பக்கங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2024

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்

 


நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று. அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள் வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அறிய உயிரினங்களைப் பாதுரக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற சுவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை
செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரம் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது. வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல அல்ல அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும் புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.4221) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2-52-102)

ती त हवा चतुरः (காற்றைப் போல் துள்ளி ஓடும் ) महा मृगान् | (மான்)

बराहम ऋयम (पृषतम महाम சுவைத்து சாப்பிட்டனர் | भादाय मेयम वरतम விரட்டிச் சென்று) बुभुतौ ।

बासाय (களைப்புற- काले ययतुर् वनः पितम (உண்டு மகிழ்ந்தனர்) |॥ २-५२-१०२


Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya ani- mal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly par taking the pure meat reached atree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55-32/33)

शमाम ततो गवा तरी (கரையில்) रामलमनौ (ராம லட்சுமண) || २-५५-३३ बहूमेयान मृगान (மான் ) हवा चेरतुय (மாமிசம் உண்ட)

Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்..... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

-கோவி.லெனின்
- விடுதலை நாளேடு, 09.04.2015, உண்மை இதழ்;16-30.04.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக