பக்கங்கள்

வெள்ளி, 29 ஜூன், 2018

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்':  ஏழாவது சொற்பொழிவாற்றிய தமிழர் தலைவர்

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்':  ஏழாவது சொற்பொழிவாற்றிய தமிழர் தலைவர் இறுதியில் 30 நிமிடம் - கேள்விகளுக்குப் பதிலும் அளித்தார்

19, 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் வெளியான புத்தகங்களை


ஆதாரமாகக் கொண்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் ஆய்வுரை




சென்னை, ஜூன்23 இராமாயணம் - இராமன்--இராம ராஜ்யம் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆய்வு சொற்பொழிவின் ஏழாவது சிறப்புக்கூட்டம் நேற்று (22.6.2018) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் எனும் தலைப்பில், இராமாயணத்தின் அத்துணை புரட்டு களையும் தோலுரித்துக் காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர் சுற்றுப்பயணங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், அறவழிப் போராட்டங்களுக்கு இடையே இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் எனும் தலைப்பில் ஆய்வு சொற்பொழிவுக்கான ஆதாரங்களை அயராது திரட்டி ஆய்வுரையாற்றினார். ஆய்வு தொடரத் தொடர, சொற்பொழிவுக் கூட்டங்களும் தொடர்ந்தன. பார்வையாளர்களும் பெரிதும் ஆவலுடன் ஆய்வு ரையைக் கேட்கத் திரண்டனர்.

அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்


தொடர் சொற்பொழிவுகள்


இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் எனும் தலைப்பில் ஆய்வு சொற்பொழிவை 23.3.2018 அன்று தொடங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார். இராமாயணம் - இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் இரண்டாவது கூட்டம் 27.3.2018 அன்றும், மூன்றாவது கூட்டம் 10.5.2018 அன்றும் நடைபெற்றன. இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவில் கம்பன் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் துணைத் தலைப்பில் நான்காவது கூட்டம் 16.5.2018 அன்றும், அய்ந்தாவது கூட்டம் 21.5.2018 அன்றும், ஆறாவது கூட்டம் 12.6.2018 அன்றும்  நடைபெற்றன.

ஏழாவது சொற்பொழிவு


இராமாயணம்- இராமன்- இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் ஏழாவது சிறப்புக்கூட்டம் நேற்று (22.6.2018) மாலை நடைபெற்றது. முதல் சொற்பொழிவில் தொடங்கி அனைத்துக் கூட்டங்களிலும் அதே உணர்ச்சியுடன், பேரார்வத்துடனும் அறிஞர் பெருமக்கள் பலரும் தொடர்ச்சியாக கலந்து கொண்டனர். தாறுமாறாக வசைபாடுவதற்காக அல்ல இந்தக் கூட்டம். இது ஓர் ஆய்வுக் கூட்டம். இங்கே நாங்கள் பேசுவதில் ஆதாரபூர்வமானது அல்ல என்றால் வழக்கு தொடரலாம் எனும் அறைகூவலுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆய்வுரையைத் தொடங்கினார். ஏழாவது சொற்பொழிவிலும் அந்த அறைகூவலை வலியுறுத்திக் கூறினார். வீதிமன்றங்களில் மக்கள் மன்றங்களில் பதிவு செய்வதைப்போல், நீதிமன்றத்திலும் பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகும் என்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஏழு நாள் ஆய்வு சொற்பொழிவுகளும் அடுக்கடுக்கான ஆதாரங்களை அடிப்படை யாகக் கொண்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டு, 21 ஆம் நூற்றாண்டுகளில் வெளி யான புத்தகங்களை ஆதாரங்களாகக் கொண்டு ஆய்வு சொற்பொழிவாற்றினார் தமிழர் தலைவர்.

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் செயல்களில் சமூக ஊடகங்களில், ஆர்.எஸ்.எஸ்.சினர் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களின் மூலபலத்தை தாக்குவதுதான் நம் அணுகுமுறை. இராமனை வைத்துதான் பார்ப்பனர்கள் பிழைத்து வருகிறார்கள். அன்றைய இராமாயண கால ஆரியர்களின் அட்டூழியங்களுடன் இன்றைய சங்பரிவாரங்களின் கொலைவெறிச் செயல்களையும் ஒப்பிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பட்டியலிட்டார்.

ஆரியம் என்பது மனிதத்தன்மையற்றது. திராவிடம் என்பது மனிதநேயமிக்கது என்பதை ஒப்பிட்டு விளக்கிக் கூறினார் தமிழர் தலைவர்.

கூட்டத்தில் நிறைவுரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூட்டத்தின் முடிவில் பார்வை யாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார்.

கழகத் துணைத் தலைவர்


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இராமாயணம் -இராமன் - இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் எதிரொலியாக ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் இதழில் வெளியான தகவலை எடுத்துக்காட்டி, அல்லாவை, ஏசுவை பேசுவார்களா எனும் அவ்வேட்டின் கேள்விக்குரிய பதிலையும் அளித் தார். எங்களை இழிவுபடுத்துவதைத்தான் முதலில் பேசுகிறோம் என்பதை சுட்டிக்காட்டினார். பார்ப்பன பார்ப்பனிய எதிர்ப்பு என்பது புத்தர்காலத்தில்  தொடங்கிய பிரச்சினையாகும். சமுதாய மாற்றத்துக்கு பாடுபட்ட புத்தர், தந்தை பெரியார், அம்பேத்கர், நாராயணகுரு, மகாத்மா ஜோதி ராவ் புலே உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்தே வந்துள்ளனர். புத்தர் இயக்கத்தின் தொடர்ச்சியே திராவிடர் இயக்கம். இராமாயணம் குறித்து தந்தை பெரியார் கருத்தும், அம்பேத்கர் கருத்தும் ஒன்றாக உள்ளது. இராமன் குறித்தும், இராமாயணம் குறித்தும் புத்தகங்கள் வெளியிட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகளுடன் அந்தப்புரத்தில் ராமன் உல்லாசம் குறித்த வால்மீகியின் கருத்துகளை திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

உண்மைகள் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று நினைப்பவர் தமிழர் தலைவர்தான். திராவிடர் கழகம்தான் என்றார் கழகத் துணைத் தலைவர்.



தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் (சென்னை பெரியார் திடல், 22.6.2018)


நூல் வெளியீடு


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய இந்து மதத்தைப்பற்றி ஏன் பேசுகிறோம்? மகபாரதத்தில் வர்ண (அ)தர்மமும் பெண்ணடிமையும்,  கைவல்ய சாமியார் எழுதிய உண்மை இந்து மதம், பெரியார் பேருரையாளர் அ.இறையன் எழுதிய புரிந்து கொள்வீர் புராணங்களையும்- வேதங்களையும் ஆகிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளி யிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நான்கு நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.120. சிறப்புக் கூட்டத்தில் தள்ளுபடி ரூ.20 போக ரூ.100க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், கவிஞர் கண்மதியன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்டி.வீரபத்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  சூளைமேடு இராமச்சந்திரன், தங்க.தனலட்சுமி, ஆ.வெங்கடேசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், கெடார் மும்மூர்த்தி, ஆதம்பாக்கம் சவரி யப்பன், செங்குட்டுவன், பெரு.இளங்கோ, திராவிட மாணவர் கழகம் தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் வரிசையாக சென்று உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து புத்தகங்களை பெரு மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்கள்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், த.கு.திவாகரன், மண்டல செயலாளர் தே.சே.கோபால் உள்பட ஏராளமானவர்கள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

-  விடுதலை நாளேடு, 23.6.18

1 கருத்து:

  1. Almost all slot video games can be found in free mode, so have the ability to|you probably can} try out the different types of|several 카지노 types of|various varieties of} slot machines and discover the right fit for you. You can try out the various choices and settings, regulate the coin value, and change the number of bet traces to completely put together your self to play confidently with real cash. Slots are purely video games of likelihood, due to this fact, the essential concept of spinning the reels to match up the symbols and win is similar with online slots. This concept is actually equivalent to those slot machines at land-based casinos. The key difference between online slots( a.k.a video slots) is that the variation of video games, the symbols might be wider and more vivid with more reels and paylines. Therefore, your chances of getting a successful mixture increase.

    பதிலளிநீக்கு