பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம் -சித்திரபுத்திரன்

இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன் னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே;
இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன்.
நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன்.
இதுதான் இந்த இரண்டாவது குழந் தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட்டியதாகவும் இராமா யணத்தில் காணப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண் டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது.
மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக ஆகிவிட்டது.
- தந்தை பெரியார்

விடுதலை,19.6.15

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஒருதோப்பில்பலகனிகள்.....

ஒருதோப்பில்பலகனிகள்.....


குரங்கு பாலம் கட்டுமா?
இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் (வானரங்கள்) பாறை களையும் சால் மரக்கட்டைகளையும் கடலில் போட்டு இலங்கைக்கு பாலத்தை கட்டினவாம்.
பாறைகளின் மேல் 'ராம்! ராம்!' என எழுதிப் போட்டதனால் பாறைக ளெல்லாம் கடலில் மிதந்து பாலம் போல் ஆனதாம்!
எழுதத் தெரிந்த குரங்குகள்! பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குரங்குகளுக்கு எழுதவும் பாலங்கட்டவும் தெரிந்திருக்கிறது! சிரிப்பு தான் வருகிறது! அடக்கத் தான் முடியவில்லை!
(கி.மு. 2650ஆ-ம் ஆண்டில் தான் எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் குறுக்கே மெனிஸ் மன்னரால் உலகிலேயே முதன் முதலாக பாலம் என்ற ஒன்றே கட்டப்பட்டது.)
அப்போது மிதந்த பாலம் இப்பொ ழுது மிதக்காமல் கடலுக்கடியில் போனது ஏனோ தெரியவில்லை ?
இராமன் சக்தி அவ்வளவு தானோ?
அணில் முதுகில் கோடு போட்டது யார்?  இராமன் இட்ட கட்டளைப்படி குரங்குகள் பாலம் கட்டிக் கொண்டி ருந்த போது அணிலும் பாலம் கட்ட உதவியதாம்!
அணில் கடலில் குதித்து உடலை நனைத்துக் கொண்டு வந்து மணலில் புரளுமாம்! இதனால் உடலில் ஒட்டிக் கொண்ட மணலை பாலத்தின் அருகில் சென்று உதிர்க்குமாம்! இப்படியே செய்து கொண்டிருந்த அணிலைப் பார்த்த இராமன் அன்போடு அணிலின் முதுகில் தனது முன்று விரல்களால் தடவிக்கொடுத் தானாம்! உடனே அணிலின் முதுகில் மூன்று கோடுகள் பதிந்து விட்டனவாம்! இத னால் அனைத்து அணில்களின் முது கிலும் மூன்று கோடுகள் வந்துவிட் டனவாம்!
இந்தக் கதை எந்த இராமாயணத் திலும் கிடையாது எனபது பலருக்குத் தெரியாது. இதே போல் இராமாய ணங்களில் இல்லாத பல கதைகள் இராமாயணத்தில் இருப்ப தாகச் சொல்லப்படுகின்றன.
அமெரிக்கா, மெக்சிகோ, இங்கி லாந்து போன்ற பகுதிகளில் உள்ள அணில்களின் முதுகில் கோடுகளே கிடையாது. அங்குள்ள அணில்களின் மேல் இராமன் சக்தி பலிக்கவில்லையா?
இராமன் (அ)யோக்கியனா?
தமிழ்நாடு முதல்வராக டாக்டர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, இராமாயணப்படி இராமன் குடிகாரன், மாமிசம் சாப்பிட்டவன் என்று சொன்னவுடன் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.யான இராம்விலாஷ் வேதாந்தி என்கிற பார்ப்பன பண்டார பரதேசி ''கலைஞரின் தலையையோ, நாக்கையோ வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 'பரிசுத் தொகை' வழங்கப்படும்'' என அறிவித்தான்.
உண்மையை சொன்னால் மதவெறி தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர் என்று தான் சொல்லவேண்டும்.
யோக்கியனை அயோக்கியன் என்று சொன்னால் தான் தப்பு! அயோக்கியனை அயோக்கியன் என்று தானே சொல்ல முடியும்! யோக்கிய சிகாமணி என்றா சொல்ல முடியும்?
இராமாயணத்தில் வரும் இராமன் குடிகாரனாகவும், பல மனைவிகள் உள்ளவனாகவும், பல பெண்களுடன் கூத்தடித்தவனாகவும் (சரச சல்லாபி), கொலைகாரனாகவும், பேடியாகவும் மற்றும் வேட்டையாடி விலங்குகளை கொன்று தின்றவனாகவும் தான் இருக்கிறான். இவ்வளவு அயோக்கியத் தனங்களையும் செய்தவனை மாறாக யோக்கிய சிகாமணியாக பிரச்சாரம் செய்தால் சும்மாவா இருக்கமுடியும்?
இராமன் குடிகாரன்! 
''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும். அள வுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக் கத்தை கொண்டிருந்தான். அப்படி குடித்துவிட்டு அவன் போடும் கூத் தாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சர்க்கம்- 43, சுலோகம்-1 )
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர் 
இராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்! 
''இராமன் பட்டமகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர் களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்துகொண்டான்.''
(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், சருக்கம்-8, பக்கம்-28- சி.ஆர். சீனிவாச அய்யங்கார் & மன்மதநாத் தத்தர் மொழி பெயர்ப்பு)
இராமாயணத்தில் பல இடங்களில், இராமனின் மனைவிமார்கள் என்றே வருகிறது. நூல்: 'இராமாயணப் பாத்திரங்கள்'- தந்தை பெரியார்
இராமன் சரச சல்லாபி (பெண் பித்தன்)!  ''அந்தப்புரத்தில் இயல், இசை நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா மற்றும் அப்ரசுகள் போன்ற பேரழகிகள் இருந்தனர். போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெண்ணழகிகளெல்லாம் அந்த அந்தப் புரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இப் படிப்பட்ட அழகிகளின் மத்தியில் இராமன் குடித்து கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். இவையெல்லாம் இராமனின் அன்றாட நிகழ்ச்சிகள்.'' (வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -42 சுலோகம்- 8 & சருக்கம் -43, சுலோகம்- 1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
இராமன் பேடி! - கொலைகாரன்! 
மரங்களுக்கு பின்னால் மறைந் திருந்து திடீர் என அம்பெய்தி வாலியைக் கொல்கிறான்!
தவமிருந்த சம்பூகனை துடிக்கத் துடிக்க வாளால் வெட்டிக்கொன்றான்!
குடியையும், உயிர்க்கொலை புரியும் யாகத்தையும் எதிர்த்த பெண்களையும் அசுரர்களையும் (சுராபானம் குடிக் காதவர்கள்-திராவிடர்கள்) கொன்றான்.
இராமன் இன வெறியன்! '
'சம்பூகன்' என்கிற சூத்திரன் (திரா விடன்) காட்டில் உள்ள ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஆண்டவனை நோக்கி தவமிருந்தான், இதை அறிந்த இராமன் (ஆரியன்) காட்டிற்கு சென்று 'சம்பூக'னைக் கண்டு 'சூத்திரன் ஆண்டவனை நோக்கி தவ மிருக்க எனது இராஜ்ஜியத்தில் இட மில்லை' என்று கூறி வாளை உருவி 'சம்பூக'னின் தலையை வெட்டிக் கொன்றான்.'' (வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம், பிரிவு-64, பக்கம்-208 -ஆ.க.கணேசன், இக்கிம்பாதம்ஸ் வெளியீடு)
இராமன் விலங்குகளை கொன்று தின்றவன்!
  ''இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும்.''
(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -43, சுலோகம் -1)
நூல்: 'இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்'- அம்பேத்கர்
''ராகவன் (இராமன்) தங்களை (சீதையை) காணாமல் துக்கத்தால் தவிக் கிறார். இராமன் மது மாம்ஸங்களை விட் டார்.'' (அதாவது தற்காலிகமாக மது, மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட் டார்) (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், சுந்தரகாண்டம், பக்கம்- 148 ஸ்ரீ உ.வே. சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு- தி லிட்டில் பிளவர் வெளியீடு)
''இராமனும் இலட்சுமணனும் அம்பெய்தி ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய குரு ஆகிய நான்கு விலங்கு களை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்து சீதையுடன் உண்டனர்.''
(வால்மீகி ராமாயணம், அயோத் தியா காண்டம், சர்க்கம்-52 பாடல் 102 ) நூல்: ''ராமாயணமும் லங்கையும்''- டி. பரமேசுவர அய்யர்
''இவ்விடத்திலும் இன்னும் பல விடங்களிலும் ராமலஷ்மணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த வேட்டை யாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் பாடியிருக்கிறார். சந்தேகத்திற்கு இடமில்லாமல் வியத்த மாகப் பாடியிருக்கிறார். இதைப்பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை. க்ஷத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை.'' ('இராமாயணம்' (சக்ரவர்த்தி திருமகன்), பக்கம் - 134 ) -இராஜாஜி எழுதியது.
இராமன் ''அயோக்கியன்'' என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும், இருந்தாலும் இதோடு முடிக்கிறோம். 
இராமன் பிறந்த இடம் எது? 
இராமன் பிறந்த இடம் 'அயோத்தி' என்றும், அங்குள்ள 'பாபர் மசூதியில் தான் இராமன் பிறந்தான்' என்றும் கூறி, அந்த மசூதியையே பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கும்பல் இடித்து தரைமட்டமாக்கியது. இந்த இழிச்செயலால் இந்தியா முழு வதும் கலவரங்கள் எற்பட்டு, {தமிழ் நாட்டை தவிர} பல மனித உயிர்கள் பலியாயின, உடமைகளும் பறிபோயின.
ஆனால் அயோத்தியில், சுமார் 40 இடங்களில் உள்ள இராமன் கோயில் களில்; 'இங்கு தான் இராமன் பிறந்தான்' என்று கூறுகின்றனர். உண்மையில் அயோத்தி எது? இராமாயணத்தில் அயோத்தியில் இராமன் பிறந்ததாக சொல்லப்பட் டுள்ளது. பழைய (முதன்மை) இராமா யணக் கதையான 'புத்த இராமாயணத் தில் 'வாரணாசி'யில் (காசி) இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. (காசி கங்கை ஆற்றங்கரையில் உள்ளது)
வால்மீகி இராமாயணத்திலோ 'அயோத்தி'யில் பிறந்த்தாகவும், 'அயோத்தி' கங்கை ஆற்றங்கரையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உள்ள அயோத்தியோ 'சரயு' ஆற்றங்கரையில் உள்ளது.
'கங்கை' ஆற்றை தாண்டி, வடக்கு பக்கமாக 'சரயு' ஆறு உள்ளது; அதை யும் தாண்டி அடுத்த பகுதியில் தான் தற்போது உள்ள அயோத்தி உள்ளது.
அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து வந்த பிறகு தான் 'கங்கை' ஆறு வரும். ஆனால் வால்மீகி இராமாயணத் திலும் மற்ற இராமாயணங்களிலும், அயோத்தியிலிருந்து சரயு ஆற்றை கடந்து இராமன் வந்ததாக சொல்லப் படவில்லை. அயோத்தியிலிருந்து நேரே கங்கை ஆற்றை கடந்து வந்ததாகத்தான் சொல்லப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 'வாரணாசி' (காசி) தான் பழைய 'அயோத்தி' என்று 'இராமனும் கிருஷ் ணனும் ஒரு புதிர்' என்ற தமது நூலில் கூறியுள்ளார்.
''மன்னர் ஜனகரின் தலைநகரம் 'விதேகம்'; அதே பெயரில் ஒரிடம் பீகாரில் உண்டு. முன்பு அயோத்தியாக சொல்லப்படுகிற இப்போதைய அவுத்திலிருந்து (அயோத்தி) வெகு தொலைவில் அமைந்துள்ளது அந்த இடம். இராமனும் அவனுடன் சென்றவர்களும் நடந்து நான்கு நாள்களில் சென்றடைந்ததாக சொல்லப் படுகின்ற அந்த இடத்திற்கு குதிரையின் மீது போனால் கூட அதைவிட இரண்டு மடங்கு நாள்கள் ஆகும்'' என்று _ 'ஜோசப் இடமருகு' அவர்கள் 'சபரிமலை அய்யப்பன் உண்மையும் கதைப்பும்' என்ற நூலில் கூறுகிறார். காசியிலிருந்து தான் 'பீகார்' அருகில் உள்ளது. அயோத்தியிருந்து பீகாரோ வெகு தொலைவில் தான் உள்ளது. ஆகையால் டாக்டர் அம்பேத் கர் அவர்கள் கூறுவது போல் 'பழைய அயோத்தி' 'வாரணாசி'(காசி) தான் என்பது தெளிவாகிறது.
இராமாயணக்கதைப்படி 'இராமன்' பிறந்தது வாரணாசியில் தஈன்! தற் போதைய அயோத்தி அல்ல!
தொகுப்பு: செ.ர. பார்த்தசாரதி,  செயலாளர்,  தென் சென்னை,  திராவிடர் கழகம்.
-விடுதலை ஞா.ம,14.9.13

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும்


பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
முன்னுரை
இராம் ஜெத்மலானி ஒரு சட்ட மேதை. மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவர் பிஜேபியில் இருந்தபோது இராமாயணத்தைப் படித்தார்.  அவர் சீதையை இராம பிரான் மிகவும் துன்புறுத்தியதாக ஒரு கருத்தரங்கத்தில் கூறினார். இராம ராஜ்யம் அமைக்கப் பாடுபடும் மதவாதிகளுக்கு  இராம் ஜெத்ம லானியின்  கருத்துக்கள் இராம பிரானை அவதூறு செய்யும் வகை யில் சொல்லப்பட்டதாகவும், இராம பக்தர்களின் மனதை புண்படுத் தியதாகவும் தோன்றியது. அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இராமன் ஒரு அவதாரப் புருஷன் அவர்  செய்தது சரியே என்று வாதிட்டார்கள். சில நாட்களுக்குப் பின்னர் இராம் ஜெத்மலானியை பிஜேபியை விட்டு நிதின் கட்காரி வெளியேற்றினார். இவ்வாறு இராமரை அவமதித்த ஜெத்  மலானியைத் தண்டித்தனர்.
தற்போது  புதுதில்லியில் ஒரு பெண் இரவில் தனியார் பேருந்தில் பயணிக்கும்போது பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டபோது பிஜேபியினர் கொதித்து எழுந்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம், சீதை இராமனால் துன்புறுத்தப்பட் டது சரி என்று வாதிட்ட மத வாதிகள், நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் துன்புறுத்தப்பட்ட போது கண்டன ஊர்வலம் நடத்தினர், குடியரசுத் தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டனர். இதற்கு முன் னாள் இராணுவ தளபதி, சாமியார், பாபா இராம்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் ஒரு சில வாரங்களுக்குள்தான் நடந்தேறின. மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பிஜேபியினரின் இரட்டை நிலையை புரிந்து கொண் டுள்ளார்கள். இந்த இந்துத்துவாக்கள் இராமர்பாலம் என்ற பெயரில் சேதுத் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதும் மதத்தின் அடிப்படையில் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான்.
வால்மீகியின் கற்பனையில் உருவான இராமாயணத்தின் கருப் பொருள் சீதையின் கற்பினை நிரூ பித்தல் ஆகும். எனவே வால்மீகியின் கற்பனைக் காவியத்திற்கு கற்புக் காவியம் என்று தான் பெயரிட்டி ருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.  இத்தகைய இராமா யணத்தைப் பற்றி கால்டுவெல் கூறியுள்ள கருத்துக்கள் கீழே தரப் பட்டுள்ளன. சீதையின் கற்பு
கற்பு என்றவுடன் இந்திய மக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கற்புக்கரசி கண்ணகி ஆகும். ஏனென்றால் தனது கணவனைக் கொன்ற பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரையைத் தீயிட்டுக் கொளுத்தியது ஒரு காரணமாகும்.
சீதைக்கும் கண்ணகிக்கும் வேறுபாடு உள்ளது. சீதை கடைசி வரைக்கும்  இராமன் கற்பினை சோதித்த போதெல்லாம் இராமன் இட்ட கட்டளைக்கு அடிபணிந்தாள். ஆனால் கண்ணகி கணவனுக்கு அடிபணிந்தாலும் கோவலனைக் கொன்றது சரியல்ல என்று அரசனு டன் வாதிட்டாள், அறம் பிழைத்த மன்னனின் மதுரையை ஆவேசத்து டன்' தீயிட்டு, கொளுத்தினாள். பின்னர், கேரளம் (சேரநாடு) சென் றாள். அங்கு இன்றும் கொடுங்களூர் பகவதி என்று அழைக்கப்படும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். ஆனால் சீதையைக் கவர்ந்த இராவணனின் லங்கா (இலங்கை அல்ல) நகரைக் கொளுத்தியது அனுமான் என்ற வானரம்.
இது போல் லங்கா செல்ல பாலம் கட்டியது நளன் என்ற வானரம், இராமன் அல்ல) எனவே கற்பை சோதித்தபோது இராமன், சீதை கற்புடையவள் இராவணனால் கெடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு கற்புடைய சீதையால் இராவண னுக்கோ, அவன் ஆண்ட லங்கா நகரத்திற்கோ தீங்கு ஏற்படவில்லை. கற்புடைய சீதை வீறு கொண்டு எழவில்லை;  காரணம் இராமனின் வீரத்திற்கு இடம் அளித்தாள். இது வால்மீகியின் கற்பனை எதார்த்தமான பெண்ணின் செயல் அல்ல. பொதுவாக பெண்களின் கற்பின் சிறப்பினை தமிழ் காவியங்களில், சங்க காவியங்களில் சிறப்புக் கருத் தாக  மையக் கருத்தாக அமைப்பது வழக்கம். இதற்கு உதா ரணம், திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் மன்னர் அவையில், பாண்டிய மன்னனுடன், கற்புடைய பெண்கள் கூந்தலுக்கு / உமைய வளுக்கு மணம் உண்டு என்று வாதிட்டார். திருக்குறளில் பிறன் மனை விழையாமை, வாழ்க்கைத் துணைநலம் போன்ற அதிகாரங்கள். இதைக் காணும் போது உலகத்திலே முதன் முதலாக எழுதப்பட்ட காவியம் என்று போற்றிப் புகழப் படுகின்ற இராமாயணம் என்ற இதிகாசத்திற்கு கருப்பொருளை வால்மீகிக்கு  தந்தவை சங்கத் தமிழ் இலக்கியங்கள் தாம் என்று நினைக்காமல் இருக்க முடியாது. இது திருக் குறள் உள்பட சங்க இலக்கியங்களே உலக இலக்கியங்களுக்கு முன்னோடி என்று கூறலாம்.  மேலும் இராமா யணத்தைப் பற்றிய தகவல்களை சொன்ன முதல் இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள்தான் என்று ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.  (ஆதா ரம் பாரதீய வித்யாபவன் வெளியீடு) இது சிந்து நதி முதல் சிந்து மாக்கடல் (இந்தியன் ஓசியன்) வரை தமிழர் நாகரிகம் பரவியிருந்ததை குறிக்கிறது.
இராமாயணம் பற்றி கால்டு வெல்லின் கருத்துகள்:
டாக்டர் கால்டுவெல் 1893ல் எழுதிய பரதகண்ட புராதனம் என்ற நூலில் இராமாயணம் பற்றிய பல செய்திகள் கிடைத்திருக்கின்றன. அதனை தொகுத்து கீழே தரப் பட்டுள்ளது.
1.    இராமாயண காலம்  புத்த சமயம் தோன்றிய பின்னும், இத் தேசத்து இராசாக்களிலும் ஜனங் களிலும்  மிகுதியான பேர் அந்த மதத்தை அனுசரிக்கிறதுக்கு முன்னும், வட இராச்சியத்து இந்துக்களுக்குள் சமஸ்கிருத பாஷை, நாடோடி பாஷையாக வருங்காலத்திலும், அது கட்டப்பட்டிருக்கும் என்று நிதானிக்கலாம். இப்படியானால் கிறிஸ்து பிறப்பிற்கு ஏறக்குறைய 400 வருஷத்துக்கு முன்பு இராமாயணம் கட்டப்பட்டு (Compose)  இருக்க வேண்டும் (இந்த காலம் கிமு 400 என்பது பாணினிகாலம். இந்தப் பாணினி வேதமொழிக்கு இலக்கண நூல் அஷ்டத்யாயி எழுதிய பின் வேதமொழிக்கு பாஷா'' என்று பெயரிட்டார். பின்னர் இந்த மொழி எப்போது சமஸ்கிருதம் என்று அழைக்கப்பட்டது என்பதற்கு தகவல் எதுவும் இல்லை).
 -விடுதலை ஞா.ம.19.1.13

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (2)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
2)    வேதகாலத்தில் பஞ்ச பூதங் களை ஆரியர்கள் வணங்கினார்கள். இராமாயண காலத்தில் வீரர்களை வணங்கினார்கள்.
3)    கோசலம் (அவுத்தேசம்) பகுதியில் அயோத்திபுரி ஆரிய வம்சத்திற்கு தலைநகராய் இருந்தது. இது தற்போதைய கோகரா நதியின் (சரயு நதியின்) கரையில் இருந்தது. சந்திரவம்சம்  கங்ககைக்கும் யமுனைக்கும் இடையில் தோஆப் பகுதியில் ஆண்டது.  தலைநகர் ஹஸ்தினாபுரம் ஆகும்.
4)    குசலவரை (இராமனின் மகன்கள்) இராமனின் மக்கள் என்று கருதக்கூடாது. குசலவர் என்பது ஒரே பதம் (சொல்) இரண்டு பதம் அல்ல. குசலவன் என்றால் சூதர்'' என்று அர்த்தம். சூதர் என்றால் அரண்மனை கவிராயர்கள்.
5)    இந்தியாவில் ஒவ்வொரு பாஷையிலும் இராமாயணம் உள்ளது. தமிழில், கவிராயன் கம்பன் கி.பி.1000க்குப் பின்பு எழுதப்பட்டது என்பதை கல்வெட்டுகளால் உணரலாம்.
6)    ஜனகன் அரண்மனையில், 8 சக்கரம் உள்ள தேரில் 800 புருஷர் கள் இழுத்து வரப்பட்ட சிவ தனுசை முறித்து சீதையை மணந்தான்.
7)    தசரதனுக்கு செய்ய வேண்டிய கருமாந்திர சடங்குகள் வெகு ஆடம்பரத்துடன் நடத்தப்பட்டன. தசரத மனைவிகள் யாரும் உடன் கட்டை ஏறவில்லை. விசேஷித்த யாகமும், பெரிய விருந்தும் நடந்தது. ஒரு பசுவையும் கன்றுக்குட்டியையும் பலியிட்டார்கள். நெய்யும், மாமிச  மும், கூடி வந்த விருந்தினரெல் லாருக்கும் பரிமாறப்பட்டது.
8)    இராமனின் பாதுகையைப் பெற இராமனிடம் சென்ற பரதன் பரத்வாச முனிவர் (பிரயாகை) ஆசிரமத்தில் தங்கினான். அப்போது அவனுக்கும் படைவீரருக்கும் பரத் வாசர் விருந்து பண்ணினார். விருந்  தில், மானும், மயிலும், பன்றியும், ஆடும், சாராயமும் பரிமாறப்பட்டது. தேவலோக ரம்பை, ஊர்வசி ஆகி யோர் நடன விருந்து அளித்தார்கள். இந்த மந்திர பலத்தால் பரத்வாசர் செய்தார்.
9)    இராமன் தென்கடற்கரையில் சேர்ந்து, இந்து தேசத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறுகடலில் மலைகளும், குன்று களும் போட்டு ஒரு சேது உண் டாக்கி... யாவரும் கடலைத் தாண்டி இலங்கையில் சேர்ந்தார்கள்.
10)    சீதை அக்கினி பிரவேசம் செய்து, யாதொரு சேதமில்லாமல், அக்கினியை கடந்ததினாலும், பிரம்மா முதல் தசரத மகாராசா வரை யாவரும் சீதை கற்புள்ளவள் என்று கூறியதனால், சீதையை இராமன் சேர்த்துக் கொண்டான்.
11)    அயோத்தியாபுரியில் இராமன் அரசதிகாரத்தை ஒப்புக் கொண்டான். (இத்துடன் கால்டுவெல் இராமா யணத்தை முடிக்கிறார். இதில் பட்டாபிஷேகம் என்பது தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்த சொல்).
கால்டுவெல்லின் விமரிசனம்
அ)    பல தேச சரித்திரங்களையும், பல சாஸ்திரங்களையும் வாசித்து ஆராய்ந்த வித்துவான்கள் இராமா யணம் வீண்கதைகளால் நிறைந் திருக்கிறது'' என்று கூறினார்கள். அதில் உள்ள உண்மைகளை வீண் கதைகள் கெடுக்கின்றன.
ஆ)    புத்தியீன வர்ணனையினால் இராமாயணம் கெட்டுப்போயிருக் கிறது. இது கதை கேட்கும் இந்துக்களுக்கும் பிரியமாய் இருந்தது.
இ)    அந்த கால இந்துக்களுக்கு பகுத்தறிவும் விவேகமும் குறைந்து இருந்தது.
ஈ)    யுரோப்பில், சிறு பிள்ளை களுக்கு, பூதங்களை கொல்லும் வீரர்களைப் பற்றிய கதைகள் பிடிக்கும். அவர்களே பெரியவர்கள் ஆனதும் அந்தக் கதைகளை நம்பாது / பிடிக்காது.
உ)    வீணான கதைகளை பேர் பெற்ற கவிராயர் பாட்டுக்களாக எழுதுகிறார்கள். அந்த பாட்டுக் களைப் பாடுவதும், பாடிக் கேட்பதும் புண்ணிய கிரியை எனப் பேதை  சனங்கள் (இந்தியர்கள்) எண்ணு கிறார்கள்.
ஊ)    விவேகம் உள்ளவர்கள் இராமாயணத்தை கூர்ந்து சோதித் தால் பிற்காலத்தில் கட்டப்பட்ட (சேர்க்கப்பட்ட) சங்கதிகளை அறியலாம். ஆரம்பத்தில் சொல்லிய கதைகளைப் பார்த்தால் இராமன் ஒரு வீரனேயல்லாமல் வேறில்லை.
எ)    சீதையிருக்குமிடம் (வேதம் பயின்ற) இராமனுக்கு தெரியாதிருந் தும், அந்த இடத்தை குறித்து அவன் குரங்குகளிடமும் பட்சிகளிடம் விசாரித்து, அதைத் தேடினது தெய்வத்துக்கு ஏற்றவை அல்ல.
ஏ)    சில வித்துவான்கள் எண்ணு கிறபடி சீதை என்பதை வேளாண் மையைக் குறிக்கின்றது. இராவணன் முதலானவர் இராட்சதர் என்றால் ஆரியருடைய பருவப் பலன்களை (Crops) கொள்ளை  அடிப்பவர்; இராமன் என்றால் வேளாண் மையைக் காப்பவர்.
ஐ)    இருக்கு வேதத்தில் 10ஆம் மண்டலத்தில் 57ஆம் சூக்தத்தில் உழவு துவக்கும்போது வேளாண்மை ஆயுதங்களை மற்றும் சீதையை வணங்கினார்கள் என்று கூறப்பட் டுள்ளது.
ஒ)    பலராமன் என்ற மூன்றாவது இராமன், உழவுத்தொழிலை மற்ற ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். இதனால் கலப்பை ஆயுதன் என்று அழைக்கப்பட்டான் (அலாயுதன் என்றால் கலப்பை ஆயுதன் அல்லது ஏதடூ/ கலப்பை உடையவன்)
ஓ)    மேலே உள்ளவைகளால் ருசு செய்யப்பட்டது எனக் கூற இயலாது. ஆனால் விவேகம் உள்ளவர்களின் கருத்து எனக் கூறலாம்.
- -விடுதலை ஞா.ம.26.1.13

.

வால்மீகி கற்பனையில் சீதையின் கற்பும் இராமர் பாலமும் (3)


- பொறியாளர் ப.கோவிந்தராசன் B.E,M.B.A,M.A.
ஔ) இருக்கு வேதகாலத்தில் ரிஷிகள் பஞ்சநாதம் (ஐந்தாறு) ஆகிய பஞ்சாப் தேச அரசர்களுக்குப் புரோகிதர்களாக இருந்தனர். அவர்கள் ரிஷிகள் அரண்மனை வாசம் செய்தனர். அரசர்களுக்கு ரிஷிகள் ஊழியம் செய்தனர். மேலும் ரிஷிகள் பாட்டுக்கள் கட்டினார்கள். மேலும் பாட்டுக்கள் பாடி யாகம் செய்தார்கள். ஆனால் இராமாயணக் காலத்தில் ரிஷிகள் நாட்டை விட்டு தெற்கே சென்று காட்டில் தவம் செய்தனர்; சிலர் தியானம் செய்தனர். இது வேத காலம் மதம் முடிவ டைந்து இதிகாசம் தோன்றியதைக் குறிக்கிறது. பின்னர் புராணக் காலத் தில் புராண மதமாக உருவெடுத்தது. (ஆனால் இந்து மதமாக மாற்றம் அடைந்தது எப்போது என்பதைக் குறித்து தகவல் இல்லை). இந்த ரிஷிகள் விசேஷ காலங்களில் அரண் மனைக்கு வருவார்கள். கால்டுவெல் இறுதியாகச் சொல்வது இராமா யணத்தில் உண்மையும் அபத்தங் களும் கலந்துள்ளன என்பது ஆகும்.
இராமர் பாலம் ஒரு கற்பனைப் பாலம்
இராமாயணத்தில் கதை காலத் துக்கேற்றவாறு மாற்றம் அடைந்தது. மொழிக்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றது. தேசத்துக்கு தேசம் மாற்றம் பெற்றது. இதில் எது உண்மையான கதை என்பது தெரியாது. மக்களின் கலாரசனைக்கு ஏற்ப பாடல்களாக பாடப்பட்டது. மேலும் சமஸ்கிருதம் நாடோடி மொழியில்  இருந்தபோது ஏற்பட்ட கதையாகும். இந்த இராமாயணம் கற்பனையா? உண்மையா? மற்றும் இராமர் பாலம் கற்பனையா? அல்லது உண்மையா? என்பதைக் கண்டறிய கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பெறப்படும் விடைகள் மூலம் அறிந்து கொள்ள லாம்.
1)    இராவணன் மகன் இந்திர ஜித்திடமிருந்து இந்திரனைக் காப்பாற்ற விஷ்ணு பெருமான் மனிதனாக பிறந்தது உண்மையா?
2)    இராமன் குழந்தையாகப் பிறந்தபோது இந்திரஜித்துவின் தந்தை இராவணனுக்கு வயது 50 இருக்குமா?
3)    இராமன் வளர்ந்து, சீதை யுடன் 12 ஆண்டுகள் இல்லறம் நடத்தி 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து இராவணனைக் கொல் வதற்கு 41 ஆண்டுகள்ஆகியது தேவர்களை காப்பாற்ற ஏன் இந்த தாமதம்?
4)    இராமன் காட்டிற்கு சென் றது இராவணனைக் கொல்வதற் காகவா?
5)    இராமன் 14 ஆண்டுகள் காட்டில் வசித்தபோது சிங்கம், புலி, யானை, மலைப்பாம்பு போன்ற இந்திய மிருகங்களை ஏன் சந்திக்கவில்லை? போரிடவில்லை?
6)    சமஸ்கிருதம் பேசும் ஜடாயூ, ஆஞ்சநேயர், ஜாம்பவான், வாலி, நளன் போன்ற வளர்ப்பு மிருகங் களை மட்டும் சந்தித்து, வேதம் பயன்ற இராமன் இலங்கைக்கு வழி கேட்டது ஏன்? இராமன் சென்றது காடா அல்லது படப்பிடிப்பு அரங்க அமைப்பா?
7)    வால்மீகியின் கற்பனை பாலம், சாகரன் என்ற மன்னனால் வெட்டப்பட்ட கடல் பகுதியில் இலங்கை செல்லக் கட்டப்பட்டது. ஆனால் மேலே சொல்லப்பட்ட கடல் கங்கை நதி கடலுடன் கலக்கும் பகுதியில் உள்ளது.
8)    இலங்கை மன்னன் இரா வணனைக் கொல்ல இராமன் அயோத்தியில் பிறந்தது ஏன்?
9)    கி.பி.1600ல் இந்தியா (நாவலந் தீவுக்கு) வந்த கிழக்கு இந்தியா கம்பெனியினர் சிங்களத் தீவுக்கு வைத்த பெயர் சிலோன். சிலோனுக்கு அருகே கடலில் உள்ள மணல் திட்டுகளுக்கு வைத்த பெயர் Adam Bridge இந்த  பெயர்களை இந்திய மக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண் டது ஏன்?
10)    லங்கா என்றால் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதி கோதாவரி முகத்துவாரத்தில். தவளேசுவரத்தி லிருந்து கோபாலபுரம் வழியாக முக்காமலா வரை (தேசிய நெடுஞ் சாலை 5) பல லங்கா நகரங்கள் அமைந்துள்ளன. இவைகளில் ஒன்று இராமன் தேடிய இலங்கையாக ஏன் இருக்கக் கூடாது? (ஸ்ரீ) ரங்கம் மொழி மாற்றம் அடைந்து லங்கா என்றானது.
11)    கங்கா நதியில் பாலம் கட்ட முடியாமல் படகில் சென்ற இராமன் கடலில் 100 யோசனை தூரத்துக்கு பாலம் கட்டினார். இது உண்மையா?
12)    காசியில், அஸிகாட் அருகே, லங்கா ரோடு அருகே கங்கை நதியில் பல லங்காக்கள் (தீவு) உள்ளன என்று படகோட்டி முதல் ஐரோப்பியர் வரை கூறுகிறார்கள். இது உண்மையா?
13)    மத்திய பிரதேசத்தில் கட்னி அருகே, ஒரு மலையில் நின்று இராமனும் இலக்குமணனும் இலங்கையைப் பார்த்தார்கள். இந்த இடம் பந்தவகாட்'' (தம்பிக் கோட்டை) என்று அழைக்கப் படுகிறது. இந்த இடம் மத்திய அரசு தொல்லியல் துறை வசம் உள்ளது. இது மத்திய அரசு இலங்கை எங்கே உள்ளது என்று விளக்குமா?
14)    சிங்களத் தீவுக்கு சிறீலங்கா என்று அரசு பெயரிட்டது 1972ல் தான். எனவே இராமாயணக் காலத்தில் இலங்கை இருந்திருக்குமா? கி.மு.500க்கு முன் சமஸ்கிருதம் இருந்ததா?
15)    பூம்புகாரைக் கடல் கொண் டது. சிந்து சமவெளி தமிழர் நாகரிகம் புதையுண்டது. ஆனால் திரேதாயுகத்தில் 20 லட்சம் ஆண்டு களுக்கு முன் இருந்த அயோத்தியும், இலங்கையும் இன்றும் இருக்கிறதா?
இந்த வினாக்களுக்கு விடை கிடைத்தால் சேது சமுத்திரம் என்ற தமிழர் கனவுத் திட்டம் நிறைவேறும் என்பது திண்ணம்.
- -விடுதலை ஞா.ம.2.2.13