பக்கங்கள்

புதன், 16 அக்டோபர், 2024

இராமாயணதர்மம்- தந்தை பெரியார்

 


2024 பெரியார் பேசுகிறார்

இராமாயணம் மக்களுக்கு முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் சூழ்ச்சித் தன்மையையும்தான் கற்பிக்கக் கூடுமே தவிர அதில் மனிதப் பண்பு, நேர்மை, நீதி, ஒழுக்கம் ஆகியவைகள் கற்க முடியாது.

இராமாயண காவியம் என்பது ஆரியப் புரட்டு என்னும் மாலையில் ஒரு மணியாகும். அதுவும் மிகச் சமீப காலத்தில் கற்பனை செய்த நூலாகும். இந்த இராமாயாணம் என்பது ஒன்றல்ல, பலவாகும். அவற்றுள் ஒன்றுக்கொன்று பல முக்கியமான முரண்பாடுகளும் விரிவும் சுருக்கமும் உடையவையாகும்.

இவை ஜெயின இராமாயணம், பவுத்த இராமாயணம், ஆனந்த இராமாயணம், நித்யாத்மீக இராமாயணம், ஆந்திர இராமாயணம், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் முதலிய பல இராமாயணங்கள் இருக்கின்றன. இவற்றுள் தென்னாட்டில் பிரபல ஆதார நூலாய் இருப்பது வால்மீகி இராமாயணம். இதுவும் வால்மீகி இராமாயணம் என்னும் ஒரு பதிப்பிலேயே முன்னுக்குப் பின் முரணாகப் பல இடங்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் எப்படியோ இருந்தாலும்;

புத்தருக்குப் பிந்தியதே இராமாயணம்

இந்த இராமாயண காவிய உற்பத்தியானது சமீப காலத்தில் அதாவது, ஒரு இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுக்குள் அதுவும் பாரத காவியத்திற்குப் பின் ஏற்பட்டதாகத்தான் கொள்ளவேண்டி இருக்கிறது. பாரத காவியம் மக்களால் வெறுக்கப்படத் தொடங்கிய பின், அதிலுள்ள ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தன்மைகளையும் மறைக்கும் தன்மையில், சிறிது நாகரிக முறையில் திருத்தப்பாடுகளுடன் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவியமாக்கப்பட்டதென்றே சொல்லலாம்.
மற்றும், இந்த வால்மீகி இராமாயணம் என்பது பவுத்தன், பவுத்த தர்மம் தோன்றிய பின்பே எழுதப்பட்டது என்று இராமாயண ஆதாரப்படியே கூறலாம். இராமாயணத்தில் பல இடங்களில் பவுத்தன், பவுத்த தர்மம், பவுத்த சன்யாசி, பவுத்த மடம் என்பவையான சொற்கள் பல வலியுறுத்தப்பட்டு காணப்படுகின்றன. இராமாயணம் அயோத்தியா காண்டம், 109ஆவது சருக்கத்தில் சி.ஆர். சீனிவாசய்யங்கார் அவர்கள் பதிப்பித்த முதல் பதிப்பு, 412ஆம் பக்கம், 4ஆம் வரி முதல் பவுத்த தர்மம் பலமான கண்டன வசவு வாக்கியங்களால் கண்டிக்கப்பட்டு இருக்கிறது. பிறகு, கிஷ்கிந்தா காண்டத்தில் பவுத்த சன்யாசி தர்மம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில், 5ஆம் சருக்கம் பக்கம் 72இல், 2ஆம் வாக்கியத் தொடர் முதல் வரியில், “புத்தர் ஆலயம் போன்ற, “கட்டட உப்பரிகையில்” சீதையை அனுமான் கண்டான் என்பதான வாக்கியம் இருக்கிறது. இராவணனது குணம், நாடு, மக்கள் நிலை ஆகியவற்றைப் பற்றிய தன்மைகளும், மதுரை, கோசலம், அயோத்தி, இலங்கை முதலிய நாடுகளும் அவற்றின் வருணனைகளும் நவநாகரிகத்தை ஒத்தே காணப்படுகிறபடியால், பொதுவில் வேத சாஸ்திர காலமே 3000-4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இதிகாசங்கள் மிக மிகச் சமீப காலத்து அதாவது, புத்தருக்குப் பிந்தியது என்று உறுதியாகக் கூறலாம்.

ஆரியத்தை காப்பாற்ற எழுதப்பட்டவை

மற்றும், இந்த சாஸ்திர, புராண, இதிகாசக் காவியங்கள் எல்லாமுமே ஆரியக் கோட்பாடுகளை வகுக்கவும், அவைகளுக்கு வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கவே செய்யப்பட்டனவே ஒழிய, மற்றபடி அதற்கு நாட்டில் மனித சமுதாயத்திற்குத் தேவை என்ன இருந்தது? என்ன ஏற்பட்டது? என்று பார்த்தோமேயானால் இதன் தத்துவம் நமக்கு நன்றாய் விளங்கும். இராமாயணத் தோற்றத்திற்குக் காரணம் என்ன என்று பார்க்க முயன்றால், அதில் இராமன் பிறப்பதற்கு முன்பே விஷ்ணுவாக இருந்துகொண்டே தேவர்களுக்கு வாக்குறுதி தருகின்றான்.

“நான் இராவணனை புத்திரமித்திர பந்து பரிவாரங்களுடன் கொன்று உங்களை இரட்சிக்கவே- இராவண சம்மாரத்திற்கு என்றே இராமனாகப் பிறக்கப்போகிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று சொல்லுகிறார்.

இந்தக் கருத்துள்ள வாக்கியம் அதே இராமாயணம் சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு பாலகாண்டம் 15ஆவது சருக்கம் 51ஆம் பக்கத்தில் இருக்கிறது. இராவணன் யாகத்திற்கு விரோதமாகவும், மனுதர்மத்திற்கு விரோதமாகவும் ஆட்சி புரிந்தவன் என்கின்ற காரணத்தினால்தான் தேவர்களுக்கு- ஆரியர்களுக்கு விரோதியானான்.

இதுபோலவேதான், இதே காரணத்திற்குத்தான் கந்தபுராண சூரபத்மனும் ஆரியர்களுக்கு விரோதி
யானான். இவை மாத்திரமல்ல; “கடவுள்களின் அவதாரங்கள்” முழுவதும் வேதம், சாஸ்திரம், தேவர்கள் ஆகியவற்றிற்கு விரோதமான கருத்துடன் ஆட்சி செய்யும் அரசர்களை ஒழிக்கவும் அழிக்கவும் என்பதற்கல்லாமல் வேறு எதற்குத் தோற்றுவிக்கப்பட்டனவாகும்?

கந்தபுராணத்தைக் காப்பி அடித்த கதை

ஆரியர்கள் சிந்து நதிக்கு இப்புறம் கடந்து ஆதிக்கம் பெற்ற காலமே சுமார் கி.மு. 1000 அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்புதான். உலக சரித்திராசிரியர்கள் எல்லோருமே அதிலும் தென்னாட்டு சரித்திர ஆசிரியர்கள் பார்ப்பனர்கள் உட்பட எல்லோருமே கூறிவிட்டார்கள். இவர்களது கூற்றே இன்று பள்ளிப் பாடமாகவும் சரித்திர ஆதாரமாகவும் விளங்குகின்றன.
மற்றும், இராமாயணம் மிக மிகப் பிந்திய இதிகாசம் என்பதற்கு ஆதாரம் அது கந்த புராணக் கதை தத்துவத்தை- செய்கையை- நடப்பை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து பாத்திரங்களுக்கும் செய்கைகளுக்கும் வேறு பெயர் கொடுத்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், அதில் வரும் பெயர்கள் பலவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் கந்தனும் வள்ளியும் சாகவில்லை; கந்தபுராணம் எழுதியவன் இவர்களை (கந்தனை- வள்ளியை) சாகடிக்கவில்லை. இராமாயணம் எழுதினவன் இராமனையும் இலட்சுமணனையும் சீதையையும் கொன்றுவிட்டான். ஆற்றிலும் குழியிலும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றே எழுதி சாகடித்துவிட்டான். அதாவது டிராஜிடி (TRAGEDYயில் முடித்தான்.

மற்றும் கந்தபுராணத்தில் கந்தனுக்கோ வள்ளிக்கோ ஒழுக்கக்கேடு – இழிவு சுமத்தவில்லை. ஆனால் இராமாயணத்தில் இராமனுக்கும், சீதைக்கும் பெரும் ஒழுக்கக் கேடுகளையும், இழி தன்மைகளையும் வண்டி

வண்டியாய்ச் சுமத்திவிட்டான். இராமாயண ஆசிரியன் சுமத்தினதோடு அல்லாமல், அதை நீதி என்றும் யோக்கியமென்றும் ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

நீதியும் ஒழுக்கமுமற்ற சாத்திரங்கள்

இதன் கருத்து என்னவென்றால், கந்த புராண காலத்து ஆரியர்களைவிட இராமாயண காலத்து ஆரியரின்
ஒழுக்கம் அவ்வளவு கீழ் நிலைக்குப் போய்விட்டது.

அதாவது இன்றைய நிலைக்கு – அதாவது ஒரு ஆரியன் தனது வாழ்வில் எப்படி நடந்தாவது என்ன காரியம் செய்தாவது தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதே காரணமாகும். அதோடு கூடவே ஆரியரல்லாத மக்கள் அவர்களை படிப்படியாய் அந்த நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
அதோடு மாத்திரமல்லாமல் மற்ற மக்களும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு வரவேண்டியவர்
களாகிவிட்டார்கள்.

ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கடவுளிடமாவது சாத்திரங்களிலாவது, நீதி ஒழுக்கம் நாணயம், ஜீவகாருண்யம், தயவு, கருணை, தாட்சண்யம் ஆகிய மனிதக் குணங்கள் இருக்கவே இருக்காது; கண்டிப்பாக இருக்கவே இருக்காது.

அவர்களால் உண்டாக்கப்பட்ட வேத சாத்திர நீதிகளில் ஒரு கடுகளவாவது நீதி, நேர்மை, சமத்துவம்,
ஒழுக்கம், நாணயம், தயவு, தாட்சண்யம் இருக்குமா என்று தேடினால் கண்டிப்பாக இருக்கவே முடியாது. ஏன் எனில், நமக்கு அறிவும் மனித உணர்ச்சியும் ஏற்பட ஏற்பட அவர்கள் – ஆரியர்கள் அயோக்கிய சீலர்களாக ஆகவேண்டியதாக ஆகிவிட்டது. அவர்கள் எழுதி வைத்துக்கொண்ட வேதசாத்திர புராணப்படியும் நடந்துவருகிற நடவடிக்கைப்படியும், அதைப் பின்பற்றுகிற பழகுகிற அவர்கள் சாத்திரப்படியும் அதுபோலவே ஆகித்தீரவேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(நூல் ஆதாரம்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல்)

புதன், 9 அக்டோபர், 2024

இராவணனின் இலங்கை எது?

 

இராமர் பாலக் கற்பனைக்கு எரியீட்டி – இராவணனின் இலங்கை எது? – புது ஆய்வு முடிவு

மார்ச் 16-31

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

கொக்கரிப்புக் கூக்குரல்கள்:

இன்றைக்கு, பொருளியல் வழி ஆதாயமும் கூடுதல் பயனும் தரத்தக்க வரத்தக்க சேதுப்பெருங்கடல் திட்டத்தை இந்துமத இதிகாசமாகிய இராமாயணம் எனும் நூல் அடிப்படையில் இந்துமதவாதிகளும், இதை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் கட்சிகளும் திட்டமிட்டு வரிந்து கட்டிக்கொண்டு இத்திட்டத்தை ஒழித்துக்கட்ட கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

புராதனச் சின்னம் என்றும் புலம்பல்

இந்தக் கும்பலுக்கு, அதிகார ஆட்சி மய்யமாக இருக்கும் இன்றைய தமிழ்நாடு அரசு, தனது முந்தைய கொள்கை அறிவிப்புக்கு மாறாக _ முரணாக _ எதிராக ஆதாம் பாலம் என்பதை இராமர் பாலம் என்று கூறி இதனை இந்தியாவின் புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டு ஏறி வழக்குத் தொடுத்து இந்தத் திட்டத்திற்கு உலை வைக்கும் உயரிய திருப்பணிக்கு உறுதுணை புரிந்து வருகிறது.

புறப்பட்டுவிட்டன புத்தம் புதிய ஆய்வுகள்

இப்பொழுது, இராமன், இராவணன் குறிப்பாக இலங்கை பற்றிய ஒரு புதிய ஆய்வுத்தகவல் கிடைத்துள்ளது. அது, இராமன் விந்திய மலைக்குத் தெற்கில் காலடி எடுத்துவைக்கவில்லை. சேதுபாலம் கட்டவில்லை; இலங்கை (இன்றுள்ளது)க்குச் செல்லவில்லை என்ற புதிய உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.

இலங்கை எது? அது இருப்பது (இருந்தது) எங்கே? அது, தற்போது சிங்களம் _ சிறீலங்கா எனப்படும் தீவா? என்ற புதிய ஆய்வுத் தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு, இராமர் பாலம் எனப்படும் கட்டுக்கதையின் அடிப்படையைத் தகர்த்துவிட்டது. அதன் ஆணிவேரை அறுத்துவிட்டது.

இந்தப் புதிய ஆய்வு முடிவு முழுக்க முழுக்க உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. தவறானது, பொய்யானது என்று தள்ள வேண்டியதும் இல்லை. ஆனால், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்கிற அண்ணல் புத்தர், அறிஞர் திருவள்ளுவர், அய்யா தந்தை பெரியார் வழிநின்று பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.

உண்மை எனின் கொள்ளுவோம்;
பொய்மை எனில் தள்ளுவோம்.

இராமர் பாலம் என்ற கற்பனைக் கட்டடத்தைத் தரைமட்டமாக்குவதால் இந்தப் புத்தாய்வு முடிவினைப் பார்ப்போம்; பகுத்தறிவோம்.

அயோத்தி-அப்படி ஒன்றும் இல்லையே!

இராமாயணத்தில் கோசலநாடு என்றும் அதன் தலைநகரம் அயோத்தி என்றும் அதன் அரசர்கள் தசரதன், இராமன் என்றும் கூறப்படுகிறது.

அயோத்தி என்பதாக ஒரு நகரம் உண்மையில் இருந்ததா? தொல்பொருள் அகழ்வாளர்கள் அகழாய்வு செய்தனர். அயோத்தி என்று கூறப்பட்ட நகரம் கி.மு.700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை என்று முடிவு வெளியிட்டுள்ளனர் அகழாய்வாளர்கள்.

ஆல மரங்கள் அய்ந்து

இராமாயணத்தில் பஞ்சவடி என்ற இடம் குறிப்பிடப்படுகிறது. அய்ந்து ஆலமரங்கள் ஒன்றாக இருந்த இடம் என்பது இதன்பொருள் (பஞ்சம் _அய்ந்து; வடம்_ஆலமரம், வடி_ஆலமரம் இருக்கும் இடம்). இராமன், சீதை தங்கியிருந்தது இங்கேதான்! இந்தப் பஞ்சவடி இராவணனுக்குச் சொந்தமான பகுதியாகும். இங்கு ஆரியர்கள் பரவி வந்து யாகங்களை இயற்றினர். இவர்கள் செய்த யாகங்களை இராவணனின் தம்பி முறையினரான கரன், திரிசிரன் முதலானவர்கள் மக்களுடன் சேர்ந்து எதிர்த்தனர்; தடுத்தனர்; போரிட்டனர்; மடிந்தனர்.

பஞ்சவடியில் சரபங்க முனிவன் இருப்பிடத்தில் இருந்த இராவணனின் ஆதரவாளர்கள் யாகங்களுக்கு எதிராக இருந்தவர்கள் இவர்கள்தான் அரக்கர் (ராட்சசர்)கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டனர்.

மகதம் தாடகையின் ஆட்சியகம்

மகதம், தாடகையின் அதாவது இராவணனின் அத்தை முறை கொண்ட மூதாட்டியின் இருப்பிடம். இராவணனின் உறவுமுறை அடிப்படையில் இராவணன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இங்கு இருந்த அனைத்து மக்களும் தாடகையின் யாக எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் வட ஆரியரை எதிர்க்க முடிந்தது.

இராவணன் ஆண்ட நாடு இதுதான்!

மக்கள் நெருக்கமாக இருந்த சோணாறு ஆற்றின் பகுதி ஜனஸ்தானம் எனப்பட்டது. யாக நாட்டமுடைய வடவ(ஆரிய)ர்களை இராவணன் தலைமையில் எதிர்த்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது சோன், டோன்ஸ், பைசூனி, சோணாறு ஆற்றுப் பகுதியின் பெரும்பகுதி, பீகார் மாநிலத்தில் ஒரு சிறிய தெற்குப்பகுதி, இராவணன் ஆட்சியில் இருந்த நாடு ஆகும்.

வேறொரு வகையில் சொன்னால், இன்றைய பீகார் மாநிலத்தில் கங்கையின் தெற்கில் மலையிடைக்காடு ஆகிய தாடகைவனம் முதல் ஏறத்தாழ அதே வடதீர்க்கப் பகுதியில் அமைந்துள்ள சித்ர கூடம், அனுசுயா குன்று, சுரங்க இருப்பிடமான பன்னா மலைத்தொடர், இன்றைய பன்னா மாவட்டத்தில் அமைந்த கென் ஆற்றில் அமைந்த பல பகுதிகள், இன்றைய தாமோ மாவட்டத்தில் சோணாறு ஆற்றில் அமைந்த பல பகுதிகள் வரை இராவணனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. சுருங்கக்கூறின், இராவணன் நாடு விந்தியமலைத் தொடரிலும் அதனைச் சார்ந்த பகுதியிலும் பீகார் நிலப்பகுதியில் சிறிய பகுதியும் கொண்டதாகும்.

இன்றைய மத்தியப் பிரதேசத்தில் தாமோ, பன்னா, சாத்னா மாவட்டங்களில் பெரும்பகுதியையும் பீகாரில் தென்பகுதியில் சிறிய பகுதியையும் கொண்டதுதான் இராவணன் ஆண்ட நாடு.

இலங்கை எது?

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் பனகர் மஞ்ச கோனி சாலையில் இந்திரானா என்ற மலைக்குன்று இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கா ஆகும். எளிதில் செல்லமுடியாதபடி நிலப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்த இடம் இலங்கா ஆகும். ஏறத்தாழ 25 ச.கி.மீட்டர் பரப்பளவுள்ள இடம் இது.

நான்கு பக்கம் கடலா?

இலங்காவின் நான்கு பக்கமும் அகழிகள் இருந்தன. நீர்நிலையில் ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவிற்கு இருந்தது. கோடையில் வடதிசையில் மட்டும் அந்த அகழி வற்றிப்போய் தேர் போன்ற ஊர்தியில் வருமாறு இருக்கும்.

இலங்கா நகரத்தின் நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருந்ததால் மரங்களைப் போட்டுப் பாலம் கட்ட வேண்டியிருந்தது.

பாலம் என்பது மழைக்காலம் மற்றும் நீர்ப் பிடிப்புக் காலத்தில் தேவையாக இருந்தது. இலங்காவைச் சுற்றிச் சாகரம் (கடல்) இருந்ததாக வால்மீகி கூறுகிறார். சாகரம் அல்லது சாகரா என்ற சொல்லிற்கு வடமொழியில் ஏரி, கடல், மாக்கடல் (சமுத்திரம்) எனப் பொருள் ஆகும்.

சீதர். எம்.கிபி என்பவர் சாகரம் என்ற பெயரில் மிகவும் பழைய காலத்தில் பல நீர்நிலைகள் இருந்தன என்கிறார். அவற்றுள், இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தில் பேசப்படுகிற இலங்காவும் ஒன்றாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

இன்றும்கூட, மைசூரில் கிருஷ்ணராஜசாகர் என்ற நீர்த்தேக்கம் எனக் கூறப்படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதில் குறிப்பிடப்படும் சாகரம் என்பது கடலா? அல்ல; நீர்த்தேக்கம்!

இன்றைய இலங்கை இராமாயண இலங்கையா?

இலங்கைத் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் பானாலி தானா என்பவர், இராமாயண இலங்கை இன்றைய இலங்கை அன்று என்று நிறுவியுள்ளார். (Indian Express. Madras 23-10-1971). அறிஞர் மான்காட் சுந்தரகாண்டம் பதிப்பு முகவுரையில் பல்வேறு துணைச் சான்றுகளைக் காட்டி, அறிஞர் பரமேசுவர அய்யர் அவர்களின் கருத்தையும் மேற்கோள் காட்டி இலங்கா இன்றைய இலங்கை அன்று என்று முடிவு கட்டியுள்ளார்.

பரமேசுவர அய்யர் கருத்துப்படி, அன்றைய இலங்கை மத்தியப் பிரதேசத்திலுள்ள விந்திய மலைக் காடுகளில் ஜபல்பூருக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ளது என்கிறார் டாக்டர் எச்.டி.சங்காலியா _ (கட்டுரை 4.10.1971). (Dr. H.D.Sankaliya article – Hindu 4-10-1971)

1925 இல் இந்தியக் கீழ்த்திசைஇயல் கருத்தரங்கில் சர்தார் கிபே (Sirdar Kibe) இலங்கா தொடர்பான ஓர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.

அவ்வாய்வில், விந்திய மலைச் சாரலுக்கும் மண்டலேசுவரர் நர்மதா ஆற்றுத் தீரத்திற்கும் இடைப்பட்ட சோலி என்ற ஊரே அன்றைய இலங்கை ஆகும் என்கிறார். மேற்கண்ட ஆய்வறிஞர்களின் கருத்துப்படி இராமாயண இலங்கா இன்றைய இலங்கை அன்று, அது மத்தியப் பிரதேசத்தில் இருந்தது என முடிவுக்கு வருகிறோம்.

இராவணனின் பரம்பரை இனம்

இன்றைக்கு இராவணனின் பரம்பரை கோண்டு இன மக்கள் ஆவர். குன்று என்ற தமிழ்ச் சொல் கோண்டு எனத் திரிந்தது. திராவிட மொழியான தெலுங்கில் கொண்டா எனப்படுகிறது.

இந்திரானா என்னும் மலை

தற்காலத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் இந்திரானா மலை என்றும் இந்த இலங்கா குறிப்பிடப்படுகிறது. இதற்குத் திரிகூடமலை என்றும் பெயர்.

இன்று ம.பி.யில் ஜபல்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள இந்திரானா என்ற மலை இராவணன் இறுதியாகத் தங்கியிருந்த இடம் ஆகும். இராமன் இராவணனை இங்குதான் போர் தொடுத்தான். இதனைச் சுற்றியிருந்த நீர்நிலை வறண்டுவிட்டது என்கிறார் இராமபிரானைக் கற்போம் _ என்ற நூலாசிரியர் சிறீகோபால மகாதேசிகன். தற்போது கிரன், கையர் ஆறுகள் நிலப் பகுதிகளாக இருப்பதையும் மழைக்காலத்தில்  அவையே சதுப்பு நிலமாக இருப்பதாகவும் அறிகிறோம்.

இந்த இடத்தில் இருந்துதான் அனுமன் இந்திரானா இடத்திற்கு, சகதியும் நீரும் ஆக இருந்தபோது நீந்திச் சென்று சீதையை அறிந்து, அதே இடத்திற்கு வந்தான். மழை நீர் தேங்கும்போது அந்த நீர் இந்திரானா என்ற இலங்கை நகரத்தினைச் சூழ்ந்து காணப்படும்.

கட்டாக் கணவாய் பக்கத்திலிருந்து இலங்கா என்னும் இந்திரானா மலைக் குன்றுக்குச் சாதாரணமாக பாலத்தின் மூலமே செல்ல முடியும். கோடைக்காலத்தில் மக்கள் நடந்தே செல்ல முடியும். மரங்களைப் போட்டு மழைக்காலத்தில் இராமன் படை இலங்கை (இந்திரானா) சென்றது.

இராவணன் நாட்டில் வாழ்ந்த மக்களில் கோண்டு இன மக்களும் கோ(கூ)ர்க்கா இன மக்களும் சார்ந்த முன்னோர்கள் முக்கியமாக இருந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் காணப்படும் கூர்க்கா இன மக்கள் இராமாயணத்தில் குரங்குகள், வானரர்கள் என்று கூறப்பட்டனர்.

மலையில் வாழ்ந்துவரும் அவர்களைக் குன்றவர்கள் என்று தமிழர் அழைப்பர். வால்மீகி குன்றவர்களை வானரர்கள் என்று இழித்துக் கூறியுள்ளான்.

ஆய்வு ஆதாரங்கள்

நர்மதா ஆற்றில் கிடைக்கும் புவியியல் ஆதாரங்கள் இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிலைநாட்டுகின்றன. இந்தப் பழங்குடியினரான கோண்டு மக்கள்தான் இராவணன் பரம்பரையினர் என்பதற்கு அவர்களின் ஊர் அமைப்பு, பெண்களின் அணிகலன்கள், திருமணமுறை, உணவு, முகமூடி அணிந்து போரிடுதல், மாறுவேடம் பூணுதல், தொழில்கள் முதலியன அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

கோண்டு மக்கள் பேசிய மொழி

குன்று என்ற சொல்லின் அடிப்படையில் கோண்டு மக்களின் பெயர் இருப்பதை அறிகிறோம். கு, குயி, கொயி, கோட்சு, கோண்டுசு என்ற தமிழ் அல்லது திராவிட மொழி அடிப்படையில் கோண்டு பழங்குடி மக்களின் பெயர்கள் வந்ததாக அமைகின்றது.

கோண்டுகள், கோண்டி எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள் கோர்க்கர்கள் முண்டா என்பதும் திராவிடமொழி பேசும் வானரர்கள் என்பதும் பரமசிவ அய்யரின் முடிவு.

ஊர், பூரி (ஜபல்பூர்) என்ற இடப்பெயர்கள் எல்லாம் தமிழ் (திராவிட) மொழிவழிப் பெயர்கள் ஆகும்.

இராவணனுக்கு விழா எடுத்தனரே!

மத்திய பிரதேசம் ஜோத்பூருக்கு அருகிலுள்ள பண்டைய தலைநகரமான மண்டோர் நகரில் இராவண விழாவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

இராவணன் துணைவி மண்டோதரி அந்நகரில் பிறந்தவள் என்றும் அதனால் இராவணனைத் தங்கள் நகரின் மருமகனாகக் கருதியும் அவனது வீரம், அறிவு, இசைப்புலமை, இலக்கியத் திறன் போன்றவற்றைப் போற்றும் வண்ணம் விழா நடத்தப்படுகிறது.

கான்பூரில் இராவணனுக்குக் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இராவண விழா நடக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அமர்கண்டதம் இடத்திலும் இராவணன் இந்திரஜித்திற்கு கோவில்களும் நீர்நிலைகளும் உள. இவர்கள் தங்கள் மூதாதையருக்கு இவ்வண்ணம் மரியாதை செய்கின்றனர்.

இராமாயண வண்டவாளம் என்ன? என்ன? என்ன?

வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க, அதாவது இராவணனின் இலங்கா நகர் மத்திய பிரதேசத்தில் இருப்பதைப் புறக்கணித்து விந்தியம் தாண்டி வந்தனர் என்றும், சேதுக்கடலில் பாலம் சமைத்தனர் என்றும் இந்துமதவாதிகள் கூறும் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறிவிட்டன என்பதை நாம் உணர்கிறோம்.

துணை செய்த நூல்கள்

1.    இராவணன் நாடு _ அகத்தியதாசர் _ (பெரிதும் துணை செய்தது)

2.    இராமனைக் கற்போம் _ சீ.கோபால தேசிகன்

3. Ramayana Temples –  சித்ராராம் குருமூர்த்தி,  விகாஸ் பப்ளிசிங் ஹவுஸ், நியூடெல்லி.

4.    நமது நாடு என்னும் தோட்டத்திலே _ த.ஜகன்னாதன்.

5.    Ravana and his Tribes – R.Ramakrishnan

6.    The Wonder that was India – A.L. Basham

7.    Ramayana and Lanka – T.Paramasiva Iyer.

மற்றும் சில நூல்கள்.


புதன், 7 ஆகஸ்ட், 2024

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!

 டிபரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார்பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில்ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லைஅவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லைவில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான்வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான்அவன் மனம்அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையேவில் வித்தைவேட்டையில் வேட்கைமாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள்சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).

``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பிஅயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன்தேன்பழங்கள்கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்மதுவும்இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்றுராமன்லட்சுமணன்சீதை ஆகியோர் இரவுப் பட்டினிவிடிந்ததும் விடியாததுமாக ராமனும்லட்சுமணனும் வில்அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றிஒரு சாம்பார் மான்ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுகொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம்சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள்சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம்சர்க்கம் 96, பாடல் 1).

அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம்ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம்கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றனஅவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள்ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

இத்துடன் முடியவில்லை.

 ``இறைச்சிப் படலம்விருந்தினர்களுக்குஅவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும்இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள்தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான்அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்என் கணவர் விரைவில் வந்து விடுவார்காட்டுப் பொருள்கள் (புஷ்கலம்வன்யாகொண்டு வருவார்மான்கறி கொண்டு வருவார்இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்குகாட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம்சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம்சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதைஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான்இறைச்சிப் பிரியர்தான்ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள்இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால்இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?

 -சார்வாகன்  
20-12-2007, விடுதலை நாளேடு