பக்கங்கள்

புதன், 28 டிசம்பர், 2016

ராமன் தின்ன மாமிசம் எது?

இறைச்சி உணவுகளில் மேத்யம் (பவித்திரமானது) அமேத்யம் (பவித் திரமில்லாதது) என்று வகைகள் இருந் தன. ஆடு, காட்டுப் பன்றி இவற்றின் இறைச்சிகள் பவித்திரமானவை மான் இறைச்சியும் பிரியமான உணவாக இருந்தது. வனவாச காலத்தில் முதல் நாள் யமுனா நதிக்கரையில் பன்றி, ருஷ்யம், ப்ருஷத், மஹாருரு போன்ற விலங்குகளை ராமன் வேட்டையாடி னான். பல மான்களையும் வேட்டையாடி உணவுக்குக் கொண்டு வந்தான். பஞ்சவடியில் கபட சங்கியாசியாக மாறு வேஷம் பூண்டு ராவணன் வந்தபோது, 'நீங்கள் கொஞ்சநேரம் தங்கியிருங்கள் என் கணவர் பல விலங்குகளை வேட் டையாடிக் கொண்டு வருவார்.நல்ல விருந்து உணவாக படைக்கிறேன்" என்று சீதாதேவி வேண்டிக்கொண்டாள்.

அய்ந்து நகங்களுள்ள பிராணிகளில் உடும்பு, முள்ளம் பன்றி, முயல், ஆமை, ச்வாலிதமிருகம், (நாயை வேட்டையாடிப் புசிக்கும் விலங்கு) இந்த அய்ந்தையும் பிராமணரும், ஷத்திரியரும் புசிக்கத் தக்க உணவாகக் கொண்டிருந்தார்கள். குரங்கு இறைச்சியை மேலானவர் புசிக்க மாட்டார்கள். கிராதர்கள் (செம்படவ இனத்தார்) பச்சையாகவே மீனைப் புசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பம்பைப் பொய்கையில் ரோஹிதம் சக்ரதுண்டம், நலமீனம் ஆகிய பெரிய முள் மீன்கள் நிறையக் கிடைத்தன. “அவை நல்ல ருசி யானவை, அவைகளை வேக வைத்துச்   சாப்பிடுங்கள்” என்று ராமனுக்கு கபந்தன் சிபாரிசு செய்தான்.
பரதன் தின்ன கருவாடு

மனித மாமிசத்தைப் புசிக்கும் வழக்கம் அரக்கர்களிடம் நிலவி வந்தது. உணவைச் சேகரம் செய்து வைக்க வேண்டி, இறைச்சி வகைகளைக் காய வைத்துப் பதப்படுத்தி வைப்பது அந்தக் காலத்தவரின் வழக்கம். புதிய இறைச் சியையும் காயவைத்த இறைச்சியையும் விருந்து உணவாக பரதனுக்குக் குகன் வட்டித்தான்.

- திரு. சவுரி எழுதிய 
"இந்தியாவின் கலையும் கலாசாரமும்" 
என்ற நூலின் பக்கம் 106-107
-விடுதலை ஞா.ம.,17.12.16

1 கருத்து:

  1. சில அம்பேத்கார் புத்தகங்களிலும், சில நாத்தீகவாதி புத்தகங்களிலும் கீழ்கண்ட ராமாயண வசணத்தை தவறாக கூறுகிறார்கள். எனவே அதன் உண்மை மொழிபெயர்ப்பை தந்துள்ளேன்.

    அயோத்திக்கு திரும்பி வந்தவுடன் மிகவும் ஆர்வத்துடன் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பொருள்க்களையும், பல்வகை உணவுகளையும் சமர்ப்பித்து உன்னை பூஜிப்பேன்.
    (அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)

    அங்கே, அவ்விருவரும் ஆசிரமத்திலுள்ள முனிவர்களுக்கு தொல்லை கொடுக்கும் காட்டு பன்றி,ரிச்சயம், ப்ருஷதம், மகாருரு என்கிற நன்கு வகையான பெருவிலங்குகளை கொண்ணு பயத்தை விலகினார்கள். காட்டில் கிடைக்கும் சில பண்டங்களை எடுத்து கொண்டு பசியோடிருந்த அவ்விருவரும் பொழுது சாயும் வேளையில் தங்குவதற்கு ஒரு பெரிய மரத்தின் அடியில் வந்து சேர்ந்தனர்.
    (அயோத்யாகாண்டம் சர்க்கம் 52 சுலோகம் 102)

    மிதிலை மன்னரின் புதல்வியான சீதைக்கு மலையை சுற்றி ஓடும் மந்தாகினியின் அழகை கட்டிய பின்னர், மலைச்சாரலில் உங்காந்து உண்பதற்கான பொருள்க்களை கொடுத்து உற்சாகப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தனர்.
    (அயோத்யாகாண்டம் சர்க்கம் 96 சுலோகம் 101)

    சகோதர்களாகிய ராமா-லட்சுமணர்கள் ஒரு கொச தூரம் நடந்து எதிரில் வந்த, முனிவர்களுக்கு இன்னல் விளைவிக்கும் பல விலங்குகளை கொன்னு (தங்குவதற்கு உகந்த இடம் தேடி) யமுனை கரையிலுள்ள காட்டில் சுற்றி அலைந்தார்கள். (அயோத்யாகாண்டம் சர்க்கம் 55 சுலோகம் 32)

    இப்படி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகவோ, மது அருந்தியதாகவோ எங்குமே கூறவில்லை. ஆனால், சிலர் தனது சொந்த கற்பனைகளை வைத்து இவ்வாறு ராமர் சாப்பிட்டதாக புழுகுகின்றனர்.

    எனவே, மக்கள் உண்மையை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு