்- “அத்தொழில் கண்ட வானோர்..ஈசற்கும் இயலாது.”.) என்கின்றார்.

கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை(சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது(க.ரா 3045 வது பாடல்- “செறுத்துஇறுதி யில் புவனி…”). அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் (8275 வது பாடல்- “பழிப்புஅறு மேனி…”) எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான். இன்னோரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவும் (7294 வது பாடல்- “இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலைமூன்று…” ) கூற வைக்கின்றார் கம்பர். மேலும் சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது (1291 – “இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்…” ) என்று வேறு கம்பர் பாடுகின்றார்.

மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றை நோக்கலாம். கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் `சிவம் பெருக்கும் சீலர்` ராய.சொ என்பவர். அது உண்மைதான் , ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு👇

• திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987)
• அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585)
• இந்திரசித்தனின் தோற்றமானது சிவன்,முருகன்,விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974)
• சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123)
• ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006)

இவ்வாறு நீண்டு செல்லும். இதை விடப் பல இடங்களில் சிவன் `அழிப்புக் கடவுள்` என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் “நீலநிற நிருதர், யாண்டும்…” (5942) எனப் பாடுகின்றார். சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காகமுழுஉலகையும்உண்பவராக க் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர். சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”)ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார். எல்லாவற்றிலும் உச்சமாக சிவன்,பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை(பெயர்)
யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.

சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.

வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(Island) இலங்கை(Srilanka)யல்ல:::

ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் தீவு இலங்கையல்ல எனக் கூறினால் நீங்கள் வியப்படையக்கூடும். அவ்வாறாயின் ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமேசுவரம், தனுசுகோடி, இலங்கை வேந்தன் என்பனவெல்லாம் என்னவாயிற்று என எதிர்க்கேள்வி கேட்கவும் கூடும். இந்தக் கேள்விக்கான பதில், அவையெல்லாம் கம்பரின் இடைச்செருகல்களே தவிர அவை எதுவுமே வான்மீகி ராமாயணத்தில் இல்லை. வான்மீகி ராமாயணத்தில் ராவணனின் வாழ்ந்த இடமாக `லங்கா` குறிப்பிடப்படுகின்றது என்பது உண்மையே. ஆனால் லங்கா என்ற சொல் சமசுகிரதத்தில் நீரால் சூழப்பட்ட தீவினியையே குறிக்கும் (இலங்கையினையல்ல). வான்மீகி ராமாயணத்தின் படி ராவணன் ஒரு தீவில் (லங்காவில்) வாழ்ந்தாகக் கூறப்படுகின்றதே தவிர, அத் தீவு இலங்கை எனக் குறிப்பிடப்படவில்லை. ராமரின் கதையினை உண்மை என நம்பாதவர்கள் கூடக் கம்ப ராமாயணத்தை கம்பரின் கவித்திறனிற்காக எவ்வாறு பாராட்டுகின்றார்களோ அதே போல வான்மீகி ராமாயணம் அது சொல்லும் புவியியல் அமைவிடங்களின் துல்லியத்திற்காகப் பாராட்டப்படும். எனவே வான்மீகி ராமாயணத்தின் புவியியலை அடிப்படையாகக் கொண்டே ராமாயணப்போர் நடைபெற்றது இலங்கையில் அல்ல என பின்வரும் அடிப்படைகளில் அறிந்துகொள்ளலாம்.

• கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் என்கின்றது வான்மீகி ராமாயணம். கிட்கிந்தை (Kiskkindha) என்பது இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் யபல்பூர் (Jabalpur) பகுதியினைக் குறிக்கும். இங்கிருந்து ராமேசுவரத்தை நான்கு நாட்களில் நடந்து கடப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. (படம் Google map காண்க). (ராமன் நடந்து சென்ற ஏனைய இடங்களின் தூரம் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நினைவிற்கொள்க)

• அனுமன் லங்கா(Island)வுக்குச் சென்றபோதும், ராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது. ராமேசுவரத்திலோ அல்லது அதனையொட்டிய எந்தப் பகுதியிலுமோ அவ்வாறான எந்த மலையுமில்லை. ((சுற்றுலாப் பயணிகளிற்கான வழிகாட்டிகள் வெறும் மணல்திட்டினையே மகேந்திரகிரி மலை என்கின்றனர், ஆனால் முன்பு மலையிருந்து அழிந்ததற்கான சான்றுகள் கூட எதுவும் அங்கில்லை)

• வான்மீகி ராமாயணத்தின் பாலத்தின் மறுபக்கத்திலும் ஒரு மலை (Trikuta hill)உண்டு. மன்னாரிலோ அல்லது அதனை அண்மித்த பகுதிகளிலும் கூட அவ்வாறான மலை எதுவுமேயில்லை.

• வான்மீகி ராமாயணத்தின்படி பாலமானது ஐந்து நாட்களில் முறையே 14,20,21,22,23 Jojans ஆகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மொத்தமான 100 jojans நீளம் என்பது பதினொன்று அரை மைல் (11.5) தூரமெனக் கணிப்பிடுகின்றார் ( Ramajana and Lanka by T. Paramasiva Iyer). ராமேசுவரம்-மன்னார் தூரம் குறைந்தது 30 மைல்களாவதாகவிருப்பதால், ராமாயணம் குறிப்பிடும் பாலம் இதுவல்ல.

மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(தீவு) என்பது இலங்கையல்ல என்பதும் ராமர் கட்டிய பாலம் ராமேசுவர- மன்னார் பாலம் அல்ல என்பதும் தெளிவு.

அவ்வாறாயின் அந்த லங்கா எங்குள்ளது? என்ற கேள்வி ஏற்படும். கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது ஒரிசா தான் (சிறிய வேறுபாடு புறக்கணிக்கத்தக்கது) . அங்கு மகேந்திரமலையும் கடற்கரையும் இருப்பது கூடுதல் செய்தி. இந்தப் பதிவின் நோக்கம் லங்கா எது என்று கண்டுபிடிப்பதல்ல, மாறாக லங்கா என்பது இலங்கையல்ல எனக் கூறுவதே என்பதால் இத்துடன் லங்கா எங்கிருக்கின்றதுஎன்ற ஆய்வினை நிறுத்துவோம். (இதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை).

10ம் நூற்றாண்டுவரை லங்கா என்பது பற்றி யாருமே ஆந்திராவினைத் தாண்டிச் சிந்திக்கவில்லை. இதில் சிறிது குழப்பம் சம்பு ராமாயணத்தில் (Champu Ramajana in CE 1010-1050) ஏற்பட்ட போதிலும், இலங்கையுடன் தெளிவாக ராமாயணத்தை தொடர்புபடுத்தியவர் கம்பரே ஆகும். இதற்கு கம்பரின் வாழ்விடமும், அந்த நூற்றாண்டுகளில் இடம்பெற்ற சோழப் படையெடுப்புக்களும் காரணமாகவிருக்கக்கூடும். அமைவிடத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தோனிசியா ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்த தீவாக அங்குள்ள ஒரு தீவே (லங்கா) கருதப்படுகின்றது. பின்னர் இந்தியாவிலுள்ள ராமாயணங்களைப் பொதுமைப்படுத்தும் நோக்கில் `இலங்கையே லங்கா என்ற கம்ப ராமாயணக்கருத்து` வட இந்தியாவில் ஏற்பட்டது. சோழப் படையெடுப்புக்களின் தாக்கத்தாலும் மகாயன பவுத்தத்தில் பார்ப்பனிய ஊடுருவல் செல்வாக்கினாலும் இலங்கையிலும் பரவியது. இவ்வாறு இரு புறங்களிலும் சிறிதளவு அறியப்பட்ட இலங்கைதான் லங்கா என்ற செய்தி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1934 இல் ஆற்றிய உரை (லங்காதான் இலங்கை என்ற உரை) ஒன்றின் பின்னரே இலங்கையில் மிகவும் பரவலடைந்தாகக் கூறுகின்றார் பரமசிவ ஐயர். மேலும் இவ்வுரையின் பின்னரே இந்தியாவில் கூட பொதுமக்களிடம் இந்த நம்பிக்கை பெருமளவில் ஏற்பட்டதாகவும் 1940 இல் வெளியிடப்பட்ட Ramajana and Lanka நூலில் T. Paramasiva Iyer குறிப்பிடுகின்றார்.

முடிவாக வான்மீகி ராமாயணத்திற்கும் இலங்கைக்கும் எந்தத்தொடர்புமேயில்லை. அதுவெல்லாம் கம்பரின் இடைச்செருகலே. ராமர் பாலத்தை நாசா (NASA) சான்றுப்படுத்தியதாக யாராவது புரளி கூறினால், முதலில் வான்மீகி அதனைக் கூறினாரா? என எதிர்க்கேள்வி கேளுங்கள்.

குறிப்பு-இங்கு இன்னொரு விடயத்தினையும் அழுத்திக் கூறவேண்டும். ராமாயணம் வான்மீகி கூறியபடி உண்மையில் நடைபெற்றது என்ற அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக வான்மீகியின் விவரிப்பிலையே இன்றைய இலங்கைக்குத் தொடர்பில்லை என்ற நோக்கிலேயே இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

திங்கள், 4 நவம்பர், 2019

ஜலந்தர்-பிருந்தா

வள்ளுவரின் வாலறிவனுக்குப் புது விளக்கம் கொடுத்துத் திருவள்ளுவருக்குக் காவி போர்த்தும் சங்களுக்கு இந்து மத வாலறிவர்களில் முதன்மையான இருவரைக் காட்டுவோமா?!

பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.

பக்தையை சூறையாடிய கடவுள்..

பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.

கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 100 – 2.

அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab ஜலந்தர் ஓர் இடம் கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,

பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.

கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி. -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

ஞலந்திரனின் மனைவியை விட்டுணு ஜலந்திரன் புனைவில் வந்து பாலியல் வன்முறைக்கு உடபடுத்திய உண்மை தெரிந்து, பிருந்தை விட்டுணுவுக்கு இட்ட சாவமே இராமாயணத்தின் மூலம் என்றும் வால்மீகி கூரியுள்ளார்.

[Like](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)

[Comment](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)

புதன், 25 செப்டம்பர், 2019

உண்மை இராமாயணம் (3)

20.3.1948  - குடிஅரசிலிருந்து


சென்ற வாரத்  தொடர்ச்சி




சீதை:- நாதா! இவ்வளவு கெட்டிக் காரத்தனமாகவும், பஞ்ச தந்திரமாகவும், ரகசியமாகவும், நடந்த சங்கதி எப்படி கைகேயிக்கு நல்ல சமயத்தில் தெரிந்து விட்டது?

இராமன்:- அதுதான் எனது பொல் லாத காலம். கைகேயினுடைய வீட்டில் மந்தரை என்ற கிழவி வேலைக்காரியாக இருக்கிறாள். அவள் என் தகப்பனாருக்கும் கைகேயிக்கும் கலியாணம் ஆகி கைகேயி அயோத்திக்கு வரும் போது, கைகேயியோடு கூடவே வேலைக் காரியாக  வந்தவள். அவளுக்குக் கலியாண காலத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் தெரியும். அந்தப் பேச்சு வார்த்தையின்படி அயோத்தி பரதனுக்குச் சொந்தமானது என்பதை அவள் உணர்ந்தவள். நேற்று நம் வீட்டு வேலைக்காரி, கைகேயி வீட்டுக்குப் போன போது பட்டாபிஷேகச் சங்கதி யைச் சொல்லிவிட்டாள். மந்தரை உடனே கைகேயிக்குச் சொல்லி அவள் புத்தியைக் கெடுத்து விட்டாள். அதனால் கைகேயி ஆத்திரப்பட்டு என்னை நாட்டிலேயே வைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டாள். காரணம் நான் இங்கிருந்தால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்வேன் என்கிற பயம்தான்.

சீதை: அடடா! இந்த வேலைக்காரி முண்டை கூனியாலா இப்படி நேர்ந்தது! இதற்கு வேறு தந்திரம் ஒன்றும் இல்லையா?

இராமன்:- இப்போதைக்கு ஒரு மார்க்கமும் இல்லை. நான் சரியென்று ஒப்புக்கொண்டுக் காட்டிற்குப் போக வேண்டியது தான். பிறகு சரிப்படுத்திக் கொள்ளலாம்!

சீதை:- பிறகு எப்படிச் சரிப்படுத்திக் கொள்ள முடியும்? தாங்கள் சென்ற உடன் பரதனுக்குப் பட்டமாகிவிடுமே!

இராமன்:- எப்படி ஆனாலும் சரி! பரதன் ஒரு ஏமாளி. அவனைச் சுலபத்தில் ஏமாற்றிவிடலாம், நீ மாத்திரம் நான் சொன்னபடி கேட்டால் போதும்.

சீதை:- நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் உடனே செய்கிறேன்.

இராமன்:- நீ செய்ய வேண்டியது என்னவென்றால், நான் காட்டிற்குப் போன உடன் பரதன் இங்கு வர வழைக்கப்படுவான். அவனுக்குப் பட் டாபிஷேகம் நடக்கலாம். நீ அவனுக்குத் தக்கபடி நடந்து நீ அவனைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். அவனை நீ சொல்லுகிறபடி ஆடும்படிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால் பிறகு அவனாலேயே என்னை அழைத் துக் கொள்ளும்படிச் செய்யலாம். பிறகு நீ தான் ராணி. உன்கையில் தான் அயோத்தி. ஆனால் காரியம் மிகக் கெட்டிக்காரத்தனமாகச் செய்ய வேண்டும். செய்வாயோ?

சீதை:- நாதா! இது என்ன ஆகக்கூடிய காரியமா? பரதனை இந்த விதமாக ஏமாற்றவே முடியாது. அதுவும் என்னால் முடியவே முடியாது. இராமன்:- சீதாய்! அதென்ன அப்படிச் சொல்லுகிறாய்?

சீதை:- நாதா! அது என்ன காரணமோ, பரதனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை. என்மேல் அவனுக்கு நமது திருமணம் ஆன காலத்திலேயே வெறுப்பு. என்னிடம் பேசுவதில்லை. கொழுந்தனாயிற்றே என்று நானாகச் சிரித்தால், விளையாடினால் சிறிது கூட லட்சியம் செய்வதில்லை.

இராமன்:- ஆம்! அவன் உன்னைக் கேவலமாகத்தான் மதித்து வந்திருக் கிறான். இருந்தாலும் அந்தக் காலத்தில் அவன் சின்னப்பையன். இப்போது சரி யான ஆளாக ஆகி இருப்பான். ஆதலால் நீ அவனைச் சரிப்படுத்தி விடலாம். எப்படி எனில் என்னைப் பற்றிக் கவலைப் படுபவள் போல் காட்டிக் கொள்ளாதே! என்னை அவன் முன் புகழ்ந்து பேசாதே! என்னிடம் வெறுப்புள்ளவள் போல் காட்டிக் கொள்! எப்போதும் அவன் பக்கத்தி லேயே இரு! சரிப்பட்டு விடுவான். பிறகு நமது ராஜ்யம்தான்.

சீதை:- நாதா! அந்தக் காரியம் என்னால் முடியாது! என்னைக் கண் டாலே மகாக் கசப்பு போல் வெறுக் கிறான். அவனை நான் எப்படிச் சரிப்படுத்த முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை! அது மாத்திரம் செல்லாது அவனிடம்! இந்த வழி வேண்டாம்! பெண்டாட்டியைக் கொடுத்து ராஜ்ய செல்வாக்கு பெற்றாய் என்ற பேர் வேண்டாம்! அப்படி அவ னைச் சரிபடுத்த முடியாது. வீணாகப் பேர் கெட்டு விடும். வேறு ஏதாவது வழிபாருங்கள்.

இராமன்:- வேறு வழி என்ன? பேசாமல் தகப்பனார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காட்டுக்குப் போவது போல் சொல்லிக் கொண்டு காட்டுக்குப் போக வேண்டி யதுதான். மற்றபடி வேறு ஏதாவது தகராறு செய்வதனால் அது முடிவதாய் இருந்தாலும் மிகவும் பழிக்கு இடமாகி விடும். அதாவது லட்சுமணன் சொன்ன படி என் தகப்பனாரைச் சிறையில் வைத்து விட்டு விரோதிகளை நாசம் செய்து ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் அதிலிருந்து உண்மை விஷயம் அதாவது இந்த ராஜ்யம் பரதனுடையது; அவனை மோசம் செய்து இப்படிப்பட்ட காரியத் தால் நான் கைப்பற்றி விட்டேன் என்பது வெளியானால் குடிகள் மதிக்க மாட்டார்கள். அதோடு எதிர்ப்பாகவும் ஆகிவிடுவார்கள். கேகய நாட்டுடன் போர் ஏற்படும். உலகம் என்னை மிகமிகக் கேவலமாக மதிக்கும். இவ்வள வும் தவிர மற்ற தம்பிமார்களும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற கலகத்துக்குத் தொடங்கி விடுவார்கள். இப்போதே லட்சுமணனுக்கு இந்த பூமியை ஆளவேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. அவன் இப்போதே என்னைக் கூட மீறி ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள் ளத் துடிக்கிறான். ஆதலால் இப்போ தைக்கு நான் பேசாமல் காட்டுக்குப் போக வேண்டியதுதான். பிறகு எப்படியும் வகை செய்து கொள்ள லாம் என்று எனக்கு தைரியம் இருக்கிறது. நான் காட்டுக்குப் போன பின்பு, எப்படியும் பரதன் என்னிடம் வருவான். அவன் சுத்தப் பயித்தியக்காரன். அவனைச் சுலபத்தில் ஏமாற்றி விடலாம்.

தொடரும்...

- விடுதலை நாளேடு, 28. 6. 19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

இராமாயணம்- 5

10.06.1934- புரட்சியிலிருந்து...

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப் படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவண னையும் அவர் குடும்பத் தையும் ஆரியர்கள் இழித் துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.

இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாக மேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத் தைக் கெடுத்ததற்காகத் தானே கொல்லப்பட்டிருக் கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்?  யாகத் தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்குமானால் நாம் தாட கையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டதுமல்லாமல் அந்தம்மாளை இழித் துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பட்சிகளையும் பச்சை யாய் சாப்பிட்டார் என்றும், பொறுத்தமற்றதும் போக் கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.

இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர் களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சுமணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திரா விட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என் பதை யோசித்துப் பாருங்கள்.

அக்கதையில், மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விஜயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும், பெண்களை இழிவாய் நடத்திக் கொடுமைப்படுத் தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந் திருப்பதுமல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார் கள்.

அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சும ணர்கள் செய்த அளவுகூட செய்யா தவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள்.  திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சதனாம்; ஒருவன் (விபிஷணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலிய வைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகிய வர்களின் யோக்கியதைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித் தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.

- விடுதலை நாளேடு, 13. 9 .19

வெள்ளி, 5 ஜூலை, 2019

உண்மை இராமாயணம் (4)

20.3.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற வாரத்  தொடர்ச்சி

சீதை:- சரி! தாங்கள் காட்டுக்குப் போகிறீர்கள். அப்புறம் என் சங்கதி என்ன?

இராமன்:- உன் சங்கதி எனக்குச் சிறிது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

சீதை:- என்னைப் பற்றித் தங்களுக்குச் சந்தேகம் என்ன?

இராமன்:- என்ன சந்தேகம் என்றால் கைகேயி உன்னை இங்கு விட்டு விட்டுப் போகச் சம்மதிக்கிறாளோ, அல்லது நீயும் காட்டுக்குப் போய்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவாளோ என்னமோ தெரியவில்லை. அது தெரிந்த பிறகுதான் உன் விஷயம் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய எண்ணம் என்ன என்றால் கைகேயி ஆட்சேபிக்காவிட்டால் நீ இங்கிருந்து என் தாயாரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். பரதனுக்குத் திருப்தியாய் நடக்க வேண்டும். மற்றும் வேறு காரியம் என்ன நடக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

சீதை:- நாதா! கைகேயியால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை எனக்கும் கொடுக் கப்பட்டது தான். நானும் கூடவே வருகிறேன்.

இராமன்:- சரி. நீயும் காட்டிற்குப் புறப்படத் தயாராகுக! அங்கு இந்த அலங்காரத்துடன் நகை துணிமணிகளுடன் செல்லக்கூடாது. அவற்றை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்து விடு! வீட்டில் வைக்க வேண்டாம்! கைகேயி ஏன் அனுபவிக்க வேண்டும்? அவைகளை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் நாம் மறுபடியும் இங்கு வர தந்திரங்களைச் செய்வார்கள்.

சீதை:- (மகிழ்ச்சியோடு) அப்படியே செய்கிறேன்.

காட்சி: 27 அநேக பிராமணர்கள் கூட்டம், காட்சி முடிகிறது.  சீதை அந்தப் பிராமணர்களை வணங்கி நகைகள், அநேக பண்டங்கள் ஆகிய வைகளைக் கொடுக்கிறாள், (காட்சி முடிகிறது).

தீ மிதிப்பதில் தெய்வீகத் தன்மை எங்கே?


27.03.1948 - குடிஅரசிலிருந்து...

நாகை மாரியம்மன் திருவிழாவில் நடைபெற்றுவரும் தீ மிதிப்பது தெய்வீகத் தன்மையில்லை என்பதை விளக்கத் தோழர் மு. சிவசங்கரன் கருப்புடையுடன் மூன்று முறை அமைதியாக நெருப்பின்மீது நடந்து காட்டினார்.

பச்சை மட்டையால் தீயைப் பக்குவமாக அடித்துப் பரப்பிவிட்டால் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உண்மையை மக்கள் தெளிந்தனர்.

- விடுதலை நாளேடு, 5. 7. 19

புதன், 19 ஜூன், 2019

உண்மை இராமாயணம் (2)



20.3.1948  - குடிஅரசிலிருந்து

சென்ற இதழ் தொடர்ச்சி

சீதை: என்னைப் போல் நீங்கள் என்ன தாய் தகப்பன் இன்னாரென்று அறிய முடியாத பிள் ளையா? அல்லது உங்கள் தகப்பனார்க்கு நீங்கள் என்ன வைப் பாட்டி மகனா? எனக்குத் தாங்கள் சொல்வதிலிருந்து புத்தி எப்படி எப்படியோ எங்கு எங்கோ போகிறதே! இந்தப் பட்டாபிஷேகம் என் தகப்ப னாருக்கும், பரதன் பாட்டன், மாமன் முதலியோருக்கும் தங்கள் மீது மிகவும் அன்பும் உயிர் போன்ற ஆசையும் உள்ள உங்கள் சிற்றன்னை கைகேயி அம் மாளுக்கும் கூடத் தெரிவிக்கப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டது என்றால், இது மகா ஆச்சரியமாகவும், மகா மூடு மந்திரமாகவும் இருக்கிறதே! இதில் ஏதோ ரகசியம், அதுவும் திருட்டுத் தனமான துரோகமான சூழ்ச்சி ரகசியம் இருக்க வேண்டும். அதைச் சற்று விளக்குங்கள். என் மனம் அதை அறியத் துடிக்கின்றது. நாதா! நாதா! சற்று சொல்லுங்கள்.

இராமன்:- சீதாய்! நீ ஊகிப்பது நிஜம் தான். இதில் பல சூழ்ச்சிகள் இருக்கின்றன என்பதும் மெய்தான். அவற்றைச் சொல்லுகிறேன். கேள்! நான் அரசனுக்குப் பட்ட மகிஷியின் புத்திரன் என்பதிலும், சிரேஷ்ட (மூத்த) புத்திரன் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நமது அரசர் பரதனின் தாயாரான கைகேயியை மூன்றாந்தாரமாக மணக்க வேண்டுமென்று ஆசை கொண்டார். ஏனென்றால் அந்த அம்மாள் மகா சுந்தரவதி. உலகில் உள்ள பெண்களில் எல்லாம் மிக அழகியவள். மிக்க குணவதி, அந்தச் சமயத்தில் என் தாயார் மிகக் கிழப்பருவம் அடைந்தவர்களாய் இருந்தார்கள். ஆதலால் அரசர் கைகேயி யின் குணத்தையும் அழகையும் கேள்விப் பட்டுக் கேகய மன்னனிடம் சென்று பெண் கேட்டார். கேகய மன்னன் கிழ வனுக்குப் பெண் கொடுக்கவும் அதுவும் மூன்றாம் தாரமாய் கொடுக்கவும் சம்மதிக்காமல் மறுத்து விட்டார். பிறகு என் தந்தையார் இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாகத் தனது ராஜ்யத்தைக் கைகேயிக்குக் கொடுத்து விடுவதாகவும் கைகேயி, தனது மகனுக்குப் பட்டம் கட்டிக் கொள்ளத் தான் சம்மதிப்ப தாகவும் கூறி அன்றே சுலபமாக ராஜ்யத்தைக் கைகேயிக்கு ஒப்புவித்து அந்த அம்மாளுக்காக தான்  ஆளுவதாகச் சொல்லி ஒப்புக் கொண்டு கைகேயியைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்த நாடு கைகேயிக்கும், பரதனுக்கும் சொந்தமானதாக இருந்து வருகிறது. இதனால் எனது தந்தையார் பரதனுக்கும், பரதன் பாட்டனார், மாமன் முதலியவர்களுக்கும், பரதன் தாய், கைகேயி அம்மைக்கும் தெரியா மலும் பரதன் வருவதற்கு முன்னாலு மாகப் பட்டாபிஷேகத்தைத் திடீர் என்று நினைத்து ஒருவருக்கும் தெரி யாமல், நினைத்த மறுநாளே பட்டா பிஷேக முகூர்த்தம் வைத்துக் கொண் டார். இந்தப் பட்டாபிஷேகத்தை உன் தந்தை ஜனகமகாராஜாவுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று நீ கேட்கக் கூடும். ஏன் தெரியவில்லை என்றால் உன் தகப்பனாருக்குத் தெரிவிப்பதாய் இருந்தால் கைகேயியின் தகப்ப னாருக்கும் தெரிவிக்க வேண்டி வரும். அப்படித் தெரிவிக்கா விட்டாலும் கூட உன் தகப்பனாருக்கு இப்படி மகாராஜா பட்டாபிஷேகத்தை இவ்வளவு ரகசியமாய் நடத்துவது பற்றி அதிருப்தி ஏற்படக் கூடும். இவை எல்லாம் இல்லா விட்டாலும் அவரும் வந்திருக்கிற சமயத்தில், இப்படிப்பட்ட தடையான காரியங்களும், சூழ்ச்சி வெளியாகும் காரியங்களும் நடந்து விட்டால் அதை அவர் சகிக்க மாட்டார். என் தகப்பனார் மீது மிகுந்த கோபமும் அசிங்கமும் கொள்வார். ஆனதால் ரகசியமாகக் காரியம் செய்ய வேண்டி வந்தது. இது வெளியாகிவிட்டது. இதனால் இந்த கதி ஏற்பட்டது. ஆதலால்தான் இதில் ஆச்சர்யப்படத்தக்கது ஒன்றுமில்லை என்றேன்.

சீதை:- அப்படியா சங்கதி! தாங்களும் தங்கள் தகப்பனாரும் மிகச் சாமார்த்திய மாய், நல்ல வேலை செய்திருக்கிறீர்களே! இதற்கு வசிஷ்டர் எப்படி ஒப்புக் கொண் டார்?

இராமன்:- என் தகப்பனார் இஷ்டப் படி கேட்டு நடப்பவர்தானே நமது குரு வசிஷ்டர். அன்றியும் அவருக்கும் இந்த தந்திர ஏற்பாடுகள் எல்லாம் தெரியும். அவரும்தான் இந்த முயற்சியில் பங் கெடுத்துக் கொண்டு யோசனை சொல்லி இருக்கிறார். குடி ஜனங்கள் பின்னால் சங்கதி தெரிந்தால் அவர்கள் நம்மை அவமதித்து விடுவார்களே என்று கருதி, என் தகப்பனார் என்னைக் குடிஜனங்களுக்கு நல்லவனாய் நடந்து கொள்ளும்படியும், அடிக்கடி அவர் களைக் காணும் படியும், அவர்கள் சேமலாபங்களை விசாரித்து அன்பு வார்த்தை கூறும்படியும் செய்து அவர்களை என் வசமாக்கி வைத்தார். இவ்வளவு மாத்திரம் தானா? இன்னும் அவர் செய்த நல்ல காரியங்கள் எவ்வளவு தெரியுமா? கலியாணமானவுடன் பரத னைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விட்டார்.

அவனுக்கும் குடிகளுக்கும் சம்பந்தமில்லாமலே செய்தார். கைகே யிக்கும் என்னை நல்ல பிள்ளையாகவே நடந்து அவளது பூரண அன்பையும், நம்பிக்கையையும் பெரும்படியும், கைகேயிக்குப் பரதன் ஞாபகமே வராமல் இருக்கும்படி நடந்து கொள்ளவும் செய்தார். என்னமோ ஒருவராலும் செய்ய முடியாததான, அவ்வளவு தந்திரமாகவும், முன்னேற்பாடாகவும் செய்த இந்தக் காரியம், கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல் போனது போல் ஆகிவிட்டது. இந்தக் கைகேயி கடைசி நிமிஷத்தில் அப்படிச்செய்து விட்டாள் என் செய்வது? எனக்கு இப்போது எவ்வளவு அவமானம்?