பக்கங்கள்

புதன், 12 ஜூன், 2024

இராமரே தகர்த்தபின் இராமர் பாலம் ஏது?



 ஜனவரி 1-15, 2023

மஞ்சை வசந்தன்

இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் எடுத்துச் சொல்லும்போது, இல்லை யில்லை, இது எங்கள் மத நம்பிக்கை _ எங்கள் புராணங்கள் கூறும் செய்திகளின்படி நம்பிக்கை _ அந்த நம்பிக்கைக்கு விரோதமாக அதை இடிக்கக்கூடாது என்று எதிர்வாதம் செய்வதோடு, இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று எங்கள் நம்பிக்கையின் சின்னமான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.
ஆனால், உண்மை என்னவென்றால், புராணத்தையே படிக்காத அடி முட்டாள்கள், அரைவேக்காடுகள், ஆதிக்கப் பேர்வழிகள் பரப்பும் வதந்தியே இராமர் பாலம் என்பது. இராமர் பாலம் இல்லை என்பதை நாம் சொல்ல
வில்லை. அவர்களின் புராணமே சொல்கிறது.

இராமர் பாலத்தை, இராமரே தகர்த்தார்:-
சேது புராணம் செப்புவது என்ன?
இராமர் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், பித்தலாட்டமும் அப்பட்ட-மாக வெளிப்படுகிறது.
இராமர் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமர் தன் கையாலே, தனது வில்லினால் சேது அணையைத் தகர்த்து அழித்து விட்டார் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமர் பாலம் அமைத்தார் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப் பகுதிக்கு இராமர் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தைத் தகர்த்து அழித்து விட்டார் என்கிறது சேது புராணம்.

இராமர் பாலம் அமைத்ததையும், பின் அதை அவர் தகர்த்ததையும் கூறும் சேது புராணப் பகுதி இதோ:
மிதவை அணை கட்டியது எப்படி?
இலங்கைக்குப் போக வேண்டுமானால் வானராதிகளால் சமுத்திரத்திற்கு அணைகட்டி அப்பாலத்தில் நடந்துபோக வேண்டுமென்று சொல்ல, சுவாமியும் அந்த வார்த்தையை ஒப்புக் கொண்டு சமுத்திரமும் ஆழம் நீள மறிந்து அணையைக் கட்ட வருணனை நோக்கி ஏழுநாள் தர்ப்பாசனத்தில் வருண மந்திரத்தைத் தியானித்துக் கொண்டிருந்தார். அஃதறிந்து வருணணும் வராததுகண்டு க்ஷணத்தில் சுவாமிக்கு கோபம் வந்து பாணத்தைப் பிரயோகஞ்செய்தார். வருணனும் பயந்து சரணாகதியடைந்து தோத்திரமுஞ் செய்தான். சுவாமியுந்தயவுவந்து இச் சமுத்திரத்தின் ஆழமும் இலங்கைக்குப் போக நீளமென்னவென்று கேட்டு, அணை கட்ட வேண்டியதையுஞ் சொல்ல, வருணனுங்கேட்டு சுவாமி ஆழங்காணக்கூடாது அணை போட வேண்டுமானால் போட்டகல் மிதக்கும்படி வரப்பிரசாதங்களினால் பிறந்திருக்கின்றான், வானரப்படைத் தலைவரில் நளனென்று ஒருவன் சுவாமியுடன் வந்திருக்கின்றான்.

அவன் பூர்வஜன்மத்தில் மயனாகிய சிற்பனாக்கும். அவனுக்கு சுவாமியின் உத்தரவு கொடுத்து வானரப் படைகளால் ஒத்தாசை செய்தால் அவனும் கட்டு வானென்று சொல்ல, சுவாமியும் அவனை அழைத்துப் பரிசீந்து நீரிலே போட்டால் மிதக்கும்படி உன் பிதாவினுடைய வரப்பிரசாதம் பெற்றவனாகலின் அனுமார் முதலாகிய
வானரப்படை வீரர்களான வானர வீரர்கள் கொண்டு வந்து கொடுக்கின்ற பர்வதங்களை வாங்கி உன்கையினால் இலங்கைக்குப் போகும்படி வருணனுடைய முதுகின் பேரில் அணை கட்டென்று
ஸ்ரீ ராமசுவாமி வரப்பிரசாதங் கொடுத்தருளி, யாதொரு விக்கினங்களும் வராமல் நிறைவேற்றும்படிக்கு விக்கிநேஸ்வரனைப் பூசித்து அனுகிரகம் பெற்று அப்பால் நவக் கிரகங்களையும் விதிப்படி நவபாஷாண ஸ்தாபிதஞ்செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து அப்பால் சனிப்பீரிதியாய் எண்ணெயை வைத்து சிவப்பிரதிஷ்டை செய்து திலதீஸ்வரரை பூசித்து இவர்களுடைய அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு நளனுக்கு சேதுபந்தனத்துக் குத் தேங்காய் தொட்டுக் கொடுத்து அனுமார் முதலிய பெரியோர்களான படைத் தலைவரையும், வானரப் படைகளையும் நாலுதிக்குகளிலும் போய் பருவதங்களைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கட்டளை-யிட ஸ்ரீராமருடைய வாக்கியப்படி வானராதிகளெல்லாம் பருவதங்களை, சங்கை யில்லாமல் கொண்டுவந்து மேன்மேலும் கொடுக்க ஸ்ரீராமசுவாமியும், லக்ஷ்மணரும், ஜயம்ஜயமென்று வாக்குக் கொடுக்க நளனானவன் வாங்கிக் கட்டின திருவணை
யானது சேதுபந்தன முடிவாயிருக்கும்.

அப்படி ஸ்ரீராமசுவாமியாலே அநேக நதிகள், சுனைகள், ரிஷிகள், சஞ்சாரஞ்
செய்து கொண்டிருந்த பருவதங்களை ஸ்ரீராமர் வாக்கியத்தின்படி வானராதிகளால் கொண்டுவந்து கொடுக்க நளன் வாங்கி
அடைக்கின்றபோது சமுத்திரத்தை எப்போதுங் கண் பார்க்க வந்த ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி நடக்கும்போது பட்ட பாதாரவிந்தங்களிலுள்ள சங்கு சக்கரரேகைகள் சேதுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அத்தகைய பருவதங்கள் சங்கு சக்கரங்களில் அலைமோதிச் சத்தத்
துடன் ஆடம்பரஞ் செய்து கெர்ச்சிதங்களைப் பண்ணி தென் சமுத்திரமானது
மகா ஆனந்த சந்தோஷங்களை யடைந்து கொண்டிருக்கும்படி அலைமோதுகின்றன. சமுத்திர ஜலத்துக்கு சேது தீர்த்தமென்று பெயர் அநேகயுகங்களாய்ப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.

இராமர் பாலத்தைத் தகர்த்தது எப்படி?
மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபிஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்
திறைஞ்சப் புட்பக விமானத்திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்த வாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான், ‘‘சுவாமீ! வேதவேதாந்த மூர்த்தியே!

தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறேயிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்கு
வரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேது வாகிய அணையை சோதிக்க (தகர்க்க) வேண்டுமென்று
சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனது கரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே
நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்-களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.
மேலே கண்ட புராணக் கதையிலிருந்து கீழ்க்கண்டவை உறுதி செய்யப்படுகின்றன.

1. இராமர் பாலம் கடலுக்குள் அமைக்கப்-பட்ட மணல் பாலம் அல்ல.
2. இராமர் பாலம் மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல் என்
பதற்கு கடல் நீரின் மேல் என்பது
பொருள்).
3. இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமர் ஏற்று, இராமர் பாலத்தை இராமரே தகர்த்து விட்டார். அதுவும் எப்படித் தகர்த்தார்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமர் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தார்.
இந்த மூன்று செய்திகளும் உறுதி செய்யும் உண்மையென்ன?
1. தற்போது கடலுக்குள் உள்ள மணல்மேடு இராமர் பாலம் அல்ல. இராமர் பாலம், கடல் நீர் மீது மிதக்கும்படியான மிதவைக் கற்களால் அமைக்கப்பட்டது. எனவே இவர்கள் இராமர் பாலம் என்று கூறும் மணல் மேடு இராமர் பாலம் அல்ல. அது இயற்கையாய் உருவான மணல்திட்டு.
2. இராமர் கட்டிய பாலத்தை இராமரே தகர்த்து அழித்து விட்டார். எனவே இராமர் பாலமே இல்லை.
3. மத நம்பிக்கைக்கு அடிப்படை புராணம். புராணமே இராமர் பாலம் அப்போதே இராமனால் அழிக்கப்பட்டு விட்டது என்றுகூறி விட்டபின், இராமர் பாலம் இருப்பதாகக் கூறுவது மோசடியல்லவா? பித்தலாட்டமல்லவா?
சுப்பிரமணியசாமியும், மற்றுமுள்ள சங்கிகளும் பதில் சொல்லவேண்டும். உங்கள் புராணமே இராமர் பாலம் இல்லையென்று சொல்லவிட்டபின், எதை வைத்து இராமர் பாலம் இருப்பதாகச் சொல்கிறீர்கள்?
மத்திய அரசு, இந்த புராண ஆதாரத்தை அறிவியல் அறிக்கையை அடிப்படையாக வைத்து இராமர் பாலம் இல்லையென்று அறிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழர்கள் இதற்காகப் போராடவேண்டும். உண்மை நம் பக்கம். வெற்றி நமதே!


செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

இந்த இராமன்தான் கடவுளா? அம்பேத்கர் கேட்கிறார்!

சிந்தனைக் களம் : 

2022 ஆகஸ்ட் 01-15 2022 சிந்தனைக் களம்


அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடு-கிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல, வைப்-பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையைச் சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையைச் சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையி லேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியி லமர்த்திய பிறகும்கூட, சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமனைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிதான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்குச் சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனைச் சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) ‘உன்னைச் சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய, உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.’’

இராமன் சீதைக்கு, இதைவிடக் கொடுஞ்-செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.
“ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’’
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை -சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னைச் சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, -அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது.- “நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே’’ -என்று சீதை வெளிப்படையாகச் சொல்கிறாள். இப்படிப்-பட்ட இராமனை அற்பத்தனமானவன் என்று சீதை இகழ்ந்திடுவது இயல்பே.

(அம்பேத்கர் எழுதிய, ‘இராமன் – கிருஷ்ணன் ஒரு புதிர்’ நூலிலிருந்து…)
தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி

திங்கள், 12 பிப்ரவரி, 2024

இராமன் எத்தகைய இராமனடி!


ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?



விடுதலை நாளேடு,
Published February 2, 2024
இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?
வால்மீகி மூல இராமாயணத்தில் உள்ளதுபடி
– “ஆரியக்கூலி” கம்பர் மறைத்த உத்தரகாண்டம் இதோ:
சருக்கம் 73 – அகால மரணம்
ப்ரஸ்த2£ப்ய து ஸ ல்த்ருக்4நம் ப்ராத்ருப்4யாம் ஸஹராக4வ |
ப்ரமுமோத2 ஸுகீ2 ராஜ்யம் த4ர்மேண பரிபாலயந் ||
இப்படிச் சத்ருக்கனனை மதுபுரிக்கு அனுப்பி, ராமன் சகோதரர்களுடன் தர்மமாய் பிரஜாபாலனம் செய்து கொண்டு மகிழ்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு, நாட்டுப் புறத்தில் வசிக்கும் ஒரு கிழப் பிராம்மணன் உயிரிழந்த தன் புத்திரனை எடுத்துக்கொண்டு அரண்மனை வாசலில் வந்து பலவிதமாய் புலம்பினார். புத்திர சோகத்தாலும் துக்கத்தாலும் மெய்மறந்து, “ஐயோ! குழந்தாய்! நான் பூர்வ ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ? என் ஒரே குழந்தை, எனக்கு முன் மரணமடையப் பார்க்கும் விதி நேர்ந்ததே? ஐயோ! உனக்கு இன்னும் பதினான்கு வயதாகவில்லையே! லோகத்தின் சுகங்களை அனுபவிக்காமல் அகாலத்தில் காலனுடைய பாசத்தால் கட்டுப்பட்டு என்னையும் துக்க சமுத்திரத்தில் தள்ளினாயே! உன்னை இழந்து நானும் உன் தாயும் பிழைத்திருப்போமா? சில தினங்களில் நாங்களும் மரணமடைவோம்.
பிராமணனது அழுகை:
இந்தக் கஷ்டம் எனக்கு நேரக் காரணம் யாதொன்றையும் அறியேன்; நான் பொய் சொன்னதில்லை; ஒருவரையும் இம்சித்ததில்லை; பூர்வ ஜன்மங்களில் பிராணிகளிடத்தில் யாதொரு பாபத்தையும் செய்ததில்லை. எனக்கு என் புத்திரன் உத்தரக்கிரியைகளைச் செய்ய வேண்டியிருக்க, அவன் பால்யத்திலேயே யமலோகத்திற்குப் போகும்படியான கொடிய காரியம் என்ன செய்தேன்? இதுவரையில் இப்படிப் பட்ட அநியாயத்தைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; இந்த ராமனுடைய ஆளுகையில் மாத்திரமே இவ்விதமான அகாலமரணம் சம்பவித்திருக்கிறது. ராமன் ஏதோ மகா பாபத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தேசத்தில் குழந்தைகளுக்கு மரணபயம் உண்டாகுமா?” என்று கதறி அழுதார்.
மகனை இழந்த சோகம்:
இதற்குள் ராகவனும் சகோதரர்களும் பரிஜனங்களும் வெளியில் வந்தார்கள். பிராம்மணன் ராமனைப் பார்த்து அடங்காக் கோபங்கொண்டு, “மகாராஜரே! என் புத்திரன் பாலன்: மரணத்தின் வசத்தில் அகப்பட்டான்; இவனை இப்பொழுதே பிழைப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உன் அரண்மனை வாசலில் நானும் என் மனைவியும் உயிரை விடுவோம். இந்தக் கோசல ராஜ்யத்தில் மக்களைக் காக்க நாதனில்லை என்று தோன்றுகிறது. எங்களைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் உன்னை ஒவ்வொரு நிமி ஷமும் உபத்திரவிக்கட்டும்: நீ சுகமாய் இரு. எங்களுடைய பழியைக் கட்டிக்கொண்டு நீயும் உன் சகோதரர்களும் தீர்க்காயுசுள்ளவர்களாய் வாழுங்கள். நீ ராவணாதி அசுரர்களை வென்றாய் என்றும் மகாபலவானென்றும் புகழ் அடைந்திருக்கிறாய்.
இராமனது ஆட்சியைப் பழித்தல்:
உன்னால் ஆளப்பட்ட ராஜ்யத்தில் வசிக்கிறோம். நீ எங்களிடத்தில் கடமை வாங்கவில்லையா? எங்களை காக்கக் கடமைப்பட்டிருக்க வில்லையா? உன்னால் எங் களுக்கு எள்ளளவும் சுகமில்லை. அகாலத்தில் எங்களுக்கு மரணபயம் நேர்ந்தது உன்னாலல்லவா? இட்சுவாகு வம்ச சக்கரவர்த்திகளான மகாத்மாக்கள் ஆண்ட ராஜ்யம், குழந்தைகளுக்கு மிருத்யுவான ராமனுடைய கையில் அகப்பட்டு நாதனில்லாமல் போயிற்றே! அரசன் நீதியாகப் பிரஜாபாலனம் செய்யாவிட்டால் அவனுடைய தோஷங் களால் ஜனங்கள் நாசமடைகிறார்கள். அரசனுடைய துராசாரத்தால் ஜனங்கள் அகாலத்தில் மரணமடைகிறார்கள். அல்லது நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிரஜைகள் செய்யும் பாவங்களை அரசன் சிட்சிக்காமலிருந்தால் அகால மரணம் நேரும். உன் தோசத்தால் என் புத்திரன் இறந்தானென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்திலாவது தேசத்திலாவது ஏதோ அநியாயம் நடக்கிறது” என்று சொல்லி, பலவகையில் மேன்மேலும் அரசரை நிந்தனை செய்துகொண்டு, மிகவும் வருந்தி தன் மகனை அணைத்துக் கொண்டார்.
ஏவம் ப3ஹுவிதை4ர் வாக்யை ருபருத்4ய முஹுர் முஹு: |
ராஜாநம் து3க்க3 ஸந்தப்த: ஸுதம் தமுபகூ3ஹதே ||
சருக்கம் 74 – யுக தர்மம்
ததா2 து கருணம் த3ஸ்ய த்விஜஸ்ய பரிதே3வநம் |
—ஸ்ராவ ராக4வ: ஸர்வம் து2க்க2 «ல்£க ஸமந்விதம் ||
இப்படி அந்தப் பிராம்மணன் துக்கத்தாலும் சோகத்தாலும் புத்தி சிதறித் தீனமாய் பிரலாபித்ததை ராகவன் கேட்டார். அதைப் பார்க்க சகிக்கவில்லை; மந்திரிகளையும் சகோதரர் களையும் வைசியப் பெரியோர்களையும் வசிட்டர் வாமதே வர் முதலியவர்களையும் அழைத்துவரச் சொன்னார். கொஞ்சநேரத்திற்குள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். “மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காச்யபர், காத் யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய மகாத்மாக்கள் ராமனை மங்களாசீர்வாதம் செய்து, அவரால் விதிப்படி பூஜிக்கப்பட்டு, தகுந்த இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். ராமன் அவர்களைக் கைகூப்பி வணங்கி மந்திரிகளையும் வைசியர்களையும் அனுகூலமாய் உபசரித்தார். பிறகு, நடந்த விருத்தாந்தம் யாவற்றையும் தெரிவித்து, “இந்தப் பிராம் மணர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
கிருதயுகமும் திரேதாயுகமும்:
ரகுநாதன் கவலைகொண்டு முகம் வாடியிருப்பதைப் பார்த்து, நாரதர், “மகாராஜா! இந்தக் குழந்தைக்கு அகாலத்தில் மரணம் நேர்ந்த காரணத்தைச் சொல்லுகிறேன். அதைக் கேட்டு தகுந்தபடி செய். ஆதியில் கிருத யுகத்தில் பிராம் மணர்களே உபவாசம் விரதம் காயக்கிலேசம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துத் தவம் செய்துவந்தார்கள். மற்றவர்கள் நித்ய இல்லறத் தர்மங்களை மாத்திரம் நடத்தி வந்தார்கள்; தவம் செய்யவில்லை. இப்படித் தவத்தால் பிரகாசித்து, பிராம்மணர்களே பிரதானமாய், அக்ஞானத்தால் மயங்காமல், எல்லா மக்களும் கிருத யுகத்தில், வசிக்கும் பொழுது மரணமென்பதே இல்லாமல் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அதர்மம் கொஞ்சம்கூட இல்லை. மூன்று காலங் களிலும் நடக்கும் சகல விருத்தாந்தங்களையும் சுலபமாய் அறியும் சக்தி அவர்களுக்கு உண்டு. அந்த யுகம் முடிந்த பிறகு திரேதாயுகம் ஆரம்பித்தது. அதில் மனுவம்சத்தில் பிறந்த சத்திரியர்களே பிரதானம், திட சரீர முள்ளவர்களாய் அவர்கள் தவத்தைப் பூர்ணமாய் மேற்கொண்டார்கள்.
(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றென்ற புத்தி மறை யவும் தேகத்தில் அபிமான முண்டாயிற்று. திரேதாயுகத்தில் வசித்த மனிதர்களுக்கு இதே முக்கியமான குணம், முன்பு பிராம்மணர் களால் மேற்கொள்ளப்பட்ட தவத்தை இவர் களும் செய்ய ஆரம்பித்தார்கள். தீரயீ என்று சொல்லப்பட்ட வேதத்தில் விதித்த திரேதாக்னியால் செய்ய வேண்டிய கர்மங்களில் பிரவிருத்தி முக்யமாவதால் இந்த யுகத்திற் கிரேதாயுகமென்ற பெயர் வந்தது தீர்த்தீயம்)
ஆனால் அவர்களைவிட கிருதயுகத்திலிருந்த பிராம் மணர்கள் வீரியத்திலும் தவத்திலும் மேலானவர்கள்; திரேதா யுகத்திலிருந்த பிராம்மணர்கள் சிறிது தாழ்ந்தவர்கள். அதனால் அந்தக் காலத்து சத்திரியர்கள் அவர்களுக்கு சமானர்கள். (கிருதயுகத்தில் சத்ரியர்களுக்குத் தவம் செய்ய அதிகாரமில்லாததால் பிராம்மணர் களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள். திரேதாயுகத்தில் இருவர்க்கும் தவம் செய்ய அதிகார மேற்பட்டதால் சமானர்கள்-தீர்த்தீயும்) ‘கிருத யுகத்தில் பிராம்மணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் தபஸால் பேதம் ஏற்பட்டிருந்தது. திரேதாயுகத்தில் இருவரும் தவம் செய்ததால் யாதொரு பேதமும் தோன்றவில்லை. ஆகை யால் வேதங்களில் சொல்லியிருக்கும் நான்கு வர்ணங் களையும் ஏற்படுத்தி அவைகளுக்குத் தகுந்த ஆசாரங்க ளையும் கற்பித்தார்கள்.
மாறிவரும் யுகங்களுக் கேற்ப மாற்றங்கள்:
இப்படி யக்ஞம் முதலிய தர்மங்களைப் பிரதானமாகக் கொண்டு அதர்மம் மேலிடாமல் திரேதாயுகம் விளங்கும் பொழுது, அதர்மம் நாலிலொரு பாகத்தைப் பூமியில் பரவச் செய்தது. கிருதயுகத்தோர்களுக்குக் களங்கமற்ற ஞான மிருந்ததால் அவர்கள் பிரம்ம வித்தையில் அதிகாரம் பெற்று அதர்ம கிலேசமுமற்றிருந்தார்கள். திரேதாயுகத்தோர்களுக்கு அந்த நிர்மல ஞானமில்லாததால் பிரம்ம வித்தையில் அதி காரமில்லை. வர்ணாசிரம தர்மங்களையே மேற்கொண்டார் கள். ஆகையால் அதர்மம் பரவ ஆரம்பித்தது. (திரேதா யுகத்தில் வர்ணாசிரம தர்மங்களே பிரதானமாக இருந்தன. அவைகளை மேற்கொள்வதற்கு இடையூறான பாபங்கள் இல்லை. அப்போது பரகிம்சை அசத்யம் அதிருப்தி என்ற ரூபத்தையுடைய அதர்மம், அதன் நாலு பாதங்களில் ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து நடந்தது. அதர்ம சம்பந்தத்தால் அவர்களுக்குத் தேஜஸ் மந்தமாயிற்று, கிருதயுகத்தில் எல்லோரும் நினைத்த காரியங்களை உடனே முடிக்கும் சக்தியுள்ளவர்கள். பயிரிடாமலும் சமைக்காமலும் தங் களுக்கு வேண்டிய ஆகாரத்தை அடையக்கூடிய யோக சக்தியுள்ளவர்கள். திரேதாயுகத்தில் அந்த யோக்யதை இல்லாமையால் எல்லோராலும் நிந்திக்கப்படும் ஜீவனோ பாயத்தைக் கைப்பற்றிப் பிறர்க்குத் தொண்டு செய்து பிழைத்தார்கள். பூமியைப் பயிரிட்டு அதனால் கிடைத்த தான்யத்தைச் சமைத்து தேகத்தை வளர்த்தார்களென்று கருத்து.)
இது அதர்மத்தின் முதலாவது பாகத்திற்கு அடையாளம், அதர்மம் மேலிடக் கிருதயுகத்தில் ஜனங்களுக்கு இருந்த ஆயுள்காலம் குறைந்தது. அதைக்கண்டு பயந்து, எல் லோரும் சத்யத்தையும் தர்மத்தையும் கைப்பற்றி, மங்கள கரமான கர்மங்களையே செய்து வந்தார்கள். (திரேதாயுகத்தில் அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு யாக யக்ஞம் முதலிய கிரியைகளால் சித்தம் தெளிந்ததென்று கருத்து) பிராம்மணர்களும் சத்திரியர்களும் தவம் செய்தார்கள். வைசியர்களும் நான்காவது வர்ணத்தவர்களும் அவர் களுக்குப் பணி செய்து வந்தார்கள். இவர்களுக்குப் பயிரிடு தல் வியாபாரம் பணிவிடை செய்தல் கடமையாகும். சேவை நான்காம் வர்ணத்தவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
திரேதாயுகத்தின் முடிவில் அதர்மத்தால் ஆயுள் வரவரக் குறைந்தது. பயிரிடுதல் முதலிய தொழில்களால் கஷ்டம் அதிகரித்தது. ஜனங்கள் மரணமடைய ஆரம்பித்தார்கள். அப்பொழுது அதர்மம் இரண்டாவது பாதத்தைப் பூமியில் வைத்தது. ஆகையால் அதற்குப்பின் வந்த யுகத்திற்குத் துவாபரமென்று பெயர். ஜனங்களுடைய ஆயுட்காலம் இன்னும் குறைந்தது. விசேஷ சிரமப்பட்டாலொழிய பயிர்த்தொழில் பயனைக் கொடுக்கிறதில்லை. இந்த யுகத்தில் வைசியர்கள் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தார்களும் தவம் செய்ய அதிகாரம் பெற்றார்கள். நான்காம் வர்ணத்தவனுக்குத் தவம் செய்ய அதிகாரம் ஏற்படவில்லை; சமயம் கிடைக்கவுமில்லை. கலியுகத்தில் அது அனுஷ்டானத்திற்கு வரும்.
குழந்தை பிழைக்கும் வழி:
துவாபரத்தில் பரம அதர்மமான காரியத்தை, இந்தத் திரேதாயுகத்தில் ஒருவன் செய்யக் கூடுமோ? இப்பொழுது உன் ராஜ்யத்தில் யாரோ தகுதியற்ற ஒருவன் தவம்செய்து கொண்டிருக்கிறான். இந்தப் பிராம்மணனுடைய புத்திரன் அகாலத்தில் மரணமடைந்ததற்கு அதுவே காரணம். அரச னுடைய ராஜ்யத்திலாவது ராஜதானியிலாவது தர்மத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்யும் புத்திஹீனன் நரகத்தை அடைகிறான். அந்த அரசனுக்கும் அதேகதி. பிரஜைகளிடத்திலிருந்து ஆறிலொரு கடமை வாங்கிக் கொண்டு அவர்களை அரசன் காக்க வேண்டிய தல்லவா நியாயமாய் ராஜ்யபாலனம் செய்பவன் பிரஜைகள் செய்யும் வேதாத்யயனத்திலும் பாகத்தையடைவது போல் அஜாக்கிரதையால் காக்கத் தவறுகிறவன் அவர்கள் செய்யும் பாவத்திலும் பாகத்தை அடைகிறான். ஆகையால் உன் ராஜ்யத்தில் நன்றாய்த் தேடிப்பார். அதர்மம் கண்ணில் பட்டவுடன் அதை நீக்க வேண்டும். அப்பொழுது தர்மம் ஓங்கித் தழைக்கும்; ஆயுள் விருத்தியாகும்; இந்தக் குழந்தை யும் பிழைப்பான்” என்றார்.
ஏவம் சேத் த4ர்ம வ்ருத்3தி4ஸச ந்ருணாம் சாயுர் விவர்த4நம் |
ப4விஷ்யதி நர•ரேஷ்ட2 ப3£லஸ்யாஸ்யச ஜீவிதம் ||          
(32)
சருக்கம் 75 – தபசியைக் காணுதல்
நாரத3ஸ்ய து தத்3 வாக்யம் ஸ்ருத்வாம்ருத மயம் தத2£ 
ப்ரஹர்ஷ மதுலம் லேபே4 லக்ஷமணம் சேத3 மப்2ரவீத்||        
(1)
நாரதருடைய வார்த்தையைக் கேட்டு ராமன் அமிருதபானம் செய்ததுபோல் மகிழ்ந்து லட்சுமணனை அழைத்து, “நீ அந்த பிராம்மணரிடத்திற்குச் சென்று கொஞ்சகாலம் பொறுத்திருக்கும்படி கேட்டு சமாதானம் செய். அந்தக் குழந்தையின் தேகத்தை எண்ணெய்க் கொப்பரை யில் வைத்து வாசனை திரவியங்களால் காப்பாற்றுங்கள். அவயவங்கள் விகாரமடையாமலும் தளராமலும் சொரூபம் மாறாமலும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்” என்று ஆணையிட்டு, புஷ்பக விமானத்தை வரும்படி நினைத்தார். உடனே அது கண்ணிற்குத் தோன்றி அவரை நமஸ்கரித்து, பிரபோ! தங்களுடைய அடிமை; இதோ வந்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தது.
ராமன் தபசியைத் தேடி அடைதல்:
ராமன் ராஜ்யத்தைப் பரத லட்சுமணர்களிடத்தில் ஒப்பு வித்து, மகரிஷிகளிடத்தில் உத்தரவுபெற்று ஆயுதபாணியாய் அதில் ஏறிச் சென்றார். மேற்குத் திக்கில் வெகு ஜாக்கிரதை யாய்த் தேடிப்பார்த்தும், யாதொரு அதர்மத்தையும் காண வில்லை. அப்படியேவடக்கும் கிழக்கும் நிர்மலமான கண்ணாடியைப்போல் தெளிவாக இருந்தன.
பிறகு தெற்குத் திக்கில் செல்லுகையில், விந்தியபர்வதத் திற்கு அடுத்த சைவலமென்ற மலையின் சாரலில் ஒரு பெரிய ஏரியையும் அதனருகில் ஒரு தபசி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு கடுந்தவம் செய்வதைக் கண்டார். ராமன் அவனருகே சென்று, “நீ தன்யன்; கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கிறாய் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன்; இவ்வளவு உறுதியாய்த் தவம் செய்யும் நீ யாரென்று அறிய ஆசை கொண்டேன். நான் அயோத்தியாதிபதி; தசரத புத்திரனான ராமன்.
தபசியை பார் எனல்:
இந்தத் தவத்தால் தேவதைகளைத் திருப்தி செய்து எந்த விரதத்தைப் பெற உத்தேசிக்கிறாய்? சொர்க்கமா? மோட் சமா? நீ பிராம்மணனா? பராக்கிரமசாலியான சத்ரியனா? நான்காம் வர்ணத்தவனா? நிஜத்தைச் சொல்” என்றார்.
அந்தத் தபசி தலைகீழாக இருந்து கொண்டே தன் ஜாதியையும் உத்தேசத்தையும் ராமனுக்குத் தெரிவித்தான்.
இத்யேவமுக்த: ஸ நராதி4பேந 
அவாக் —ரா தா2ஸரதா2ய தஸ்மை |
உவாச ஜாதிம் ந்ருப புங்கவாய
யத் காரணம் சைவ தப: ப்ரயத்ந: ||
சருக்கம் 76 – சம்பூகனுடைய வதம்
தஸ்ய தத்2 வசநம் •ருத்வா ராமஸ்யாகலிஷ்ட கர்மண:| 
அவாக்—ராஸ் தத2ர பூத்வா வாக்யமேத து2வாச ஹ || 
“மகாராஜா! நான் நான்காம்வர்ணத்தவள்: சம்பூகனென்று எனக்குப் பெயர் – இந்தச் சரீரத்துடன் தேவபதவியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன் இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே” என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி அவன் தலையை வெட்டினார். தேவர்கள் ‘நல்லது நல்லது’ என்று அவரை அடிக்கடி புகழந்தார்கள். ஆகாசத்திலிருந்து. பரிமளமுள்ள புஷ்பமாரி பெய்தது.
தேவர்களிடம் ராமன் கேட்டது:
தேவர்கள் அவரிடத்தில் அளவற்ற அன்பு கொண்டு “ராம! மகாபுத்திமானே! இந்தப் பரமோபகாரத்தை எங் களுக்குச் செய்த நீ, வேண்டிய வரங்களைக்கேள். கொடுக்கி றோம். இவன் தவத்தால் சொர்க்கத்தை அடையத் தகுந்த வனா? அவனுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் நன்றாகச் செய்தாய்” என்றார்கள். ராமன் கைகூப்பி, “தேவேந்திர! என்னிடத்தில் தேவர்களுக்குச் சந்தோஷமுண்டானால் அந்தப் பிராம்மணனுடைய புத்திரன் பிழைக்கட்டும். நான் கோரும் வரம் இதுவே. அவருடைய ஒரே புத்திரன் அகாலத்தில் மரணமடைந்தது என் அபராதத்தாலல்லவா? அவனைப் பிழைப்பியுங்கள். நான் செய்த பிரதிக்ஞை பொய்யாகக்கூடாது” என்றார்.
அப்பொழுது தேவர்கள் “ரகுவீர! கவலைப்படாதே. அந்தக் குழந்தை பிழைத்தெழுந்து பெற்றோர்களுடன் சுகமாயிருக்கிறான். இந்தத் தபசியை நீகொன்ற கணத்தி லேயே அவன் உயிர்பெற்று எழுந்தான். உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். அகத்திய மகரிஷியின் புண்ணியாசிரமத்திற்குப் போவோம் வா. அவர் பன்னிரண்டு வருடங்களாக ஜலத்தில் படுத்துக்கொண்டு ஒரு கடுமையான விரதத்தை அனுஷ்டித்து இன்று முடித்தார். அவரைத் தரிசித்துப் புண்ணியம் பெற்றவர்களாவோம். நீயும் வா” என்று அழைத்தார்கள்.
அகத்தியரின் இருப்பிடம் செல்லுதல்:
ராமன் அதற்குச் சம்மதித்துப் புஷ்பகத்திலேறி அவர் களுடன் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார். தேவர்கள் தானிருக்குமிடத்தைத் தேடிவருவதைக் கண்டு, அகத்தியர் அவர்களை விதிப்படி உபசரித்தார். அவர்கள் அந்தத் தபோநிதியால் பூஜையைப் பெற்று, அவரைத் தாங்கள் பூசித்து மகிழ்ச்சியாய்த் தேவலோகம் சென்றார்கள். பிறகு ராமன் விமானத்திலிருந்து இறங்கி அந்தத் தர்மாத்மாவை நமஸ்கரித்து, அவரால் வெகு அன்புடன் உபசரிக்கப்பட்டு இருக்கையில் உட்கார்ந்தார். அந்த மகாதபஸ்வி, “புரு ஷோத்தம! க்ஷேமமா? உன்னைப் பார்க்க என்ன பாக்கியம் செய்தேனோ? என் சகல தபசும் புண்ணியமும் விரதமும் நியமமும் ரூபமெடுத்து வந்ததோ? அனந்த கல்யாணகுண நிதியான உன்னிடத்தில் எனக்கு எல்லையற்ற அன்பு; மேலும் நீ அதிதி; மேலும் மகாராஜா; என் இதய கமலத்தில் நித்யவாசம் செய்யும் இஷ்ட தெய்வம். ஆகையால் பூஜை என்பது உனக்கே தகும்.
அகத்தியர் அளித்த ஆபரணம்:
சம்பூகனென்ற தபசியைக் கொன்று அக்குழந்தையைப் பிழைப்பித்தாயென்று தேவர்கள் சொல்லுகிறார்கள். இன்று ராத்திரி என்னுடன் இங்கேயிரு. காலையில் அயோத்யைக்குப் போகலாம். நீ ஆதிபுருஷன்; லக்ஷ்மீ சமேதன்; சகலப் பிரபஞ்சமும் உன்னிடத்தில் அடங்கியிருக்கிறது; சகல பூதங் களுக்கும் நீ ஆத்மா; புராண புருஷன். இந்த ஆபரணத்தைப் பார்; இது விசுவகர்மாவால் செய்யப்பட்டது; அபாரதேஜஸால் ஜொலிக்கிறது. இதைப் பெற்றுக்கொள்.
எனக்கு நிகரற்ற ஆனந்தமுண்டாகும். ஒருவனுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்ட பொருளை உப யோகிக்காமல் வேறொருவர்க்கு அதையே வெகுமானமாய்க் கொடுப்பது விசேசபலனைக் கொடுக்குமென்று பெரி யோர்கள் சொல்லுகிறார்கள். இதைத் தரிக்கவும் இதனுடைய அபூர்வபலன்களை அனுபவிக்கவும் நீயே தகுந்தவன். ‘இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆதாரம் நீயல்லவா? ஆகையால் இதை உனக்கு விதிப்படி தானம் செய்கிறேன் பெற்றுக்கொள். விசித்திர சக்தியுடன் சூரியனைப்போல் பிரகாசிக்கும் இந்தத் திவ்யாபரணம் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” என்றார்.
சத்ரியன் தானம் பெறலாமா?
அதைக்கேட்டு மகாபுத்திமானான ராமன், தான் இட்சுவாகு சக்கரவர்த்திகளின் வம்சத்தில் பிறந்தவரென்றும், அவர்கள் பிறருக்குக் கொடுப்பதேயன்றி வாங்குவதில்லை யென்றும். அது சத்திரிய தர்மத்திற்கு விரோதமென்றும் ஆலோசித்து, “சுவாமி! பிராம்மணன் தானம் வாங்கலா மென்று சொல்லப்படுகிறது: சத்ரியனுக்கு அது கூடாது – அப்படிப்பட்ட தங்களிடத்தில் சத்ரியனான நான் தானம் வாங்கலாமா? இதன் தர்மத்தை எனக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.
அதற்கு அகத்தியர், “ராம! கிருதயுகத்தில் பிராம்மணர்கள் பூமியை ஆண்டு வந்தார்கள். அரசர்களில்லை. இந்திரன் தேவர்களுக்கு அரசனாயிருந்தான். அப்பொழுது மக்கள் பிரம்மாவிடத்திற்குச் சென்று, “தாங்கள் தேவர்களுக்கு இந்திரனை அரசனாக நியமித்திருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும். அவனைப் பூஜிப்பதால் எங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வோம். இனி அரசனில்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்” என்றார்கள்.
அதைக்கேட்டு பிரம்மா அவர்களுக்குப் பரமஇதமான விஷயத்தை ஆலோசித்து, இந்திரன் முதலிய லோக பாலர்களை அழைத்து, ‘உங்களுடைய தேஜஸில் ஒரு பாகத் தைக் கொடுங்கள்’ என்றார். பிறகு சூப்பென்ற ரஜசப்தத்தைச் செய்ய அதிலிருந்து சூபனென்ற அரசனுண்டானான். லோகபாலர்களுடைய அம்சங்களை அவனிடத்தில் வைத்து, அவனை மக்களுக்கு ஈச்வரனாயிருக்கும் படி நியமித்தார். இந்திரனுடைய அம்சத்தால் அரசன் பூமியை ஆளுகிறான்; வருணனுடைய பாகத்தால் மக்களின் தேகங் களைக் காக்கிறான்; குபேரனுடைய பாகத்தால் தனத்தைக் கொடுக்கிறான்; யமனுடைய பாகத்தால் தண்டிக்கிறான்; ஆகையால் இந்திரனுடைய அம்சத்தால் நீ இதைப் பெற்றுக்கொள்; இதனால் உனக்கும் மங்களமுண்டாகும்; எனக்கும் உத்தம கதி கிடைக்கும்” என்றார்.
ஆபரணம் கிடைத்த விதம் கேட்டல்:
அவருடைய வார்த்தை உத்தம தர்மத்திற்கு ஒத்திருப் பதைக் கண்டு ராமன் அந்த ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டார். “மகரிஷே! திவ்யரூபத்தையும் காந்தியையும் உடையதாய். வெகு அற்புதமாக இருக்கிறது. இது தங்களுக்கு எப்படிக் கிடைத்தது? யாரிடத்திலிருந்து இதைக் கொண்டு வந்தது; அபூர்வமான கிருத்தியங்களைச் செய்வதில் தங்களுக்கு நிகரில்லை. சமுத்திர ஜலத்தைக் குடித்தது விந்திய மலையை அழுத்தினது, வாதாபி இல்வலனென்ற அசுரர்களைக் கொன்றது முதலிய ஆச்சரியங்களைத் தங்களிடத்தில் காணலாம். ஆகையால் இதை அறிய வேண்டுமென்ற ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றார். அகத்தியர், “ராம! இந்த மனோகரமான தலத்தில் சென்ற திரேதாயுகத்தில் நடந்ததைச் சொல்லுகிறேன். கேள். இந்த ஆபரணம் எனக்குக் கிடைத்த பொழுது ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டேன்” என்றார்.
ரமணீயப்ரதே3 «ல்ஸ்மித் வநே யத்2த்2ருஷ்டவாநஹம்| 
ஆ•சர்யம் மே மஹா பா3ஹோ த3£நமா•ரித்ய கேவலம் || 


ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்?



விடுதலை ஞாயிறு மலர்,
Published January 27, 2024

பாணன்

இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா – சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி உயிரிழப்புகள் உண்டு) இருப்பினும் அங்கு வழிபாட்டுத்தலங்களுள் அனைவரும் ஒன்றே.
ஆனால் இங்கே.. ஹிந்து தேசம் என்றால். மகாராட்டிராவில் ராமனைத் தேடமுடியாது, பெண் தெய்வ வழிபாடுதான், அதே போல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் ஜெய் மாதா ஜி – பெண் தெய்வ வழிபாடுதான்.
தெற்கே பகவதியும், மாரியம்மனும், சாமுண்டியும், எல்லம்மாவும் பவானியும், துர்க்காவும், மாகாளியும் தான் இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை துவங்கி தக்காண பீடபூமி முழுவதும் மற்றும் கிழக்கு வங்க விரிகுடா எல்லை வரை பெண் தெய்வ வழிபாடுதான், பூரி ஜெகனாதர் ரதயாத்திரையை காட்டும் தொலைக்காட்சிகள் பல லட்சம் பேர் கூடும் வீரம்மா தாலி கோவில் தேர்த் திருவிழாவை என்றாவது காட்டியுள்ளனவா?
வீரம்மா படம் இல்லாத சாமானிய தெலுங்கு மக்களின் வீடே ஆந்திரா, தெலங்கானாவில் கிடையாது.

கருநாடகாவில் வீட்டில் ஒரு குழந்தைக்காவது சாமுண்டி மற்றும் எல்லாவின் ஒரு எழுத்தாவது வருமாறுதான் பெயர் சூட்டுவர்கள். நெல்லையில் இன்றும் நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் செல்லாத ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மக்கள் உண்டு. (எனது தாத்தா பாட்டி கடைசி வரை அங்கு சென்றதே கிடையாது. இத்தனைக்கும் எங்கள் ஊரில் இருந்து மார்க்கெட் போகவேண்டும் என்றால் நெல்லை டவுணிற்கு என்று மட்டும் 29 ஆம் நம்பர் பேருந்து உண்டு.
இதில் என்ன கூத்து என்றால் உத்தரப்பிரதேசத்தில் 62 விழுக்காடு ஹிந்துக்கள் சிவனை வழிபடும் ஹிந்துக்கள் இவர்கள் ராமனை வணங்கமாட்டர்கள். உத்தராகண்டில் சிவன்தான் முதல் தெய்வம், இதனை மறைத்துத்தான் கேதர்நாத்தை முன்னிறுத்துகின்றனர்.
ஜார்கண்ட், சத்தீஷ்கர் சென்றால் அங்கும் மகிஷவர்த்தினிதான் வெகுஜனம் வழிபடும் தெய்வம், வடகிழக்கு மாநிலங்களில் பெண் தெய்வ வழிபாடுதான் முதன்மை, அவதிபுரி எனப்படும் அயோத்தி மற்றும் பீகார் – நேபாள் எல்லையில் உள்ள ஜனக்பூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தன் அங்குள்ள மக்கள் ராமனை கடவுளாக வழிபடுகின்றனர். ஜனக்பூரிலும் சீதாராமர் தான் வழிபாடு தெய்வம். அப்படிப் பார்த்தால் அவதிமொழி பேசும் அவதபூரி என்ற அயோத்தியில் வாழும் மக்களின் வழிபாட்டுத் தெய்வம் மட்டுமே ராமன்.

அயோத்தியில் சுமார் 80,000 பேர் பூர்வீகமாக வாழ்பவர்கள். இவர்களில் 5000 பேர் பார்ப்பனர்கள், 12,000 பேர் உயர் ஜாதியினர், 7000 இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். அயோத்தியில் நாடோடிகள் மிக மிகக் குறைவு. அதன்படி அயோத்தியில் கூட 17,000 பேர் மட்டுமே ராமனை மட்டும் கும்பிடுபவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே அவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கங்கை அம்மனின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் Swaaha Devi (Svaahaa Dhevee) சுவாகா தேவியைக் கும்பிடுபவர்கள். ஆனால், இன்றைய தலைமுறைக்கு சுவாகா தேவி என்றால் யார் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களும் பிற்படுத்தப்பட்டவர் களும் ராமன் படம் பொறித்த அடையாளத்தை கழுத்தில் அணியக் கூடாது என்பதற்காக அவர்கள் வழிபட்ட சுவாகா தேவியின் கணவர் அனுமான் என்று கதைவிட்டு அனுமான் அடையாளத்தை சூத்திரர்கள் கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
நாம், வைக்கத்தை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அயோத்தி தெருக்களில் அருகில் உள்ள கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் இதுவரை நடந்ததே இல்லை.
2016ஆம் ஆண்டில் வாரணாசியில் ஒரு திருமணத்திற்குச் சென்ற போது அயோத்தியாவிற்கும் சென்றேன். பழைய காலத்து அக்ரகாரம் போன்றுதான் அங்குள்ள தெருக்கள் காணப்பட்டன.
புதிதாக ஒன்றுமில்லை. எங்குபார்த்தாலும் கோவில்களும் காவிச்சாமியார்களும் பழுப்பேறிய ஆடையோடு அங்கே இங்கே சுற்றிக்கொண்டு மக்களை பூஜைக்கு அழைத்துச்செல்லும் ஏஜெண்டுகளால் நிறைந்திருந்தது நகரம்.
ராமன் படம் போட்ட டாலர்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர். ஆனால் சின்ன அனுமார் சிலைகொண்ட காவி நிற கயிறுகள் தான் அதிகம் விற்பனையானது.

இது குறித்துக் கேட்ட போது ஒரு சிறுவன் கூறியது, “இராமன் டாலர் போட்டு நாங்க ஊருக்குச் சென்றால் பசங்க அடிப்பாங்க (உயர்ஜாதியினர்)” என்று கூறினான்.
அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமரத்தோப்பு ஒன்றில் நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற போது வழியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த சில நடுத்தர வயது நபர்களிடம் பேசும் போது “அயோத்தியில் உள்ள ராமன் கோவிலுக்குச் சென்றுள்ளீர்களா” என்று கேட்க அவர்களோ, “எங்களுக்கு அங்கு செல்ல நேரம் ஏது!” என்றுமட்டுமே கூறினார்கள்.
உண்மையில் அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டார்கள் – ஒரு நந்தனார் தெற்கே தீயில் இறங்கி தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தார்.

ஆனால் அங்கே லட்சக்கணக்கான நந்தனார்கள் அயோத்திதெருக்களைக்கூட பார்க்காமல் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர்.
இவர்கள் விருப்பப்பட்டுச்சென்றாலும் அங்கே அவர்களுக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.
இன்றும் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிதிருத்தமாட்டார்கள். புதிதாக யாரும் வந்தால் அவர்கள் எந்தக் கிராமம், கிராமத்தில் எந்தப் பகுதி என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவர்கள் உயர்ஜாதியினர் என்றால் மட்டுமே முடிவெட்டும் தீண்டாமை 2016-இலும், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்ததை பார்த்த நேரடி சான்றாக நிற்கிறேன்.
22.01.2024 அன்று மட்டும் மின்னொளியில் மிதந்த அயோத்தியின் மறுபுறம் – வீடுகளுக்கு கதவு வைக்கக் கூடாது. செங்கல் வைத்த வீடுகள் கட்டக் கூடாது – அப்படியே கட்டினாலும் ஆடம்பரமாக தெரியக்கூடாது போன்ற பல கொடுமையான எழுதப்படாத சட்டங்கள் அயோத்தியைத் சுற்றியுள்ள கிராமங்களில் உண்டு.
ராமன் படம் மடங்களிலும் உயர் ஜாதியினரின் வீடுகளின் முன்பும் இருக்கும். ஆனால், அயோத்தியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ராமன் படம் இல்லை. வேண்டுமென்றால் ராமன் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவர்கள் வற்புறுத்தி கொடுத்த ராமன் படத்தை வேண்டுமென்றால் வீட்டின் ஏதாவாது ஒரு மூலையில் ஒட்டி வைத்திருப்பார்களே தவிர, அவர்களிடம் ராமன் படத்தை பூஜைக்காக வீட்டில் வைக்கும் துணிச்சலைக் காணமுடியாது.
அயோத்தியில் வசிக்கும் பூர்வ குடிகளுக்கே ராமன் வழிபாட்டுத் தெய்வமாக இல்லாத நிலையில் நாடெங்கும் எப்படி ஜெய் சிறீராம் மயமாக இருக்கும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

ஜெய் சிறீராம் என்பது என்றால் என்ன? இந்தச் சொல்லைக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். ஆம்! ஜனவரி 22ஆம் தேதி ஜெய்சிறீராம் என்ற காட்டுக்கூச்சல் – 30ஆம் தேதி “ஹேராம்” என்ற முணுமுணுத்தலோடு காந்தியாரின் உதட்டில் இருந்து இளஞ்சூடான இறுதி சுவாசமாக வெளியேறியது. ஒருவேளை இன்று கோட்சே இருந்திருந்தால் “ஜெய் சிறீராம்” என்று கூறிக்கொண்டே காந்தியாரைச் சுட்டுக் கொன்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.
அது என்ன ஜனவரி 22இல் ராமன் கோவில் திறக்க தேதி குறித்தார்கள் என்றால், வரலாற்றுக் கடிகாரத்தை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாளுக்குத் திருப்பினால், காந்தியாரைக் கொலை செய்ய அய்ந்தாம் முறையாக திட்டமிட்டு பிர்லாபவனில் குண்டுவைத்தார்கள். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.
குண்டுவைத்த மதன்லால் பக்வா சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குண்டு வெடிக்காமல் போகவே காவல்துறையிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் ஓடி விடுகின்றனர்.

அப்படி ஓடியவர் ஆனந்தபர்பத் என்ற இடத்தில் ஜனவரி 22 அன்று கூடி இம்முறை, அதாவது ஆறாவது முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் காந்தியாரைக் கொல்வது என்ற திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சபதம் எடுத்தனர்.
ஒருவேளை அப்படி சபதம் எடுத்து கலைந்துசெல்லும் போது “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிட்டார்களோ என்னவோ! ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். ஜனவரி 22ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது.
ஆனாலும், காந்தியாரின் அனுதாபிகள் ஜனவரி 30 அன்று ராமன் கோவில் திறக்கப்படும் தேதியாக குறிக்கப்படவில்லையே என்று நிம்மதி அடைந்திருக்கலாம்.