பக்கங்கள்

வியாழன், 9 மார்ச், 2023

இராமாயணத்தைப் பற்றி அறிஞர்கள் கருத்து என்ன?

 பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்கள் திறக்குமா?

இராமாயணத்தைப் பற்றி  அறிஞர்கள் கருத்து என்ன?

(வேதம், இராமாயணம் முதலியவற்றைப் பற்றி கருத்தரங்கை நடத்திட ஆணை பிறப்பித்திருக் கிறது யூசிஜி - இவற்றின் யோக்கியதை என்ன? இதோ!)

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர் களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும், பேரறிஞர் களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.

“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

(ரோமேஷ் சந்திர தத்தர் C .I.E.,I.C .S., எழுதிய ‘புராதன இந்தியா’ 52 ஆவது பக்கம்)

“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.

(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் M.A., யின்  ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’ 22 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள்மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.”

(பி.சிதம்பரம்பிள்ளை எழுதிய, ‘திராவிடரும் ஆரியரும்’  24 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பா ருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களையே குறிப்ப தாகும்.”

(ரோமேஷ் சந்திர தத்தர் எழுதிய, ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ 139 - 141 ஆவது பக்கம்)

“தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

(‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்’ ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கம்)

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமி ருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவ தற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”

“தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடி மக்க ளுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.”

(1922 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்  ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில்) 

பகைமைக்குக் காரணம்

ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும். தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.”

(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 62 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால், ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராட்ட மாகும்.”

(ராதாகுமுத முக்கர்ஜி எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்)

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியாளர்களால் பேசப்படும் பாஷை”

(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது)

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதா ருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன”

(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் -3 பக்கம் 10)

“தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள், ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தார்களானதால்”

(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியாவும் இந்தியக் கலையும்’  என்ற புத்தகத்தில் 3 ஆவது பக்கம்)

“இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.”

(பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’என்னும் புத்தகத்தில் 10 ஆவது பக்கம்)

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமி ருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”

(ஜோஷிட சந்தர் டட் எழுதிய ‘இந்தியா அன்றும், இன்றும்’ என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

அசுரர்கள் யார்?

“ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.”

“இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது.”

(ஏ.சி.தாஸ், M.A.B.L., எழுதிய ‘ரிக் வேதகாலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்)

“ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

(  C.S.சீனிவாசாச்சாரி, M.A.,M.S., ராமசாமி அய்யங்கார் வி.கி., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்)

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்குத் தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர் களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண் டார்கள்.”

(H.G. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்)

“ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரியர் சம்பந்தப்பட்ட வர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

(New Age Encyolopaedia ‘நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா’ Vol. II  (1925) பக்கம் 273)

இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே

“இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

“மகாபாரதம், கங்கைநதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம், தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.”

(முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி தங்கள் இஷ்டம்போல், எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்தி கட்டுக் கதைகளை எழுதி வைத்துக்கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவை களாகும்.”

(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர்  1865 இல் எழுதிய ‘விரிவான இந்திய சரித்திர முதற் பாகம்’என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

“விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”

(இ.பி. ஹரவெல் 1918 இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்)

“பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென் னிந்தியாவை - திராவிட நாட்டைப்பற்றியேயாகும்.”

(G.H.  ராபின்சன்,  C.I.E.  - யால் எழுதப்பட்ட ‘இந்தியா’ என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்)

வட இந்திய திராவிடக் கலை

“வட இந்தியாவில் இருந்த திராவிடக்கலை, நாகரி கம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப் பட்டுவிட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை.”

(தமிழ்ப் பேராசிரியர் K.N.  சிவராஜபிள்ளை B.A., எழுதிய ‘பண்டைத் தமிழர்களின் வரலாறு’  என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்)

“பாரதத்தில் இடும்பி என்ற ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப்பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”

(நாகேந்திரகோஷ் B.A.B.L.,  எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்’ என்ற புத்தகத்தின்  194 ஆவது பக்கத்தில் உள்ளது)

“இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.”

(ஹென்றி ஸ்மித்வில்லியம் எல்.எல்.டி எழுதிய ‘சரித்திரக்காரர்களின்  உலக சரித்திரம்’ வால்யூம் 2 இல்,  பக்கம் 521)

“இந்தியாவில் தென்பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.”

(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்ட் எழுதிய  ‘இந்திய சரித்திரம்’ 14 ஆவது பக்கம்)

“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று, யாகம் செய்யும் வழக்கம் இருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்”

(‘இம்பீரியல் இந்தியன் கெஜட்’ 1909ஆம் வருடத்திய பதிப்பு, வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்)

ஆரியரல்லாதார் பட்டபாடு

“ஆரியரல்லாத இந்த நாட்டுப் பழங்குடிமக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும், ஆரியர்களும் ஆரியப் புரோகிதர் களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார் களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள் தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.”

(சர் வில்லியம் வில்சன்ஹண்டர் K.C.S.I.,C.I.E.,M.A.,   ஆக்ஸன்  L.L.D. எழுதிய ‘இந்திய மக்களின் சரித்திரம்’  என்னும் நூலின் 41 ஆவது பக்கம்)

“இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன் மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.

(பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட ‘மலபார் குவாட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகம்)

“நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை; ஒன்றையும் நம்புவ தில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக”

(“ரிக் வேதம்” அதிகாரம் 10, சுலோகம் 22-8)

“ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடு வதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதா ரங்கள் இருக்கின்றன.”

(ராகோசின் எழுதிய ‘வேதகால இந்தியா’ என்னும் புத்தகம்)

“இந்திய அய்ரோப்பியர்களால் அதாவது, ஆரியர் களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திரா விடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக் கின்றது.”

(பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர் கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்ளைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலிய வைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.”

(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், G.C.M.G.K.C.E.,    1931 இல் எழுதிய ‘இந்தியாவில் அன்னியர்கள்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)

“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பவேயில்லை. “பஞ்சதந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.”

(பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள “டிஸ்கவரி  ஆஃப் இந்தியா” (Discoverey of india) பக்கம் 76 -77)

“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 82)

“ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசி யலாலும் மாறுபட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற் கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஆரியர் களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.”

(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 62)

“இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.”

(திரு. நீலகண்ட சாஸ்திரி)

“இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப் படையாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப்படையெடுப்பாளர் களுக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர, வேறல்ல.”

(சர்ஃபிரோஸ்கான்நூன், (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய “இந்தியா” என்ற புத்தகத்தில் பக்கம் 8)

“இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு ஜாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, ஜாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கிவைத்து, அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.”

(மறைமலையடிகள் “அறிவுரைக்கொத்து”)

“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்”

(மறைமலையடிகள் “வேளாளர் நாகரிகம்” பக்கம் 61)

“ஆரியர் வழிவந்த பார்ப்பனர்கள், “கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார்” என்று பொய் யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டனர்.”

(மறைமலையடிகள் “கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” பக்கம் 32 - 34)

“இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசுரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரைக் குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை “தேவர்கள்” என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.”

(திரு.ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளை “இராமாயண உள்ளுறைப் பொருள்” என்ற நூலின் முன்னுரையில்)

“மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ (allegory)   சரித் திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்”

(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் பக்கம் 34)

“புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதிகூலராயு மிருந்த திராவிடர் பெருஞ்சாதி வகுப் பினரை ஆரியக்கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும், இழித்துக் கூறியது அவர்களுக்குரிய ஜாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி, மற்றொன்றையும் குறிப்பதன்று.”

(வெ.ப.சுப்ரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய “இராமாயண  உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்” பக்கம் 19)

“இராமாயணம் கட்டுக்கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலைசிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாக வும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்த தைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.”

(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய  ‘இராவணப் பெரியார்’ பக்கம் 78)

“மகாபாரதத்தில் இருப்பதுபோலவே, இராமாயணத் திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண் டிலும் சரித்திரம் சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.”

(ஆர்.சி.தத், ‘பழைய இந்து நாகரிகம்’ பக்கம் 138)

“அண்ணனைக் காட்டிக்கொடுத்துவிட்டுப் பட்டத் தைப்பெறும் தம்பியைப் பக்தன் என்று சொல்ல முடியுமா? பத்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோ தரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.

“விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே, தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத்துரோகிகள் ஆகி விட்டார்கள்.”

(வ.ரா. எழுதிய “கோதைத் தீவு” பக்கம் 24, 25)

“புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல; இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாக. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே”

(திரு. முன்ஷி எழுதிய ‘இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும்’ பக்கம் 8)

இந்தப் புராண இதிகாச குப்பைகளை, கற்பனைப் படைப்புகளைப் பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்கிறது யூசிஜி - வெட்கக்கேடு அல்லவா?

சனி, 26 நவம்பர், 2022

இராமாயணம்-10.06.1934- குடிஅரசிலிருந்து...


10.06.1934-  குடிஅரசிலிருந்து...

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.

இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்த தற்காகத்தானே கொல்லப் பட்டிருக்கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்?  யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப் பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்கு மானால் நாம் தாடகை யைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டது மல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்து விட்டார் என்றும் மிருகங்களையும், பட்சி களையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொருத்தமற்றதும் போக்கிரித் தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.

இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர் களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சும ணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட் டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்க வில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அக்கதையில், மிருகங்களையும் ஜீவர் களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விடயங்களிலும், சூது வாது செய்த விஷயங்களிலும், பெண் களை இழிவாய் நடத்திக் கொடுமைப் படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல் லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள்.

அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சுமணர்கள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்து விட்டார்கள்.  திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சத னாம்; ஒருவன் (விபிஷணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் மூக்கையும் முலை யையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்ட படி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதி லிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராம ணர்கள் ஆகிய வர்களின் யோக்கியதை களை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.

செவ்வாய், 26 ஜூலை, 2022

தசரத மகாராஜாவின் தர்பார்!

   May 27, 2022 • Viduthalai

13.11.1948 - குடிஅரசிலிருந்து... 

ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப்பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்குபவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?

எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.

இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடையஇந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.



வியாழன், 19 மே, 2022

இராமன் 'கடவுள்' அவதாரமா? பேரறிஞர் அம்பேத்கரின் கருத்து

 

இராமனிடம் இருந்த உயர் நெறிகள் தான் அவனைக் 'கடவுள்அவதாரமாக்கியதுஆனால் இராமன் 'கடவுள்ஆகும் தகுதிப் படைத்தவனா என்பது கேள்விக்குறியாகும். 'கடவுளாக'  அவனைக் கருதி வழிப்படுகிறவர்கள் கீழ்க்கண்ட உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும்இராமனின் பிறப்பு வியப்புக்குரியதுவெளிப்படையான உண்மையை மறைப்பதற்காக  அவன் ‘ஷருங்Õ என்ற ஒரு முனிவர் உருவாக்கிய பிண்டத்திலிருந்து பிறந்தான் எனச் சொல்வதுண்டுகணவன் மனைவியாக வாழா விட்டாலும் முனிவர் ஷருங்குக்கும்கவுசல்யைக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் இராமன்தோற்றத்தில் இந்தப் பிறப்பு மானக்கேடான தன்மையாக இருப் பினும்உறுதியாக இது இயற்கைக்குப் புறம்பானது.

இராமனின் பிறப்பு தொடர்புடைய நிகழ்வுகள் விரும்பத்தகாப் பண்புகளைக் கொண்டதாக இருந் தாலும்அவற்றை மறுப்பது கடினமானதுஇராமனு டைய பிறப்பு இவ்வாறாகப் பொதுவாக ஒழுக்கக் கேடானதாகக் கருதாவிட்டாலும் இராமனுக்குத் துணையாகயிருப்பதற்காக உருவாக்கப்பட்டவர்களின் பிறப்பு ஒழுங்கீனமானதே.

இராமன் ஒரு மனைவியோடு வாழ்ந்த நெறி யாளன் எனச் சொல்லப்படுவதுண்டுஎப்படி இது பொதுவான கருத்தியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதுஉண்மையில் இதற்கு அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லைவால்மீகி கூட இராமனுக்குப் பல மனைவிகள் உண்டு என்கிறார்இவர்களைத் தவிரப் பல வைப்பாட்டிகளும் உண்டுஇவ்வகையில் இராம னுக்குப் பெயரளவிற்குத் தந்தையான தசரதனுக்கு உண்மையில் மூன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் உண்டு”.

(It is because of his virtues that Rama has come to be deified. But is Rama a worthy personality of deification. Let those who accept him an object worthy of worship as a God consider the following facts.

Rama's birth is miraculous and it may be that the suggestion that he was born from a pinda prepared by the sage Shrung is an allegorical glass to cover the naked truth that he was begotten upon Kausalya by the Sage Shrung although the two did not stand in the relationship of husband and wife.

In any case, his birth if not disreputable in its origin is certainly unnatural. There are other incidents connected with the birth of Rama the unsavory character of which it will be difficult to deny....              

Rama's birth is thus accompanied by general debauchery if not in his case in the case of his associates.  ....                        

One of the virtues ascribed to Rama is that he was monogamous.

It is difficult to understand how such a notion could have become common.

For it has no foundation in fact.

Even Valmiki refers to the many wives of Rama.

These were of course in addition to his many concubines.

In this, he was the true son of his nominal father Dasaratha who had not only the three wives referred to above but many others."-

(Riddles in Hinduism - Babasaheb Ambedkar Writings and Speeches - Volume 4-  pages-324-335.)

இராமன் மது அருந்துவாரா?

"ராமன் அந்தப்புரத்தில் இருக்கும் போது எவ் வகையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதையும் வால்மீகி விளக்கமாகச் சுட்டியுள்ளார்.

அசோக‌ வனத்திலிருந்த பூங்காவில் தான் அந்தப் புரம் அமைந்திருந்ததுஅங்கு தான் இராமன் உணவு உண்பார்இராமன்  சுவைத்து  உண்ட அனைத்து வகை உணவுப் பொருட்களையும் வால்மீகி குறிப் பிட்டுள்ளார்மதுமாமிசம்பழங்கள் இவற்றில் அடங்கும்இராமன் மது அருந்தாதவர் அல்லஇராமன் அதிக அளவில் மது அருந்துவார்சீதையும் மது அருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பார்மதுக் குடிக்கும் களியாட்டத்தில் சீதையும் இணைந்து இருப்பார் என வால்மீகி பதிவிட்டுள்ளார்.

அப்ஸரஸ்உரகாகின்னரி போன்ற அழகிகளும் ஆடல்பாடல்களில் ஈடுபடுவார்கள்பல பகுதிகளி லிருந்து கொண்டு வரப்பட்ட அழகான பெண்களும் இதில் அடங்குவர்குடியாட்டம் போடும் பெண்கள் நடுவில் இராமன் உட்கார்ந்து இருப்பார்அவர்கள் மகிழ்விப்பார்கள்இராமன் அந்தப் பெண்களுக்கு மாலை சூட்டுவார்பெண்களின் இளவரசர் இராமன் என வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல.

இது தான் ராமனின் வாழ்க்கை முறை.

" Valmiki also gives a detailed  description how  Rama spent his life in Zenana.

This Zenana was housed in a park called Ashoka Vana.

There Rama used to take his meal.

The food according to Valmiki consisted of all kinds of delicious viands.

They included flesh and fruits and liquor.

Rama was not a teetotaller .

He drank liquor copiously and Valmiki records that Rama saw to  it that Sita joined with him in his drinking bouts....

There were Apsaras,Uraga and Kinnari accomplished in dancing and singing.

There were other beautiful women brought from different parts.

Rama sat in the midst of these women drinking and dancing.

They pleased Rama and Rama garlanded them.

Valmiki calls Rama as Prince  among women's men.

This is not a day's affairs.

It was a regular  course of his life."

(Riddles in Hinduism- Dr.Babasheb Ambedkar Writings and Speeches- volume- 4- page 331-)

இவ்வாறு 'கடவுள்அவதாரமாக சங்கிகளால் திணிக்கப்படும் இராமன் பற்றிய உண்மைகளை அண்ணல் அம்பேத்கர் அடுக்கடுக்கான ஆதாரங் களை முன் வைத்து  இந்து மதத்தின் புதிர்கள்’; என்ற நூலில் ‘இராமனின் ஒழுக்கக் கேடுகளைப் பட்டிய லிட்டு அம்பலப்படுத்துகிறார்.

ஜாதியத்தை வீழ்த்தி சனாதனத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தியவர் பேரறிஞர் அம்பேத்கர்.

இமாலய புராணப் பொய்களைகட்டியமைக்கப் பட்ட மதவாத சதி  கிடங்கைத் தனது அறிவால்ஆற்றலால்ஆளுமையால் வெடித்துச் சிதற வைத் தவர் அண்ணல் அம்பேத்கர்.

இராமனைப் புனிதனாக்கிப் பொய்யையே மூலதனமாக்கி ஏமாற்று அரசியல் செய்ய வந்த கூட்டம் கூறும் வடிகட்டிய பொய்களை நூலாக வடித்து வடக்கு வாலாட்டுகிறதுஇதற்குத் துணை போவது - தமிழ் மண் போற்றும் மதச்சார்பற்ற மானுட நெறிகளுக்கு எதிரானதுஅண்ணல் அம்பேத்கர் போற்றிய கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு உச்ச நட்சத்திர நடிகரை உடல் நலம் சரியில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறியும் சனாதன சங்கிகள் அவரைப் படுத்தியப்பாட்டை நாடே அறியும்கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின்  சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

"யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே,  அட

அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே

இப்போ

பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்

பேதம் தெரியல்லே

மூடருக்கும் மனிதர் போல

முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷமெல்லாம்

நிறைந்திருக்கும்டா

காலம் மாறும் வேஷம் கலையும்

உண்மை வெல்லுமடா"

என்ன மிரட்டலோஎன்ன பயமோ!

ஆட்சி மாறினால் உண்மை தெரியும்.

சர்வாதிகார ஆட்சிகள் சாய்ந்தது தானே அரசியல் வரலாறு.

வியாழன், 30 டிசம்பர், 2021

இராமாயணத்தைக் கொளுத்தவ தாக நேருவிடம் புகார்

இராமாயணம்!

நான் பார்ப்பானைத் திட்டுவதாக,  இராமனைக் கொளுத்துவதாக,  இராமாயணத்தைத் திட்டுவதாக, பார்ப்பனர்கள் போய்  நேருவிடம் முறையிட்டார்கள். அப்போது அவர் சொன்னார்,  "எனக்கே இராமாயணம் படிக்கும் போது கோபத்தால் இரத்தம் கொதிக்கிறதே, அவர்களுக்கு எப்படி  இருக்கும்?",  என்றார்.

(பெரியார், விடுதலை - 03.10.1957)

சனி, 28 மார்ச், 2020

துளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

துளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந் திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமக்கு கடவுள் என்று கூறுவதுதான் ராமாயணத்தின் நோக்கம்.

புத்தம் வளர்ந்த காலத்தில் பார்ப்பனஆரியம் வீழ்ந்து போனது. அப்போது பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்துவ தற்காக பார்ப்பனர்களால் முன்னிறுத்தப்பட்டவன் ராமன்.
பிராமணர்களுக்குத் தொண்டு செய்வதுதான் இராமராஜ்யம்.

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

‘கரிய நிறம் கொண்ட திருமாலைவிடவும், நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும்,  பஞ்சபூதங்களை விட வும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான். இதைத் திட்டமிட்டு வடக் கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.

ராமனை பேசுகிறாரே என்று அப்போது பலர் நினைத் திருக்கலாம். பெரியார் தொலைநோக்கு இன்றைக்கும் அது தேவைப்படுகிறது. மொழியை வைத்து அல்ல. இதில் தத்துவம்தான் முக்கியம். ஆரியம் என்பது வருணாசிரமம். திராவிடம் என்றால் ஒன்றே குலம் என்பதுதான்.

-தமிழர் தலைவர் கி.வீரமணி
( இராமாயணம் - இராமன் - ராம ராஜ்யம் என்கிற தலைப்பில் ஆற்றிய ஆய்வுரையில்)
- விடுதலை நாளேடு, 28.3.18

திங்கள், 9 மார்ச், 2020

இராமனின் உணவுப் பழக்கம்– இராமன் புலால் விரும்பியே!


இராமனின் உணவு முறைகள் வால்மீகி காட்டிய உண்மைகள்

முத்து.செல்வன், பெங்களூரு

முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் கண்டுள்ள செய்திகள் இராமாயணம் குறித்து, தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், பெரியாரியலாரும், உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூல்களும் வெளிப்படுத்தியவையே என்றாலும் இந்தியாவில் “ச்சேய்! சீராம்!” என்னும் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வெறியாட்டங்கள் மிகுந்து வருவதால் மக்கள் உண்மை உணர வேண்டும் என்னும் நோக்கில் வெளியிடப் படுகிறது. மேலும் புலால் உணவு உண்போர்க்கு விலங்கு குணம்தான் அமைiயும் என்று ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர் அரிதின் ஆய்ந்து கூறியுள்ளார். - மு.செ

உணவு முறை என்பது அவ்வக்காலச் சமூக அமைப்பில் மாந்தனுக்குத் தேவையாக அமைந்த ஒன்று.. வேட்டைச் சமூகத்தில் பச்சையாக விலங்குகளின் புலாலை உண்டு வந்தவன் பிறகு படிப்படியாகச் சமைத்த உனவுக்கு மாறியதும் அதந்தக் காலங்களில் இருந்து பெற்ற படிப்பினையால்தான். வேட்டை, மேய்ச்சல், வேளாண்மை, வணிகம் என்று மாறிவந்த சூழ்நிலக்கட்கு ஏற்ப்ப் பழக்க வழக்கங்களும் சமூக உறவுகளும் மாறி வந்திருக்கின்றன. தமிழ் மண்ணில் நிலப்பாகுபாடுகளுக்கேற்ப உணவு முறைகள் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஊன் உணவு தமிழரிடையே பரவலாக இருந்ததையும் அறிய முடிகிறது.

அந்த வகையில்  வேதக் காலம் புலால் உணவு பரவலாக இருந்த காலம் ஆகும். இந்த நாட்டு துறவிகள் (இருடிகள்) புலால் உணவை உட்கொண்டதை வேத நூல்கள் மூலம் அறியலாம். ஆனால் காலப்போக்கில் புலால் மறுத்தல் வட பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. இன்றுள்ள புலால் மறுப்பாளர்கள் இந்த உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள். குறிப்பாக, இராமன், இலக்குவன், சீதை ஊனுணவை உண்டவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அந்தக் கருத்துத் தவறு என்பதை எடுத்துக் காட்டிடும் வகையில், வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டி அதனை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இராமாயணக் கதையின்படி அரசக் குலத்தவர் சத்திரியர். அப்படித்தான் மனுநீதி கூறுகிறது. எனவே இராமனோ அவனைச் சேர்ந்தோரோ புலால் உண்ட்தைத் தவறாக்க் காட்டுவது நம் நோக்கம்ன்று. மாறாக மக்கள் மனதில் உள்ள மயக்கத்தை போக்கவே இந்தக் கட்டுரை.

1. அயோத்தியா காண்டம் சர்கம் 52…87.88, 89
இராமனும் சீதையும் இலக்குவனும் காட்டு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிச் செல்லும்போது வழியில் குகன் இருப்பிடம் செல்கின்றனர், குகனிடம் விடை பெற்றுக் கங்கையைக் கடக்கும் போது சீதை, கங்கையை நோக்கி, ” கங்கா தேவி! எங்களைக் காப்பாற்றும். இராமன் காட்டு வாழ்க்கை முடித்து, நலமுடன் ஆட்சியமைக்கத் திரும்பும்போது, உன்னை மகிழ்விக்கும் வகையில் நான் பார்ப்பனர்களுக்கு ஒரு லட்சம் பசுக்களையும் துணிமணிகளையும் உணவுப் பொருட்களையும் அளிப்பேன்’ என்று கூறினாள்..

”அயோத்திக்குத் திரும்பிய உடன், ஆயிரம் மதுக் குடங்களுடனும் பல வகையான புலால் உணவு களுடனும் சமைத்த சோறுடனும் உன்னை முறைப்படி வணங்குவேன்” eன்றும் கூறினாள்.

· இதனால் மதுவும் புலாலும் அன்றைய உணவு முறைகள் என்பது தெளிவாகிறது.

2. அயோத்தியா காண்டம் சர்கம்55:19,20
கங்கையைக் கடந்து அக்கரையில் மேற்கொண்டு செல்லும் வழியில், மட்ச நாட்டுக்கு வந்தார்கள். அங்கே மான் இனத்தில் சிறந்தவையான, வர்சா, இரிசியா,பிரிசதம்,, மகாருரு என்றழைக்கப்படும் மான் வகைகளைக் கொன்று, அவ்ற்றின் சுவையான பகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள்.
· இராமனும் இலக்குவனும் சீதையும் அரிய வகை மான்களைக் கொன்று சமைத்து உணவாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.

3. பரதனை வரவேற்ற குகன்: சர்கம்84
காட்டுக்குச் சென்ற இராமன் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதற்காக பரதன் அவனை நாடிச் செல்கிறான். வழியில் அவனும் குகன் இருப்பிடத்தை அடைகிறான். அப்போது குகன் வந்திருந்தோர்க்கு உணவுப் பொருள்களை அளிக்கும்போது,
“என் குலத்தவர் திரட்டிய கிழங்கு வகைகளும் பழ வகைகளும் உள்ளன. அத்துடன், புதியதும் உலர வைக்கப்பட்டதுமான விலங்கு இறைச்சிகளும் காட்டு விளைபொருள்களும் உள்ளன.” எம்று கூறுகிறான்,
· அயோத்தியிலிருந்து வந்த பரதனும் அவனுடன் வந்த படையினரும் உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்துக் குகன் படைத்துள்ளான். புதிய மற்றும் உலர வைக்கப்பட்ட புலால் வகைகளை(maamsamcha) அளித்து பரதனையும் அவனுடன் வந்தோரையும் மகிழ்வித்துள்ளான் குகன்.

4. அயோத்தியா காண்டம் சர்கம்91
காட்டு வாழ்க்கையை மேற்கொண்ட இராமன் அயோத்தியாவிற்கு மீண்டும் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்கு வந்த பரதனும் படைஞரும் குகனின் விருந்தோம்பலில் திளைத்து மேற்கொண்டு செல்லும்போது பரத்துவாச முனிவனின் பாழியை(ஆசிரமத்தை) அடைகின்றனர். அவர்களை வரவேற்று விருந்தோம்பிய பரத்துவாச முனிவன் வரவேற்பின் இறுதியில் வழங்கப்பட்ட உணவுகள் உங்களை மலைக்கச் செய்யும் என்பது திண்ணம்..

ஆட்டுக்கறி உணவுகள்(aajaishchaapi), பன்றிக்கறி உணவுகள் (vaarahaishcha), சுவை மிகுந்த சாறுகள், வாசம் மிகுந்த சதைப்பற்றுள்ள பழங்களைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவுகள், பல பாத்திரங்களில் கிடைத்தற்கரிய விலங்குகளின் புலால் உணவுகள் அவர்களுக்குப் படைக்கப்பட்டன.

· ஊன் உணவிலும் எப்படியெல்லாம் வகை வகையான விலங்குகளின் ஊனைச் சமைத்துத் தின்றிருக்கிறார்கள் என்பதை வால்மீகி கூறியுள்ளார்.

## பரத்துவாசரின் பாழிக்கு இராமன் வந்த போதும் அவன் இந்த உணவுவகைகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

பரத்துவாசர் இராமனுக்கு ஒரு பசு, மதுபர்கா, கழுவுவதற்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொடுத்தார். இவற்றுள் ‘மதுபர்கா’ என்பதற்கு, ‘தயிரும் தேனும் கலந்த கலவை’ என்றே பல உரையாசிரியர்கள் கூறியிருக்கிறார்கL. ஆனால் வி.ஆர் நார்ளா . “அதற்கு அந்தப் பொருள் இல்லை….”என்று கூறிக் கீழ்க்காணும் விளக்கத்தை அளிக்கிறார். அதாவது மதுபர்கா பசு ஊன் கலந்த உணவு என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார். புலால் இல்லாமல் மதுபர்கா இல்லையென. ஆஷ்வால்யா கிரியா சூத்திரம் கூறுகிறது(33 ஆவது சூக்த்த்தின் 24 ஆவது பத்தி, முதல் அத்தியாயம்); புலால் இல்லாமல் அர்கியா இல்லையென, பராசர கிரியா சூத்திரம் கூறுகிறது( 29 ஆவது சூத்திரம், 3ஆவது பத்தி,, முதல் காண்டம்); பசுவின் ஊனிலிருந்து உருவாக்கப்பட்ட மதுபர்கா கொடுப்பதுதான் விருந்தினரைச் சரியான முறையில் கவனிப்பதாகும் என இரணியா கவுசிகா சூத்திரமும் ஆபஸ்தம்ப கிரியா சூத்திரமும் கூறுகின்றன என்று விளக்குகிறார். மேலும் அவர் கூறுகையில், “விருந்தினர் பசுவைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் மட்டுமே வேறு விலங்குகளை வைத்துச் சமைக்கப்பட்ட உணவைப் படைப்பர். வேதங்கள் மற்றும் தர்ம ச்ம்ருதிகளின்படி நமது நாட்டில் அசைவ உணவுப் பழக்கம் பசு ஊன் உண்பது முதற்கொண்டு எல்லாவித இன மக்களுக்கும் பொதுவானதுஎன்பது தெளிவாகிறது” என்று விளக்கியுள்ளார்.

(நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),

நார்ளா அவர்களைப் பற்றி ஆசிரியர் திரு கி.வீரமணி அவர்கள் “நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய . The Truth about Gita எனற நூல்தான் “கீதையின் மறுபக்கம்’ என்று நான் ’எழுதுவதற்கு அடித்தளமாக இருந்த்து” என்று இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

5. சித்திரக்கூடம் பர்ணசாலை மான்கறி - சர்கம்56
இரரமனும் இலக்குவனும் சீதையும் காட்டு வாழ்க்கையின் போது இடம் மாறியவண்ணம் இருந்துள்ளனர். அவ்வாறு செல்கையில் சித்திரக்கூடம் பகுதிக்கு வருகின்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்காகக் குடில் ஒன்றை அமைக்கிறார்கள். அந்த்க் குடிலுக்குள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் நடந்ததை வால்மீகி விரிவாகக் கூறுகிறார்:
( இராமன் நிகழ்த்திய “கிருஹப் பிரவேசம்)

“ஓ! இலக்குமணா! உடனே ஒரு மானின் கறியைக் (aiNeyam maamsam) கொண்டுவா. குடிலுக்குல் செல்லுவதற்கு முன்பு தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய வேண்டும். அவை நீண்ட நாள் உயிர் வாழ விரும்புவோர் செய்வன. (1.56.22)
”ஒ! நீள்விழி படைத்த இலக்குமணா! விரைந்து மானைக் கொன்று இங்குக் கொண்டு வா. வேதங்களில் கூறியுள்ளபடி நாம் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும். சடங்குகளின் உள்ளபுனிதமானவற்றை நினைவில் கொள்.” (1.56.23)

பகைவரை வெல்லுந்திறன் படைத்த இலக்குவன் தன் அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினான். (24)

(மானைக் கொன்று கொண்டுவந்த) இலக்குவனிடம் இராமன்,” தம்பி! இந்த மானின் புலாலை வேக வை. இந்தக் குடிலை வணங்குவோம். இந்த நாளும் இந்த நேரமும் மிகவும்பொருத்தமானவை என்பதால் வேலைகளைகளை விரைந்து முடி” என்றான்.(25)

சுமித்திரையின் மகனும் வலிமை வாய்ந்தவனுமான இலக்குவன் அந்தக் கருப்பு மானைத் தீயில் வறுத்து எடுத்தான்.(26)

ஊனில் உள்ள குருதியெல்லாம் வற்றும அளவிற்கு மானூன் வறுபட்டவுடன் தன் அண்ணனிடம் (27)

”இந்தக் கருப்பு மான் நான்கு கால்களுடனும் முழுமையாக என்னால் நன்றாகச் சமைக்கப்பட்டுவிட்டது. கடவுளை ஒத்த இராமா! நீயே வழிபாட்டு முறைகளை அறிந்தவன் என்பதால் உரிய வழிபாட்டை நிகழ்த்திடுவீர்” என்றான். (28)

அவ்வாறே உரிய வழிபாடுகளைச் சிறப்புற நிகழ்த்திய பின் மூவரும் குடிலுக்குள் சென்று மகிழ்ந்திருந்தனர்.(29)

· ”ச்சேய் சீராம்!” என்று முழங்குபவர்கள் வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி கூறியுள்ளது போலப் புதுமனை புகுவிழா நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் உண்மையான இராம பக்தர்கள் அதை விடுத்து ராம நவமியன்று இறைச்சி விற்பனையகங்களை மூட வேண்டும் என்று கூறுகிறார்களே! இவர்களுடைய இராம பக்தி அவ்வளவுதானா?

ஆனல் ஒன்று. கருப்பு மான் ; kR^iSNaH mR^igo = black antelope வேட்டை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு ஏதாவது மான் வகையைக் கொண்டு இந்துத்துவ இராம பக்த வெறியர்கள் “கிருகப் பிரவேசத்தை” நடத்தலாம்.

6. மந்தாகினி ஆற்றங்கரையில் … அயோத்தியா காண்டம் 96.1,2
மந்தாகினி ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது அதன் சிறப்புகளைத் தன் மனைவி சீதை மகிழும்படி எடுத்துக் கூறிய இராமனும் சீதையும் மலையடிவாரத்தில் பசியாற அமர்கின்றனர். அப்போது இராமன் சீதையிடம், உண்ணுதற்குச் சமைக்கப்பட்டிருந்த ஊன் உணவில் ஒரு தசைத் துண்டத்தை எடுத்துக் காட்டி, “இந்து ஊன் புதியதாக நெருப்பில் வாட்டிச் சமைக்கப்பட்ட சுவை மிக்கஉணவு வகையாகும் “ என்று கூறினான்.

· காட்டு வாழ்க்கையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைக் கொன்று சமைத்து இன்புற்று இருந்திருக்கின்றனர்,

7. ஆரண்ய காண்டம் சரகம் 47
இராமன் காட்டுக்குள சென்றிருந்த போது அவனது குரலில் மாரீசன் குரல் எழுப்ப(வால்மீகி கூறியது) அவனைத் தேடி அழைத்துவர இலக்குவனைச் சீதை ஏவிவிட்ட நேரத்தில் இராவணன் சீதை இருந்த குடிலுக்குப் பிராமணன் வடிவில் வந்த்தாகவும், இராவணனைப் பிராமணனாகக் கருதிச் சீதை கீழ் வருமாறு கூறியதாக வால்மீகி கூருகிறார்.

”தாங்கள் இந்த இடத்தைத் தங்குமிடமாகக் கருதி ஓய்வாக இருக்கலாம். காட்டுக்குள் வேட்டையாடச் சென்றுள்ள என் கணவர் விரைவில் காட்டு விளைபொருள்களுடன் கருப்பு வரிகளையுடைய மான்(ruruun = stag with black stripes). கீரிகள் (godhaan) , காட்டுப்பன்றிகள் varaahaan ca ) ஆகியவற்றின் இறைச்சிகளுடன் வருவார் (விலங்குகளின் சமற்கருதப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

· இராமனும் இலக்குவனும் வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்றது கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும் பழங்களையும் காய்கறிகளையும் பறிப்பதற்காகவும் அல்ல என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் புலாலைச் சமைத்து உண்ணவே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

8. ஆரண்ய காண்டம் சர்கம் 44/27
மானுருவில் வந்த மாரீசனைக் கொன்று தன் இருப்பிடத்திற்குத்திரும்பும்போது, இராமன், ஒரு புள்ளி மானைக் கொன்று அதனை எடுத்துக் கொண்டு சென்றான் (3.47.27)

9. ஆரண்ய காண்டம். சர்கம் 3.68.32
சீதையை இராவணனிடமிருந்து மீட்கப் போராடிச் செத்துப் போன சடாயுவுக்கு (கழுகரசனாம்) இராமன் இறுதிச் சடங்கு செய்வதற்காக்க் காட்டிலிருந்த பல மான்களைக் கொன்று அவற்றின் கறியைக் கடவுள்களுக்குப் படைத்தான். (3.68.32)

10.  ஆரண்ய காண்டம் 3.73
இராமன் கபந்தன் என்னும் அரசனைக் (அரக்கனாம்) கொலை செய்தபோது இறப்பதற்கு முன்னர் கபந்தன், “இந்த இடத்தில் கட்டி வெண்ணெய்யைப் போலக் கொழுத்த பறவைகளைத் தின்னலாம். பம்பை ஆற்றில் உரோகித்த, சக்ரத்துண்ட, நலமீன் போன்ற மீன் வகைகளைக் காண்பாய். நீ உன்னுடைய வில்லை அம்பையும் பயன்படுத்தி அவற்றைக் கொல்வாய். இலக்குவன் அவற்றை நன்றாகக் கழுவி வறுத்து உனக்குப் பக்தியுடன் படைப்பான்” என்று கூறினான். ஆரண்ய காண்டம் 3. 73

11. கிட்கிந்தா காண்டம் சர்கம்4
இராமன் வாலியைக் கொன்றபோது, இறக்கும் முன் வாலி, “ ஓ! இராகவா! காண்டாமிருகம், உடும்பு, முயல், முள்ளம்பன்றி, ஆமை ஆகிய விலங்குகள் கூர்நகங்களையுடைய விலங்குகள். பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அவற்றின் ஊனைத் தின்ன ஏற்கப்பட்டிருக்கின்றது” என்று கூறினான்.

மேற்கண்ட வரிகள் வால்மீகியின் வரிகள். கம்பனோ பம்பனோ துளசிதாசனோ என்ன கூறியுள்லனர் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இராமாயணத்தை வால்மீகி எழுதியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே இராமாயணக் காலத்தில் இராமன் முதலானோரால் கடைப்பிடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களை விளக்க அவருடைய வரிகளைப் பயன்படுத்தி உள்ளேன்.

உன்னிப் பார்த்து உண்மையை உணருங்கள். மற்றவர்களும் அறியுமாறு செய்திடுங்கள்.

இந்தக் கட்டுரையில் காணப்படும் செய்திகள் பண்டித இ.மு.சுப்ரமணியப்பிளை அவர்களுடைய இராமயண ஆராய்ச்சி நூற்தொகுப்பிலும் உள்ளன. இந்தத் தொகுப்பின் கட்டுரைத்தொடர் விடுதலையில் தொடர்ந்து வெளியிடப்பட்டதையும் அறிவீர்கள். இராமாயண ஆராய்ச்சி, பண்டித இ.மு.சுப்ரமணியப்பிள்ளை – குடி அரசு இதழில் 1929 முதல் சந்திரசேகரப்பாவலர் என்ற பெயரில் ‘இதிகாசங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, ஆறாம் பதிப்பு பிப்ரவரி 2003)

மேலும் சர்கங்களைத் தேர்ந்தெடுக்கவும் மொழிபெயர்க்கவும் உதவிய நூல்கள்”
1. The Ramayana: A New Point of View, A.H.Gupta,Vishv Vijay Publication. New Delhi.
2. . நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),
3. பெரியாரியல்– இராமாயணச் சொற்பொழிவுகள். கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு
4. Ram was a Meat Eater, says Vālmīki Rāmāyana - By Dr Radhasyam Brahmachari கட்டுரை
5. www.valmikiramayan.net/
*************
மேற்குறிப்பிடப்பட்ட சர்கங்களின் மூல வடிவம் (வால்மீகி இராமாயணம்) சம்ற்கிருத வரிகளிலும், அவற்றுக்குரிய ஆங்கிலச் சொல் லுரை(பதவுரை)களும், பொழிப்புரைகளும் விரும்புவோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
- முத்துச்செல்வன் - மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம், முகநூல் பக்கம், 8.3.20