பக்கங்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2015

இராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,



மாநில தி.மு.க.கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ள கருத்து பல்வேறு நிபுணர்கள் நீரி என்ற ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட எல்லாமே கப்பல் செல்லத் தேர்வு செய்யப்பட்ட ஆறு பாதைகளில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகிய வற்றை அகற்றி ஆழப்படுத்தி சேதுக் கால்வாய் அமைப்பதைத் தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்ற தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு மேலும் கூறுகிறார்
மூதாட்டி ஜெயலலிதா
இத்திட்டம் காலங்காலமாக ஏறத்தாழ நூறு ஆண்டு காலமாகப் பேசப்பட்டு பல்வேறு நிபுணர் குழுக்கள் அறிக்கையும் பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதோடு அவரது ஆட்சி முடிந்துவிட்டது.
ரூ. 2,500 கோடி செலவிலான திட்டம் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நமது முதல்வர் கலைஞர் அவர்கள் இத்திட்டம் விரைவில் நிறைவேறிட வேண்டும் என்பதற்காகவே, பிரத மரிடம் வலியுறுத்தி திரு.டி.ஆர்.பாலு அவர்களை இத்துறைக்கான அமைச்ச ராக்கி திட்டம் தொடங்கி மளமள வெனச் செயல்பட்டு 2,500 கோடி ரூபாய் செலவிலான திட்டம் முக்கால்வாசி நிறைவேறி இன்னும் 12 கிலோமீட்டர் தொலைவுதான் பாக்கி.
இப்ப வந்து குறுக்கே படுத்துக்கிட்டான் ராமன்
ஜெயலலிதா தனது இரண்டு தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் வாக்குறுதியாக மக்களிடம் தந்துவிட்டு இப்போது சுப்ரமணியசாமி என்ற ஒற்றைப் பார்ப் பனரைத் துணைக்கழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திலே இருவரும் சேர்ந்து சேதுக்கால்வாய் திட்டமே கூடாது என்று இராமர் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய ராமசேது பாதிக்கும் இராமர் வருத்தப்படுவார், இராம குற்றம் வந்துவிடும் என்று உச்ச மன்றத்திலே வழக்குத் தொடுத்துள்ளார் என்றால் ஜெயலலிதாவின் நாணயத்தை என்னவென்று சொல்வது? சரி, இராமர் ஒரு பாலம் கட்டினாரா? இராமன், சத்திரியனா, கடவுள் அவதாரமா?
இராமன் கடவுள் என்று ஒப்புக் கொண்டால், இராமாயணமே கிடை யாதே! இராமாயணமே ஒரு கற்பனைக் காவியம்தான், இராம இராவண யுத்தமே இராமாயணம் என்று கூறப்படுகிறது மூதாட்டி ஜெயலலிதா அவர்கள் என்ன சொல்கிறார்?
இதோ பிரபல ஆராய்ச்சியாளர் திரு. கே.முத்தையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளராக இருந்தவர் கூறுகிறார். தன் வாரிசுக்காக தனக்குப் பின் ராஜ்யத்தை ஆளுவ தற்காக அக்காலத்திய அரசர்களும், நில உடைமை எஜமானர்களும் ஒருவித ஏற்பாடு செய்து கொள்வது வழக்கம் தன் மனைவிமார்களை பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பது அக்காலத்திய வழக்கம் அடிமைச் சமுதாயத்தில் பெண்கள் இரட்டை அடிமைகள், அவர்களை அடிக்கலாம் கொல்லலாம் மற்றவர்களிடத்தில் விற்கலாம். எனவே தம் மனைவி மார்கள், சக்தியில்லாத தனக்காகப் பிள்ளை பெற்றுத்தரும்படி கோரப் பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அடிமை எஜமானர்களின் சமுதாயம் அது.
அசுவமேத யாகம் என்று யாகம் செய்வார்கள். குதிரையொன்றை பவனி வரச்செய்வார்கள். பிறகு அதை யாகம் செய்யுமிடத்தில் வெட்டி அதன் மாமிசத்தை அனைவரும் உண்டு அசுவமேத யாகம் செய்யும் களத்தில் உள்ள குடில்களில் பாகுபாடின்றி உறங்குவார்கள். அது போன்றதே புத்திர காமேட்டி யாகம். யார் புத்திர பாக்யம் வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிமார்களை யும் அழைத்து வருவார்கள் யாகம் செய்யும் புரோகிதர்களிடம் தங்கள் மனைவிமார்களுக்கு; புத்திர பாக்யம் உண்டாக்கும்படி கேட்டுக் கொள் வார்கள். யாகக் களத்திலே அந்த மனைவிமார்கள் தங்குவார்கள்.
இரவு பகலாகத் தங்குவார்கள் அதன்பிறகு அவர்களுக்கு புத்திரர்கள் பிறப்பார்கள் புத்திர காமேட்டி யாகத்தின் அர்த்தம் இதுதான்.
தன்னால், தன் மனைவிக்கு குழந்தை பிறக்க வைக்க முடியவில்லை என்றால் பிறரால் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதற்கு அக்காலத்தியவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சடங்கு இது.
இதை வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் பாலகாண்டத்தின் 14-ஆவது சர்க்கத்தில் தெளிவாக எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்குகிறார்.
தன்னுடைய மனைவிமார்கள் மூவரும் புத்திரர்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி தசரதன் தன் னுடைய அரசவைப் புரோகிதர்களிடம் வேண்டிக் கொள்கிறான். அவர்களது ஆலோசனைப்படியே அந்த யாகம் நடத்துகிறான்.
இதற்கென களம் தயாராகிறது. தங்குவதற்குப் பல குடில்கள் தயாரிக் கப்படுகின்றன. குதிரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டு திரும்பவும் யாகத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பலியிடப்படுகிறது. அதன் மாமிசத்தைப் புத்திரபாக்யம் கோரும் பெண்கள் உள்பட அனைவரும் தீயில் பொசுக்கிச் சாப்பிடுகிறார்கள். இது போல் மொத்தம் 300 மிருகங்கள் (ஆடு மாடுகள்) உட்பட பலியிடப்படுகின்றன அத்தனையும் உண்ணுகிறார்கள்.
16 பிரதம புரோகிதர்களின் தலைமையில் இந்த யாகம் நடைபெறுகிறது. அவர்களிடம், தன் மனைவிமார்களுக்கு புத்திர பாக்யம் கிடைக்கும்படி வேண்டுகிறான் தசரதன் மனைவிமார்கள் மூவரும், நான்கு பிள்ளைகளுக்குத் தாய்மார்களா னார்கள். இதுவே பாலகாண்டத்தின் 14ஆவது சர்க்கத்திலிருந்து கூறப்படும் விபரங்கள்.
இந்தக் கருத்து மார்க்சீயக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளராக இருந்த தோழர் கே.கே .முத்தையா அவர்கள் எழுதிய இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற ஆராய்ச்சி நூலிலிருந்து தரப்படுகிறது. டி.பரமசிவ அய்யர் டி.அமிர்தலிங்க அய்யர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வழியில் திரு. கே.முத்தையா அவர்கள் இராமாயணம் உண்மையும் புரட்டும் என்ற தலைப்பில் எழுதிய நூலிலிருந்து இராமன் பிறப்பின் ஆபாசம், அசிங்கம், இராமனின் தாய் தந்தையர் யோக்யதை அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.
இராமாயணம் ஓர் கற்பனைக் காவியம் அந்த நாட்களில் புத்தகமும் சமணமும் ஓங்கிப் புகழுடன் சிறந்து பரவியிருந்தது. பார்ப்பனீயமும் இந்து மதமும் காப்பற்றப்பட வேண்டுமே என்பதற்காகப் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி வால்மீகி முனிவரிடம் வேண்டி புத்தருக்குப் பதிலாக இராமனைக் கதாநாயகனாகப் படைத்த ஒரு காவியமெழுத வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கிணங்க வால்மீகி முனிவர் சமஸ்கிருதத்தில் இராமனைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்டதே வால்மீகி இராமா யணம் வால்மீகி தனது காவியத்தின் நாயகனாக இராமனைப்படைத்தார். ஒரு சத்திரியனாக சிறந்த வீரனாகப் படைத்தார். எந்த இடத்திலும் இரா மனைக் கடவுளாகவோ விஷ்ணு அவதாரம் என்று காட்டவில்லை.
வால்மீகியின் அழகுமிக்க சமஸ் கிருதத்தை போலவே தமிழிலும் படைக்க வேண்டும் என்று தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஒன்று கூடிச்சிறந்த கவிஞனான கம்பனை அணுகி வேண்டினர். கம்பனுக்குச் சகல சவுகரியங்களும் அய்ஸ்வரியங்களும் அந்தப்புறத்தில் உள்ள எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க இருந்தார்களே சோழப்பேரரசர்கள் அவர்கள் தந்த உற்சாகத்தில் தான் கம்பன் ஒரு துளியும் இன உணர்வோ, மொழி உணர்வோ இன்றி இராமனுக்கு கடவுள் தன்மையைப் படைத்து எழுதி விட்டான்.
இந்த இராமாயணத்தை சோழ அரசர்கள் தூக்கி வைத்து கொண்டு ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவே ராமன் கடவுளாகப் பரப்பப்பட்டான்.
இராவணனை, அரக்கன் கொடியோனென்று கம்பன் எழுதியது இராமனைக் கடவுளாக்குவதற்காகவே என்று அறிஞர் அண்ணா அவர்கள் புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் இராமனைத் தமது ஆராய்ச்சியால் அக்குவேறு ஆணி வேறாகப்பிய்த்து காட்டி இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று முழங்கினார். அறிஞர் அண்ணா அவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இராமா யணத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எழுதினார்.
இராமாயணம் பெரிய புராணம் இரண்டும் புனித நூல் என்று வாதிட வந்த மாபெரும் தமிழ் அறிஞர்கள் இராமாயண, மகாபாரத ஆராய்ச்சியார்களை நேரடி வாதத்தில் அறிஞர் அண்ணா வென்றார்.
தந்தை பெரியார் அவர்களின் பெரிய புராண ஆராய்ச்சி நூல்  தமிழ் மக் களிடையே பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.
அறிஞர் அண்ணாவின் வாதப்போர் வெற்றி தீ பரவட்டும் என்ற நூலாக வெளிவந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணா உயர்த்திப் பிடித்த அறிவுத் தீப்பந்தம் மூட நம்பிக்கையிலும்,  சக்தியிலும் மூழ்கிக் கிடந்த இளை ஞர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மத்தியிலும் பகுத்தறிவுச் சுடர் ஏற்றியது இதனையொட்டியே பட்டிமன்றங்கள், சுழலும் சொற்பொழிவு மன்றங்கள் என அறிவொளி பரப்பியது.
இந்த நிலையில் தான் ஜெயலலிதா, சு.சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனரைக் கூட்டிக் கொண்டு உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்திருக்கிறார்.
புத்த மதத்தை அழித்து புத்தனுக்குப் பதிலாக ராம வழிபாட்டை உருவாக் கவும், புத்த மதம் இருந்த இடத்தில் இந்து மதத்தை நிலை நாட்டவும் செய்த நீண்ட நெடும் முயற்சியின் ஒருபகுதியே இது.
இந்த இடைச்செருகல்களுக்குக் காரணமும் உண்டு புத்த மதத்தினரும், புத்த பிக்குகளும் பொது மக்களால் வெகுவாக மதிக்கப்பட்டனர் ஒடுக்கப் பட்ட ஏழை எளியவர்களிடையே புத்த பிக்குகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றி ருந்தனர் அவர்கள் பேசிய சமத்துவ போதனைகள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.
(கே.முத்தையா இராமாயணம் உண்மையும் புரட்டும்)
ஆக வால்மீகி இராமாயணத்தில் எந்த இடத்திலும் ராமன் கடவுள் அவதாரமென்று குறிப்பிடவே இல்லை.
ராமன் பிறப்பே ஆபாசம்! தெரிந்தே பரதன் அடைய வேண்டிய ஆட்சியைத் தானே அடைய முடிசூட்டு விழாவைப் பரதனுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டான். ஆனால் கைகேயி விழிப்பாக இருந்து தடுத்துவிட்டாள்.
இராமனுக்கு அவனது தந்தையார் என்றே தெரியாது
யாகத்தில் நியமிக்கப்பட்ட பிள்ளை களைப் பெற்றுத்தர வந்த முரட்டுக் காளைகள் போன்றவர் களைத்தான் தசரதன் வணங்கி எனது மூன்று மனைவியருக்கும் பிள்ளை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டிக் கொள்ள குழந்தை உண்டாக்கித் தரவே நியமிக்கப்பட்ட பொலிகாளைகளான ஹோதா அதர்வயூ உக்தாதா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தசரதனின் பட்ட மகிஷிகளான யசோதா, கைகேயி, சுமத்திரை ஆகியோருடன் சேர்ந்து நான்கு ஆண் குழந்தைகளைக் கொடுக்கிறார்கள்.
இவர்கள் பெரிதாக வளர்ந்தவுடன் அயோத்தி முடி சூட்டு விழாவிலும் இராமன், பதவிக்கு ஆசைப்பட்டு தனது சிற்றன்னை கைகேயிக்குத் துரோகம் இழைக்கிறான். தசரதனின் அயோத்தி அரண்மனை இதைப்புரிந்தும், பரதன் சூடிக்கொள்ள வேண்டிய முடியையும் அயோத்தியின் ராஜ்ய பாரத்தையும், தானே அடைய உடன்படுகிறான் இராமன் ஆனால் கைகேயி விட்டுக் கொடுக்காமல் தன் மகன் பரதனுக்கே முடிசூட்டு விழா நடத்தி விடுகிறாள். அது மட்டுமல்லாமல் தன் கிழக் கணவன் தசரதன் கொடுத்திருந்த இன்னொரு வரத்தின்படி இராமனை பதினான்கு வருடம் காடேக வைக்கிறாள்.
ஆழி சூழ் உலகமெல்லாம்
பரதனே ஆள, நீ போய்
தாழ் இருஞ்சடைகள் தாங்கி
அருந்தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணிப்
புண்ணிய துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா    (கம்பராமாயணம்)
என இயம்பினார் அரசன்.
நீ, ஒன்றும் ஆட்சி செய்ய வேண் டாம் நீண்ட ஜடாமுடி தரித்து அரி தான தவக்கோலத்தோடு நீர் நிறைந்த துறைகளை நாடி, நீராடி கடும் புழுதிபடர்ந்த காடுகளில் அலைந்து தவம் மேற்கொண்டு காடு வனாந் தரங்களில் உன் மனைவியோடு திரிந்து பதினான்காண்டுகள் கழித்து நாடு திரும்பி வா! என்று கூறிவிட்டான்.
ஆக ராமன் ஒரு சராசரி மனிதன் ஆசா பாசங்களும் விருப்பு, வெறுப்பு களுக்கும் உட்பட்டவன்தான்.
பதினான்காண்டு காலம் வனவாசம் சென்றவன் காடுமேடு சுற்றி தவமே சீலமாகக் கொண்டு திரிய வேண்டி யவன் அப்படி நடக்க வில்லையே!
இராமனுக்கு தன் தந்தையார் என்றே தெரிய வாய்ப்பில்லையே. மற்றவர் சொல்லித்தான் தன் தந்தை தசரதன் என்று அறிந்து கொண்டான்.
இராமன் அப்பன் பேர் தெரியாத வன்.
பெற்றோர் சொல் கேளாதவன்
காட்டில் திரியும் போது, தமிழ் பெண்களை அவர்களுடைய உறுப்பு களை அறுத்தெறிந்தவன்
தன் மனைவி சீதையையே நம்பாமல் கர்ப்பத்தோடு காட்டுக்குத் துரத்தியவன்
அண்ணன் தம்பிகளுக்குள் சண் டையை மூட்டித் தம்பியை தனியாக்கி அண்ணனை மறைந்திருந்து கொன் றவன்.
சம்பூகன் என்ற திராவிடனை வதம் செய்தவன் இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவன் அவன் சாதாரண மனிதனாகக்கூட மதிக்கக் தக்கவன் அல்லன்.
-விடுதலை ஞா.ம.15.6.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக