பக்கங்கள்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?



விடுதலை நாளேடு,
Published February 2, 2024
இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?
வால்மீகி மூல இராமாயணத்தில் உள்ளதுபடி
– “ஆரியக்கூலி” கம்பர் மறைத்த உத்தரகாண்டம் இதோ:
சருக்கம் 73 – அகால மரணம்
ப்ரஸ்த2£ப்ய து ஸ ல்த்ருக்4நம் ப்ராத்ருப்4யாம் ஸஹராக4வ |
ப்ரமுமோத2 ஸுகீ2 ராஜ்யம் த4ர்மேண பரிபாலயந் ||
இப்படிச் சத்ருக்கனனை மதுபுரிக்கு அனுப்பி, ராமன் சகோதரர்களுடன் தர்மமாய் பிரஜாபாலனம் செய்து கொண்டு மகிழ்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு, நாட்டுப் புறத்தில் வசிக்கும் ஒரு கிழப் பிராம்மணன் உயிரிழந்த தன் புத்திரனை எடுத்துக்கொண்டு அரண்மனை வாசலில் வந்து பலவிதமாய் புலம்பினார். புத்திர சோகத்தாலும் துக்கத்தாலும் மெய்மறந்து, “ஐயோ! குழந்தாய்! நான் பூர்வ ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ? என் ஒரே குழந்தை, எனக்கு முன் மரணமடையப் பார்க்கும் விதி நேர்ந்ததே? ஐயோ! உனக்கு இன்னும் பதினான்கு வயதாகவில்லையே! லோகத்தின் சுகங்களை அனுபவிக்காமல் அகாலத்தில் காலனுடைய பாசத்தால் கட்டுப்பட்டு என்னையும் துக்க சமுத்திரத்தில் தள்ளினாயே! உன்னை இழந்து நானும் உன் தாயும் பிழைத்திருப்போமா? சில தினங்களில் நாங்களும் மரணமடைவோம்.
பிராமணனது அழுகை:
இந்தக் கஷ்டம் எனக்கு நேரக் காரணம் யாதொன்றையும் அறியேன்; நான் பொய் சொன்னதில்லை; ஒருவரையும் இம்சித்ததில்லை; பூர்வ ஜன்மங்களில் பிராணிகளிடத்தில் யாதொரு பாபத்தையும் செய்ததில்லை. எனக்கு என் புத்திரன் உத்தரக்கிரியைகளைச் செய்ய வேண்டியிருக்க, அவன் பால்யத்திலேயே யமலோகத்திற்குப் போகும்படியான கொடிய காரியம் என்ன செய்தேன்? இதுவரையில் இப்படிப் பட்ட அநியாயத்தைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; இந்த ராமனுடைய ஆளுகையில் மாத்திரமே இவ்விதமான அகாலமரணம் சம்பவித்திருக்கிறது. ராமன் ஏதோ மகா பாபத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தேசத்தில் குழந்தைகளுக்கு மரணபயம் உண்டாகுமா?” என்று கதறி அழுதார்.
மகனை இழந்த சோகம்:
இதற்குள் ராகவனும் சகோதரர்களும் பரிஜனங்களும் வெளியில் வந்தார்கள். பிராம்மணன் ராமனைப் பார்த்து அடங்காக் கோபங்கொண்டு, “மகாராஜரே! என் புத்திரன் பாலன்: மரணத்தின் வசத்தில் அகப்பட்டான்; இவனை இப்பொழுதே பிழைப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உன் அரண்மனை வாசலில் நானும் என் மனைவியும் உயிரை விடுவோம். இந்தக் கோசல ராஜ்யத்தில் மக்களைக் காக்க நாதனில்லை என்று தோன்றுகிறது. எங்களைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் உன்னை ஒவ்வொரு நிமி ஷமும் உபத்திரவிக்கட்டும்: நீ சுகமாய் இரு. எங்களுடைய பழியைக் கட்டிக்கொண்டு நீயும் உன் சகோதரர்களும் தீர்க்காயுசுள்ளவர்களாய் வாழுங்கள். நீ ராவணாதி அசுரர்களை வென்றாய் என்றும் மகாபலவானென்றும் புகழ் அடைந்திருக்கிறாய்.
இராமனது ஆட்சியைப் பழித்தல்:
உன்னால் ஆளப்பட்ட ராஜ்யத்தில் வசிக்கிறோம். நீ எங்களிடத்தில் கடமை வாங்கவில்லையா? எங்களை காக்கக் கடமைப்பட்டிருக்க வில்லையா? உன்னால் எங் களுக்கு எள்ளளவும் சுகமில்லை. அகாலத்தில் எங்களுக்கு மரணபயம் நேர்ந்தது உன்னாலல்லவா? இட்சுவாகு வம்ச சக்கரவர்த்திகளான மகாத்மாக்கள் ஆண்ட ராஜ்யம், குழந்தைகளுக்கு மிருத்யுவான ராமனுடைய கையில் அகப்பட்டு நாதனில்லாமல் போயிற்றே! அரசன் நீதியாகப் பிரஜாபாலனம் செய்யாவிட்டால் அவனுடைய தோஷங் களால் ஜனங்கள் நாசமடைகிறார்கள். அரசனுடைய துராசாரத்தால் ஜனங்கள் அகாலத்தில் மரணமடைகிறார்கள். அல்லது நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிரஜைகள் செய்யும் பாவங்களை அரசன் சிட்சிக்காமலிருந்தால் அகால மரணம் நேரும். உன் தோசத்தால் என் புத்திரன் இறந்தானென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்திலாவது தேசத்திலாவது ஏதோ அநியாயம் நடக்கிறது” என்று சொல்லி, பலவகையில் மேன்மேலும் அரசரை நிந்தனை செய்துகொண்டு, மிகவும் வருந்தி தன் மகனை அணைத்துக் கொண்டார்.
ஏவம் ப3ஹுவிதை4ர் வாக்யை ருபருத்4ய முஹுர் முஹு: |
ராஜாநம் து3க்க3 ஸந்தப்த: ஸுதம் தமுபகூ3ஹதே ||
சருக்கம் 74 – யுக தர்மம்
ததா2 து கருணம் த3ஸ்ய த்விஜஸ்ய பரிதே3வநம் |
—ஸ்ராவ ராக4வ: ஸர்வம் து2க்க2 «ல்£க ஸமந்விதம் ||
இப்படி அந்தப் பிராம்மணன் துக்கத்தாலும் சோகத்தாலும் புத்தி சிதறித் தீனமாய் பிரலாபித்ததை ராகவன் கேட்டார். அதைப் பார்க்க சகிக்கவில்லை; மந்திரிகளையும் சகோதரர் களையும் வைசியப் பெரியோர்களையும் வசிட்டர் வாமதே வர் முதலியவர்களையும் அழைத்துவரச் சொன்னார். கொஞ்சநேரத்திற்குள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். “மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காச்யபர், காத் யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய மகாத்மாக்கள் ராமனை மங்களாசீர்வாதம் செய்து, அவரால் விதிப்படி பூஜிக்கப்பட்டு, தகுந்த இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். ராமன் அவர்களைக் கைகூப்பி வணங்கி மந்திரிகளையும் வைசியர்களையும் அனுகூலமாய் உபசரித்தார். பிறகு, நடந்த விருத்தாந்தம் யாவற்றையும் தெரிவித்து, “இந்தப் பிராம் மணர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
கிருதயுகமும் திரேதாயுகமும்:
ரகுநாதன் கவலைகொண்டு முகம் வாடியிருப்பதைப் பார்த்து, நாரதர், “மகாராஜா! இந்தக் குழந்தைக்கு அகாலத்தில் மரணம் நேர்ந்த காரணத்தைச் சொல்லுகிறேன். அதைக் கேட்டு தகுந்தபடி செய். ஆதியில் கிருத யுகத்தில் பிராம் மணர்களே உபவாசம் விரதம் காயக்கிலேசம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துத் தவம் செய்துவந்தார்கள். மற்றவர்கள் நித்ய இல்லறத் தர்மங்களை மாத்திரம் நடத்தி வந்தார்கள்; தவம் செய்யவில்லை. இப்படித் தவத்தால் பிரகாசித்து, பிராம்மணர்களே பிரதானமாய், அக்ஞானத்தால் மயங்காமல், எல்லா மக்களும் கிருத யுகத்தில், வசிக்கும் பொழுது மரணமென்பதே இல்லாமல் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அதர்மம் கொஞ்சம்கூட இல்லை. மூன்று காலங் களிலும் நடக்கும் சகல விருத்தாந்தங்களையும் சுலபமாய் அறியும் சக்தி அவர்களுக்கு உண்டு. அந்த யுகம் முடிந்த பிறகு திரேதாயுகம் ஆரம்பித்தது. அதில் மனுவம்சத்தில் பிறந்த சத்திரியர்களே பிரதானம், திட சரீர முள்ளவர்களாய் அவர்கள் தவத்தைப் பூர்ணமாய் மேற்கொண்டார்கள்.
(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றென்ற புத்தி மறை யவும் தேகத்தில் அபிமான முண்டாயிற்று. திரேதாயுகத்தில் வசித்த மனிதர்களுக்கு இதே முக்கியமான குணம், முன்பு பிராம்மணர் களால் மேற்கொள்ளப்பட்ட தவத்தை இவர் களும் செய்ய ஆரம்பித்தார்கள். தீரயீ என்று சொல்லப்பட்ட வேதத்தில் விதித்த திரேதாக்னியால் செய்ய வேண்டிய கர்மங்களில் பிரவிருத்தி முக்யமாவதால் இந்த யுகத்திற் கிரேதாயுகமென்ற பெயர் வந்தது தீர்த்தீயம்)
ஆனால் அவர்களைவிட கிருதயுகத்திலிருந்த பிராம் மணர்கள் வீரியத்திலும் தவத்திலும் மேலானவர்கள்; திரேதா யுகத்திலிருந்த பிராம்மணர்கள் சிறிது தாழ்ந்தவர்கள். அதனால் அந்தக் காலத்து சத்திரியர்கள் அவர்களுக்கு சமானர்கள். (கிருதயுகத்தில் சத்ரியர்களுக்குத் தவம் செய்ய அதிகாரமில்லாததால் பிராம்மணர் களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள். திரேதாயுகத்தில் இருவர்க்கும் தவம் செய்ய அதிகார மேற்பட்டதால் சமானர்கள்-தீர்த்தீயும்) ‘கிருத யுகத்தில் பிராம்மணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் தபஸால் பேதம் ஏற்பட்டிருந்தது. திரேதாயுகத்தில் இருவரும் தவம் செய்ததால் யாதொரு பேதமும் தோன்றவில்லை. ஆகை யால் வேதங்களில் சொல்லியிருக்கும் நான்கு வர்ணங் களையும் ஏற்படுத்தி அவைகளுக்குத் தகுந்த ஆசாரங்க ளையும் கற்பித்தார்கள்.
மாறிவரும் யுகங்களுக் கேற்ப மாற்றங்கள்:
இப்படி யக்ஞம் முதலிய தர்மங்களைப் பிரதானமாகக் கொண்டு அதர்மம் மேலிடாமல் திரேதாயுகம் விளங்கும் பொழுது, அதர்மம் நாலிலொரு பாகத்தைப் பூமியில் பரவச் செய்தது. கிருதயுகத்தோர்களுக்குக் களங்கமற்ற ஞான மிருந்ததால் அவர்கள் பிரம்ம வித்தையில் அதிகாரம் பெற்று அதர்ம கிலேசமுமற்றிருந்தார்கள். திரேதாயுகத்தோர்களுக்கு அந்த நிர்மல ஞானமில்லாததால் பிரம்ம வித்தையில் அதி காரமில்லை. வர்ணாசிரம தர்மங்களையே மேற்கொண்டார் கள். ஆகையால் அதர்மம் பரவ ஆரம்பித்தது. (திரேதா யுகத்தில் வர்ணாசிரம தர்மங்களே பிரதானமாக இருந்தன. அவைகளை மேற்கொள்வதற்கு இடையூறான பாபங்கள் இல்லை. அப்போது பரகிம்சை அசத்யம் அதிருப்தி என்ற ரூபத்தையுடைய அதர்மம், அதன் நாலு பாதங்களில் ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து நடந்தது. அதர்ம சம்பந்தத்தால் அவர்களுக்குத் தேஜஸ் மந்தமாயிற்று, கிருதயுகத்தில் எல்லோரும் நினைத்த காரியங்களை உடனே முடிக்கும் சக்தியுள்ளவர்கள். பயிரிடாமலும் சமைக்காமலும் தங் களுக்கு வேண்டிய ஆகாரத்தை அடையக்கூடிய யோக சக்தியுள்ளவர்கள். திரேதாயுகத்தில் அந்த யோக்யதை இல்லாமையால் எல்லோராலும் நிந்திக்கப்படும் ஜீவனோ பாயத்தைக் கைப்பற்றிப் பிறர்க்குத் தொண்டு செய்து பிழைத்தார்கள். பூமியைப் பயிரிட்டு அதனால் கிடைத்த தான்யத்தைச் சமைத்து தேகத்தை வளர்த்தார்களென்று கருத்து.)
இது அதர்மத்தின் முதலாவது பாகத்திற்கு அடையாளம், அதர்மம் மேலிடக் கிருதயுகத்தில் ஜனங்களுக்கு இருந்த ஆயுள்காலம் குறைந்தது. அதைக்கண்டு பயந்து, எல் லோரும் சத்யத்தையும் தர்மத்தையும் கைப்பற்றி, மங்கள கரமான கர்மங்களையே செய்து வந்தார்கள். (திரேதாயுகத்தில் அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு யாக யக்ஞம் முதலிய கிரியைகளால் சித்தம் தெளிந்ததென்று கருத்து) பிராம்மணர்களும் சத்திரியர்களும் தவம் செய்தார்கள். வைசியர்களும் நான்காவது வர்ணத்தவர்களும் அவர் களுக்குப் பணி செய்து வந்தார்கள். இவர்களுக்குப் பயிரிடு தல் வியாபாரம் பணிவிடை செய்தல் கடமையாகும். சேவை நான்காம் வர்ணத்தவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
திரேதாயுகத்தின் முடிவில் அதர்மத்தால் ஆயுள் வரவரக் குறைந்தது. பயிரிடுதல் முதலிய தொழில்களால் கஷ்டம் அதிகரித்தது. ஜனங்கள் மரணமடைய ஆரம்பித்தார்கள். அப்பொழுது அதர்மம் இரண்டாவது பாதத்தைப் பூமியில் வைத்தது. ஆகையால் அதற்குப்பின் வந்த யுகத்திற்குத் துவாபரமென்று பெயர். ஜனங்களுடைய ஆயுட்காலம் இன்னும் குறைந்தது. விசேஷ சிரமப்பட்டாலொழிய பயிர்த்தொழில் பயனைக் கொடுக்கிறதில்லை. இந்த யுகத்தில் வைசியர்கள் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தார்களும் தவம் செய்ய அதிகாரம் பெற்றார்கள். நான்காம் வர்ணத்தவனுக்குத் தவம் செய்ய அதிகாரம் ஏற்படவில்லை; சமயம் கிடைக்கவுமில்லை. கலியுகத்தில் அது அனுஷ்டானத்திற்கு வரும்.
குழந்தை பிழைக்கும் வழி:
துவாபரத்தில் பரம அதர்மமான காரியத்தை, இந்தத் திரேதாயுகத்தில் ஒருவன் செய்யக் கூடுமோ? இப்பொழுது உன் ராஜ்யத்தில் யாரோ தகுதியற்ற ஒருவன் தவம்செய்து கொண்டிருக்கிறான். இந்தப் பிராம்மணனுடைய புத்திரன் அகாலத்தில் மரணமடைந்ததற்கு அதுவே காரணம். அரச னுடைய ராஜ்யத்திலாவது ராஜதானியிலாவது தர்மத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்யும் புத்திஹீனன் நரகத்தை அடைகிறான். அந்த அரசனுக்கும் அதேகதி. பிரஜைகளிடத்திலிருந்து ஆறிலொரு கடமை வாங்கிக் கொண்டு அவர்களை அரசன் காக்க வேண்டிய தல்லவா நியாயமாய் ராஜ்யபாலனம் செய்பவன் பிரஜைகள் செய்யும் வேதாத்யயனத்திலும் பாகத்தையடைவது போல் அஜாக்கிரதையால் காக்கத் தவறுகிறவன் அவர்கள் செய்யும் பாவத்திலும் பாகத்தை அடைகிறான். ஆகையால் உன் ராஜ்யத்தில் நன்றாய்த் தேடிப்பார். அதர்மம் கண்ணில் பட்டவுடன் அதை நீக்க வேண்டும். அப்பொழுது தர்மம் ஓங்கித் தழைக்கும்; ஆயுள் விருத்தியாகும்; இந்தக் குழந்தை யும் பிழைப்பான்” என்றார்.
ஏவம் சேத் த4ர்ம வ்ருத்3தி4ஸச ந்ருணாம் சாயுர் விவர்த4நம் |
ப4விஷ்யதி நர•ரேஷ்ட2 ப3£லஸ்யாஸ்யச ஜீவிதம் ||          
(32)
சருக்கம் 75 – தபசியைக் காணுதல்
நாரத3ஸ்ய து தத்3 வாக்யம் ஸ்ருத்வாம்ருத மயம் தத2£ 
ப்ரஹர்ஷ மதுலம் லேபே4 லக்ஷமணம் சேத3 மப்2ரவீத்||        
(1)
நாரதருடைய வார்த்தையைக் கேட்டு ராமன் அமிருதபானம் செய்ததுபோல் மகிழ்ந்து லட்சுமணனை அழைத்து, “நீ அந்த பிராம்மணரிடத்திற்குச் சென்று கொஞ்சகாலம் பொறுத்திருக்கும்படி கேட்டு சமாதானம் செய். அந்தக் குழந்தையின் தேகத்தை எண்ணெய்க் கொப்பரை யில் வைத்து வாசனை திரவியங்களால் காப்பாற்றுங்கள். அவயவங்கள் விகாரமடையாமலும் தளராமலும் சொரூபம் மாறாமலும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்” என்று ஆணையிட்டு, புஷ்பக விமானத்தை வரும்படி நினைத்தார். உடனே அது கண்ணிற்குத் தோன்றி அவரை நமஸ்கரித்து, பிரபோ! தங்களுடைய அடிமை; இதோ வந்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தது.
ராமன் தபசியைத் தேடி அடைதல்:
ராமன் ராஜ்யத்தைப் பரத லட்சுமணர்களிடத்தில் ஒப்பு வித்து, மகரிஷிகளிடத்தில் உத்தரவுபெற்று ஆயுதபாணியாய் அதில் ஏறிச் சென்றார். மேற்குத் திக்கில் வெகு ஜாக்கிரதை யாய்த் தேடிப்பார்த்தும், யாதொரு அதர்மத்தையும் காண வில்லை. அப்படியேவடக்கும் கிழக்கும் நிர்மலமான கண்ணாடியைப்போல் தெளிவாக இருந்தன.
பிறகு தெற்குத் திக்கில் செல்லுகையில், விந்தியபர்வதத் திற்கு அடுத்த சைவலமென்ற மலையின் சாரலில் ஒரு பெரிய ஏரியையும் அதனருகில் ஒரு தபசி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு கடுந்தவம் செய்வதைக் கண்டார். ராமன் அவனருகே சென்று, “நீ தன்யன்; கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கிறாய் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன்; இவ்வளவு உறுதியாய்த் தவம் செய்யும் நீ யாரென்று அறிய ஆசை கொண்டேன். நான் அயோத்தியாதிபதி; தசரத புத்திரனான ராமன்.
தபசியை பார் எனல்:
இந்தத் தவத்தால் தேவதைகளைத் திருப்தி செய்து எந்த விரதத்தைப் பெற உத்தேசிக்கிறாய்? சொர்க்கமா? மோட் சமா? நீ பிராம்மணனா? பராக்கிரமசாலியான சத்ரியனா? நான்காம் வர்ணத்தவனா? நிஜத்தைச் சொல்” என்றார்.
அந்தத் தபசி தலைகீழாக இருந்து கொண்டே தன் ஜாதியையும் உத்தேசத்தையும் ராமனுக்குத் தெரிவித்தான்.
இத்யேவமுக்த: ஸ நராதி4பேந 
அவாக் —ரா தா2ஸரதா2ய தஸ்மை |
உவாச ஜாதிம் ந்ருப புங்கவாய
யத் காரணம் சைவ தப: ப்ரயத்ந: ||
சருக்கம் 76 – சம்பூகனுடைய வதம்
தஸ்ய தத்2 வசநம் •ருத்வா ராமஸ்யாகலிஷ்ட கர்மண:| 
அவாக்—ராஸ் தத2ர பூத்வா வாக்யமேத து2வாச ஹ || 
“மகாராஜா! நான் நான்காம்வர்ணத்தவள்: சம்பூகனென்று எனக்குப் பெயர் – இந்தச் சரீரத்துடன் தேவபதவியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன் இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே” என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி அவன் தலையை வெட்டினார். தேவர்கள் ‘நல்லது நல்லது’ என்று அவரை அடிக்கடி புகழந்தார்கள். ஆகாசத்திலிருந்து. பரிமளமுள்ள புஷ்பமாரி பெய்தது.
தேவர்களிடம் ராமன் கேட்டது:
தேவர்கள் அவரிடத்தில் அளவற்ற அன்பு கொண்டு “ராம! மகாபுத்திமானே! இந்தப் பரமோபகாரத்தை எங் களுக்குச் செய்த நீ, வேண்டிய வரங்களைக்கேள். கொடுக்கி றோம். இவன் தவத்தால் சொர்க்கத்தை அடையத் தகுந்த வனா? அவனுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் நன்றாகச் செய்தாய்” என்றார்கள். ராமன் கைகூப்பி, “தேவேந்திர! என்னிடத்தில் தேவர்களுக்குச் சந்தோஷமுண்டானால் அந்தப் பிராம்மணனுடைய புத்திரன் பிழைக்கட்டும். நான் கோரும் வரம் இதுவே. அவருடைய ஒரே புத்திரன் அகாலத்தில் மரணமடைந்தது என் அபராதத்தாலல்லவா? அவனைப் பிழைப்பியுங்கள். நான் செய்த பிரதிக்ஞை பொய்யாகக்கூடாது” என்றார்.
அப்பொழுது தேவர்கள் “ரகுவீர! கவலைப்படாதே. அந்தக் குழந்தை பிழைத்தெழுந்து பெற்றோர்களுடன் சுகமாயிருக்கிறான். இந்தத் தபசியை நீகொன்ற கணத்தி லேயே அவன் உயிர்பெற்று எழுந்தான். உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். அகத்திய மகரிஷியின் புண்ணியாசிரமத்திற்குப் போவோம் வா. அவர் பன்னிரண்டு வருடங்களாக ஜலத்தில் படுத்துக்கொண்டு ஒரு கடுமையான விரதத்தை அனுஷ்டித்து இன்று முடித்தார். அவரைத் தரிசித்துப் புண்ணியம் பெற்றவர்களாவோம். நீயும் வா” என்று அழைத்தார்கள்.
அகத்தியரின் இருப்பிடம் செல்லுதல்:
ராமன் அதற்குச் சம்மதித்துப் புஷ்பகத்திலேறி அவர் களுடன் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார். தேவர்கள் தானிருக்குமிடத்தைத் தேடிவருவதைக் கண்டு, அகத்தியர் அவர்களை விதிப்படி உபசரித்தார். அவர்கள் அந்தத் தபோநிதியால் பூஜையைப் பெற்று, அவரைத் தாங்கள் பூசித்து மகிழ்ச்சியாய்த் தேவலோகம் சென்றார்கள். பிறகு ராமன் விமானத்திலிருந்து இறங்கி அந்தத் தர்மாத்மாவை நமஸ்கரித்து, அவரால் வெகு அன்புடன் உபசரிக்கப்பட்டு இருக்கையில் உட்கார்ந்தார். அந்த மகாதபஸ்வி, “புரு ஷோத்தம! க்ஷேமமா? உன்னைப் பார்க்க என்ன பாக்கியம் செய்தேனோ? என் சகல தபசும் புண்ணியமும் விரதமும் நியமமும் ரூபமெடுத்து வந்ததோ? அனந்த கல்யாணகுண நிதியான உன்னிடத்தில் எனக்கு எல்லையற்ற அன்பு; மேலும் நீ அதிதி; மேலும் மகாராஜா; என் இதய கமலத்தில் நித்யவாசம் செய்யும் இஷ்ட தெய்வம். ஆகையால் பூஜை என்பது உனக்கே தகும்.
அகத்தியர் அளித்த ஆபரணம்:
சம்பூகனென்ற தபசியைக் கொன்று அக்குழந்தையைப் பிழைப்பித்தாயென்று தேவர்கள் சொல்லுகிறார்கள். இன்று ராத்திரி என்னுடன் இங்கேயிரு. காலையில் அயோத்யைக்குப் போகலாம். நீ ஆதிபுருஷன்; லக்ஷ்மீ சமேதன்; சகலப் பிரபஞ்சமும் உன்னிடத்தில் அடங்கியிருக்கிறது; சகல பூதங் களுக்கும் நீ ஆத்மா; புராண புருஷன். இந்த ஆபரணத்தைப் பார்; இது விசுவகர்மாவால் செய்யப்பட்டது; அபாரதேஜஸால் ஜொலிக்கிறது. இதைப் பெற்றுக்கொள்.
எனக்கு நிகரற்ற ஆனந்தமுண்டாகும். ஒருவனுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்ட பொருளை உப யோகிக்காமல் வேறொருவர்க்கு அதையே வெகுமானமாய்க் கொடுப்பது விசேசபலனைக் கொடுக்குமென்று பெரி யோர்கள் சொல்லுகிறார்கள். இதைத் தரிக்கவும் இதனுடைய அபூர்வபலன்களை அனுபவிக்கவும் நீயே தகுந்தவன். ‘இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆதாரம் நீயல்லவா? ஆகையால் இதை உனக்கு விதிப்படி தானம் செய்கிறேன் பெற்றுக்கொள். விசித்திர சக்தியுடன் சூரியனைப்போல் பிரகாசிக்கும் இந்தத் திவ்யாபரணம் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” என்றார்.
சத்ரியன் தானம் பெறலாமா?
அதைக்கேட்டு மகாபுத்திமானான ராமன், தான் இட்சுவாகு சக்கரவர்த்திகளின் வம்சத்தில் பிறந்தவரென்றும், அவர்கள் பிறருக்குக் கொடுப்பதேயன்றி வாங்குவதில்லை யென்றும். அது சத்திரிய தர்மத்திற்கு விரோதமென்றும் ஆலோசித்து, “சுவாமி! பிராம்மணன் தானம் வாங்கலா மென்று சொல்லப்படுகிறது: சத்ரியனுக்கு அது கூடாது – அப்படிப்பட்ட தங்களிடத்தில் சத்ரியனான நான் தானம் வாங்கலாமா? இதன் தர்மத்தை எனக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.
அதற்கு அகத்தியர், “ராம! கிருதயுகத்தில் பிராம்மணர்கள் பூமியை ஆண்டு வந்தார்கள். அரசர்களில்லை. இந்திரன் தேவர்களுக்கு அரசனாயிருந்தான். அப்பொழுது மக்கள் பிரம்மாவிடத்திற்குச் சென்று, “தாங்கள் தேவர்களுக்கு இந்திரனை அரசனாக நியமித்திருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும். அவனைப் பூஜிப்பதால் எங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வோம். இனி அரசனில்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்” என்றார்கள்.
அதைக்கேட்டு பிரம்மா அவர்களுக்குப் பரமஇதமான விஷயத்தை ஆலோசித்து, இந்திரன் முதலிய லோக பாலர்களை அழைத்து, ‘உங்களுடைய தேஜஸில் ஒரு பாகத் தைக் கொடுங்கள்’ என்றார். பிறகு சூப்பென்ற ரஜசப்தத்தைச் செய்ய அதிலிருந்து சூபனென்ற அரசனுண்டானான். லோகபாலர்களுடைய அம்சங்களை அவனிடத்தில் வைத்து, அவனை மக்களுக்கு ஈச்வரனாயிருக்கும் படி நியமித்தார். இந்திரனுடைய அம்சத்தால் அரசன் பூமியை ஆளுகிறான்; வருணனுடைய பாகத்தால் மக்களின் தேகங் களைக் காக்கிறான்; குபேரனுடைய பாகத்தால் தனத்தைக் கொடுக்கிறான்; யமனுடைய பாகத்தால் தண்டிக்கிறான்; ஆகையால் இந்திரனுடைய அம்சத்தால் நீ இதைப் பெற்றுக்கொள்; இதனால் உனக்கும் மங்களமுண்டாகும்; எனக்கும் உத்தம கதி கிடைக்கும்” என்றார்.
ஆபரணம் கிடைத்த விதம் கேட்டல்:
அவருடைய வார்த்தை உத்தம தர்மத்திற்கு ஒத்திருப் பதைக் கண்டு ராமன் அந்த ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டார். “மகரிஷே! திவ்யரூபத்தையும் காந்தியையும் உடையதாய். வெகு அற்புதமாக இருக்கிறது. இது தங்களுக்கு எப்படிக் கிடைத்தது? யாரிடத்திலிருந்து இதைக் கொண்டு வந்தது; அபூர்வமான கிருத்தியங்களைச் செய்வதில் தங்களுக்கு நிகரில்லை. சமுத்திர ஜலத்தைக் குடித்தது விந்திய மலையை அழுத்தினது, வாதாபி இல்வலனென்ற அசுரர்களைக் கொன்றது முதலிய ஆச்சரியங்களைத் தங்களிடத்தில் காணலாம். ஆகையால் இதை அறிய வேண்டுமென்ற ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றார். அகத்தியர், “ராம! இந்த மனோகரமான தலத்தில் சென்ற திரேதாயுகத்தில் நடந்ததைச் சொல்லுகிறேன். கேள். இந்த ஆபரணம் எனக்குக் கிடைத்த பொழுது ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டேன்” என்றார்.
ரமணீயப்ரதே3 «ல்ஸ்மித் வநே யத்2த்2ருஷ்டவாநஹம்| 
ஆ•சர்யம் மே மஹா பா3ஹோ த3£நமா•ரித்ய கேவலம் || 


ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்?



விடுதலை ஞாயிறு மலர்,
Published January 27, 2024

பாணன்

இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா – சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி உயிரிழப்புகள் உண்டு) இருப்பினும் அங்கு வழிபாட்டுத்தலங்களுள் அனைவரும் ஒன்றே.
ஆனால் இங்கே.. ஹிந்து தேசம் என்றால். மகாராட்டிராவில் ராமனைத் தேடமுடியாது, பெண் தெய்வ வழிபாடுதான், அதே போல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் ஜெய் மாதா ஜி – பெண் தெய்வ வழிபாடுதான்.
தெற்கே பகவதியும், மாரியம்மனும், சாமுண்டியும், எல்லம்மாவும் பவானியும், துர்க்காவும், மாகாளியும் தான் இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை துவங்கி தக்காண பீடபூமி முழுவதும் மற்றும் கிழக்கு வங்க விரிகுடா எல்லை வரை பெண் தெய்வ வழிபாடுதான், பூரி ஜெகனாதர் ரதயாத்திரையை காட்டும் தொலைக்காட்சிகள் பல லட்சம் பேர் கூடும் வீரம்மா தாலி கோவில் தேர்த் திருவிழாவை என்றாவது காட்டியுள்ளனவா?
வீரம்மா படம் இல்லாத சாமானிய தெலுங்கு மக்களின் வீடே ஆந்திரா, தெலங்கானாவில் கிடையாது.

கருநாடகாவில் வீட்டில் ஒரு குழந்தைக்காவது சாமுண்டி மற்றும் எல்லாவின் ஒரு எழுத்தாவது வருமாறுதான் பெயர் சூட்டுவர்கள். நெல்லையில் இன்றும் நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் செல்லாத ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மக்கள் உண்டு. (எனது தாத்தா பாட்டி கடைசி வரை அங்கு சென்றதே கிடையாது. இத்தனைக்கும் எங்கள் ஊரில் இருந்து மார்க்கெட் போகவேண்டும் என்றால் நெல்லை டவுணிற்கு என்று மட்டும் 29 ஆம் நம்பர் பேருந்து உண்டு.
இதில் என்ன கூத்து என்றால் உத்தரப்பிரதேசத்தில் 62 விழுக்காடு ஹிந்துக்கள் சிவனை வழிபடும் ஹிந்துக்கள் இவர்கள் ராமனை வணங்கமாட்டர்கள். உத்தராகண்டில் சிவன்தான் முதல் தெய்வம், இதனை மறைத்துத்தான் கேதர்நாத்தை முன்னிறுத்துகின்றனர்.
ஜார்கண்ட், சத்தீஷ்கர் சென்றால் அங்கும் மகிஷவர்த்தினிதான் வெகுஜனம் வழிபடும் தெய்வம், வடகிழக்கு மாநிலங்களில் பெண் தெய்வ வழிபாடுதான் முதன்மை, அவதிபுரி எனப்படும் அயோத்தி மற்றும் பீகார் – நேபாள் எல்லையில் உள்ள ஜனக்பூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தன் அங்குள்ள மக்கள் ராமனை கடவுளாக வழிபடுகின்றனர். ஜனக்பூரிலும் சீதாராமர் தான் வழிபாடு தெய்வம். அப்படிப் பார்த்தால் அவதிமொழி பேசும் அவதபூரி என்ற அயோத்தியில் வாழும் மக்களின் வழிபாட்டுத் தெய்வம் மட்டுமே ராமன்.

அயோத்தியில் சுமார் 80,000 பேர் பூர்வீகமாக வாழ்பவர்கள். இவர்களில் 5000 பேர் பார்ப்பனர்கள், 12,000 பேர் உயர் ஜாதியினர், 7000 இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். அயோத்தியில் நாடோடிகள் மிக மிகக் குறைவு. அதன்படி அயோத்தியில் கூட 17,000 பேர் மட்டுமே ராமனை மட்டும் கும்பிடுபவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே அவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கங்கை அம்மனின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் Swaaha Devi (Svaahaa Dhevee) சுவாகா தேவியைக் கும்பிடுபவர்கள். ஆனால், இன்றைய தலைமுறைக்கு சுவாகா தேவி என்றால் யார் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களும் பிற்படுத்தப்பட்டவர் களும் ராமன் படம் பொறித்த அடையாளத்தை கழுத்தில் அணியக் கூடாது என்பதற்காக அவர்கள் வழிபட்ட சுவாகா தேவியின் கணவர் அனுமான் என்று கதைவிட்டு அனுமான் அடையாளத்தை சூத்திரர்கள் கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
நாம், வைக்கத்தை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அயோத்தி தெருக்களில் அருகில் உள்ள கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் இதுவரை நடந்ததே இல்லை.
2016ஆம் ஆண்டில் வாரணாசியில் ஒரு திருமணத்திற்குச் சென்ற போது அயோத்தியாவிற்கும் சென்றேன். பழைய காலத்து அக்ரகாரம் போன்றுதான் அங்குள்ள தெருக்கள் காணப்பட்டன.
புதிதாக ஒன்றுமில்லை. எங்குபார்த்தாலும் கோவில்களும் காவிச்சாமியார்களும் பழுப்பேறிய ஆடையோடு அங்கே இங்கே சுற்றிக்கொண்டு மக்களை பூஜைக்கு அழைத்துச்செல்லும் ஏஜெண்டுகளால் நிறைந்திருந்தது நகரம்.
ராமன் படம் போட்ட டாலர்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர். ஆனால் சின்ன அனுமார் சிலைகொண்ட காவி நிற கயிறுகள் தான் அதிகம் விற்பனையானது.

இது குறித்துக் கேட்ட போது ஒரு சிறுவன் கூறியது, “இராமன் டாலர் போட்டு நாங்க ஊருக்குச் சென்றால் பசங்க அடிப்பாங்க (உயர்ஜாதியினர்)” என்று கூறினான்.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமரத்தோப்பு ஒன்றில் நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற போது வழியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த சில நடுத்தர வயது நபர்களிடம் பேசும் போது “அயோத்தியில் உள்ள ராமன் கோவிலுக்குச் சென்றுள்ளீர்களா” என்று கேட்க அவர்களோ, “எங்களுக்கு அங்கு செல்ல நேரம் ஏது!” என்றுமட்டுமே கூறினார்கள்.
உண்மையில் அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டார்கள் – ஒரு நந்தனார் தெற்கே தீயில் இறங்கி தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தார்.

ஆனால் அங்கே லட்சக்கணக்கான நந்தனார்கள் அயோத்திதெருக்களைக்கூட பார்க்காமல் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் விருப்பப்பட்டுச்சென்றாலும் அங்கே அவர்களுக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.
இன்றும் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிதிருத்தமாட்டார்கள். புதிதாக யாரும் வந்தால் அவர்கள் எந்தக் கிராமம், கிராமத்தில் எந்தப் பகுதி என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவர்கள் உயர்ஜாதியினர் என்றால் மட்டுமே முடிவெட்டும் தீண்டாமை 2016-இலும், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்ததை பார்த்த நேரடி சான்றாக நிற்கிறேன்.
22.01.2024 அன்று மட்டும் மின்னொளியில் மிதந்த அயோத்தியின் மறுபுறம் – வீடுகளுக்கு கதவு வைக்கக் கூடாது. செங்கல் வைத்த வீடுகள் கட்டக் கூடாது – அப்படியே கட்டினாலும் ஆடம்பரமாக தெரியக்கூடாது போன்ற பல கொடுமையான எழுதப்படாத சட்டங்கள் அயோத்தியைத் சுற்றியுள்ள கிராமங்களில் உண்டு.
ராமன் படம் மடங்களிலும் உயர் ஜாதியினரின் வீடுகளின் முன்பும் இருக்கும். ஆனால், அயோத்தியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ராமன் படம் இல்லை. வேண்டுமென்றால் ராமன் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவர்கள் வற்புறுத்தி கொடுத்த ராமன் படத்தை வேண்டுமென்றால் வீட்டின் ஏதாவாது ஒரு மூலையில் ஒட்டி வைத்திருப்பார்களே தவிர, அவர்களிடம் ராமன் படத்தை பூஜைக்காக வீட்டில் வைக்கும் துணிச்சலைக் காணமுடியாது.
அயோத்தியில் வசிக்கும் பூர்வ குடிகளுக்கே ராமன் வழிபாட்டுத் தெய்வமாக இல்லாத நிலையில் நாடெங்கும் எப்படி ஜெய் சிறீராம் மயமாக இருக்கும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

ஜெய் சிறீராம் என்பது என்றால் என்ன? இந்தச் சொல்லைக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். ஆம்! ஜனவரி 22ஆம் தேதி ஜெய்சிறீராம் என்ற காட்டுக்கூச்சல் – 30ஆம் தேதி “ஹேராம்” என்ற முணுமுணுத்தலோடு காந்தியாரின் உதட்டில் இருந்து இளஞ்சூடான இறுதி சுவாசமாக வெளியேறியது. ஒருவேளை இன்று கோட்சே இருந்திருந்தால் “ஜெய் சிறீராம்” என்று கூறிக்கொண்டே காந்தியாரைச் சுட்டுக் கொன்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.
அது என்ன ஜனவரி 22இல் ராமன் கோவில் திறக்க தேதி குறித்தார்கள் என்றால், வரலாற்றுக் கடிகாரத்தை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாளுக்குத் திருப்பினால், காந்தியாரைக் கொலை செய்ய அய்ந்தாம் முறையாக திட்டமிட்டு பிர்லாபவனில் குண்டுவைத்தார்கள். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுவைத்த மதன்லால் பக்வா சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குண்டு வெடிக்காமல் போகவே காவல்துறையிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் ஓடி விடுகின்றனர்.

அப்படி ஓடியவர் ஆனந்தபர்பத் என்ற இடத்தில் ஜனவரி 22 அன்று கூடி இம்முறை, அதாவது ஆறாவது முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் காந்தியாரைக் கொல்வது என்ற திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சபதம் எடுத்தனர்.
ஒருவேளை அப்படி சபதம் எடுத்து கலைந்துசெல்லும் போது “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிட்டார்களோ என்னவோ! ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். ஜனவரி 22ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது.
ஆனாலும், காந்தியாரின் அனுதாபிகள் ஜனவரி 30 அன்று ராமன் கோவில் திறக்கப்படும் தேதியாக குறிக்கப்படவில்லையே என்று நிம்மதி அடைந்திருக்கலாம்.

செவ்வாய், 21 நவம்பர், 2023

இராமாயணத்தில் கந்தன் பிறப்பு கதை

வால்மீகி ராமாயணத்தில் கந்தன் என்று சொல்லப்படும் முருகனின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் 'சிவனின் நழுவி விழுந்த வீரியத்திலிருந்து உண்டானவன் ஸ்கந்தன்' என்றும், ஆறு தலை உடன் பிறந்ததால் ஆறுமுகன் என்றும் கார்த்திகை பெண்களின் பாலை உண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி  வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டவை வருமாறு:-
தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டார்கள். 'சிவனிடத்தில் ஸ்கந்தன் எனும் பெயரில் ஒரு புத்திரன் பிறப்பான் அவன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று பிரம்மா கூறினார்.
அவர் கூறியதற்கு இணங்க சிவனின் வீரியம் நழுவி விழுந்தது. அதை அக்னி பகவான் கையில் பிடித்து பத்திரமாக கங்கையிடம் கொடுக்க, கங்கையோ தன் கர்ப்பத்தில் வைத்து பாதுகாத்தால். அதன் அனல் தாங்க மாட்டாமல் கர்ப்பத்தை கீழே நழுவவிட்டால், அந்த கர்ப்பம் சரவணப் பொய்கை என்று சொல்லப்படுகிற மூங்கில் திட்டில் போய் சேர்ந்தது. அங்கு  அந்த கர்ப்பம் ஆறுமுகத்துடன் குழந்தையாக தோன்றியது. தேவர்களால் அனுப்பப்பட்ட கார்த்திகை நட்சத்திர பெண்களால் பாலூட்டப்பட்டு கார்த்திகேயன் என்ற பெயரால் வளர்க்கப்பட்டான்.
இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் (பாலகாண்டம், கங்காவதாரண கதை, ஸர்க்கம்:37.1-
37.31) கூறப்பட்டுள்ளது.

புதன், 1 நவம்பர், 2023

இராமன் பாலம் எங்கே?

"மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!"
- கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக்  கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.
இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.
  அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.
இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!
- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)

வெள்ளி, 5 மே, 2023

இராமன் எத்தகைய இராமனடி! - 2


  

31

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தகைய இராமனடி!

(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.

ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்! 

இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.

1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.

2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். 

3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.

4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. "இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்" என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.

5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். 

6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்" என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).

7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே" என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).

8. "என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே" என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).

9. "எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).

10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் "இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்'” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், "இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்" 'என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் "இராமனின் மனைவிமார்கள்" என்றே வாசகங்கள் வருகின்றன.

11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.

12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு "கைகேயி தீய குணமுடையவள்" என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).

13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், "அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்" என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),

14. "என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.

15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் "கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்" என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.

16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.

17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்" என்று சொன்னபோது, இராமன். "அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே" என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்

18.தந்தையை, "மடையன், புத்தி இல்லாதவன்" (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான். 

19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்" அயோத்தியா  காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.

20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

21. தன் மனைவி சீதையைப் பார்த்து. "நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்" அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.

22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. "பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?" என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

23. மற்றும் "உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?'' என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)

25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு "நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).

26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.

27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.

28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.

29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்" என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.

30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, "தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?" என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.

31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, "மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை" என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.

32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!

33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை). 

34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.

35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். "பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது" என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).

36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.

37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.

38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).

39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).

40. கரனோடு போர் புரியும் போது. "உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்" என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)

41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். "என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.

42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),

43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) "சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு" என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)

44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். "சத்யாகிரகம்" செய்தும் அழைத்தபோது. 'தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்" என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).

45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.

46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).

47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் ('எமனால்') ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).

48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: "ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம..."

பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)

குறிப்பு: சம்பூகன் என்கிற 'சூத்திரனை' தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், 'சூத்திரர்' எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?

49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு "அபிதான சிந்தாமணி"யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.

50. இராமாயணங்களிலும் 'பரசுராமன்' சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது - எப்படி இருந்தாலும் "முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை. 

நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து 

வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான். 

அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.

எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், "அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக" என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.

இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.

இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.

மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்

ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கர் ஆராய்ச்சி - ரஷ்யப்  பத்திரிகையின் வெளியீடு "The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana"

இதன் மொழிபெயர்ப்பு:

"இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்"

அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union  என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.

(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய 

"இராமாயணப் பாத்திரங்கள்")

இராமன் எத்தனை இராமனடி!

  

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இராமன் எத்தனை இராமனடி!

மின்சாரம்

5

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணம் ஆவது மிக நல்லது. 

- விஜய பாரதம், 31.3.2023

இராமன் என்பவன் ஏதோ உதாரண புருஷன் போலவும், அவன் பெயரை இலட்சம் முறை ஸ்ரீராம நாம மந்திரம் எழுதினால், ராமன் வாழ்த்துவான் என் றும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் முன்னுதாரணமாக அமையும் என்றும் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' (31.3.2023, பக். 13) ‘புரூடா' விட்டுத் தள்ளியுள்ளது. 

இதன் மூலம் என்ன தெரிகிறது? இராமன் தற் புகழுக்கு மயங்கும் சராசரி மனிதன் என்று விளங்க வில்லையா?

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இராம அவ தாரத்தின் நோக்கம் என்ன? இராமனுக்கு இருந்த சாபம் என்ன என்பதை இராமாயணத்திலிருந்தும் சிவரக சியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலிருந்தும் பார்க்கலாமா?

இதோ ஆதாரங்கள்:

6

இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும் இந்திரனோடு நான்முகன் உலகடைந்து, தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து, இராவணனைக் கொன்று வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்குத் தாமும் இசைந்து. அவர்களை நோக்கித் திருமால், "தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து. இராவணனைக் கொன்று, பதினோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர். இங்கே வருவேன்" என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம் அவை:

1. ஒருகால் திருமால், பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்றுவிட்டார். அதனால். அம் முனிவர் திருமாலை நோக்கி, மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து வருந்தும்படி சபித்துவிட்டார். இது முதற்காரணம். இது வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. இதே செய்தி மகா ஸ்கந்த புராணம், உபதேசகாண்டம் அறுபத்து நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பெற்று உள்ளது.

2. சலந்தராசுரனின் மனைவியாகிய பிருந்தையைச் சேரவேண்டும் என்னும் காதல் மிகக்கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமைகண்டு. அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார். சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்துகொண்டு, "மாயையினால் என் னோடு கூடி. அதனால் பிறர் மனையாளைப் புணர லென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையாலெடுத்துப் போகக் கடவன் என் கணவன் உடம்பினைக் குரங்கு களால் நீ கொண்டு வந்ததனாலேயே நீயும் குரங்கு களோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய்” என்று சபித்தாள், பின், உடனே அவள் தீக்குளித்து, கெட்ட தன் உடலைச் சாம்பலாக்கினாள். இச்செய்தி மகா ஸ்கந்த புராணம் தக்க காண்டம் இருபத்துமூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன்பின் அச்சாம்பவில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது. இது இரண்டாவது காரணம்.

3. ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்துகொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கள் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி. “நீ யாரடா?" என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல் திருமால் அவள் மேலிருந்த வண்ணமாகவே. "கேட்பது யாரடா?" என்றார். இவ் வெறுக்கத்தகுந்த செயலைக் கண்டு மீண்டு அத் தலைவன் இச்செய்தியை நந்திபிரானிடம் தெரிவித்தான். உடனே நந்திதேவர் அத்திருமாலைப் பூமியில் இராமனாய் பிறந்து. மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தியைச் சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.

அச்செய்யுள் வருமாறு:-

"அவளை நீ யாவனடா வென்று கேட்டே 

ளம்புயப் பெண் ணைத்தழுவ னீங்ககில்லா

னெவனமா துடன்கூடி யிலச்சை யின்றி 

யென்னை நீ யாவனடா வென்று கேட்டான் 

கவனமுறு மிவன் தூர்த்த ளென்று கண்டேன் 

கருத்தி லவன்றனைத் தள்ளவல்லே ளெம்மான 

சிவனருள்சே ருளதாணை குறித்து மீண்டேன் 

தேவரி தொரு புதுமையவள் பாற் கண்டேன்"

“மன்னவன் றன் மைந்தனா மிராமனாகி 

வந்து பிறந்திடக்கடவ னாகுமன்றே"

இது மூன்றாவது காரணம்.

இது போன்ற யாதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அமிசம் 2ஆம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது. அதாவது, வைகுண்டத்திலே திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்தில் திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றனர். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி, அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்தபடியே அவரை வராது நிற்கும்படி கைகாட்டித் தடுத்தனர். உடனே பிருகு முனிவர்.

"எந்நாளு மினியவந் திவேளை தன்னி

லேந்திழையைப் புணர்வரோ வுனக்கிப் புத்தி 

சொன்னாரா ருன்மத்த முண்டோ வென்று 

தூயமா தவன்றான்மா தவனை நோக்கிப் 

பன்னாளும் பிரதோடந் தனிலுன் னாமம் 

பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் 

துன்னாத நிரயத்திற் புகுவா ரென்று 

சூழ்கோபத் தாற்சாபஞ் சொல்லிப் போனான்."

மேலே கண்ட சாபங்கள் பலிக்குங் காலம் வர, திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார்.

இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்குக் கொலை, களவு, காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்ப வர்கள் கடவுளர்கள் ஆவார்களா? இச்செயல்கள் தேவலோகத்தில் நடந்ததா? பூலோகத்தில் நடந்ததா? தேவர்கள் எங்கிருப்பவர்கள்? அவர்கள் யாகம் செய்யப் பூலோகத்திற்கு ஏன் வரவேண்டும்? ஜீவப் பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று. பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும் உயர் பதவியும், மேன்மை யும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும், கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும், அதைத் தடுக்கிறவர்கள் இராட்ச தர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப் பட வேண்டியதாகும்.

இன்றைய நாள்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொதுமக்களும், அரசாங்கமும் கருதிப் பழிப்பும் ஆக்கினையும், தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத் தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் 'சிவபக்த'னான இராவணனுடைய நாட்டிலும் ஆட்சியிலும் இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும். தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்ய வேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததனாலேயே அந்த அர சனையும். அவனது குலத்தையும், குடிபடைகளையும், நாட்டையும், அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்துவர வேண்டியது கடவுள் தன்மையா? என் பனவும், இதைப்போன்ற பிறவற்றையுமே ஆராய்ந் தால், இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருந்துவருவது விளங்கும்.

இவை நம் கை சரக்கல்ல - ஹிந்து மத நூல் களிலிருந்தே எடுத்துக் காட்டியுள்ளோம். அறிவு நாணயம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.

1944ஆம் ஆண்டிலேயே "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலை தந்தை பெரியார் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மறுப்பு உண்டா?

இந்த இலட்சணத்தில் இலட்சம் முறை "ராமாவளி" எழுதினால் என்னென்னவெல்லாம் கிடைக்குமாமே!

காகிதத்திற்கும் மைக்கும் நேரத்துக்கும் உழைப்புக்கும் தான் கேடு - அம்மட்டே!

இராமரின் யோக்கியதாம்சம் குறித்து வரும் வெள்ளியன்று (14.4.2023) பதிலடியில் காண்போம்.