பக்கங்கள்

புதன், 28 டிசம்பர், 2016

ராமன் தின்ன மாமிசம் எது?

இறைச்சி உணவுகளில் மேத்யம் (பவித்திரமானது) அமேத்யம் (பவித் திரமில்லாதது) என்று வகைகள் இருந் தன. ஆடு, காட்டுப் பன்றி இவற்றின் இறைச்சிகள் பவித்திரமானவை மான் இறைச்சியும் பிரியமான உணவாக இருந்தது. வனவாச காலத்தில் முதல் நாள் யமுனா நதிக்கரையில் பன்றி, ருஷ்யம், ப்ருஷத், மஹாருரு போன்ற விலங்குகளை ராமன் வேட்டையாடி னான். பல மான்களையும் வேட்டையாடி உணவுக்குக் கொண்டு வந்தான். பஞ்சவடியில் கபட சங்கியாசியாக மாறு வேஷம் பூண்டு ராவணன் வந்தபோது, 'நீங்கள் கொஞ்சநேரம் தங்கியிருங்கள் என் கணவர் பல விலங்குகளை வேட் டையாடிக் கொண்டு வருவார்.நல்ல விருந்து உணவாக படைக்கிறேன்" என்று சீதாதேவி வேண்டிக்கொண்டாள்.

அய்ந்து நகங்களுள்ள பிராணிகளில் உடும்பு, முள்ளம் பன்றி, முயல், ஆமை, ச்வாலிதமிருகம், (நாயை வேட்டையாடிப் புசிக்கும் விலங்கு) இந்த அய்ந்தையும் பிராமணரும், ஷத்திரியரும் புசிக்கத் தக்க உணவாகக் கொண்டிருந்தார்கள். குரங்கு இறைச்சியை மேலானவர் புசிக்க மாட்டார்கள். கிராதர்கள் (செம்படவ இனத்தார்) பச்சையாகவே மீனைப் புசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பம்பைப் பொய்கையில் ரோஹிதம் சக்ரதுண்டம், நலமீனம் ஆகிய பெரிய முள் மீன்கள் நிறையக் கிடைத்தன. “அவை நல்ல ருசி யானவை, அவைகளை வேக வைத்துச்   சாப்பிடுங்கள்” என்று ராமனுக்கு கபந்தன் சிபாரிசு செய்தான்.
பரதன் தின்ன கருவாடு

மனித மாமிசத்தைப் புசிக்கும் வழக்கம் அரக்கர்களிடம் நிலவி வந்தது. உணவைச் சேகரம் செய்து வைக்க வேண்டி, இறைச்சி வகைகளைக் காய வைத்துப் பதப்படுத்தி வைப்பது அந்தக் காலத்தவரின் வழக்கம். புதிய இறைச் சியையும் காயவைத்த இறைச்சியையும் விருந்து உணவாக பரதனுக்குக் குகன் வட்டித்தான்.

- திரு. சவுரி எழுதிய 
"இந்தியாவின் கலையும் கலாசாரமும்" 
என்ற நூலின் பக்கம் 106-107
-விடுதலை ஞா.ம.,17.12.16