பக்கங்கள்

வெள்ளி, 6 ஜூலை, 2018

இராமாயணம் கதைதான் என்று கூறிவிட்டாராம் தெலுங்கு நடிகர் மகேஷ் காதி மீது சங்-பரிவாரங்கள் பாய்ச்சல்!

அய்தராபாத், ஜூலை 5 ராமர் -- சீதை யைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று கூறி, தெலுங்கு நடிகர் மகேஷ்காதி மீது சங்-பரிவாரங்கள் பாய்ந்துள்ளன. பகுத்தறிவாளரான பாபுகோகினேனி கைது செய்யப் பட்டதையொட்டி, அண்மையில் தொலைக்காட்சி சேனல் விவாதம் ஒன்றை நடத்தியது. இதில், தெலுங்கு திரைப்பட நடிகரும், விமர்சகருமான மகேஷ் காதி கலந்துகொண்டார்.

அவர்பேசுகையில்,என்னைப் பொறுத்தவரை இராமாயணம் வெறும் கதைதான்; அந்த கதை யைப் படிக்கும்போது, ராமர் மிகப் பெரிய மோசடிக்காரர் என்றே எனக்குத் தோன்றியது என்று கூறியதுடன், ராமருடன் திரும்பி வராமல், ராவணனுடனேயே சீதை வாழ்ந்திருந் தால் அவருக்கு நியாயம் கிடைத்திருக்கும்; மேலும் அவ்வாறு வாழ்வதில் என்ன தவறு? என்றும் கேட்டி ருந்தார். மகேஷ் காதியின் இந்த பேச்சுக்காகவே, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாரா ஹில் காவல் நிலையத்தில், பஜ்ரங் தள் அமைப்பினர் தற் போது புகார் அளித்துள்ளனர். இந்துக்களின் மனத்தைப் புண் படுத்தி விட்டார் என்று கூறி, சைதாபாத் காவல் நிலையத்தில் வழக்குரைஞர்ஒருவரும் புகார் அளித்துள்ளார்.ஆனால், தானொரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலேயே சங்-பரிவாரங்கள் தனக்கு எதிராக வழக்குகளைப் போட்டு மிரட்டப் பார்ப்பதாக மகேஷ் காதி தெரி வித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு, 5.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக