பக்கங்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஜெய் ஸ்ரீராம்... முழங்குவோரே... ஸ்ரீராமன்... யார்?

,இரா.கண்ணிமை

உருவமும் பருவமும் கொண்ட கணிகையர் சென்று - முற்றும் துறந்த முனிபுங்கவரை அழைத்து வருகின்றனர் - யாகம் நடந்திட. தசரதனுக்குப் பிள்ளையில்லாக் குறையைப் போக்கி, புத்திரன் வேண்டுமென்றால் ரிஷ்ய சிருங்கரை (கலைக்கோட்டு முனிவன்) அழைத்து வந்து யாகஞ் செய்ய வேண்டுமென்று, சுமித்திரன் யோசனை கூறுகிறான்.

“யாகம்“ வெற்றிகரமாக முடிய ரிஷ்யசிருங்கரைக் காட்டிலிருந்து அழைக்க வேண்டாம். அதற்கு உத்தி என்னவென்றால் “தாங்கள் ரூபவதிகளான வேசை யர்களுக்கு வஸ்திரங்கள் - ஆபரணங்கள், வெகுமானம் கொடுத்து அனுப்புங்கள். அவர்கள் எல்லா விதத்தாலும் அந்த ரிஷியை அழைத்து வருவார்கள்” - என்று சுமித்திரன் சொல்லுகிறான்.
- இது வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் 10ஆம் சருக்கம், 35 ஆம் பக்கம். சி.ஆர்.சீனுவாசய்யங்கார் மொழி பெயர்ப்பில் உள்ளது.

“வேசையர்கள் காடு சென்று அவரை (ரிஷ்ய சிருங்கரை) இறுகத் தழுவினார்கள். ரிஷ்யசிருங்கர் மயங்கி அவர்கள் பின்வர அங்கதேசத்திற்குச் சென்ற னர்” - இதுவும் பாலகாண்டத்தில்.
அதே வால்மீகி இராமாயணம், தாத்தா தேசிகாச் சாரியர் மொழி பெயர்ப்பில் பாலகாண்டம் 10ஆவது சருக்கம், 36, 37 ஆம் பக்கத்தில் கீழ்க்காணும் விவரங்கள் காணப்படுகின்றன.
“நல்ல ரூபமும் பருவமும் உள்ள கணிகையர் மிக்க அலங்காரத்தோடு அங்கே செல்ல வேண்டும். சென்று பல வகையில் அவருக்கு ஆசை கொடுத்து அவரைச் சுவாதீனம் செய்ய வேண்டும்“ என்று சொல்லி அரசனுடைய அங்கீகாரத்தினால் புரோகிதர் முதலானோர் தக்க வேசியரை அலங்காரத்தோடு அங்கு அனுப்பினார்கள்.

கணிகையர் ரிஷ்யசிருங்கரை ஆலிங்கனம் செய்து கொண்டு சந்தோச மூட்டினர். அப்பெண்களை பிரிய ஆற்றவொட்டாமல் மனதில் குறையைக் கொண்டு, பைத்தியக்காரன் போல் அங்கு மிங்கும் திரிந்தார். மறுநாள் மகாசுந்தரிகளான அவர்களைக் கண்ட இடத்துக்கு (ரிஷ்ய சிருங்கர்) வந்து நிற்க, வேசிமாரும் அவர் சுவாதீனப்பட்டதினால் அழைத்துச் சென்றனர். இப்படி விரிகிறது இராமகாதை.

இராமன் கடவுள் அவதாரமென்றும், விஷ்ணு மனிதனாகப் பிறந்து மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துக் காட்டியதாகவும், பார்ப்பனரும், அவர்களின் அடிதொழும் பக்கதர்களும் கூறிவருகின்ற கீழ்வரும் குறிப்புகளால் நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

தசரதனுக்கு நான்கு மனைவிகள், அவர்கள் சூலான முறை: (வால்மீகி இராமாயணம், சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் மொழிபெர்யப்பு).

“தசரதனுக்கு புத்திர சந்தான முண்டாக செய்யப்படும் அஸ்வமேத யாகத்தில் 

1) ப்ரஹ்மா, 2) ஹோதா, 3) அத்வர்யு, 4) உத்காதா என்ற பிரதான (நான்கு) ரித்விக்குகள் அரசனால் தட்ச ணையாகக் கொடுக்கப்பட்ட 1) மஹிஷி 2) வர்வாதை, 3) பலாகலி, 4) பிரிவிருத்தி என்ற (நான்கு) ராஜபத்தினிகளின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் சூலாக்கி அதற்காக தசரதனிடம் அளவற்ற திரவியத்தை வாங்கிக்கொண்டு அவர்களை தசரதனிடத்தில் மீண்டும் கொடுத்து விட்டார்கள்”.
- பாலகாண்டம், சருக்கம் 14, பக்கம் 46-47

இதில் அஸ்வமேதயாகம் என்று சொல்லப்பட்டிருக் கிறதே. இந்த அஸ்வமேதயாகத்தின் அருவருப்பை என்னவென்று சொல்வது? சுருங்கச் சொன்னால் அஸ்வம் = குதிரை, மேதம் = சேர்க்கை. அதாவது குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.

அஸ்வமேத யாகத்தில், யாக பசுவாகிய குதிரையை எசமான் மனைவியாகிய மஹிஷியோடு இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம்.  இதைப்போன்ற மற்ற பௌண்டரீகம் முதலிய கீழான பல யாகங்கள் வேதத்தில் இருக்கிறது. இவ்வித பல யாகங்களை தேவர்களும், ரிஷிகளும், மனிதர்களும் செய்து முடித்தாலன்றி வேறு வகையில் முக்தி பதவியடைய முடியாதாம்.

புலால் தின்போரை சூத்திரர், தீண்டாதார் என்று சொல்லும் கள்ளக்குருக்கள். மறைமுகமாய் விருந்தி னருக்கு பசு, எருது மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும், யாகப்பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்குபோட்டு உண்பதும் இவர்களின் கதை.

“கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஓர் நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய ரித்விக்குகள் இராஜ பாரியைகளைப் புணர்ந்தார்கள்” - இவ்வாறு பண்டித மன்மத நாத சித்தர் - மொழி பெயர்த்து எழுதியுள்ளார்.

அயோத்தி அரசன் தசரதன் மூன்று பெண்களைத் திருமணம் செய்தும் கூட அவனுக்கு ஆண்மை பலம் இல்லாத காரணத்தால் மூன்று பட்ட மகஷிகளையும் உட்கார வைத்து, புத்திரகா மேஷ்டியாகம் செய்து, யாக பிண்டத்தை மூன்று பேருக்கும் சாப்பிடக் கொடுத்து, அன்று இரவு யாகப் பிராமணர்களோடும், யாகக்குதிரைகளோடும் மூன்று அரசிகளும் படுத்தி ருந்து - அதன் மூலம் கருத்தரித்துத்தான் ராமன், லட்சுமணன்  சகோதரர்கள் என நான்கு பேரையும் பெற்றெடுத்தார்கள் என்பது உங்களின் வால்மீகி இராமாயணத்தின் கதை.
இராமன் கதை என்பது வரலாறோ, நடந்த உண்மையோ அல்ல; முற்றிலும் கற்பனையான - விக்கிரமாதித்தன் கதை போல இதுவும் ஒன்று ஆகும். இந்த உண்மையை அறிஞர்கள் பலர் சொல்லிப் போயிருக்கிறார்கள்.

இது கதை தான் என்பதற்கு மேலும் பெரிய ஆதாரம், அதை நம்புகிறவர்களே அதற்கு வைத்திருக்கும் பெயர் “இதிஹாசம்“ - என்பது தான். இதிகாசம் என்றாலே பழங்கதை, நீண்ட நெடுங்காலக்கதை” - என்பது தான் என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எனவே இதிகாசக் கதையான ராமன் கதை வர லாறோ, நடந்தேறிய உண்மையோ அல்ல என்பதுதான் அப்பட்டமான உண்மை!

“எங்களின் ஒரே மதம் இந்து - இதிகாசம் இராமாயணம் - ஜெய் சிறீராம் - எங்களின் கோஷம்! - எனச்சொல்லுபவர்களை எல்லாம் இந்திய மக்கள் ஒரு மனதாக ஏற்பது என்றால் - உலக மக்கள் இந்தியர்களை ஆறறிவு படைத்த மனிதர்களாக மதிக்க மாட்டார்கள். அய்ந்தறிவு கால்நடைகளாகவே நினைப்பார்கள்.

ஆபாசக் களஞ்சியமான கடவுள் கதையின் இலட்சணம் இது.

பார்ப்பனர்களே - பக்தர்களே இதை எழுதியது குற்ற மல்ல - எடுத்துச் சொன்னால் மட்டும் புண்படு கிறதோ?

-விடுதலை,25.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக