பக்கங்கள்

புதன், 7 ஆகஸ்ட், 2024

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!

 டிபரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார்பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில்ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லைஅவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லைவில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான்வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான்அவன் மனம்அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையேவில் வித்தைவேட்டையில் வேட்கைமாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள்சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).

``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பிஅயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன்தேன்பழங்கள்கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்மதுவும்இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்றுராமன்லட்சுமணன்சீதை ஆகியோர் இரவுப் பட்டினிவிடிந்ததும் விடியாததுமாக ராமனும்லட்சுமணனும் வில்அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றிஒரு சாம்பார் மான்ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுகொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள்சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 96, பாடல் 1).

அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம்ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம்கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றனஅவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள்ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

இத்துடன் முடியவில்லை.

 ``இறைச்சிப் படலம்விருந்தினர்களுக்குஅவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும்இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான்அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்என் கணவர் விரைவில் வந்து விடுவார்காட்டுப் பொருள்கள் (புஷ்கலம்வன்யாகொண்டு வருவார்மான்கறி கொண்டு வருவார்இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்குகாட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம்சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம்சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதைஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான்இறைச்சிப் பிரியர்தான்ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள்இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால்இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?

 -சார்வாகன்  
20-12-2007, விடுதலை நாளேடு

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்

 


நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று. அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள் வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அறிய உயிரினங்களைப் பாதுரக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற சுவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை
செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரம் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது. வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல அல்ல அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும் புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.4221) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2-52-102)

ती त हवा चतुरः (காற்றைப் போல் துள்ளி ஓடும் ) महा मृगान् | (மான்)

बराहम ऋयम (पृषतम महाम சுவைத்து சாப்பிட்டனர் | भादाय मेयम वरतम விரட்டிச் சென்று) बुभुतौ ।

बासाय (களைப்புற- काले ययतुर् वनः पितम (உண்டு மகிழ்ந்தனர்) |॥ २-५२-१०२


Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya ani- mal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly par taking the pure meat reached atree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55-32/33)

शमाम ततो गवा तरी (கரையில்) रामलमनौ (ராம லட்சுமண) || २-५५-३३ बहूमेयान मृगान (மான் ) हवा चेरतुय (மாமிசம் உண்ட)

Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்..... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

-கோவி.லெனின்
- விடுதலை நாளேடு, 09.04.2015, உண்மை இதழ்;16-30.04.2015

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

இராமாயணதர்மம்- தந்தை பெரியார்

 


இராமாயணதர்மம்- தந்தை பெரியார்
2024 பெரியார் பேசுகிறார்

இராமாயணம் மக்களுக்கு முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் சூழ்ச்சித் தன்மையையும்தான் கற்பிக்கக் கூடுமே தவிர அதில் மனிதப் பண்பு, நேர்மை, நீதி, ஒழுக்கம் ஆகியவைகள் கற்க முடியாது.

இராமாயண காவியம் என்பது ஆரியப் புரட்டு என்னும் மாலையில் ஒரு மணியாகும். அதுவும் மிகச் சமீப காலத்தில் கற்பனை செய்த நூலாகும். இந்த இராமாயாணம் என்பது ஒன்றல்ல, பலவாகும். அவற்றுள் ஒன்றுக்கொன்று பல முக்கியமான முரண்பாடுகளும் விரிவும் சுருக்கமும் உடையவையாகும்.

இவை ஜெயின இராமாயணம், பவுத்த இராமாயணம், ஆனந்த இராமாயணம், நித்யாத்மீக இராமாயணம், ஆந்திர இராமாயணம், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் முதலிய பல இராமாயணங்கள் இருக்கின்றன. இவற்றுள் தென்னாட்டில் பிரபல ஆதார நூலாய் இருப்பது வால்மீகி இராமாயணம். இதுவும் வால்மீகி இராமாயணம் என்னும் ஒரு பதிப்பிலேயே முன்னுக்குப் பின் முரணாகப் பல இடங்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் எப்படியோ இருந்தாலும்;

புத்தருக்குப் பிந்தியதே இராமாயணம்

இந்த இராமாயண காவிய உற்பத்தியானது சமீப காலத்தில் அதாவது, ஒரு இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுக்குள் அதுவும் பாரத காவியத்திற்குப் பின் ஏற்பட்டதாகத்தான் கொள்ளவேண்டி இருக்கிறது. பாரத காவியம் மக்களால் வெறுக்கப்படத் தொடங்கிய பின், அதிலுள்ள ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தன்மைகளையும் மறைக்கும் தன்மையில், சிறிது நாகரிக முறையில் திருத்தப்பாடுகளுடன் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவியமாக்கப்பட்டதென்றே சொல்லலாம்.
மற்றும், இந்த வால்மீகி இராமாயணம் என்பது பவுத்தன், பவுத்த தர்மம் தோன்றிய பின்பே எழுதப்பட்டது என்று இராமாயண ஆதாரப்படியே கூறலாம். இராமாயணத்தில் பல இடங்களில் பவுத்தன், பவுத்த தர்மம், பவுத்த சன்யாசி, பவுத்த மடம் என்பவையான சொற்கள் பல வலியுறுத்தப்பட்டு காணப்படுகின்றன. இராமாயணம் அயோத்தியா காண்டம், 109ஆவது சருக்கத்தில் சி.ஆர். சீனிவாசய்யங்கார் அவர்கள் பதிப்பித்த முதல் பதிப்பு, 412ஆம் பக்கம், 4ஆம் வரி முதல் பவுத்த தர்மம் பலமான கண்டன வசவு வாக்கியங்களால் கண்டிக்கப்பட்டு இருக்கிறது. பிறகு, கிஷ்கிந்தா காண்டத்தில் பவுத்த சன்யாசி தர்மம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில், 5ஆம் சருக்கம் பக்கம் 72இல், 2ஆம் வாக்கியத் தொடர் முதல் வரியில், “புத்தர் ஆலயம் போன்ற, “கட்டட உப்பரிகையில்” சீதையை அனுமான் கண்டான் என்பதான வாக்கியம் இருக்கிறது. இராவணனது குணம், நாடு, மக்கள் நிலை ஆகியவற்றைப் பற்றிய தன்மைகளும், மதுரை, கோசலம், அயோத்தி, இலங்கை முதலிய நாடுகளும் அவற்றின் வருணனைகளும் நவநாகரிகத்தை ஒத்தே காணப்படுகிறபடியால், பொதுவில் வேத சாஸ்திர காலமே 3000-4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இதிகாசங்கள் மிக மிகச் சமீப காலத்து அதாவது, புத்தருக்குப் பிந்தியது என்று உறுதியாகக் கூறலாம்.

ஆரியத்தை காப்பாற்ற எழுதப்பட்டவை

மற்றும், இந்த சாஸ்திர, புராண, இதிகாசக் காவியங்கள் எல்லாமுமே ஆரியக் கோட்பாடுகளை வகுக்கவும், அவைகளுக்கு வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கவே செய்யப்பட்டனவே ஒழிய, மற்றபடி அதற்கு நாட்டில் மனித சமுதாயத்திற்குத் தேவை என்ன இருந்தது? என்ன ஏற்பட்டது? என்று பார்த்தோமேயானால் இதன் தத்துவம் நமக்கு நன்றாய் விளங்கும். இராமாயணத் தோற்றத்திற்குக் காரணம் என்ன என்று பார்க்க முயன்றால், அதில் இராமன் பிறப்பதற்கு முன்பே விஷ்ணுவாக இருந்துகொண்டே தேவர்களுக்கு வாக்குறுதி தருகின்றான்.

“நான் இராவணனை புத்திரமித்திர பந்து பரிவாரங்களுடன் கொன்று உங்களை இரட்சிக்கவே- இராவண சம்மாரத்திற்கு என்றே இராமனாகப் பிறக்கப்போகிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று சொல்லுகிறார்.

இந்தக் கருத்துள்ள வாக்கியம் அதே இராமாயணம் சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு பாலகாண்டம் 15ஆவது சருக்கம் 51ஆம் பக்கத்தில் இருக்கிறது. இராவணன் யாகத்திற்கு விரோதமாகவும், மனுதர்மத்திற்கு விரோதமாகவும் ஆட்சி புரிந்தவன் என்கின்ற காரணத்தினால்தான் தேவர்களுக்கு- ஆரியர்களுக்கு விரோதியானான்.

இதுபோலவேதான், இதே காரணத்திற்குத்தான் கந்தபுராண சூரபத்மனும் ஆரியர்களுக்கு விரோதி
யானான். இவை மாத்திரமல்ல; “கடவுள்களின் அவதாரங்கள்” முழுவதும் வேதம், சாஸ்திரம், தேவர்கள் ஆகியவற்றிற்கு விரோதமான கருத்துடன் ஆட்சி செய்யும் அரசர்களை ஒழிக்கவும் அழிக்கவும் என்பதற்கல்லாமல் வேறு எதற்குத் தோற்றுவிக்கப்பட்டனவாகும்?

கந்தபுராணத்தைக் காப்பி அடித்த கதை

ஆரியர்கள் சிந்து நதிக்கு இப்புறம் கடந்து ஆதிக்கம் பெற்ற காலமே சுமார் கி.மு. 1000 அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்புதான். உலக சரித்திராசிரியர்கள் எல்லோருமே அதிலும் தென்னாட்டு சரித்திர ஆசிரியர்கள் பார்ப்பனர்கள் உட்பட எல்லோருமே கூறிவிட்டார்கள். இவர்களது கூற்றே இன்று பள்ளிப் பாடமாகவும் சரித்திர ஆதாரமாகவும் விளங்குகின்றன.
மற்றும், இராமாயணம் மிக மிகப் பிந்திய இதிகாசம் என்பதற்கு ஆதாரம் அது கந்த புராணக் கதை தத்துவத்தை- செய்கையை- நடப்பை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து பாத்திரங்களுக்கும் செய்கைகளுக்கும் வேறு பெயர் கொடுத்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், அதில் வரும் பெயர்கள் பலவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் கந்தனும் வள்ளியும் சாகவில்லை; கந்தபுராணம் எழுதியவன் இவர்களை (கந்தனை- வள்ளியை) சாகடிக்கவில்லை. இராமாயணம் எழுதினவன் இராமனையும் இலட்சுமணனையும் சீதையையும் கொன்றுவிட்டான். ஆற்றிலும் குழியிலும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றே எழுதி சாகடித்துவிட்டான். அதாவது டிராஜிடி (TRAGEDYயில் முடித்தான்.

மற்றும் கந்தபுராணத்தில் கந்தனுக்கோ வள்ளிக்கோ ஒழுக்கக்கேடு – இழிவு சுமத்தவில்லை. ஆனால் இராமாயணத்தில் இராமனுக்கும், சீதைக்கும் பெரும் ஒழுக்கக் கேடுகளையும், இழி தன்மைகளையும் வண்டி

வண்டியாய்ச் சுமத்திவிட்டான். இராமாயண ஆசிரியன் சுமத்தினதோடு அல்லாமல், அதை நீதி என்றும் யோக்கியமென்றும் ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

நீதியும் ஒழுக்கமுமற்ற சாத்திரங்கள்

இதன் கருத்து என்னவென்றால், கந்த புராண காலத்து ஆரியர்களைவிட இராமாயண காலத்து ஆரியரின்
ஒழுக்கம் அவ்வளவு கீழ் நிலைக்குப் போய்விட்டது.

அதாவது இன்றைய நிலைக்கு – அதாவது ஒரு ஆரியன் தனது வாழ்வில் எப்படி நடந்தாவது என்ன காரியம் செய்தாவது தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதே காரணமாகும். அதோடு கூடவே ஆரியரல்லாத மக்கள் அவர்களை படிப்படியாய் அந்த நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
அதோடு மாத்திரமல்லாமல் மற்ற மக்களும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு வரவேண்டியவர்
களாகிவிட்டார்கள்.

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கடவுளிடமாவது சாத்திரங்களிலாவது, நீதி ஒழுக்கம் நாணயம், ஜீவகாருண்யம், தயவு, கருணை, தாட்சண்யம் ஆகிய மனிதக் குணங்கள் இருக்கவே இருக்காது; கண்டிப்பாக இருக்கவே இருக்காது.

அவர்களால் உண்டாக்கப்பட்ட வேத சாத்திர நீதிகளில் ஒரு கடுகளவாவது நீதி, நேர்மை, சமத்துவம்,
ஒழுக்கம், நாணயம், தயவு, தாட்சண்யம் இருக்குமா என்று தேடினால் கண்டிப்பாக இருக்கவே முடியாது. ஏன் எனில், நமக்கு அறிவும் மனித உணர்ச்சியும் ஏற்பட ஏற்பட அவர்கள் – ஆரியர்கள் அயோக்கிய சீலர்களாக ஆகவேண்டியதாக ஆகிவிட்டது. அவர்கள் எழுதி வைத்துக்கொண்ட வேதசாத்திர புராணப்படியும் நடந்துவருகிற நடவடிக்கைப்படியும், அதைப் பின்பற்றுகிற பழகுகிற அவர்கள் சாத்திரப்படியும் அதுபோலவே ஆகித்தீரவேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(நூல் ஆதாரம்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல்)